பேருந்து நிறுத்தத்தை முழுமையாக ஆக்கிரமித்த ஸ்ரீ பாலமுருகன் விலாஸ்..! உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள்..!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி – உடுமலை சாலை தேர்முட்டி பேருந்து நிறுத்தத்தில் ஸ்ரீ பாலமுருகன் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி மற்றும் மிதுன் டீ ஸ்டால் அமைத்துள்ளது. இந்த ஸ்ரீ பாலமுருகன் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரியில் காரசாரமான மிளகு பூந்தி, மசாலா கடலை, கடலை மிட்டாய், கை முறுக்கு, சுட சுட பக்கோடா, காப்பி, ஜிலேபி, ரஸ்குல்லா மற்றும் இனிப்பு வகைகள் அந்த பகுதி மக்களின் வரவேற்பை பெற்றது. இதனால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.

இத்தனை சாதகமாக பயன்படுத்தும் இந்த ரீ பாலமுருகன் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரியினர் பொது மக்களைப்பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் பேருந்து நிறுத்தம் முழுவதையும் ஆக்கிரமிப்பு கொண்டனர். பேருந்து நிறுத்தம் இல்லாத காரணத்தால் பொது மக்கள் ஆபத்தான நிலையில் சாலையின் நடுவே நின்று பேருந்தில் ஏற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் சாலையின் நடுவே நின்று பேருந்தில் ஏறுவதால் எப்போது வேண்டுமானாலும் பெரிய விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படும் உயிர் சேதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் உயிர் சேதம் ஏற்படாமல் தடுப்பார்களா என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

பாமகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேருந்து கண்ணாடி உடைப்பு..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை சுமார் 11 மணி அளவில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா. அருள்மொழி, பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் ஏராளமான பாமகவினர் குவிந்தனர். ஆனால் காவல்துறையினர் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று பாமக நிர்வாகிகளிடம் கூறினர்.

ஆனாலும் பாமகவினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 100-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருட்கள் ஏற்ற கூடாது என சொல்லி பயணியை அடித்த அரசு பேருந்து நடத்துனர்.!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பொருட்கள் ஏற்ற கூடாது” என சொல்லி பயணியை அடித்த அரசு பேருந்து நடத்துனர்.!