L. Murugan “விஜய் பொதுவான நபராக இருப்பாரா என்பது கேள்விக்குறி..!”

சென்னை குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 800 கிலோ சிறு தானியங்களை கொண்டு 12 மணி நேரத்தில் 600 சதுர அடியில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வரைந்து உலக சாதனை புரிந்தார்.இந்த ஓவியத்தை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று நேரில் பார்த்து ரசித்தார்.

இதையடுத்து இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, “ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த நாட்டிற்கு காலத்தின் கட்டாயம். இதற்காக பெரிய அளவில் கமிட்டி அமைக்கப்பட்டு கருத்து கேட்டு அதன் அடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை தந்துள்ளார்கள். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியத்தை உணர்த்தி இருக்கிறார்.

முதலமைச்சரையும், துணை முதலமைச்சராக வர துடித்து கொண்டிருக்கிற உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எஸ்சி, எஸ்டி விடுதியை பார்க்க வேண்டும். அடிப்படை வசதிகள் எதுவுமே கிடையாது. தமிழர் ஒருவர் நாட்டை ஆள வேண்டும் என்பது வரவேற்கக் கூடியது. பெரிய தேசம் யார் வேண்டுமானாலும் ஆளலாம். பல்வேறு சூழ்நிலை காரணமாக மீனவர்கள் எல்லை தாண்டி போகிறார்கள். பிரதமர் மோடி வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவம் ஏதும் இல்லை. மீனவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வருகிறோம்.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஈவேராவிற்கு மாலை செலுத்தினார். விஜய் பொதுவான நபராக இருப்பாரா என்பது கேள்விக்குறி. அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றால் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து சொல்லக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு அரசியல் கட்சியை நிர்வகிக்க முடியும். அவர் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பாவிப்பது கேள்விக்குறியே” என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

எல்.முருகன்: புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழகத்திற்கு உரிய நிதி வழங்கப்படும்

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரியநிதி வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நேற்று தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2-ஆம் தேதி பிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சியாகும். தற்போது பாஜகவில் 10 கோடிஉறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும் எல்.முருகன் தொடர்ந்து பேசுகையில், புதிய கல்விக் கொள்கை மூலம், ஆரம்பக் கல்வியை தாய் மொழியான தமிழில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தற்போதைய காலகட்டத்தில், புதியதொழில் நுட்பத்துக்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரிய நிதி வழங்கப்படும் என எல்.முருகன் தெரிவித்தார்.

எல்.முருகன்: பாஜகவில் தமிழகத்தில் 10 கோடி உறுப்பினர்கள்..! 11 கோடி உறுப்பினர்கள் சேர்ப்பது இலக்கு..!

தமிழகத்தில் தற்போது பாஜகவில் 10 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நேற்று தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2-ஆம் தேதி பிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சியாகும். தற்போது பாஜகவில் 10 கோடிஉறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு

கடந்த 21 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் பாஜக சார்பில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில், மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் போட்டியின்றி எம்பியாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்.முருகன்: அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கரை அவமதிக்கும் செயல்

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகம், பொதுசெயலாளர் கரு.நாகராஜன், வி.பி. துரைசாமி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு சியாமா பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் எல்.முருகன் அளித்த பேட்டியில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்னென்ன சொன்னார்களோ, அது கவர்னர் உரையில் இடம் பெறாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஒன்றிய அரசு என்று அரசியலமைப்பு சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கரை அவமதிக்கும் செயல் என தெரிவித்தார்.