சீமான் 356-வது பிரிவின் கீழ் ஆட்சியை கலைத்தால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது..!

தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மத்தியில் ஆளும் கட்சிகள், அரசுகள் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்போம் என பூச்சாண்டி காட்டுவார்கள். இந்த பூச்சாண்டிக்குதான் நாம் பயப்படக் கூடாது.

மக்களுக்காக நின்றால் திமுக வெல்லும் 356-வது பிரிவின் கீழ் திமுக ஆட்சியைக் கலைத்துவிடு.. மக்களுக்காக சண்டை போட்டு.. நிதியை தர முடியாதுன்னு மத்திய அரசு சொன்னதால் நாம் நம் வரி வருவாயை தர முடியாது என சொன்னோம்.. ஆட்சியை கலைத்தார்கள்.. சரி மீண்டும் சட்டசபை தேர்தல் வரும்தானே.. அப்போது யார் வெல்வார்கள்? மக்களுக்காக நிற்கிற கட்சி எதுவோ வெல்லும். இந்த இடத்தில்தான் நாம் சமரசம் செய்யக் கூடாது.

பறிபோன உரிமைகள் ஆட்சி கலைப்பு அஞ்சியதால்தான் காவிரி நதிநீர் உரிமை போனது; கச்சத்தீவு பறி போனது; மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி, பொதுப் பட்டியலுக்குப் போனது. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? மத்திய அரசு என்னதான் செய்ய முடியும்? ஆட்சியைக் கலைத்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? சொல்லுங்க ஆட்சிக்கு மீண்டும் வர முடியாதா? இப்படித்தான் 2009-ல் தமிழினத்தை கொலை செய்த போது பதவிக்கு பயந்து உட்கார்ந்திருந்தோம்.. சிங்களவன் லட்சக்கணக்கில் ஈழத் தமிழரை கொன்று குவித்தான்.

ஆட்சியை கலைத்தால் திமுகதான் வெல்லும் மத்திய அரசை போய்யா.. என்று சொல்லிவிட்டு ஆட்சியை இழந்து மீண்டும் தேர்தலை சந்தித்தால் மக்கள் மறுபடியும் உங்களைத்தான் தேர்வு செய்வான். அப்படி செய்யாமல் இருக்க மானம் கெட்ட, உணர்வு கெட்ட, அறிவு கெட்டவன் தமிழன் அல்ல. தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும்.

யார் பிரிவினைவாதி? தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதே பாஜகவும் காங்கிரஸும்தான். இது எங்கள் நிலம். தமிழர் நிலம். நாங்கள் யாருக்கு தேசத்துரோகிகள்? இது என்ன இந்தி பேசுகிறவன் நாடா? எவனை கேட்டு இந்தி திணிப்பை நடத்துகிறீர்கள்? பல மொழி பேசுகிற மக்களின் தேசம் இது.. ஒரு 4 மாநிலத்தில் பேசப்படுகிறதா இந்தி மொழி? என் வரியை வைத்துக் கொண்டு தரவே முடியாது என்பது பிரிவினையை தூண்டுகிறதா? தேசப்பற்றை உருவாக்குகிறதா? யார் பிரிவினையை தூண்டுவது? இந்தியாவின் அதிக வருவாய் தருவதில் 2-வது பெரிய மாநிலம் என் தமிழ்நாடு. என் நிதியை வைத்துக் கொண்டு தர மறுக்கும் நீதிதான் தேச ஒருமைப்பாட்டை சிதைப்பது? என சீமான் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அலிசா அப்துல்லா சவால்..!

என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும். திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ? என்று பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத காரணத்தால் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட நிதியை விடுவிக்க இயலாது என்று அறிவித்துவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவிற்கும், திமுகவிற்கும் சமூக வலைதளங்களில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் வீட்டில் நாங்கள் பயன்படுத்தும் மொழி உருது.

நான் ஆங்கில வழி கல்வியில் தான் படித்தேன். என்னுடைய ரேஸிங் துறையில் சிறந்து விளங்கிய இஸ்லாமிய பெண் என்பதால். நான் பாஜகவில் இணைந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் புரிதல் இல்லாமல் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவில் இணைந்தேன். நான் பாஜகவில் இணைந்த ஒரே காரணத்திற்காக திமுக ஊடகங்கள் என்னை போட்டி போட்டுக் கொண்டு நேர்காணல் எடுத்தனர். அதன் சூழ்ச்சியும் திமுகவின் அரசியலும் எனக்கு அப்போது தெரியவில்லை. என்னை பாஜகவில் இருந்து வெளியேற்ற திமுக சார்பில் இருந்து என்னுடைய தொழில் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

ஒரு படி மேல் சென்று நீங்கள் திமுகவில் இணையுங்கள் உங்களுக்கு பெரிய பொறுப்பு கொடுக்கிறோம் என்றும் கூறினார்கள். எனக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்னவென்றால் நான் ஒரு இஸ்லாமிய பெண். இஸ்லாமியர்களுடைய வாக்கு ஒன்று கூட பாஜக பக்கம் போக கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறார்கள்.

நான் மறுபடியும் சொல்கிறேன் நான் தமிழ் பாரம்பரிய குடும்பம் கிடையாது தமிழகத்தில் பிறந்து உருது மொழியை பேசும் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள். பாரம்பரிய தமிழ் குடும்பத்தை சேர்ந்த உதயநிதிக்கு ஒரு சவால். இன்று என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும்.திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ?” என அலிஷா அப்துல்லா எக்ஸ் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்: யார் அரசியல் செய்கிறார்கள்..!? அது எக்காலத்திலும் நடக்காது..!

கல்வி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள், எக்காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், புதிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. 1968-ல் தொடங்கி இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தாதது துரதிர்ஷ்டவசமானது.

இதனால் காலப்போக்கில் வெளிநாட்டு மொழிகளை நாம் நம்பியிருக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும். கல்வியில் அரசியலை புகுத்தாதீர்கள். அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழியை உலகம் முழுவதும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.

சமூக மற்றும் கல்வி முன்னேற்றங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்ததில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. எந்த மாநிலத்திலும் மொழியை திணிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கடிதத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழக கல்விக்கான ரூ.2,151 கோடி நிதியை கேட்டுள்ளோம். அதற்கு மத்திய அரசு தரப்பில் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகதான் இருந்திருக்கிறது. அதனை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை தெளிவாக கூறிவிட்டோம். இதில் என்ன அரசியல் இருக்கிறது? மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. அதனால் தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணியினர் “கெட் அவுட் மோடி..” என முழக்கமிட்ட ட்ரெண்டாகும் வீடியோ..!

பிரதமர் தமிழகம் வந்தால் அவரை ‘கெட் அவுட் மோடி’ சொல்லி விரட்டுவோம் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விட்ட நிலையில், திமுக இளைஞரணியினர் ‘கெட் அவுட் மோடி’ கூறி வீடியோவை வெளியிட்டடு இருக்கின்றனர். மும்மொழிக் கொள்கையை முன்வைக்கும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதியை விடுவிப்போம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாகு கூறியிருந்தார். இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதில் பங்கேற்றிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்றபோது, கடந்த முறை தமிழக மக்கள் Go Back Modi என்று சொல்லி துரத்தி அடித்தார்கள். மீண்டும் இதே போல தமிழ்நாட்டு மக்களிடம் முயன்றால், Go Back Modi என்று சொல்வதற்கு பதிலாக, ‘Get Out Modi’ என்று கூறி துரத்துவார்கள்” என்று கூறியிருந்தார்.

இவரது பேச்சு பாஜக மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. இது குறித்து பேசிய அண்ணாமலை, “உலக நாடுகள் சிவப்பு கம்பளம் விரித்து அந்த மனிதனை வரவேற்பதற்காக கைகட்டி காத்திருக்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அவரை விமர்சிக்கிறார்கள். உங்களால் முடிந்தால் Get Out Modi என சொல்லி பாருங்கள்” என்று சவால் விட்டிருந்தார். மட்டுமல்லாது துணை முதல்வரின் வீட்டை முற்றுகையிடுவதாகவும் பாஜகவினர் கூறியிருந்தனர்.

இது இருவருக்கும் இடையேயான வார்த்தைப்போராக வெடித்தது. இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த உதயநிதி, “வீட்டைதானே முற்றுகையிடப் போகிறார்கள்? வரச்சொல்லுங்கள். நான் வீட்டில்தான் இருப்பேன். மாலை ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. முடித்துவிட்டு வரப்போகிறேன்” என்று கூலாக பதிலளித்துள்ளார். பதிலுக்கு அண்ணாமலை, “நாளை காலை நான் Get Out Stalin என ட்வீட் பதிவிட போகிறேன். அது எவ்வளவு போகப்போகிறது என்று நீங்களே பாருங்கள்” என கூறியுள்ளார். இரு இளம் தலைவர்களின் கருத்து மோதல் தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் கடுமையாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO-TN) மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், இளைஞர்களும், மாணவர்களும் ‘Get Out Modi’ என்று முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி: அறிவாலயம் ‘ரெட்லைட் ஏரியா’வா..!?

“அறிவாலயம் என்ன ரெட்லைட் ஏரியா”வா? என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டிருக்கிறார். அண்ணாமலை இருக்கட்டும்.. நானே வருகிறேன்.. எங்கே வரனும் என சொல்லுங்க? என்னைக்கு வரனும் என சொல்லுங்க? டைமை குறிங்க.. தமிழக முதல்வர் அவர்களே! இது தமிழ்நாடு. எட்டு கோடி மக்களுக்கும் சொந்தமானது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளும்.

இதில் அண்ணா அறிவாலயத்துக்கு முன்னால் வரக் கூடாது என சொன்னால், அது ரெட்லைட் ஏரியாவா அது ரெட்லைட் ஏரியாவா? அங்க வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு என்ன தைரியம் இருக்க முடியும்? கேவலமான ஒன்று. உதயநிதி ஸ்டாலின் தம்முடைய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும்; ஒரு பக்கத்தில் குழந்தைகளை அப்பா என கூப்பிட சொல்றாங்க..சரி சந்தோஷப்படுவோம். அது தப்பு கிடையாது.. ஆனால் எங்க பகுதிக்கு வரக்கூடாது என சொன்னால்…. ஜெயலலிதா அம்மாவை இவர்கள் நினைவு கொள்ள வேண்டும்.

மதிமுகவின் துவக்க காலத்தில் அண்ணா அறிவாலயப் பக்கத்தில் ஒரு பெரிய ஊர்வலமாக வந்து இதே அறிவாலயம் மீது தாக்குதல் வரும் என்ற நிலை இருந்தது. அன்றைக்கு ஜெயலலிதாதான் பாதுகாப்பு கொடுத்தார். இன்றைக்கு வேற ஏதாவது மாற்றி எங்க பகுதிக்கு வந்துடாதீங்க என சொல்கிறார்கள் எனில் ஒன்று அவர்கள் அறிவாலயத்தை தவறாக நடத்துகிறார்கள் என்கிற பொருளில் முடியும். அது வேறு ஒரு விஷயம்.. சவால் விடுகிறீர்கள் எனில் நாங்கள் வருகிறோம்.

நாங்கள் ரெட்லைட் ஏரியா என சொன்னதால் அதற்குதான் வருகிறீர்களா? என அடுத்த கேள்வி கேட்பார்கள்.. இந்த குசும்பு வேலை எல்லாம் செய்வாங்க.. நீங்க சவால்விடுங்க.. நாங்க வருகிறோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்.. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி: ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை..! வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்..!

“தமிழ்நாட்டு அரசியலில் அடையாளம் தொலைத்த, சொந்த மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட, ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்” என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். “தமிழ்நாட்டின் கல்வி மேம்பாடு, மகளிர் நலன், குழந்தைகள் முன்னேற்றம், பேரிடர் மீட்பு உட்பட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது ஒன்றிய மோடி அரசு. நாம் கேட்பது ஒன்றிய அரசின் அப்பன் வீட்டுச் சொத்தை அல்ல, நம் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை. அதைக் கேட்டால் ஒருமையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகிறார்.

தமிழ்நாட்டின் நலனுக்காக ஒன்றிய அரசின் காதில் விழும்படி மக்களின் குரலாக ஒலித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் டெல்லி முதலாளி மோடியின் பின்னால் ஒளிந்துகொண்டு திமிராக ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். நாக்பூரில் பாடம் கற்றவரிடம் நாகரிகம் எதிர்பார்க்கக் கூடாதுதான். ஆனால், அண்ணாமலைக்கு துளியாவது தமிழ் மக்கள்மீது அக்கறை இருக்கும் என நினைத்தது தவறு என அவர் ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு அரசியலில் அடையாளம் தொலைத்த, சொந்த மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட, ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள இப்படி வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், துணை முதலமைச்சரை விமர்சிப்பது மக்களை விமர்சிப்பதற்குச் சமம் என்பது பாவம் அவருக்குத் தெரியவில்லை; பரிதாபம்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை முதலமைச்சர் மீதான அண்ணாமலையின் இந்த விமர்சனத்தை இல்லையில்லை விசமத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எங்கே தனது டெல்லி முதலாளிகள் மறந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உளறிக் கொண்டிருக்கிறார். இதனால்தான் தன்னுடைய முதலாளிகளைக் குளிர்விக்க, தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள, மத வெறுப்பு, தமிழ் மொழி, தமிழ் நிலம் சார்ந்த வெறுப்பைக் கொட்டிக்கொண்டு இருக்கிறார். முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். என ஐயன் வள்ளுவன் சொன்ன அறம் எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும், உரிமை பறிக்கப்படும்போது, கொஞ்சம் தட்டிக் கேட்க வேண்டியும் இருக்கிறது.

இதை துணை முதலமைச்சரின் குரலிலேயே சொல்கிறோம், தமிழர்கள் நாம் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்; எந்தக் காலத்திலும் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்; அடிபணிய மாட்டோம். தமிழக உரிமைகளைக் கேட்கும் எங்களின் குரல் போராட்டமாக மாறுவதும் மாறாமல் இருப்பதும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசின் கையில்தான் உள்ளது. ஒன்றியப் பிரதமர் மோடி அவர்களே, சென்ற முறை நீங்கள் தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயன்றபோது தமிழ்நாட்டு மக்கள் “Go Back Modi” எனத் துரத்தி அடித்தார்கள்.

இந்த முறை மீண்டும் அதைத் தமிழ்நாட்டு மக்களிடம் முயற்சி செய்தால், “Go Back Modi” கிடையாது, “Get Out Modi” எனச் சொல்லி துரத்துவார்கள். என்பதை மீண்டும் ஒருமுறை அரசியல் கோமாளி அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.” என ராஜீவ் காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மா.சுப்பிரமணியன்: அண்ணாமலையை பார்த்து உலகமே சிரிக்குது ..!

செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லிவிட்டு, தற்போது ஷூ அணிந்து வலம் வருவது , தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்வது உள்ளிட்ட செயல்களால் உலகமே அவரை கண்டு எள்ளி நகையாடுகிறது என அமைச்சார் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அநாகரீகத்தின் உச்சம் என்று தெரிவித்துள்ள அவர், அண்ணாமலையின் கேலி கூத்து நடவடிக்கைகள் அளவில்லாமல் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2025 பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது, தற்குறிகள் திமுகவின் உதயநிதி, அன்பில் மகேஷ் போன்ற தற்குறிகளை போல் அதே பாணியில் நான் பேச போகிறேன். நீ சூரியனை 11.30 மணிக்கு பார்க்கிறவன், நாங்கள் அதிகாலை 3 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு 5 மணிக்கு கோப்புகளை எடுத்து பார்ப்பவர்கள். பிரதமர் மோடியை பார்த்து குற்றம்சாட்டுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்..

பிரதமர் மோடி முன்பு தமிழ்நாடு வந்தால், நாங்கள் கோ பேக் மோடி என்றோம். இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடினு சொல்லிப் பாரு.. எங்க அப்பா முதலமைச்சர்.. எங்க தாத்தா முதலமைச்சர்னு சொல்லி பாரு.. பார்க்கலாம் என தெரிவித்து இருந்தார்.

அண்ணாமலை பேசிய வீடியோ ட்ரெண்டான நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், என்னை ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அவர்களது தரம் அதுதான். என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக தெரிவித்திருந்தார். தைரியமிருந்தால் அண்ணாமலையை அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள். உதயநிதி, அண்ணாமலையின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. கல்வி நிதி தொடர்பானது. நிதியை பெற்றுத் தர துப்பில்லாதவர்கள் பேசுகிறார்கள்.

தமிழகத்தின் நிதி உரிமையை திசை திருப்பவே இப்படி செய்கிறார்கள். தனியார் பள்ளி தனியார் பள்ளிகளை யாராவது சட்டவிரோதமாக நடத்துகிறார்களா என்ன? மத்திய அரசிடம் போதிய அனுமதியை பெற்றுத்தானே நடத்துகிறார்கள். தனியார் பள்ளிகளில் யாராவது இலவச உணவையோ இலவச சீருடையையோ தருகிறார்களா என்ன? தனியார் பள்ளிகளில் இந்தி தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்த வேண்டாம். மும்மொழி கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது.

இதனைத் தொடர்ந்து திமுகவினர் தரப்பில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. சோசியல் மீடியா தொடங்கி அனைத்திலும் திமுகவினர் அண்ணாமலையை கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அநாகரீகத்தின் உச்சம். திராவிட மாடல், முதலமைச்சர், துணை முதலமைச்சர் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்தவித அருகதையும் இல்லை. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என்று அனைத்திலும் தமிழக மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலை தொடர்ந்து செய்யும் கேலிக்கூத்து நடவடிக்கைகளுக்கு அளவில்லாமல் போகிறது.

திடீரென செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லிவிட்டு, தற்போது ஷூ அணிந்து வலம் வருவது , தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்வது உள்ளிட்ட செயல்களால் உலகமே அவரை கண்டு எள்ளி நகையாடுகிறது. அமைச்சர்கள் பதவிகளில் இருப்பவர்களை தற்குறி என்று சொல்லும் அளவிற்கு தற்குறித்தனமாக செயல்படும் அண்ணாமலை கண்ணாடி முன் நின்றால், அவரின் தற்குறித்தனங்கள் வரிசைக் கட்டி நிற்கும்.

மேலும், விஜய்யை தொடர்ந்து திருமா மீது அண்ணாமலை அட்டாக்” அநாகரீகமானவர் என்பதை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நிரூபித்து கொண்டிருக்கும் அண்ணாமலை, ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு கொண்டே இருக்கிறார் என்பது நிதர்சனம். எதையும் சகித்து கொள்ள முடியாத ஒரு அரைவேக்காடு என மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் சவால்: அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள்..!

அண்ணாமலையை முடிந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், என்னை ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அவர்களது தரம் அதுதான். என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக தெரிவித்திருந்தார். தைரியமிருந்தால் அண்ணாமலையை அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள். உதயநிதி, அண்ணாமலையின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. கல்வி நிதி தொடர்பானது. நிதியை பெற்றுத் தர துப்பில்லாதவர்கள் பேசுகிறார்கள். தமிழகத்தின் நிதி உரிமையை திசை திருப்பவே இப்படி செய்கிறார்கள். தனியார் பள்ளி தனியார் பள்ளிகளை யாராவது சட்டவிரோதமாக நடத்துகிறார்களா என்ன? மத்திய அரசிடம் போதிய அனுமதியை பெற்றுத்தானே நடத்துகிறார்கள்.

தனியார் பள்ளிகளில் யாராவது இலவச உணவையோ இலவச சீருடையையோ தருகிறார்களா என்ன? தனியார் பள்ளிகளில் இந்தி தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்த வேண்டாம். மும்மொழி கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது. உ.பி. கும்பமேளாவில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாஜக திணறி வருகிறது. எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்து அறிக்கையேதும் வெளியிடப்படவில்லை.

காசியில் தமிழக வீரர்கள் காசியில் தமிழக வீரர்கள் சிக்கி வரும் சம்பவம் குறித்து இன்று காலை எனக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தமிழகம் திரும்ப போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அண்ணாமலை சவால்: தற்குறிகள் உதயநிதிக்கு தைரியம் இருந்தால் கெட் அவுட் மோடி என சொல்லட்டும் பார்ப்போம் ..!!

தற்குறிகள் உதயநிதிக்கு தைரியம் இருந்தால் கெட் அவுட் மோடி கெட் அவுட் மோடி என சொல்லட்டுமே! உலகத் தலைவரை மதிக்கத் தெரியாத நபராக உதயநிதி இருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்தார். மத்திய அரசின் 2025 பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தீயசக்தி திமுகவை வேரோடு அகற்ற வேண்டும் என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். கள்ளை குடித்த குரங்கு திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்றால் ஒரு பானையில் இருந்த கள்ளை குரங்கு குடித்து விடுகிறது. இதனால் தடுமாடிக் கொண்டிருந்த போது அதனை தேள் கொட்டி விடுகிறது. கள்ளை குடித்த குரங்கை தேள் கடித்துவிட்டால் அந்த குரங்கு எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் திமுக ஆட்சி இருக்கிறது.

தற்குறிகள் திமுகவின் உதயநிதி, அன்பில் மகேஷ் போன்ற தற்குறிகளை போல் அதே பாணியில் நான் பேச போகிறேன். நீ சூரியனை 11.30 மணிக்கு பார்க்கிறவன், நாங்கள் அதிகாலை 3 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு 5 மணிக்கு கோப்புகளை எடுத்து பார்ப்பவர்கள். பிரதமர் மோடியை பார்த்து குற்றம்சாட்டுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்..

பிரதமர் மோடி முன்பு தமிழ்நாடு வந்தால், நாங்கள் கோ பேக் மோடி என்றோம். இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடினு சொல்லிப் பாரு.. எங்க அப்பா முதலமைச்சர்.. எங்க தாத்தா முதலமைச்சர்னு சொல்லி பாரு.. பார்க்கலாம் என தெரிவித்தார்.

இதுவரையில் எந்த மேடையிலும் நான் யாரையும் அவமரியாதையாக பேசியதே இல்லை. ஆங்கிலத்தில் பேசிய மோடி 2026 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக வென்று ஆட்சி அமைத்தால் பஞ்சம் பிழைப்பதற்காக நாம் எல்லாரும் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும். பிரதமர் மோடி இந்தியை எங்கே திணிக்கிறார், தமிழகத்திற்கு அவர் வந்தால் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்.

விஜய் வித்யாஸ்ரம் பள்ளி உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு மூன்று மொழிகளை படிக்க வையுங்கள் என்பதைத்தான் மோடி சொல்கிறார். அவர் இந்தியை திணிக்கவில்லை. அன்பில் மகன் பிரெஞ்ச் படிக்கிறார். நடிகர் விஜய், படூரில் சொந்தமாக விஜய் வித்யாஸ்ரம் நடத்தி வருகிறார் என அண்ணாமலை தெரிவித்தார்.

பி.கே. சேகர்பாபு: இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர்..!

எடுத்த நடவடிக்கையில் இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர். அதேபோல் புதிய கல்விக் கொள்கையிலும் உறுதியாக இருப்பார் என பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “ஒன்றிய அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு துணை முதலமைச்சர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றவுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர்.” என பி.கே சேகர்பாபு தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியே தீருவோம் என்ற தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு பி.கே சேகர்பாபு பதில் அளிததார். அப்போது, “தமிழ்நாட்டை வேறு கோணத்தில் பார்த்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஒன்றிணைந்து தமிழக முதல்வர் தலைமையில் வெகுண்டு எழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். எடுத்த நடவடிக்கையில் இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர். அதேபோல் புதிய கல்விக் கொள்கையிலும் உறுதியாக இருப்பார்.” என பி.கே சேகர்பாபு தெரிவித்தார்.