மணிப்பூரில் மற்றொரு பயங்கரம்: “மகள் உயிரோட வேண்டுமா! பிணமா வேண்டுமா..”

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் நடக்கும் இனக் கலவரத்தில் மட்டும் அங்கே 125 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 40 ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். அங்குப் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்த தகவல்கள் உறைய வைக்கிறது.

மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துவரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அதே நாளில் (மே 5) தான் இந்த கொடூரமும் நடந்துள்ளது. அந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 90 கிமீ தொலைவில் தான் இது அரங்கேறியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை இதுவரை எந்த ஒரு நபரையும் கைது செய்யவில்லை..

மணிப்பூரில் இன வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கடந்த மே 5-ம் தேதி மாலை கார் வாஷிங் கடையில் வைத்து கொடூரமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இரண்டு இளம் பெண்களில் ஒருவரது குடும்பத்தினர் தான் இவர்கள். அன்றைய தினம் கார் வாஷிங் கடையைச் சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த இந்த இரு பெண்களையும் ரூமில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்..

அந்த வன்முறை கும்பலில் இருந்த பெண்களே.. அந்த பெண்களைப் பலாத்காரம் செய்யச் சொன்னது தான் அதிர்ச்சி, அவர்கள் கத்தி, விட்டுவிடும்படி கெஞ்சிய போதிலும் அந்த கும்பல் அதற்குச் செவி கொடுக்கவில்லை. அவர்களின் உடல் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது மணிப்பூரில் உள்ள ஒரு பழங்குடிப் பெண் தன் மகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் ஃபோன் செய்துள்ளார். அப்போது அவருக்குக் கிடைத்த தகவல்கள் தான் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது மறுமுனையில் போனை எடுத்துப் பேசிய அப்போது மறுமுனையில், வேறு ஒரு பெண் தான் எடுத்தார். ‘உன் மகள் உனக்கு உயிருடன் உயிருடன் வேண்டுமா… இல்லை பிணமாக வேண்டுமா… எனக் கேட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.

அதன் பிறகு கொஞ்ச நேரத்திலேயே அவரது மகள் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. இம்பாலில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுவர்களில் இவரது மகளின் ரத்தம் இன்னுமே இருக்கிறது. இனக் கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய குற்றங்கள் குறித்த தகவல்கள் இப்போது பகீர் கிளப்பி வருகிறது.

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்.. பாஜக நிர்வாகி வினோத் கைது..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் கடந்த 2014 -ம் ஆண்டு ஆலங்காயம் பகுதியில் சிலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வினோத் மீது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் வினோத் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான ஆலங்காயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜெகநாதனும் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது எனக்கு எதிராகவே சாட்சி சொல்ல வருகிறாயா? என நீதிமன்ற வளாகத்தில் வைத்தே உதவி ஆய்வாளர் ஜெகநாதனுக்கு வினோத் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக உதவி ஆய்வாளர் ஜெகநாதன் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வினோத் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை பாஜக நிர்வாகி வினோத்தை தேடிவந்த நிலையில், ஆலயங்காயத்தில் வைத்து வினோத்தை காவல்துறை கைது செய்துள்ளனர்.

மணிப்பூரில் பெண்கள் நிர்வாண ஊர்வலம்: போலீஸ் கஸ்டடியை மீறி அட்டூழியம்!

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக முதலமைச்சர் பீரன் சிங் ஆட்சி செய்து வருகிறார். இந்த மாநிலத்தில் குக்கி எனும் பழங்குடி மக்களும், மைத்தேயி பிரிவு மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு குக்கி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருதரப்புக்கும் பிரச்சனை இருந்து கடந்த மே மாதம் 3-ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டு, வன்முறையாக உருமாறியது. அன்று முதல் கடந்த இரண்டரை மாதமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறையில் துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இதனால் ஏராளமானவர்கள் பலியான நிலையில் நிறையபேர் வீடுகளை இழந்து தவிக்க தொடங்கினர். தொடர் பதற்றத்தால் அங்கிருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் சுமார் 140-க்கும் அதிகமானவர்கள் வன்முறையில் இறந்துள்ளனர்.

இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டதோடு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மத்திய பாதுகாப்பு படையினர், மாநில காவல்துறை உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இருப்பினும் இன்னும் வன்முறை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில் தான் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் மாநிலம் பைனோம் கிராமத்தில் உள்ள வீடுகளை எரித்த கும்பல் அதிலிருந்து தப்பியோடிய 2 ஆண்கள், 3 பெண்கள் என ஐந்து பேரை தாக்கி உள்ளனர். இதில் ஒரு ஆண் இறந்த நிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். மேலும் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல், இன்னொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. மேலும் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அண்ணாமலையோட நீண்ட கால ஆசை இதுதான்..

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், அண்ணாமலையை கடுமையாக சாடி விமர்சித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக வியூகம் வகுத்து முழு வீச்சில் அண்ணாமலை பாஜகவை தயார் படுத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

அதன்படி வரும் 28-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட உள்ளதாக கூறப்படும் ராமநாதபுரத்தில் இருந்து அண்ணாமலை இந்த பாதயாத்திரையை தொடங்க இருக்கிறார். இதனிடையே அண்ணாமலை ராஜ்யசபா எம்.பியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் இன்று செய்தி பரவியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம் ‘அண்ணாமலைக்கு ஆசை ஒரு பக்கம், பீதி ஒரு பக்கம், விளம்பரம் ஒரு பக்கம்’ என்று கடுமையாக சாடியுள்ளார். காயதிரி ரகுராம் தனது ட்விட் பதிவில், அவர் ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் வரப் போகிறார் என்று அவரது வார்ரூம் ஒரு பொய்யான செய்தியை பரப்பியது (அவரது நீண்ட கால ஆசை), அவர் பாஜகவில் சேர்ந்ததற்கு முழு காரணம் இது மட்டுமே, எந்த வேலையும் செய்யாமல், சேவையும் செய்யாமல் (அவர் எப்படி தனது போலீஸ் வேலை: தேச பக்தி சேவையை முடிக்காமல் பாதி வழியில் விட்டுவிட்டார் என்பது போல) மக்கள் சேவை பிம்பம் மட்டுமே. வாயில் வடை.

அதன் பிறகு அதே வார்ரூம் அது பொய்யான செய்தி என்று ஒரு செய்தியை பரப்பியது. ஏனென்றால் அண்ணாமலைக்கு டெல்லி அரசியல் மத்தியில் அவர் தொல்லை இருக்கும் என்று பாஜகவுக்கு தெரியும், அவரால் தமிழக எம்பி சீட் வெல்ல முடியாது என்பது தெரியும் (இது பீதி) .

இப்போது அவர் இல்லாமல் தமிழக பாஜக மூழ்கிவிடும். தமிழக பாஜகவுக்கு அவர் தேவை என்கிறார்கள் (வெட்டி விளம்பரம்). பின்னர் அவர் பாவ யாத்திரை செய்வார் (அது விளம்பரத்திற்கான அவரது சேவை)” என்று சாடியுள்ளார்.

நாங்கள் இந்தியர்கள் இல்லையா? மத்தியில் ஆளும் அரசாங்கத்தின் மவுனம்

மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் தொடருகின்றன. மணிப்பூரின் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களிடையேயான இம்மோதல் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோரை அகதிகளாக்கி இருக்கிறது. 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட நிலையிலும் மணிப்பூரில் நாள்தோறும் தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு, வீடுகள் தீக்கிரை, ஆயுதங்கள் கொள்ளை, துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் மணிப்பூர் வன்முறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இம்பாலில் நேற்று பெண் வர்த்தகர்கள் போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டத்தின் போது Huirem Binodini Devi என்ற சமூக ஆர்வலர் கூறியதாவது: 2 மாதங்களுக்கும் மேலாக இந்த பிரச்சனை தொடருகிறது. ஆனால் மணிப்பூர் மக்களுக்காக மத்தியில் ஆட்சி செய்யும் தலைவர்கள் ஒரு ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை.

மத்தியில் ஆளும் அரசாங்கத்தின் இந்த மவுனம் எங்களுக்கு மிகப் பெரிய வருத்தத்தைத் தருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா போன்ற தலைவர்கள் இப்படி கனத்த மவுனத்தை வெளிப்படுத்துவது நாங்கள் இந்தியர்களே இல்லை என்ற உணர்வை உருவாக்குகிறது. மணிப்பூர் மக்களும் இந்திய குடிமக்கள்தான். எங்களுடைய உணர்வுகளை மத்திய அரசு கேட்க வேண்டும். இந்தியாவுடன் இணைவதற்கு முன்னர் மணிப்பூர் மக்கள் வாழ்ந்த அமைதி நிலை எங்களுக்கு வேண்டும் என தெரிவித்தனர்.

உத்தர பிரதேசத்தில் தொடரும் கொடூர கொலைகள்…! மக்கள் கண் முன்னே சுடப்பட்ட 21 வயது கல்லூரி மாணவி..

உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்த மாநிலத்தில் அவ்வப்போது ஒடுக்கப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்மங்கள், துப்பாக்கிச் சூடுகள், கொடூர கொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் எம்.பி. அதிக் அகம்மதுவின் மூன்றாவது மகன் அசாத் அகமது லக்னோவில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சட்டப் படிப்பை படித்து வந்தார்.

இந்நிலையில் 2005 -ம் ஆண்டு ராஜு பால் கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியான வழக்கறிஞர் உமேஷ் பாலை சிலர் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் அதிக் அகம்மதுவின் மகன் அசாத் அகமது மற்றும் உதவியாளர் குலாம் ஹுசைன் தலைமறைவாக இருந்த நிலையில் இவர்களின் தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 13 தேதி ஜான்சி மாவட்டத்தின் படகான் காவல் நிலையப் பகுதியில் உள்ள பரிச்சா அணைக்கட்டு அருகே அசாத் அகம்மது மற்றும் குலாம் ஹுசைன் ஆகியோர் கொல்லப்பட்டதாக உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை (STF) குழு தெரிவித்தது.

இந்த பரபரப்பான சுழ்நிலையில், 100க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில் அதிக் அகம்மது எம்.பி. வளம் வந்தார். அதிக் அகம்மது கொல்லப்பட்ட 5 நாட்கள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 16 தேதி முன்னாள் எம்.பி. அடிக் அகம்மதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலைப்பட்டார். இந்த பரபரப்புகள் இன்னும் அடங்காத நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் எய்ட் என்ற நகரத்தில் தலித் மாணவி ஒருவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரோஷினி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எய்ட் சாலையில் சென்று கொண்டு இருந்த ரோஷினியை காலை 11 மணிக்கு அங்கு பஜாஜ் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த ரோஷினியை துப்பாக்கியால் சுட்டனர். அங்கே இருந்த மக்கள் வேடிக்கை பார்த்த நிலையில் அந்த மாணவியை துப்பாக்கி தோட்டாக்கள் சுட்டதை உறுதி செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து இரண்டு இளைஞர்கள் கிளம்பி சென்று உள்ளனர். இந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில்தான் காவல் நிலையம் இருக்கிறது. இந்த பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜி சூளுரை: “2024ல் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எனது கடைசிப் போராட்டம்”

மேற்கு வங்கத்தில் பேரணி ஒன்றில் கலந்துகொண்ட மம்தா பானர்ஜி, “2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்டு, காவி கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான போராட்டமே எனது கடைசிப் போராட்டம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். எப்படியும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். மேற்கு வங்கத்தை காப்பாற்றுவதே எங்களின் முதல் போராட்டம். எங்களை மிரட்ட முயற்சித்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம்.

எல்லோரும் தோல்வியை ருசிக்க வேண்டும். இந்திரா காந்தி வலிமையான அரசியல் தலைவராக இருந்தபோதிலும், தோல்வியை எதிர்கொண்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1984-ல், 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், 1989-ல் நடந்த தேர்தலில், தோல்வியை சந்தித்தார். பா.ஜ.கவில் சுமார் 300 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனாலும், பிஹார் இப்போது அவர்களுக்கு இல்லை. பிஹார் பாதையை மேலும் பல மாநிலங்கள் பின்பற்றுவார்கள். தேர்தலுக்கு முன், பாஜகவில் எந்த தலைவர்களும் இருக்க மாட்டார்கள்” என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு மிரட்டல் விடும் மம்தா பானர்ஜி: மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவேன்..

மேற்கு வங்காளத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவேன் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை போலவே அதிரடி அரசியலுக்கு பெயர் போன மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். அமித்ஷா உள்ளிட்டோரையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் மம்தா பானர்ஜி, வரும் 2024- ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அணியை திரட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

மத்திய அரசை விமர்சித்த மம்தா பானர்ஜி இதற்காக அவ்வப்போது எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் அறிவிப்பில் முக்கிய பங்கு வகித்தார். தனது கட்சியினர் மத்தியில் தற்போது பேசியது தான் இப்போது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவினர் மத்தியில் மம்தா பானர்ஜி பேசுகையில், ”மேற்கு வங்காளத்தில் பணிபுரியும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக என்னிடமும் வழக்குகள் நிறைய உள்ளன. எனவே, எனது அதிகாரிகளை நீங்கள் (மத்திய அரசு) டெல்லிக்கு விசாரணைக்கு அழைத்தால், உங்கள் அதிகாரிகளை நான் விசாரணைக்கு வருமாறு இங்கு அழைப்பேன். மேற்கு வங்காளத்தில் பணியாற்றும் மத்திய அரசு அதிகாரிகள் 8 பேருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. சிபிஐ மூலமாக மேற்கு வங்க அதிகாரிகளை மத்திய அரசு கைது செய்கிறது. நான் இதை குறித்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றார்.

பாஜகவை மறைமுகமாக சாடிய நிதின் கட்கரி: பயன்படுத்து விட்டுத் தூக்கி வீசுவது எல்லாம் ரொம்ப தப்புங்க..

பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, அவ்வப்போது தனது சொந்த கட்சியான பாஜகவை சாடும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருவதை கடந்த சில மாதங்களாக வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான், இப்போது அரசியல் என்பதே அதிகாரத்தைப் பிடிப்பதாக இருப்பதாகவும் இதனால் அரசியலில் இருந்து விலக நினைத்ததாகவும் குறிப்பிட்டார். முன்னதாக கடந்த வாரம் தான், 2024 தேசியத் தேர்தல் உட்பட தேர்தலுக்கான திட்டங்களை முடிவு செய்யும் பாஜகவின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து முன்னாள் பாஜக தலைவரும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட நிதின் கட்கரி இந்த குழுவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கு நாக்பூரில் நடைபெற்ற தொழில்முனைவோர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எந்த ஒரு மனிதனும் தோற்கடிக்கப்பட்டால் அத்துடன் அவன் வாழ்வு முடிவதில்லை, ஆனால் அதை ஒப்புக்கொண்டு வெளியேறும் போது தான் அவன் வாழ்க்கை உண்மையில் தோல்வி அடையும் என மறைமுகமாக நிதின் கட்கரி பாஜகவை சாடியுள்ளார்.

இது தொடர்பாக நிதின் கட்கரி பேசுகையில், ‘தொழில், மக்கள் நலன் சார்ந்த சமூகப் பணி, அரசியல் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மனித உறவுகளே மிகப்பெரிய பலம். எந்தவொரு நபரையும் பயன்படுத்து விட்டுத் தூக்கி வீசுவது சரியான நடைமுறை இல்லை. நல்ல நாட்களாக இருந்தாலும் சரி, மோசமான நாட்களாக இருந்தாலும் சரி, உங்களுடன் இருக்கும் நபர்களை எப்போதும் கைவிடக் கூடாது’ என்று மறைமுகமாகச் சாடினார்.

மேலும் அவர், ‘இளம் தொழில்முனைவோர் தங்கள் விருப்பங்களை ஒருபோதும் கைவிடக் கூடாது. முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் தனது சுயசரிதையில் பொறிக்கப்பட்ட பொன்னான வார்த்தைகளை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் தோற்கடிக்கப்பட்டால் அவன் வாழ்க்கை முடிவதில்லை.. ஆனால் அவன் வெளியேறும்போது அவன் முடிந்துவிடுகிறான்’ என தெரிவித்தார்.

மத்திய அமைச்சருக்கு டிஆர்பி ராஜா காட்டம்: பொய் சொல்வதே பாஜக வேலை…!

மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அவர்கள் 2 நாள் சுற்றுப்பயணமாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிற்கு மேற்கொண்டு, பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது சுபாஷ் சர்க்கார், “அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாக தகுதியான மாணவர்களை உருவாக்கி முடியும்.” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், புதிய தேசிய கல்விக்கொள்கை இதற்காகவே கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் கல்வியின் தரம் நன்றாக இருக்கிறது. புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்தவிதமான கருத்தையும் மத்திய அரசிடம் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கவில்லை. புதிய தேசிய கல்விக்கொள்கை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை.

புதிய கல்விக்கொள்கையில் சில முரண்பாடுகள் இருப்பதாக தமிழ்நாடு அரசு கருத்து தெரிவித்து உள்ளது. புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாக புதிய கல்விக்கொள்கையை நாங்கள் நிச்சயம் அமல்படுத்துவோம். புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

புதிய தேசிய கல்விக்கொள்கையில் உள்ள மூன்றாவது மொழி இந்தி உள்ளிட்ட வேறு எந்தமொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தாய் மொழிக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். புதிய கல்விக்கொள்கையை இந்தியை திணிக்கவில்லை. மாநிலங்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி கல்விக்கொள்கையை வடிமைக்கிறார்கள். ஆனால் அது தரமானதா என்பதை ஆராய வேண்டும்.

புதிய கல்விக்கொள்கை தரமானது அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதன் மூலமாக மாணவர்களின் கல்வித்தரம் மேலும் உயரும். தேர்ச்சியை அடிப்படையாக கொண்டு கல்வி வழங்கும் விதத்தை முடிவு செய்யலாம். மத்திய மாநில அரசுகள் புதிய கல்விக்கொள்கை குறித்து பேசி வருகின்றன.” என தெரிவித்தார்.

சுபாஷ் சர்க்கார் பேசியது குறித்து திமுக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா அவர்கள் அவரது ட்விட்டர் பதிவில், “முற்றிலும் தவறான செய்தி!!! கடந்த 17.6.21 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதமைச்சர் அவர்கள் மாண்புமிகு பிரதமரை நேரடியாக சந்தித்து தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக எதிர்த்து கடிதம் கொடுத்துள்ளார்.. ! இதோ அதற்கு சாட்சி..! தினந்தோறும் பொய்க் கதைகளை கூறுவதே பாஜக வின் வேலையாக உள்ளது.. !!!” என குறிப்பிட்டுள்ளார்.