மு.க.ஸ்டாலின்: சாமானிய மக்கள் மேல் இவர்களுக்கு கொஞ்சம்கூட கருணையே கிடையாதா?

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களையும், வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, வாயைத் திறந்தாலே சாதி – மதம் என்று மக்களைப் பிளவுபடுத்தித்தான் பேசுகிறார்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், முஸ்லீம் லீக்கின் அறிக்கை என்று விமர்சித்து, பிரிவினைவாதம் பேசினார்! இப்போது, இன்னும் கீழே இறங்கிச் சென்று, மற்றவர்கள் உண்ணும் உணவை விமர்சிக்கிறார்! பதவியில் தொடர முடியாது என்ற வெறியில், பிரிவினைப் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார்! உணவு என்பது தனிநபர்களின் விருப்பம்! அடுத்த மனிதர் என்ன சாப்பிடவேண்டும் என்று முடிவு செய்ய மோடிக்கு மட்டுமல்ல, யாருக்குமே உரிமையில்லை!

இப்படியெல்லாம், ஒரு பிரதமர் பேசுவாரா? வாக்குக்காக இப்படி மலிவான அரசியல் செய்யும் மனிதரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை! அதனால்தான் கூறினேன். பா.ஜ.க. இந்த நாட்டுக்கு வில்லன்! நாட்டில் இருக்கும் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காமல் சுய விளம்பரத்திற்கு மட்டும்தான், பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்தார்!

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி கொடுத்தாரே, ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை? வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பவர்களில் 83 விழுக்காடு பேர் இளைஞர்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது! நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திய M.S.M.E.-க்கள் ஜி.எஸ்.டி-ஆல் நலிவடைந்துவிட்டதே! அதைச் சரி செய்ய வேலை செய்தாரா? இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது – தாக்கப்படுவது – அதிகமானதே! அதைட்க் தடுக்காமல், விஷ்வகுரு என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஏன் மவுனகுருவாக இருந்தார்!

தேர்தலுக்காகத் தமிழ்நாட்டுப் பக்கம் தலையைக் காமிக்கவேண்டுமே! தமிழ்நாட்டிற்கு சொல்வதற்கு என்று ஒரு சிறப்புத் திட்டமாவது செய்திருக்கிறாரா! ஒரு செங்கல்லைக் காட்டி கேள்வியாகக் கேட்கிறார்களே! அந்த எய்ம்ஸ் மருத்துவமனையையாவது தேர்தலுக்கு முன்னால் கட்டிமுடித்துவிடுவோம் என்று எண்ணம் வந்ததா?

சரி அட்லீஸ்ட், என்னடா தமிழ்நாட்டு மக்கள் பெருவெள்ளத்தில் தவிக்கிறார்களே! உயிரையும் – உடைமைகளையும் – வீடுகளையும் இழந்து அவஸ்தைப்படுகிறார்களே! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்று மாநில அரசு நிதி கேட்கிறார்களே! மாநில முதலமைச்சரே நேரில் வந்து, கோரிக்கை வைத்துவிட்டுச் சென்றரே! என்று நிதியாவது கொடுத்தாரா? இல்லை! இப்படி எதையும் செய்யாமல் நம்முடைய திராவிட மாடல் அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்த 6000 ரூபாயும், ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் பிச்சை என்று சொல்ல வைக்கிறார்!

இந்த லட்சணத்தில், சென்னைக்கு ஏதோ ‘ஷோ’ என்று வந்தார்! என்ன ஷோ அது? ரோடுஷோ இப்படி ஷோ காட்டிவிட்டுப் போக வெட்கப்பட வேண்டாமா? அண்டப்புளுகு ஆகாசப் புளுகு என்ற சொல்லுவார்களே! அப்படி, நேற்று ஒன்று சொன்னார்கள்! கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டிற்குப் பத்து இலட்சம் கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக பச்சைப் பொய் சொல்கிறார்கள்! நம்மிடம் ஒரு ரூபாயை வரியாக வாங்கினால், 29 பைசா மட்டும் திருப்பித் தந்துவிட்டு, நேற்று ஒரு கணக்கு காட்டியிருக்கிறார்கள்! எல்லாம் பொய்க் கணக்கு!

உதாரணத்திற்குச் சொல்கிறேன். நான் பலமுறை கோரிக்கை வைத்தும் ஒரு ரூபாய் கூட கொடுக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். சென்னை முழுவதும் மெட்ரோ பணிக்காகச் சாலைகள் தோண்டப்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கிறதே அதற்கு என்ன காரணம்? ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒருபைசா கூட பணம் தராததுதான்!

அப்படியும் பணிகளை முடித்தாக வேண்டுமே! திட்டத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமே என்று மாநில அரசே நிதிச்சுமையை ஏற்றுக்கொண்டு பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறோம். இதனால், நம் அரசுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகிறது!

இப்படி நிதிநெருக்கடியை உருவாக்கிவிட்டு, சர்வசாதாரணமாகப் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்! இங்கே மீனவர்கள் பலர் வந்திருக்கிறீர்கள்! சாகர்மாலா திட்டத்திற்கு 2 இலட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பணிகள் எங்கேயாவது நடந்து பார்த்திருக்கிறீர்களா

அதுமட்டுமல்ல, ஒற்றைச் செங்கல்லோடு நிற்கும் எய்ம்ஸ்க்கு 1,960 கோடியாம்! அதற்குத்தான் கேட்டேன். நீங்கள் பேசும் எத்தனை பொய்களைத்தான் எங்கள் காதுகள் தாங்கும்? எங்கள் காது பாவமில்லையா! தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சிக்கு ரிப்போர்ட்கார்டு கொடுக்கமுடியாத பிரதமர் மோடி – எந்த முகத்தோடு வாக்கு கேட்டு வருகிறார்!

அவரிடம், சொல்லச் சாதனைகள் இல்லை! ஒன்றியத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி அரசில், தமிழ்நாட்டிற்கு என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறோம் என்று நானும் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். குறிப்பாக, இங்கு சென்னைக்கு மட்டும் சொல்ல வேண்டும் என்றால், சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம்! மதுரவாயல் – துறைமுகம் இடையே பறக்கும் சாலைத் திட்டம்! சென்னை துறைமுகத்தையும் – எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கும் சாலையை அகலப்படுத்தும் திட்டம்! கத்திப்பாரா, பாடி என்று பல்வேறு மேம்பாலங்கள்! நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்! இப்படி நிறைய இருக்கிறது. மீண்டும் தமிழ்நாட்டிற்கு இதுபோன்ற திட்டங்களைத் தரும் பிரதமர்தான் நமக்கு வேண்டும்! அதற்கு நீங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்.

நான் தொடர்ந்து தெம்போடும் துணிச்சலோடும் நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளைச் சொல்லி கொண்டு இருக்கிறேன். பயனடைந்த பயனாளிகள் சொல்வதைத்தான் சொல்கிறேன். நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாதநிகழ்ச்சி. அதில், ஒரு சகோதரி பேசியிருக்கிறார். “என் கணவர் என்னை கைவிட்டுவிட்டார்! எல்லா ஆவணங்களையும் எடுத்து கொண்டு போய்விட்டார். எட்டு வருடமாக என்னால் ரேஷன் கார்டை மீட்க முடியவில்லை! கணவனால் கைவிடப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் ரேஷன்கார்டு வாங்குவதில் பெரிய பிரச்சினை இருந்தது. ஏன் என்றால், குடும்பத் தலைவர் என்று அவர் பெயர் இருக்கும். நம்பரும் அவருடையதாக இருக்கும். அவர்களிடமிருந்து ரேஷன்கார்டை மீட்க டைவர்ஸ் வாங்கியிருக்க வேண்டும். டைவர்ஸுக்குக் கோர்ட்டுக்கு அலைவேனா..

என் உடல்நலனை பார்ப்பேனா? ஆனால், என்னிடம் உண்மை இருக்கிறது என்ற நம்பிக்கையோடு அலைந்தேன். அப்போதுதான் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று வந்த ஒரு அரசாணையைப் பற்றிக் கேள்விபட்டேன்.. இந்த மாதிரி பிரச்சினை இருந்தால், விசாரணை நடத்தித் தாசில்தாரே கணவர் பெயரை நீக்கிவிட்டு ரேஷன்கார்டைக் கொடுக்கலாம். அதை வைத்துக்கொண்டு, தாசில்தார் எல்லாவற்றையும் விசாரித்து, ஐந்தே நிமிடத்தில் எனக்கு ரேஷன் கார்டு கொடுத்தாங்க” என்று தழுதழுத்த குரலோடும் கண்ணில் கண்ணீரோடும் அந்த சகோதரி பேசினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியிருக்கிறது.

என்னுடைய ஒவ்வொரு கையெழுத்தும் – ஒவ்வொரு அரசாணையும் – ஒவ்வொரு சட்டமும் – கோடிக்கணக்கான மக்களுடைய மனங்களில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது! விளிம்பு நிலையில் வாழும் குரலற்றவர்களின் வாழ்க்கையை ஒருபடியாவது முன்னேற்ற உதவுகிறது!

இன்னொரு காணொலி, அதில், யார் அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும்! என்று யூடியூப் சேனலில், ஒரு அம்மாவிடம் கேள்வி கேட்கிறார்கள். ”ஸ்டாலின் வரவேண்டும் என்று நினைக்கிறோம். வேலைக்குப் போனாலும் – போகாவிட்டாலும் – பெற்ற பிள்ளை கொடுக்காவிட்டாலும் – ஸ்டாலின் எங்களுக்கு மகனாக இருந்து 1000 ரூபாய் கொடுக்கிறார். அவர்தானே பலரை ஆபத்திலிருந்து காப்பாற்றி வருகிறார். இதற்கு மேல் என்ன செய்வார்.” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். இப்படி ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களின் முகங்களில் சிரிப்பை வரவைப்பதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கான ஊக்கமாக நான் எடுத்து கொள்கிறேன்.

இதுபோன்று, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் மகளிரும், எங்கள் அண்ணன் ஸ்டாலின் வழங்கும் தாய்வீட்டுச்சீர் என்று பாசத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைக் கொண்டாடுகிறார்கள். உரிமைத்தொகையால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்து, உள்ளூர் சிறுவணிகர்களின் வியாபாரமும் பெருகி இருக்கிறது.

இது சமூகப்புரட்சித் திட்டம் மட்டுமல்ல! பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் இன்றைக்கு மாறியிருக்கிறது.

அடுத்து, தினமும் இலட்சக்கணக்கான மகளிர் மகிழ்ச்சியாக, நாங்கள் ஸ்டாலின் அய்யா பஸ்ஸில், இலவசமாகப் பயணம் செய்கிறோம் என்று சொல்லக்கூடிய விடியல் பயணம் திட்டம்!

அத்துடன், கல்லூரியில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு, மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்!

வெளியூரில் வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பாகத் தங்குவதற்கு, ’தோழி விடுதி’!

விரைவில், மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் போகும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம்!

இளைஞர்களுக்குத் திறன்பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்றுத்தரக் கூடிய ”நான் முதல்வன்” திட்டம்!

ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைந்திருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்!

2 இலட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்றி, அவர்களின் குடும்பங்களையும் காப்பாற்றி இருக்கும் ”இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம்” ! இப்படி ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

நம் சென்னையைப் பொறுத்தவரை, நான் மேயராக – உள்ளாட்சித்துறை அமைச்சராக – துணை முதலமைச்சராக வடசென்னையின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தாலும், இப்போது முதலமைச்சர் ஆனதும், குறிப்பாக வடசென்னைப் பகுதியை வளர்த்தெடுக்க வேண்டும் என்று, 4 ஆயிரத்து 189 கோடி ரூபாயில் 11 அரசுத் துறைகளின் திட்டங்களை, இங்கு மேடையில் இருக்கும் மாண்புமிகு சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் தொடங்கி வைத்தோம்.

இப்படி நாம் ஒரு பக்கம் சாமானிய, ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்காகப் பார்த்துப் பார்த்து பலதிட்டங்களை ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியிலிருந்து நிறைவேற்றிக் கொண்டு இருந்தால், இன்னொரு பக்கம் அவர்களை நடுத்தெருவில் நிற்கவைக்கும் திட்டங்களையும், சட்டங்களையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அடுத்தடுத்து கொண்டு வருகிறார்கள்.

நடுத்தர வர்க்க மக்கள் என்ன செய்கிறார்கள்? ஹோட்டலிலிருந்து டூவீலர் வாகனத்தைப் பழுது பார்க்கிறவரை, எல்லாவற்றிற்கும் G.S.T.! ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்ட பில்லை வாங்கிப்பார்த்தால், கூடுதலாக, ஒருதொகை இருக்கும். G.S.T. தொகை என்று அதைப் பார்த்துவிட்டு மக்கள் என்ன கேட்கிறார்கள்?

”கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றரை இலட்சம் கோடி ரூபாயை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், சாமானிய மக்கள் மேல் இவர்களுக்கு கொஞ்சம்கூட கருணையே கிடையாதா?- என்று மக்கள் புலம்புகிறார்கள்.

இப்படி மக்கள் சொல்கிறார்கள் என்று மீடியாவில் கேட்டால், “ஹோட்டலில் ஏன் சாப்பிடுகிறீர்கள். வீட்டில் சாப்பிட ஜி.எ.ஸ்.டி வரி எதுவும் இல்லையே!” என்று திமிராக பதில் சொல்கிறார் நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன். போகும் போக்கை பார்த்தால், மக்கள் நிறைய செல்பி எடுக்கிறார்கள் என்று, இனி, செல்பி எடுக்கவும் இவர்கள் ஜி.எ.ஸ்.டி போட்டாலும் போடுவார்கள்!

மாநில முதலமைச்சராக இருந்தபோது ஜி.எஸ்.டி.யைக் கடுமையாக எதிர்த்தவர்தான் மோடி அவர்கள். “இதை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை. என் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று கர்ஜித்தார்.

ஆனால், பிரதமர் ஆனதும் என்ன சொல்கிறார்? ஜி.எஸ்.டி வரி என்பது பொருளாதாரச் சுதந்திரம் என்று சொல்கிறார். ஜி.எஸ்.டி.யில் கிடைக்கின்ற மொத்த வருவாயில், 64 சதவீதம் அடித்தட்டு மக்களிடம் இருந்தும்; 33 சதவீதம் நடுத்தர மக்களிடம் இருந்தும் வசூல் செய்யப்படுகிறது. வெறும் 3 சதவீதம்தான், பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது.

பிரதமர் மோடி சொன்னது போன்று G.S.T. யாருக்குப் பொருளாதார சுதந்திரமாக இருக்கிறது என்றால், அவருடைய நண்பர்களான கார்ப்பரேட்களுக்கு மட்டும்தான்! இந்தத் தேர்தலில் INDIA கூட்டணியை வெற்றி பெற வைக்க இந்தியா முழுவதும் எல்லா மாநில மக்களும் தயாராகிவிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் சுற்றுப்பயணம் போய்விட்டு சென்னை வந்திருக்கிறேன்.

ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள், இளைஞர்கள், குறிப்பாக, பெண்கள் தருகிற ஆதரவு பிரமிக்க வைக்கிறது. சென்னையும் திருவள்ளூரையும் 10 ஆண்டு ஆட்சியில் பா.ஜ.க.வும் – அ.தி.மு.க.வும் முழுமையாகப் புறக்கணித்தார்கள். அதனால்தான் 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் நீங்கள் அவர்கள் இண்டு பேரையும் மொத்தமாக ஒதுக்கி, தி.மு.க. கூட்டணிக்கு முழுவெற்றியை தந்தீர்கள். அது இந்தத் தேர்தலிலும் தொடர வேண்டும்!

சென்னையும், திருவள்ளூரும் வளரக்காரணம் தி.மு.க. ஆட்சி! இந்தப் பகுதியை எப்போதும் கண்டுகொள்ளாத ஆட்சி அ.தி.மு.க. – பா.ஜ.க. ஆட்சி! இதனை மனதில் வைத்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும்.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த் செந்தில் அவர்களுக்குக் கை சின்னத்திலும், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் கலாநிதி வீராசாமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் நீங்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று உங்களில் ஒருவனாக – உங்களுக்காகவே உழைத்த தலைவர் கலைஞருடைய மகனாகக் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! நம் எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மு.க.ஸ்டாலின்:“ராகுல் அவர்களே… வருக! புதிய இந்தியாவிற்கு விடியல் தருக!”

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களையும், வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, கொரோனா வந்தப்போது என்ன செய்தார்? “இரவெல்லாம் எல்லாரும் மணி அடியுங்கள், விளக்கு ஏற்றுங்கள், கொரோனா ஒழிந்துவிடும்”என்று பெரிய ‘சயிண்டிஸ்ட்’ போன்று பேசினார். இன்னும் நிறைய இருக்கிறது! அதனால்தான், நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு! நாட்டுக்கும் கேடு!

பிரதமர் மோடி இரவுகளில் அறிவித்த அறிவிப்புகளை எல்லாம் மாற்றி, இந்தியாவில் விடியலை ஏற்படுத்தத்தான், இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம்! அதனால்தான், எனது அன்புச் சகோதரர் ராகுல்காந்தி கோவை வந்தபோது, “ராகுல் அவர்களே… வருக! புதிய இந்தியாவிற்கு விடியல் தருக!”என்று கூறினேன் என மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

தொல். திருமாவளவன்: மு.க. ஸ்டாலின் பாஜகவோடு கைகோத்திருந்தால் செந்தில்பாலாஜி சிறையில் இருந்திருக்கமாட்டார்..!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், கடலூர் மாவட்டம், வேப்பூரில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணி கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் விஷ்ணுபிரசாத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, “தேசிய அளவில் வியூகம் அமைத்து, எடப்பாடியையோ, அதிமுகவையோ எதிராகக் கருதாமல், தேசிய அளவில் பாஜகவை, மோடியை வீழ்த்தவேண்டும் என்ற முயற்சியில் 28 கட்சிகள் அடங்கிய கூட்டணி தான் இண்டியா கூட்டணி. அந்தக் கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் ஒன்று. திமுக தலைமையிலான கூட்டணி அமைந்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பல்வேறு விமர்சனங்கள் கூறப்பட்ட்டது.

எதிரணியில் 5 சீட் கிடைக்கும், திமுகவோடு இருந்தால் 2 தான் கிடைக்கும். எனவே அணி மாறுவார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை எனக்கு நம்பர் முக்கியமல்ல. நான் ஏற்றுகொண்டிருக்கிற கொள்கை தான் முக்கியம். அதனால் தான் அண்ணன் ஸ்டாலினோடு கைகோத்திருக்கிறேன்.

இன்று இருக்கும் சூழலில் அவர் பாஜகவோடு கைகோத்திருந்தால், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை நெருக்கடி ஏற்பட்டிருக்காது. செந்தில்பாலாஜி சிறையில் இருந்திருக்கமாட்டார். அண்ணன் பொன்முடி வழக்கும் திசைமாறியிருக்கும். ஆனால் பாஜக என்ன நெருக்கடி தந்தாலும் பாஜகவை தமிழ்நாட்டில் வளர விடமாட்டேன் என்ற உறுதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். என்ன செய்தாலும் பாஜக மீண்டும் வெற்றி பெறக்கூடாது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என துடிக்கிறேன். அப்படியானால் கடலூர் தொகுதியில் விஷ்ணு பிரசாத்தும் வெற்றிபெறவேண்டும். இந்தத் தொகுதியில் பொறுப்பாளரான அமைச்சர் சி.வெ.கணேசன், எதையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர். அதனால் தான் அவர் அமைச்சர் பதவியோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் சேர்த்து கவனித்து வருகிறார்” என தொல். திருமாவளவன் பேசினார்.

மு.க.ஸ்டாலின் ஊழலை ஒழிக்க வந்த அவதாரப் புருஷராக டி.வி. முன்பு தோன்றி, பணமதிப்பு இழப்பை அறிவித்தார்..!

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களையும், வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, இதுவரை நீங்கள் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கலாம்! பல இளைஞர்களுக்கு இது முதல் தேர்தலாக இருக்கலாம்! ஆனால், இது சற்றே மாறுபட்ட தேர்தல்! மிக மிக முக்கியமான தேர்தல்! ஏன் என்றால், இந்த தேர்தலில் நீங்கள் போடும் வாக்குதான் இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்கவேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்கவேண்டுமா? அதுபோன்று, இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய சட்டம் இருக்கவேண்டுமா அல்லது R.S.S. எழுதும் சட்டம் இருக்கவேண்டுமா? இடஒதுக்கீடுமுறை இருக்கவேண்டுமா அல்லது வேண்டாமா? எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழவேண்டுமா – வாழக்கூடாதா? இதையெல்லாம் முடிவு செய்யப்போகும் தேர்தல். உங்கள் வாக்குதான் அந்த முடிவை தீர்மானிக்கப் போகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாம் ஏன் “வேண்டாம் மோடி”என்று சொல்கிறோம் என்றால், அவர் இரவுகளில் கொண்டுவரும் சட்டங்களால்! தீடீர் என்று ஒரு இரவில்தான், ஊழலை ஒழிக்க வந்த அவதாரப் புருஷராக டி.வி. முன்பு தோன்றி, பணமதிப்பு இழப்பை அறிவித்தார்! இரவில் பல மக்களை ஏ.டி.எம் வாசலில் நிற்க வைத்தார்! அதேபோன்று ஒரு இரவில்தான், பெரிய பொருளாதாரப் புலி போன்று, G.S.T. சட்டத்தை அமல்படுத்தி, தொழில் முனைவோரையும் நடுத்தர வர்க்க மக்களையும் கொடுமைப் படுத்தினார். எவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டனர்! என முக ஸ்டாலின் உரையாற்றினார்.

மு.க.ஸ்டாலின்: “திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ‘ஹீரோ…!’ பாஜக தேர்தல் அறிக்கை நாட்டிற்கே வில்லன்…!

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களையும், வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான தொண்டை மண்டலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இந்தியாவிலேயே 75 ஆண்டுகளைக் கடந்துள்ள ஒரே மாநிலக் கட்சி என்ற வரலாற்றுக்குச் சொந்தமான – இனமான எழுச்சி இயக்கமாம், திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய, வடசென்னை தொகுதிப் பரப்புரைக்கும் சேர்த்தே வந்திருக்கிறேன்.

பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த மண், திருவள்ளூர்! அந்த மண்ணில், இரண்டாம் விடுதலைப் போராக நடைபெறவுள்ள இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்காக உங்களை நாடி வந்திருக்கிறேன். வெற்றி என்றால், சாதாரண வெற்றியல்ல! கடந்த 2021-இல் திருவள்ளூர் மாவட்டத்தில் நூறு சதவீத வெற்றியைத் தந்தீர்கள். அது போன்று இருக்கவேண்டும். வரிசை எண்ணில் தமிழ்நாட்டில் முதல் தொகுதி திருவள்ளூர் அதேபோல், வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்திலும் முதல் தொகுதியாக இருக்கவேண்டும்.

கழகக் கோட்டையான திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில், வேட்பாளராகப் போட்டியிடுகிறார் சசிகாந்த் செந்தில் அவர்கள். அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்தவர். தனது அறிவாற்றலால் காங்கிரஸ் பேரியக்கத்தின் வெற்றிக்காக உழைப்பவர். சமூகநீதி – சமூக நல்லிணக்கத்திலும் அக்கறை கொண்ட இவரை திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் கை சின்னத்தில் வாக்களித்து, தங்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வடசென்னை தொகுதியைப் பொறுத்தவரை, தி.மு.க. தொடங்க ஆலோசனை நடைபெற்ற மண்ணடி, பவளக்காரத்தெரு, கொட்டும் மழையில் தி.மு.க. தொடங்கப்பட்ட ராபின்சன் பூங்கா, இன்று கழகத்தின் இதயமாக இயங்கும் அறிவாலயத்திற்கு முன்பு, கழகத்தின் உயிர்த்துடிப்பாக இயங்கும் அறிவகம், அன்னைத் தமிழுக்காக இன்னுயிர் ஈந்த தியாக மறவர்களான நடராசன் தாளமுத்துவைப் போற்றும் நினைவிடம் அமைந்துள்ள மூலக்கொத்தளம் எனத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் வடசென்னைக்குமான உறவு தாய்க்கும் சேய்க்குமான உறவு!

இன்னும் கூடுதலாக சொல்லவேண்டும் என்றால், பெருமையோடு பூரிப்போடு சொல்லவேண்டும் என்றால், நான் முதலமைச்சர் ஆக, என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூரை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதி! அப்படிப்பட்ட வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் கலாநிதி வீராசாமி அவர்கள், தலைவர் கலைஞரின் நிழலாக இருந்த அண்ணன் ஆர்க்காட்டாரின், அருமை மகன்! மக்கள் பிணியை போக்கும் புகழ்பெற்ற மருத்துவரான இவர், சமூகப்பிணியை போக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார்.

அவரின் குரல் தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும்! அதற்கு வடசென்னை மக்கள், உதயசூரியன் சின்னத்தில் கலாநிதி வீராசாமி அவர்களுக்கு, வாக்களித்து வெற்றிபெற வைக்கவேண்டும். இந்த இரண்டு வேட்பாளர்களையும் நாடாளுமன்றம் அனுப்பத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் மட்டும் இல்லை. இந்த ஸ்டாலினின் தூதுவர்களாக, உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப் பிறகு என்ன? வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காரலாம்!

இதுவரை நீங்கள் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கலாம்! பல இளைஞர்களுக்கு இது முதல் தேர்தலாக இருக்கலாம்! ஆனால், இது சற்றே மாறுபட்ட தேர்தல்! மிக மிக முக்கியமான தேர்தல்! ஏன் என்றால், இந்த தேர்தலில் நீங்கள் போடும் வாக்குதான் இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்கவேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்கவேண்டுமா? அதுபோன்று, இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய சட்டம் இருக்கவேண்டுமா அல்லது R.S.S. எழுதும் சட்டம் இருக்கவேண்டுமா? இடஒதுக்கீடுமுறை இருக்கவேண்டுமா அல்லது வேண்டாமா? எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழவேண்டுமா – வாழக்கூடாதா? இதையெல்லாம் முடிவு செய்யப்போகும் தேர்தல். உங்கள் வாக்குதான் அந்த முடிவை தீர்மானிக்கப் போகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாம் ஏன் “வேண்டாம் மோடி”என்று சொல்கிறோம் என்றால், அவர் இரவுகளில் கொண்டுவரும் சட்டங்களால்! தீடீர் என்று ஒரு இரவில்தான், ஊழலை ஒழிக்க வந்த அவதாரப் புருஷராக டி.வி. முன்பு தோன்றி, பணமதிப்பு இழப்பை அறிவித்தார்! இரவில் பல மக்களை ஏ.டி.எம் வாசலில் நிற்க வைத்தார்! அதேபோன்று ஒரு இரவில்தான், பெரிய பொருளாதாரப் புலி போன்று, G.S.T. சட்டத்தை அமல்படுத்தி, தொழில் முனைவோரையும் நடுத்தர வர்க்க மக்களையும் கொடுமைப் படுத்தினார். எவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டனர்!

கொரோனா வந்தப்போது என்ன செய்தார்? “இரவெல்லாம் எல்லாரும் மணி அடியுங்கள், விளக்கு ஏற்றுங்கள், கொரோனா ஒழிந்துவிடும்”என்று பெரிய ‘சயிண்டிஸ்ட்’ போன்று பேசினார். இன்னும் நிறைய இருக்கிறது! அதனால்தான், நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு! நாட்டுக்கும் கேடு!

பிரதமர் மோடி இரவுகளில் அறிவித்த அறிவிப்புகளை எல்லாம் மாற்றி, இந்தியாவில் விடியலை ஏற்படுத்தத்தான், இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம்! அதனால்தான், எனது அன்புச் சகோதரர் ராகுல்காந்தி கோவை வந்தபோது, “ராகுல் அவர்களே… வருக! புதிய இந்தியாவிற்கு விடியல் தருக!”என்று கூறினேன். மக்களைச் சந்தித்து, மக்களோடு மக்களாக இருந்து, அவர்கள் பிரச்சினைகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு தி.மு.க.வும் – காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம்!

தெற்கிலிருந்த நம்முடைய குரல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக எதிரொலித்திருக்கிறது! முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒருலட்சம் ரூபாய்!

நீட் தேர்வு ரத்து!

ஒன்றிய அரசுப் பணிகளில் பெண்களுக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீடு!

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பை 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தச் சட்டத்திருத்தம்!

SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை!

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்வு!

பா.ஜ.க-வின் ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம்!

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை!

இத்துடன், நம்முடைய தேர்தல் அறிக்கையில் சில முக்கிய அறிவிப்புகளையும் தலைப்புச் செய்தியாக சொல்கிறேன்.

சென்னையில் மூன்றாவது ரயில் முனையம்!

கோயம்பேடு முதல் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை விரைவில் மெட்ரோ ரயில்!

விம்கோ நகரில் இருந்து எண்ணூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு!

வடக்கில் இருந்து வரும் ரயில்கள் விம்கோ நகரில் நின்று செல்ல நடவடிக்கை!

வில்லிவாக்கம் ரயில்நிலையத்தில் இருந்து, தெற்குப் பக்கமாகச் செல்ல சுரங்க நடைபாதை!

மணலியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை!

செங்குன்றத்தை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க, உயர்மட்ட மேம்பாலம்!

பழவேற்காடு முதல் கடப்பாக்கம் இடையே மேம்பாலம் அமைத்துப் புதிய சாலை!

இதுமட்டுமல்ல, பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாகத் தள்ளுபடி!

சிறுபான்மையினர் விரோத சட்டங்கள் ரத்து!

விவசாயக் கடன்கள் தள்ளுபடி!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

நூறுநாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்வு! நாளொன்றுக்கு 400 ரூபாய் ஊதியம்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

முதியோர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்களுக்கு இரயிலில் மீண்டும் கட்டணச்சலுகை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு!

மீனவ மக்கள் நிறைந்த பகுதி இது! அவர்களுக்காக அறிவிக்கப்பட்டவை, உலர்மீன் முற்றங்கள் கட்டுதல் போன்ற மீனவர்களுக்குத் தேவையான தொழில் கட்டமைப்புப் பணிகள் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்!

பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை!

தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கப்படும்!

மீன்பிடி தடைக்காலங்களில் மாற்றுப் பொருளாதார வேலைவாய்ப்புகளை உருவாக்க மீன்கள் பதப்படுத்துதல், மீன்வளர்ப்பு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள்!

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்., இப்படி, தி.மு.க. – காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகள் இந்தத் தேர்தலின் “ஹீரோ”என்றால், பா.ஜ.க. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ‘வில்லன்! பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வில்லன் என்று ஏன் சொல்கிறோம் என்றால், மத அடிப்படையில் இந்த நாட்டுமக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கிறார்கள்! என முக ஸ்டாலின் உரையாற்றினார்.

மு.க. ஸ்டாலின்: கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா..!?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

GST: வரி அல்ல… வழிப்பறி!

“தன் பிணத்தின் மீதுதான் ஜி.ஸ்டியை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜிஎஸ்டி பொருளாதாரச் சுதந்திரம்” என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.” என கடுமையாக விமர்சித்துள்ளளார்.

மு.க. ஸ்டாலின்: GST: வரி அல்ல… வழிப்பறி!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

GST: வரி அல்ல… வழிப்பறி!

“தன் பிணத்தின் மீதுதான் ஜி.ஸ்டியை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜிஎஸ்டி பொருளாதாரச் சுதந்திரம்” என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.” என கடுமையாக விமர்சித்துள்ளளார்.

மு.க.ஸ்டாலின்: யார் விசுவாசமான அடிமை என்பதில் இவர்களுக்குள்ளே சண்டை..!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, நாட்டையே பாழ்படுத்திய பா.ஜ.க.-வுடன் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு பழனிசாமி வருகிறார். பழனிசாமிக்கும் ’தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கும்தான்’ பிரச்சினையே தவிர – அவருக்கும் மோடி – அமித் ஷாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. யார் விசுவாசமான அடிமை என்பதில் வேண்டும் என்றால் இவர்களுக்குள்ளே சண்டையாக இருக்கலாம். ஆனால் எந்தக் காலத்திலும், பிரதமரை எதிர்த்து, ஒன்றிய பா.ஜ.க.வை எதிர்த்து, பழனிசாமியால் கட்சி நடத்தவும் முடியாது; அரசியல் நடத்தவும் முடியாது!

ஏன் என்றால், சசிகலாவிடம் இருந்து பன்னீர்செல்வத்தைப் பிரித்து தர்மயுத்தம் நாடகம் நடத்த வைத்ததே பா.ஜ.க.தான். சசிகலா சிறைக்குப் போன பிறகு, முதலமைச்சர் ஆன பழனிசாமியை – தங்கள் பக்கம் கொண்டு வந்ததும் பா.ஜ.க.தான். இரு துருவங்களாக இருந்த பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் ஒன்றுசேர்த்ததும் பா.ஜ.க.தான். தினகரனைக் கைது செய்து சிறையில் அடைத்து – அவரையும் தங்களுடைய அடிமையாக மாற்றியதும் பா.ஜ.க.தான். இன்று பன்னீர்செல்வத்தையும் தினகரனையும் மிரட்டித் தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பா.ஜ.க.தான். சசிகலாவை அரசியல் பக்கம் வரக்கூடாது என்று தடுத்ததும் பா.ஜ.க.தான். பழனிசாமியைத் தனியாக நிற்கவைத்ததும் பா.ஜ.க.தான்.

இப்படி டிவி சீரியலில் தீடீர்தீடீர் என்று ஆட்களையும் காட்சிகளையும் மாற்றுகிற மாதிரி – சதிநாடகங்களை அரங்கேற்றி இருக்கிறது பா.ஜ.க. தலைமை! உறுதியோடு சொல்கிறேன்! இந்தத் தேர்தலில் நேரடி பா.ஜ.க.வும் மண்ணைக் கவ்வும்! பா.ஜ.க.வின் தொங்குசதைகளும் படுதோல்வி அடைவார்கள்! என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்: வங்கதேசத்தோடு மோடி செய்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், திருப்பூருக்கு பேரிடி..!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும் நிறுவனங்களை நடத்த முடியும். பா.ஜ.க. போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும்! தொழில் வளர்ச்சி போய்விடும்! நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது! இப்படி நாட்டைப் பாழ்படுத்தி – அதலபாதாளத்தில் தள்ளிய பா.ஜ.க.வையும் – மோடியையும் வீட்டிற்கு அனுப்ப இந்திய மக்களின் ஆதரவுடன் உருவாகி இருப்பதுதான் இந்தியா கூட்டணி!

இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை நாடாளுமன்றத் தேர்தல்கள் மூலமாக நாம் இத்தனை நாளாகக் காப்பாற்றி வந்திருக்கிறோம். இந்தியாவின் பன்முகத்தன்மையை அனைத்துத் தரப்பினருக்கும் உரிமைகள் வழங்குவதன் மூலமாக காப்பாற்றி வந்திருக்கிறோம். வேற்றுமைகள் கொண்ட நாட்டில் ஒற்றுமையை உருவாக்கிக் காப்பாற்றி வந்திருக்கிறோம். மொழியும், மதமும் வேறு வேறாக இருந்தாலும் இந்திய நாடு நமக்கானது என்ற எண்ணத்தை எல்லோரும் பெறுவதற்கு ஒரு நம்பிக்கையான ஆட்சிமுறையை வைத்துக் காப்பாற்றி வந்திருக்கிறோம்.

இப்படி நாம் காப்பாற்றிய இந்தியாவை, சிதைக்கப் பார்க்கிறார் மோடி அவர்கள். ஒற்றுமைச் சிந்தனை குலைந்துவிட்டால், மிக மோசமான ஆபத்துகள் நம்மைச்சூழும். அதனால்தான் இந்தியா முழுமைக்கும், இருக்கும் ஜனநாயக சக்திகள் இந்தியாவைக் காக்க ஒன்று சேர்ந்திருக்கிறோம். பாசிசத்தை வீழ்த்த ஒன்று சேர்ந்திருக்கிறோம்.

இந்தியா கூட்டணி அரசு ஒன்றியத்தில் அமைந்ததும் ஒன்றிய அரசை வலியுறுத்தி நாம் செய்யவுள்ள திட்டங்களை வாக்குறுதிகளாகத் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். அது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும், எதிரொலித்திருக்கிறது! நம்முடைய வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாகச் சொல்ல விரும்புகிறேன்.

மக்காச்சோளம் – சோயா போன்ற முக்கிய இடுபொருள் தானியங்களின் விலையைக் குறைக்க ரயில்வேயில் கட்டணச் சலுகை!

சிறு தேயிலை விவசாயிகளின் பச்சைத் தேயிலைக்குக் குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு 35 ரூபாய்!

நீலகிரி மாவட்ட சுற்றுலாத்தலங்கள் மற்றும் அதற்கான வழித்தடங்கள் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக மேம்பாடு!

இதுமட்டுமல்ல, மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!

தொழிலாளர் விரோத சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும்!

விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும், வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்!

உழவர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது, விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தோர் மற்றும் மாணவர்களுக்கு இரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்!

அதுமட்டுமல்ல, சகோதரர் ராகுல் காந்தி கூறினாரே! ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய்! நீட் தேர்வு ரத்து! ஒன்றிய அரசுப்பணிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு!

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு, 50 விழுக்காடு என்பதை உயர்த்த சட்டத்திருத்தம்!

மேற்கு மண்டல மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பா.ஜ.க-வின் ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம்!

விவசாய இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது!

– உள்ளிட்ட மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மாநிலங்களுக்கும் – நாட்டிற்கும் நம்பிக்கையளிக்கும் தேர்தல் அறிக்கையாகக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இருக்கிறது!

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, புதிய இந்தியாவை உருவாக்குவேன் என்று கூறினார்! ஆனால், அவரின் பத்தாண்டுகால ஆட்சியில் என்ன மாதிரியான இந்தியாவை உருவாக்கியிருக்கிறார்? ஒரு புள்ளிவிவரம் சொல்கிறேன்! பட்டினியால் தவிக்கும் நாடுகள் பட்டியலில் 125 நாடுகளில், இந்தியா 111-ஆவது இடத்தில் இருக்கிறது என்று உலகளாவிய பட்டினிக்குறியீட்டுப் புள்ளிவிவரம் சொல்கிறது! இது எவ்வளவு பெரிய அவலம்!

அடுத்து, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவின் கடன் 58 இலட்சம் கோடி ரூபாய்! இப்போது எவ்வளவு தெரியுமா? 155 இலட்சம் கோடி ரூபாய்! இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் நிதி மேலாண்மை லட்சணம்! மோடி ஆட்சிக்கு வந்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59 ரூபாய்! இன்று 84 ரூபாயாகி நம்முடைய நாட்டு பணத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது! இந்த வீழ்ச்சிதான் மோடியின் சாதனை!

மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நிம்மதியாக நடமாட முடிகிறதா? ஊடக நிறுவனங்களால் நிம்மதியாகச் செயல்பட முடிகிறதா? தங்களுக்கு கட்டுப்படவில்லை என்றால், ஒட்டுமொத்தமாக அந்த நிறுவனங்களை விலைக்கு வாங்கிப் பத்திரிக்கையாளர்கள் மேல் அடக்குமுறையை ஏவுகிறார்கள். உண்மையை எழுதும் பத்திரிக்கையாளர்களைச் சிறையில் அடைப்பது! அவர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பது என்று பத்திரிக்கைச் சுதந்திரமே பறிக்கப்பட்டிருக்கிறது! அதன் விளைவுதான் இன்றைக்கு, ஊடக சுதந்திரத்தில் 180 நாடுகளில் 161-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது! நம்முடைய பழம்பெரும் ஜனநாயகத்திற்கு எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

மோடி சொன்ன புதிய இந்தியா, இவரின் ஆட்சியில் இந்தியாவில் 32 விழுக்காடு மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கிறார்கள். 44 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தவில்லை. 30 விழுக்காடு மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதியே இல்லை. 41 விழுக்காடு மக்களுக்கு வீடுகள் இல்லை. இப்படித்தான் இருக்கிறது! மோடி சொன்ன புதிய இந்தியா!

விலைவாசி எந்த அளவுக்குப் போய் இருக்கிறது? மோடி ஆட்சியில் தானியங்கள் விலை 54 விழுக்காடு அதிகமாகிவிட்டது. பால் பொருட்கள் விலை 53 விழுக்காடு அதிகம். எண்ணெய் விலை 48 விழுக்காடு அதிகம். காய்கறி விலை 48 விழுக்காடு அதிகம். மருத்துவச் செலவுகள் 71 விழுக்காடு அதிகம். கல்விச் செலவுகள் 60 விழுக்காடு அதிகம். இதெல்லாம்தான் மோடி கூறிய வளர்ச்சியா?

பத்து ஆண்டுகளாகப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தும் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை! அதனால்தான் எந்த மேடையிலும் அவரால் திட்டங்களையும், சாதனைகளையும் சொல்ல முடியவில்லை! ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியைப் பொருத்தவரைக்கும் ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் கஜானாவைத் தூர்வாரிய அ.தி.மு.க.வால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமை, நாங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே திருப்பித் தந்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு தரும் நிதி நெருக்கடி என்று எல்லாவற்றையும் மீறி, ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறோம்.

நேற்று நம்முடைய கூட்டணிச் சின்னத்தைக் காட்டி, ஒரு தாய்மாரிடம் நம்முடைய கழகத் தோழர்கள் வாக்கு கேட்கிறார்கள். அதற்கு அவர்கள், “சின்னம் எல்லாம் முக்கியம் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் முகத்திற்காகவே நாங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டு போடுவோம். அவர்தானே, நாங்கள் செல்லும் பஸ் எல்லாம் இப்போது Free ஆக்கியிருக்கிறார்” என்று நன்றிப்பெருக்குடன் அவர்கள் சொல்கிறார்கள்.

அதே போல், ஒரு தொலைக்காட்சி நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தோட்டத்தொழிலாளர்களான பெண்களிடம் நம்முடைய அரசின் திட்டங்களைப் பற்றி கேட்கிறார்கள். அந்தச் சகோதரிகள் “நாங்கள் தேயிலைப் பறிக்க அதிகாலையிலேயே வீட்டில் இருந்து கிளம்பிவிடுவோம்! அதனால், எங்கள் குழந்தைங்கள் சரியாக சாப்பிட்டார்களா! இல்லையா! என்று கவனிக்க முடியாது.

ஆனால், இப்போது முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தில் பள்ளிக்கூடத்திலேயே சாப்பாடு கொடுக்கிறார்கள். காலையும், மதியமும் எங்கள் குழந்தைங்கள் ஸ்கூல்லயே சாப்பிட்டுக்கொள்கிறார்கள். அதனால், எங்களுக்கு கவலை இல்லாமல் இருக்கிறது. அதேபோல், உரிமைத்தொகையும் ஒவ்வொரு மாதமும் சரியாக 15-ஆம் தேதி வந்துவிடுகிறது. அவசரத் தேவைக்கு நாங்கள் மருந்து, மாத்திரை வாங்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது!” – என்று மனநிறைவுடன் சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, “எங்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தி.மு.க. அரசு தான் எங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொடுத்து 16 ஆயிரம் ரூபாய் போனஸ் கொடுத்திருக்கிறது”- என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்கள். நம்முடைய ஆட்சி மக்களுக்கு எந்த அளவுக்கு உதவி இருக்கிறது? உதாரணத்திற்கு ஒரு ஏழைக் குடும்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் குடும்பத்தில் முதியோர் இருந்தால், அவர்களுக்கு மாதம் 1200 ரூபாய் உதவித்தொகை கொடுக்கிறோம்.

அந்த வீட்டின் குடும்பத் தலைவிக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை. அவர்கள் வீட்டில் கல்லூரிக்கு செல்லும் ஒரு மகள் இருந்தால், புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய். அதே வீட்டில் ஒரு இளைஞர் இருந்தால், அவருக்கு நான் முதல்வன் திட்டத்தில், இலவசமாக ‘திறன் பயிற்சி; கொடுத்து நல்ல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வாங்கித்தருகிறோம். அந்த வீட்டில் இருக்கும் மூன்று பெண்களும் விடியல் பயணம் திட்டத்தில் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்வதால், மாதம் எப்படியும் 2000 ரூபாய் மிச்சம் ஆகிறது. அதாவது, நம்முடைய திட்டங்களால் நேரடியாவே ஒரு குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய் சென்று சேருகிறது.

மக்களைத் தேடி மருத்துவம் என்று ஒரு முன்னோடித் திட்டம்! இதில் ஒரு கோடிப் பேருக்கு நேரடியாக அவர்கள் வீட்டிற்கே சென்று, மருத்துவம் பார்த்து, டெஸ்ட் எடுத்து, மருந்துகளைக் கொடுத்திருக்கிறோம். பல இலட்சம் பேருக்கு நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, தீர்வு கண்டிருக்கிறோம்.

தமிழ்ப்புதல்வன் என்று ஒரு திட்டத்தை அடுத்து அறிவித்திருக்கிறோம். அதாவது, மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் தரப்போகிறோம். இப்படி, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் நேரடியாகப் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறோம். அதனால்தான், தமிழ்நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் எல்லாம், அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினைப் பார்க்கிறார்கள்.

இப்போது நான் பட்டியலிட்டது சிறு துளிதான். இதே போன்று ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மூன்று ஆண்டுக்குள் நாங்கள் செய்திருக்கிறோம். முழுவதுமாக சொன்னால், இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டம், சாதனை விளக்கப் பொதுக்கூட்டமாக மாறிவிடும்.

இந்த திருப்பூரும், கோவையும் எப்படிப்பட்ட ஊராக இருந்தது? தமிழ்நாட்டின் எந்த மாவட்ட மக்களும், எப்படிப்பட்ட கஷ்டத்தில் இருந்தாலும் – திருப்பூருக்கும் கோவைக்கும் வந்தால் – ஏதாவது வேலை கிடைத்துவிடும் என்று பலருக்கும் நம்பிக்கை தருகிற நகரங்களாக இந்த இரண்டு ஊர்களும் இருந்தது!

அப்படிப்பட்ட இந்த மேற்கு மண்டலத்தின்மேல் மோடி நடத்திய இரட்டைத்தாக்குதல்தான், பண மதிப்பிழப்பு! ஜி.எஸ்.டி! தொழில் நிறுவனங்களில் “வேலைக்கு ஆட்கள் தேவை” என்று நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்த காலம் போய் – மோடி ஆட்சியில் ”ஏல அறிவிப்பு” நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருக்கும் நிலைமைக்கு நிறுவனங்கள் வந்துவிட்டது!

மோடியை நம்பி ஏமாந்துவிட்டதாக, பல தொழிலதிபர்கள் வேதனையோடு புலம்புகிறார்கள்! இந்தப் பகுதியில் இருக்கிற சிறு குறுதொழில்களை நடத்தக்கூடியவர்கள் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்தேன். அதில் பேசியவர்கள், “5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் என்று மேற்கு மண்டலம் வளர மன்மோகன்சிங் ஆட்சிதான் காரணம். ஆனால், பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு – GST -என்று கோவை, திருப்பூர் தொழில்கள் தங்களுடைய அடையாளத்தையே இழந்துவிட்டது என்று தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள்.

அதுமட்டுமா, பஞ்சு, நூல் விலையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எத்தனை முறை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தார்கள்? வங்கதேசத்தோடு மோடி செய்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், திருப்பூருக்கும் மேற்கு மண்டலத்துக்கும் பேரிடியாக அமைந்துவிட்டது! தவணை தவறிய கடனைச் செலுத்த 6 மாதம் வரை இருந்த அவகாசத்தை, சர்பாஸி (SARFAESI) சட்டத்தில் 3 மாதமாகக் குறைத்துத் தொழிலதிபர்களின் சொத்துக்களை ஏலம் விட்டதுதான் அவர் தந்த பரிசு.

டெக்ஸ்டைல் மட்டுமல்ல, வாகன உற்பத்தி, வெட்கிரைண்டர் உற்பத்தி, சிறு, குறு பவுண்டரிகள், இன்ஜினியரிங் மோட்டார் பம்புகள் உற்பத்தி, விசைத்தறிகள் என்று இந்தப் பகுதியுடைய எல்லாத் துறைகளிலும் மிகப்பெரிய மந்தமான சூழலை மோடியின் பாஜக ஆட்சி உருவாக்கியிருக்கிறது.

நேற்று கோவையில் சொன்ன பகிரங்கமான குற்றச்சாட்டை திருப்பூரிலும் மக்கள் மன்றத்தில் வைக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்த நிறுவனத்தை மிரட்டி, குஜராத்தில் தொழில் தொடங்கச் செய்திருக்கிறார்கள் என்று நேற்று சொன்னேன். அதில் கூடுதலாக இன்னொரு செய்தியை இன்று சொல்கிறேன். பி.எல்.ஐ. திட்டம் என்று சொல்லி, தமிழ்நாட்டு மக்களிடம் வரியை வசூலித்துவிட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் குஜராத்தில் தொழில் தொடங்கிட வேண்டும் என்று சலுகை தருகிறார்கள். இவர்கள்தான் இப்போது கோவைக்கும் திருப்பூருக்கும் வாக்கு கேட்டு வருகிறார்கள்.

நம்மைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு அரசு சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் எப்படியெல்லாம் வளர்த்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியும். இந்த நிறுவனங்களுக்கு என இந்தியாவுலேயே முதன்முதலில் தனியாகக் கொள்கையை கொண்டுவந்ததே தலைவர் கலைஞர் அவர்கள்தான். 1970-ஆம் ஆண்டிலேயே சிட்கோ எனக் கூறப்படும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி, இன்றைக்குத் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 127 தொழிற்பேட்டைகள் இருக்கிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிற வகையில், “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்ற மகத்தான திட்டத்தை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடங்கி இருக்கிறது. 35 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் கடன் வாங்கிட வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-ஆவது இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில், சுமார் 50 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது நாட்டிலுள்ள மொத்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் 7.8 விழுக்காடு!

தமிழ்நாட்டில் இருக்கிற MSME நிறுவனங்களில் குறு நிறுவனங்கள் 99 விழுக்காடு! வளர்ந்து வரும் துறைகளுக்கான மையமாவும் தமிழ்நாடு உருவாகி வருகிறது. இதன் மூலமாகத்தான் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்காக அனைத்துத் திட்டங்களையும் தீட்டிக் கொடுத்து வருகிறோம்.

நாட்டில் எளிமையாக தொழில் புரிய உகந்த பட்டியலில் தமிழ்நாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 14-ஆவது இடத்தில் இருந்தது. பெருமையாகச் சொல்கிறேன். இப்போது 3-ஆவது இடத்திற்கு வந்திருக்கிறோம். அடுத்து முதல் இடத்தைப் பிடிப்பதுதான் நம்முடைய இலக்கு.தமிழ்நாடு அரசால் இதுவரை 6 புதிய தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 6 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்குகிற பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் வட்டாரத் தொழில் மையங்கள் நிறுவப்பட இருக்கிறது. சேலம், ஓசூர், கடலூர், தஞ்சாவூர் நகரங்களிலும் – வட்டாரப் புத்தொழில் மையங்கள நிறுவுகிற பணிகள் நடைபெற்று வருகிறது.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக மட்டும் இந்த ஆண்டு 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நம்முடைய எண்ணமானது சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ந்தால்தான் தமிழ்நாடு வளரும்! தொழில் முதலீட்டாளர்கள் பயன் பெறுவார்கள்! ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்!

அதனால்தான், இன்றைக்குக் கூட பல்வேறு சிறு, குறு, நடுத்தரத் தொழில் கூட்டமைப்புகளைச் சந்தித்தபோது, ”நீங்கள் நிறைய எங்களுக்குச் செய்து கொடுக்கிறீர்கள்” என்று சொன்னார்கள். இன்னும் ஒருசில பிரச்சினைகளைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்! அந்த பிரச்சினைகளும் தேர்தல் முடிந்தவுடன், உறுதியாகச் சொல்கிறேன், உங்களை அழைத்துப்பேசி தீர்த்து வைக்க வழிவகை காணப்படும்” என்று உறுதி கொடுத்திருக்கிறேன். சொன்னதைச் செய்வான் இந்த ஸ்டாலின். ஏனென்றால் நான் தலைவர் கலைஞரின் மகன் எனத் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்: மோடியும் பாஜகவும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, மறுக்கப்பட்ட கல்வி – வேலைவாய்ப்பு – அதிகாரம் இதையெல்லாம் போராடிப் பெற்ற இயக்கம், திராவிட இயக்கம்! பிற்படுத்தப்பட்ட மக்கள் – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் – ஆதிதிராவிட மக்கள் குறிப்பாக, அருந்ததியின மக்கள்- சிறுபான்மையின மக்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கி, சமூகநீதியின் ஒளிவிளக்காகத் திகழும் ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி!

ஆனால், மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இடஒதுக்கீட்டைத்தான் ரத்து செய்வார். ஏன் என்றால், பா.ஜ.க.வுக்கு சமூகநீதி என்றாலே அலர்ஜி! இந்தியா விடுதலை பெற்றபோது, பல நாடுகள் என்ன சொன்னார்கள்? ”பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு, அமைதியாக இருக்காது – பெற்ற சுதந்திரத்தை இவர்கள் ஒழுங்காக காப்பாற்ற மாட்டார்கள்” என்று பல நாடுகள் கூறினார்கள். ஆனால், அவர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம், ஜனநாயகக் கட்டமைப்புடன் நாடு இயங்க அடிப்படையாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டம்தான்!

மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவார்! அதனால்தான் சொல்கிறோம். மோடி ஆட்சிக்கு வருவது என்பது அரசியல் சட்டத்திற்கு ஆபத்து! ஜனநாயகத்திற்கு ஆபத்து! ஒட்டுமொத்த நாட்டிற்கே பேராபத்து! ஏன் என்றால், பத்தாண்டுகாலமாக பா.ஜ.க. ஆட்சியைப் பார்த்துவிட்டோம்!

நாட்டை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறது! பெட்ரோல் – டீசல், கேஸ் – சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது! எந்த அளவுக்குத் தொழில் வளர்ச்சி வீழ்ந்துடுச்சு! வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது! மோடி மறுபடியும் வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும்! நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்! கலவரம் செய்வது என்பது பா.ஜ.க.வின் D.N.A.-விலேயே ஊறியது.

நேற்றுகூட ஒரு செய்தி வெளியானது. எல்லோரும் பார்த்திருப்பீர்கள். இதே திருப்பூரைச் சேர்ந்த சகோதரி ஒருவர், வாக்கு கேட்டு வந்த பா.ஜ.க.வினரிடம் ஜி.எஸ்.டி. தொடர்பாக ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் அந்த சகோதரியைத் தாக்கியிருக்கிறார்கள்! இதுதான் பா.ஜ.க. மக்களை மதிக்கும் இலட்சணம்! இதுதான் பா.ஜ.க பெண்களுக்குக் கொடுக்கும் மதிப்பு! மக்களை மதிக்காமல் அதிகாரத் திமிரில் அராஜகங்களும், கலவரமும் செய்யும் பா.ஜ.கட்சி திருப்பூரை மணிப்பூர் ஆக்கிடுவிடுவார்கள். மொத்தத்தில் மோடியும் பாஜகவும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு! என மு.க.ஸ்டாலின் பேசினார்.