இ பேப்பர்

காவல் ஆய்வாளர் கதிரவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியா ஃபஸ்ட் நிருபர்

கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு புதிதாக பொருப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் கதிரவன் அவர்களை நமது இந்தியா ஃபஸ்ட் மாத இதழின் கடலூர் மாவட்ட நிருபர் ராதாகிருஷ்னன் அவர்கள் மரியாதை நித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அமலாக்கத்துறை அதிரடி: முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகர காவல் ஆணையாளராக இருந்த பரம்பீர் சிங், மாநில உள்துறை மந்திரி பதவி வகித்த அனில் தேஷ்முக் ஓட்டல்கள், பார்கள் மூலம் மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி காவல்துறையினருக்கு கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இதனால் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். நிலையில் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. அனில் தேஷ்முக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகுமாறு 5 முறை சம்மன் அனுப்பியது ஆனால் அனில் தேஷ்முக் தொடர்ந்து நேரில் ஆஜராவதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் அனில் தேஷ்முக் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் அமலாக்கதுறை லுக்அவுட் நோட்டீஸ் விடுத்து அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ரூ.13 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சென்னை பெருங்குடி வளாகத்தில், சட்டப் பள்ளிக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் 3,641 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 3 தளங்களுடன் கூடிய 18 ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் கொண்ட கூடுதல் இளங்கலை வகுப்புக்கான கட்டிடத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.


அத்துடன் சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் சர்வதேச அளவிலான அன்றாட சட்டத் தீர்வுகளையும், சட்ட நுணுக்கங்களையும் உடனுக்குடன் அறிந்து தெரிந்து கொள்ளும் வகையில், 55 வகுப்பறைகளைக் கொண்ட இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பு கட்டிடத்தில் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இலவச வை-பை சேவையையும் மாணவர்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.

4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய போட்டியில் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் கோலி கூறியது, கேப்டனாக நான் பார்த்த டாப் 3 பந்து வீச்சுகளில் இதுவும் ஒன்றாகும்.

ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஷர்துல் தாகூர் அபாரமாக செயல்பட்டார். அவரது இரண்டு அரைசதங்களும் எதிரணியை நிலைகுலைய வைத்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஷர்துல் தாகூர் செயல்பட்டார். ரோகித் சர்மாவின் இன்னிங்சும் அற்புதமானது” என தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ஒவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய போட்டியில் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு தொடரில் இங்கிலாந்து மண்ணில் 1986-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது 2-வது நிகழ்வாகும்.

கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி கடந்த 4-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களின் பொறுப்பான ஆட்டதால் இந்திய அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ரோரி ஜோசப் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணிகளின் பொறுப்பான ஆட்டதால் இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 291 ரன்கள் 90 ஓவர்களில் எடுக்கவேண்டிய நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று துவங்கி நடைபெற்றது. இங்கிலாந்து துவக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பர்ன்ஸ் இன்றைய ஆட்டம் துவங்கியதில் இருந்தே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினர்.

ஆனால், 50 ரன்கள் எடுத்திருந்த ரோரி பர்ன்ஸ், ஷர்துல் பந்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் மலான் 5 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒல்லி போப் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார். இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். இதற்கு முன் 25 டெஸ்டுகளில் விளையாடி இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா 24 டெஸ்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்திய – இங்கிலாந்து 4-வது ஓவல் டெஸ்ட்: இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களின் பொறுப்பான ஆட்டதால் இந்திய அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ரோரி ஜோசப் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணிகளின் பொறுப்பான ஆட்டதால் இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 291 ரன்கள் 90 ஓவர்களில் எடுக்கவேண்டிய நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று துவங்கி நடைபெற்றது. இங்கிலாந்து துவக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பர்ன்ஸ் இன்றைய ஆட்டம் துவங்கியதில் இருந்தே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினர்.

ஆனால், 50 ரன்கள் எடுத்திருந்த ரோரி பர்ன்ஸ், ஷர்துல் பந்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் மலான் 5 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார். சற்று நிலைத்து நின்ற ஹசீப் ஹமீத் 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.. அதனை தொடர்ந்து போப் 2 ரன்னிலும், பேர்ஸ்டோ மற்றும் மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் நிதானமாக ஆடி வந்த நிலையில் 36 ரங்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் 2 -வது இன்னிங்ஸ் இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இந்திய இங்கிலாந்து அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆப்கானிஸ்தானில் பதவி ஏற்கும் விழாவில் ரஷியா, பாகிஸ்தான், சீனாவுக்கு அழைப்பு

அமெரிக்க படைகள் கடந்த மே மாத இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கிய நிலையில் 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் வந்தது. இதையடுத்து தாலிபன்களால் கொல்லப்படலாம் என அஞ்சினாரா அதிபர் அஷ்ரப் கனி தப்பிச் சென்றார். இதற்கிடையில் தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். இதைதொடர்ந்து ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தலிபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், புதிய அரசு பதவி ஏற்கும் விழாவுக்கு பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

/ Uncategorized

இங்கிலாந்து வெற்றிபெற 291 ரன்களை கடைசி நாள் இலக்கு // ஓவல் டெஸ்ட் இங்கிலாந்து வெற்றியை இந்திய பந்து வீச்சாளர்கள் தடுப்பார்களா ?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி நேற்றைய முதல்நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களின் பொறுப்பான ஆட்டதால் இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 4-ம் நாள் ஆட்டம் இன்று போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் ஜடேஜா 17 ரன்களளில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானேவும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடிய நிலையில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி மொயீன் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாக்குர் அதிரடியாக ஆட மறுமுனையில் ரிஷப் பண்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷர்துல் தாக்குர் 72 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஜோ ரூட் பந்து வீச்சில் ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய ரிஷப் பண்ட் 50 ரன்கள் எடுத்து நிலையில் மொயீன் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா 24 ரன்களையும், உமேஷ் 25 ரன்களையும் குவித்தனர். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் குவித்தது.

இதனால், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தை விட 367 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ரோரி ஜோசப் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணிகளின் பொறுப்பான ஆட்டதால் இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 291 ரன்கள் 90  ஓவர்களில் எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு:  பாஜக அரசின் விரோதப் போக்கைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம்

புதிய வேளாண் சட்டம், தொடர் விலையேற்றம், இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் – ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து 20-9-2021 அன்று திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.