4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய போட்டியில் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் கோலி கூறியது, கேப்டனாக நான் பார்த்த டாப் 3 பந்து வீச்சுகளில் இதுவும் ஒன்றாகும்.

ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஷர்துல் தாகூர் அபாரமாக செயல்பட்டார். அவரது இரண்டு அரைசதங்களும் எதிரணியை நிலைகுலைய வைத்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஷர்துல் தாகூர் செயல்பட்டார். ரோகித் சர்மாவின் இன்னிங்சும் அற்புதமானது” என தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ஒவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய போட்டியில் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு தொடரில் இங்கிலாந்து மண்ணில் 1986-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது 2-வது நிகழ்வாகும்.

கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி கடந்த 4-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களின் பொறுப்பான ஆட்டதால் இந்திய அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ரோரி ஜோசப் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணிகளின் பொறுப்பான ஆட்டதால் இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 291 ரன்கள் 90 ஓவர்களில் எடுக்கவேண்டிய நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று துவங்கி நடைபெற்றது. இங்கிலாந்து துவக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பர்ன்ஸ் இன்றைய ஆட்டம் துவங்கியதில் இருந்தே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினர்.

ஆனால், 50 ரன்கள் எடுத்திருந்த ரோரி பர்ன்ஸ், ஷர்துல் பந்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் மலான் 5 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒல்லி போப் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார். இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். இதற்கு முன் 25 டெஸ்டுகளில் விளையாடி இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா 24 டெஸ்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்திய – இங்கிலாந்து 4-வது ஓவல் டெஸ்ட்: இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களின் பொறுப்பான ஆட்டதால் இந்திய அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ரோரி ஜோசப் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணிகளின் பொறுப்பான ஆட்டதால் இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 291 ரன்கள் 90 ஓவர்களில் எடுக்கவேண்டிய நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று துவங்கி நடைபெற்றது. இங்கிலாந்து துவக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பர்ன்ஸ் இன்றைய ஆட்டம் துவங்கியதில் இருந்தே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினர்.

ஆனால், 50 ரன்கள் எடுத்திருந்த ரோரி பர்ன்ஸ், ஷர்துல் பந்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் மலான் 5 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார். சற்று நிலைத்து நின்ற ஹசீப் ஹமீத் 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.. அதனை தொடர்ந்து போப் 2 ரன்னிலும், பேர்ஸ்டோ மற்றும் மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் நிதானமாக ஆடி வந்த நிலையில் 36 ரங்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் 2 -வது இன்னிங்ஸ் இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இந்திய இங்கிலாந்து அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து வெற்றிபெற 291 ரன்களை கடைசி நாள் இலக்கு // ஓவல் டெஸ்ட் இங்கிலாந்து வெற்றியை இந்திய பந்து வீச்சாளர்கள் தடுப்பார்களா ?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி நேற்றைய முதல்நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களின் பொறுப்பான ஆட்டதால் இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 4-ம் நாள் ஆட்டம் இன்று போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் ஜடேஜா 17 ரன்களளில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானேவும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடிய நிலையில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி மொயீன் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாக்குர் அதிரடியாக ஆட மறுமுனையில் ரிஷப் பண்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷர்துல் தாக்குர் 72 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஜோ ரூட் பந்து வீச்சில் ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய ரிஷப் பண்ட் 50 ரன்கள் எடுத்து நிலையில் மொயீன் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா 24 ரன்களையும், உமேஷ் 25 ரன்களையும் குவித்தனர். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் குவித்தது.

இதனால், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தை விட 367 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ரோரி ஜோசப் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணிகளின் பொறுப்பான ஆட்டதால் இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 291 ரன்கள் 90  ஓவர்களில் எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது.

இந்திய பதக்கப்பட்டியலில் 24 இடத்திற்கு முன்னேறியது // பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் அசத்தல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஜப்பான் பாரா ஒலிம்பிக் கடைசி நாளான இன்று கர்நாடகவை சேர்ந்த சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும் இன்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் பேட்மிண்டனில் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டியில் 1999ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்த இந்திய வீரர் கிருஷ்ணா நாகர், ஹாங்காங்கின் மன் காய் சூ-வுடன் மோதினர். இதில் 21- 17, 16- 21, 21-17 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் 19 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 24 இடத்தில் உள்ளது.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஐஏஎஸ் அதிகாரி வெள்ளிப்பதக்கத்தை வென்றார் என்ற சாதனையை சுகாஷ் யத்திராஜ் படைத்தார்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஜப்பான் பாரா ஒலிம்பிக் கடைசி நாளான இன்று கர்நாடகவை சேர்ந்த சுஹேஷ் யேத்திராஜ் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரான்சு நாட்டின் லூகாஸை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய சுகாஷ் யத்திராஜ், பின்னர் சுதாரித்து கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார்.

20 நிமிடங்கள் நடைபெற்ற முதல் சுற்றை 21-15 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பிரான்சு வீரர் லூகாஸ் 17-21 என்ற கணக்கில் வென்று 1-1 என சமம் செய்தார். இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது சுற்று நடத்தப்பட்டது. அதில் பிரான்சு வீரர் லூகாஸ் 15-21 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்படி இந்திய வீரர் சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் 17 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 26 வது இடத்தில் உள்ளது.

ஓவல் டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு பரப்பிற்கு பஞ்சமில்லாத விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி: 3 -ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 270/3

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி நேற்றைய முதல்நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை இழந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் எடுத்து விளையாடிய ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் பொறுப்புடன் விளையாடினர்.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் பொறுப்புடன் விளையாடினர். 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்கள் நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும், கே எல் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இன்னும் 56 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இந்நிலையில், 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது முதலே இரு வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் வெளியேறினார். அதன்பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த ரோகித் சர்மா சதம் விளாசினார். வெளிநாட்டு மண்ணில் ரோகித் சர்மா அடிக்கும் முதல் சதம் இதுவாகும். ரோகித் சர்மாவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த புஜாராவும் அரைசதம் விளாசினார்.

ரோகித் சர்மா 127 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் அதே ஓவரின் கடைசி பந்தில் புஜாராவும் 61 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்திய அணி அடுத்தடுத்து இரு முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்த நிலையில், கேப்டன் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்திக்கொள்ளப்பட்டது.

இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 22 ரன்களிலும் ஜடேஜா 9 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2 தினங்கள் எஞ்சியுள்ளதால், ஓவல் டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு பரப்பிற்கு பஞ்சமில்லாத விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பாரா ஒலிம்பிக்: பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்று அசத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 11-வது நாளான இன்று நடைபெற்ற கலப்பு பிரிவு பாராஒலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் ஏற்கனவே, இந்தியாவின் ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் மீண்டும் ஒரு வெண்கலப் பதக்கம் வெல்ல மற்றும் வீரர் மணிஷ் நார்வால் தங்க பதக்கம் வென்று அசத்தினார்.

மேலும் இன்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் பேட்மிண்டனில் இறுதி போட்டியில் இறுதிபோட்டியில் ஒடிசாவை இந்தியாவை சேர்ந்த 33 வயதான பிரமோத் பகத் இங்கிலாந்து வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் 17 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 35 வது இடத்திலிருந்து பல படி முன்னோக்கி சென்று 26 வது இடத்தில் உள்ளது.

பாரா ஒலிம்பிக்: ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்று இந்தியா வீரர்கள் அசத்தல்!

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 11-வது நாளான இன்று நடைபெற்ற கலப்பு பிரிவு பாராஒலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் ஏற்கனவே, இந்தியாவின் ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் மற்றும் மணிஷ் நார்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற கலப்பு பிரிவு பாராஒலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் 218.2 புள்ளிகளுடன் மணிஷ் நார்வால் முதல் இடத்திலும், 216.7 புள்ளிகளுடன் சிங்ராஜ் இரண்டாம் இடத்திலும் நிறைவு செய்து தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் 15 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஒரு படி முன்னோக்கி சென்று 35 வது இடத்தில் உள்ளது.