நீங்க அப்படியே சண்டை போட்டுக் கொண்டிருங்க… நாங்க வந்த வேலைய முடுச்சி விடுறோம்..!

வீட்டிற்கு தெரியாமல் காதல் ஜோடி திருமணத்திற்கு தயாரான போது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவங்க அப்படியே சண்டை போட்டுக் கொண்டு இருக்க.. நாம வந்த வேலைய முடிக்கலாம் என்ற தொனியில் உஷாரான காதலன், காதலி கழுத்தில் தாலி கட்டி அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலை சுற்றி எந்நேரமும் மக்கள் கூட்டம் காணப்படும் இந்த நிலையில், இன்று காலை திருத்தணி கோவிலில் நடைபெற்ற திருமணம் அங்கிருந்தவர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சுந்தரம் மகன் உமாபதி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ஹேமாச்சலம் என்பவரின் மகள் ரீட்டாவும் ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். முதலில் நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர்.

இவர்களின் காதலை பெற்றோரிடம் தெரிவிக்க பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காததால் இருவரும் அவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இன்று காலை, திருத்தணி கோவிலுக்கு வந்த காதல் ஜோடி திருமணத்திற்கு தயாரான போது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மணக்கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியபடி, “எங்களது மகளை கடத்தி வந்து கட்டாயத் திருமணம் செய்யப் பார்க்கிறாய்” என வாலிபரை நோக்கி கூச்சலிட்டனர். இதையடுத்து, காதலியை இவர்கள் எப்படியாவது பேசி அழைத்து சென்று விடுவார்கள் என்று உணர்ந்து உஷாரான காதலன் ஒருபுறம் இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மகளுடன் நிச்சயதார்த்தம்..! மாமியாருடன் ஓட்டம் பிடித்த இளைஞர்..!

சின்ன பொண்ணு வேணாம் மாமா..! பெரிய பொண்ணும் வேணாம் மாமா..! அத்தை மட்டும் போதும் மாமா..!! என்ற பாடல் வரிகளை போல  மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்த இளைஞரை தனக்கு பிடித்துள்ளதாகவும், அவரை காதலிப்பதாகவும் அவருடன் தான் சேர்ந்து வாழ்வேன் எனக் கூறிய காவல் நிலையத்தையே கதிகலங்க வைத்த சம்பவம் இன்று சமூக வலைத்தளங்களில் நாடு முழுவதும் பேசு பொருளாகி வருகின்றது.

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த சப்னா தேவி தனது மகளுக்கு ராகுல் என்ற வாலிபரை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். பெண் பார்க்கும் படலம் நிச்சயதார்த்தம் எல்லாம் முடிவடைந்த நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்தபோது சப்னா தேவி மாயமானார். அவர் மாயமான ஆறாம் தேதியே ராகுலும் மாயமானார். விசாரித்த போது தான் வீட்டிலிருந்த மூன்று லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் சப்னா தேவி தனது மகளுக்கு நிச்சயத்தை இளைஞருடன் ஓடியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சப்னா தேவியின் கணவரான ஜிதேந்திர குமார் இது குறித்து அலிகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனது மருமகனுடன் தனது மனைவி வீட்டில் இருந்த நகை பணத்துடன் மாயமாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார். இந்நிலையில் நேபாளம் எல்லையில் பீகாரின் சீதாமருங்கி பகுதியில் இருவரும் தங்கி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து காவல்துறை அவர்களை பிடிக்க சென்ற நிலையில் அவர்களாகவே உத்தரப் பிரதேச காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தனது மருமகன் ராகுலுடன் காதல் ஏற்பட்டதாகவும் திருமணத்திற்கு முன்பு இருவரும் அதிக நேரம் தொலைபேசியில் பேசி வந்த நிலையில் தனது மகளுக்கு பார்த்த நபருடன் தனக்கு காதல் ஏற்படும் என யோசிக்கவில்லை என கூறி இருக்கிறார். எனது மருமகன் நகைகளை எடுத்துச் செல்லவில்லை. வீட்டில் இருந்து செல்போனையும் 200 ரூபாய் பணத்துடன் மட்டுமே தான் சென்றதாக கூறியுள்ளார்.

மேலும் குடிகாரரான கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னிடம் தகராறு செய்தாளராகவும், தனது மகளும் தன்னை திட்டிக் கொண்டே இருந்த நிலையில் தொலைபேசியில் பேசிய ராகுல்தான் ஆறுதலாக இருந்தார். என்ன நடந்தாலும் பரவாயில்லை இனிமேல் நாம் ஒன்றாக வாழ்வோம் என கூறி வீட்டை விட்டு சென்றதாகவும் இனி அவர்தான் தனது வாழ்க்கையில் என தெரிவித்தார்.

தந்தையின் சடலத்தை அடக்கம் செய்யும் முன்பு காதலியை திருமணம் செய்த மகன்..!

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே என்ற பாடல் வரிகளை பலர் கேட்டிருப்போம். தந்தையை இழந்த மகன் அவர் உடலை அடக்கம் செய்யும் முன்பு செய்த காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் செல்வராஜ். இவரது மகன் அப்பு என்பவர் பட்டப்படிப்பு படித்துள்ள நிலையில் இவர் கல்லூரியில் படித்து வரும் விஜயசாந்தி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்.

இதனால் அப்பு நொறுங்கி போனார். எனினும் தனது தந்தையின் ஆசியுடன் திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்பிய அப்பு, காதலி விஜயசாந்திக்கு, அப்பாவின் முன்பு திருமணம் செய்தார். இந்த சம்பவத்தை முழுமையாக விரிவாக பார்ப்போம். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கவணை கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் செல்வராஜ். அவருடைய மகன் அப்பு பி.ஏ., எல்.எல்.பி. படித்துள்ளார். விருத்தாசலம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் அரசக்குழி கிராமத்தை சேர்ந்த விஜயசாந்தி என்பவரை அப்பு காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வராஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலாமானார். பின்னர் உறவினர்கள் செல்வராஜின் உடலை அவரது வீட்டுக்கு எடுத்து வந்து இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அப்பு எனது தந்தையின் ஆசியுடன் தான் தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று கூறி கதறி அழுதார். உடன் உறவினர்கள் அவரை ஆறுதல் கூறி, உடனே திருமணம் செய்வோம் என கூறி இருக்கிறார்கள்.

இதையடுத்து அப்பு, தனது காதலி விஜயசாந்தியை நேரில் அழைத்தார். அவருடம் அப்புவின் வீட்டிற்கு வந்தார். அங்கு செல்வராஜியின் உடலை நாற்காலியில் அமர வைத்தனர். அருகில் அவரது மனைவி கண்ணம்மாள் மற்றொரு நாற்காலியில் அமர்ந்தார். அப்போது உறவினர்கள், நண்பர்கள் சூழ்ந்து நிற்க தனது தாய், தந்தை இருவருக்கும் பாத பூஜை உள்ளிட்ட திருமண சடங்குகளை அப்பு செய்தார். தனது தந்தையின் கையில் தொட்டு வாங்கிய தாலியை காதலி விஜயசாந்தியின் கழுத்தில் கட்டி அவரை திருமணம் செய்தார்.

பின்னர் தாய், தந்தை இருவரின் காலில் விழுந்து அவர்கள் ஆசி பெற்றனர். அங்கு நின்ற உறவினர்கள், நண்பர்களும் கண்ணீர் மல்க அப்பு, விஜயசாந்தி தம்பதியை வாழ்த்தினர். இந்த சம்பவம் விருத்தாச்சலம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

காதல் திருமணம் செய்த பியூட்டி பார்லர் பெண்ணின் கணவன் தற்கொலைக்கு ஆன்லைன் சூதாட்டம் காரணமா ..?

திருச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த BSNL ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உலகெங்கிலும் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங்கின் வருவாயை உருவாக்குவதற்கும் வேலைகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் அதே வேளையில், பணமோசடி, மேட்ச் பிக்ஸிங் போன்ற பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான வழிகளையும் செய்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடெங்கும் ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. இந்நிலையில், காதல் திருமணம் செய்த BSNL ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வடக்கு தாராநல்லூர் அருகே அம்மன் ஸ்டோர் பகுதியை சேர்ந்த பட்டு முத்துவின் மகன் கனகராஜ் BSNL -னில் டவர் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து கடந்த 9 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு தனலட்சுமி அருகிலுள்ள பகுதியில் பியூட்டி பார்லர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று முன் தினமும் தனலட்சுமி வேலைக்கு சென்றுவிட்டார்.

அப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவர் கனகராஜ் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கனகராஜை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தனர். இதையடுத்து, கணவர் உடலை பார்த்து தனலட்சுமி கதறி அழுதார்.

பின்னர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறை கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது கனகராஜுக்கு நீண்ட நாட்களாகவே ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், அதில் அதிகளவில் பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கனகராஜ் மன உளைச்சலில் இருந்ததாகவும், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் காவல்துறை கனகராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தான் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நான் அவனில்லை பாணியில் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பலே பெண் கைது..!

ஆடு மேய்ப்பவர் முதல் அரசியல்வாதி வரை 15 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சத்யாவின் பெயரை குடும்ப அட்டையில் இணைக்க முயன்ற போது மாட்டிக்கொண்ட சம்பவம் அடங்கும் முன்பே, மதுரை விளாங்குடி அபிநயா இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் பலரிடம் நெருக்கமான பழக்கி திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் என்ற செய்தி மெல்ல மெல்ல மறைய தொடங்கும்போது, சாலையில் செல்லும் ஆண்களிடம் டூவீலர், கார்களில் லிப்ட் கேட்டு செல்லும்போது, தன்னை மருத்துவர் என்று சொல்லி பேச துவங்கி, காதல் வலை விரித்து திருமணம் செய்து நண்பர்கள் வைத்த பேனரில் வலைதளங்களில் பரவி வருகின்றது.

அரசு ஊழியர், மருத்துவர், செவிலியர் எனக் கூறி 4 பேரை திருமணம் செய்ததை மறைத்து சீர்காழி வங்கி ஊழியரை 5-வதாக திருமணம் செய்த கல்யாண ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திட்டையை சேர்ந்த சிவசந்திரன் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிதம்பரம் அருகே பைக்கில் சிவசந்திரன் சென்றபோது சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் மீனவ கிராமத்தை சேர்ந்த லட்சுமி லிப்ட் கேட்டு உடன் சென்றுள்ளார்.

அப்போது, தான் மருத்துவர் எனவும், சிதம்பரத்தில் வேலை பார்ப்பதாகவும் லட்சுமி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து சிவசந்திரன் லட்சுமியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி சீர்காழியில் கடந்த 20-ஆம் தேதி சிவச்சந்திரன் தடபுலாக விழா நடத்தி லட்சுமியை திருமணம் செய்தார். அந்த திருமணத்தின்போது சிவசந்திரனின் நண்பர்கள் வைத்த பேனர் வலைதளங்களில் பரவியது. இதை பார்த்த லட்சுமியின் முன்னாள் கணவரான நெப்போலியன் அதிர்ச்சியடைந்ததோடு சிவச்சந்திரனை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிந்து கொண்டார். மேலும் லட்சுமி ஏற்கனவே தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததையும் அவரிடம் போனில் கூறியுள்ளார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்த சிவச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவச்சந்திரன் புகார் செய்தார். அதில், தன்னை ஏமாற்றிய லட்சுமியால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த லட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிந்து லட்சுமியை நேற்று காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

காவல்துறை விசாரணையில், அதில், லட்சுமி பழையாறை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருமணமான சில ஆண்டுகளில் சிலம்பரசன் இறந்து விட்டார். இதனால் லட்சுமி, குழந்தைகளை தனது தாய் வீட்டில் விட்டு விட்டு 2017-ஆம் ஆண்டு புத்தூரை சேர்ந்த பெயிண்டர் நெப்போலியன் என்பவரிடம், தனது பெயர் மீரா என்றும், செவிலியர் வேலை செய்வதாகவும் கூறி காதலித்து திருமணம் செய்துள்ளார்.

சிறிது காலத்தில் நெப்போலியனை விட்டு பிரிந்து 2021-ஆம் ஆண்டு சிதம்பரம் கோல்டன் நகரில் வசித்து வந்த ராஜா என்பவரிடம் அறிமுகமாகி தனது பெயர் நிஷாந்தினி என்றும், MBBS, MS படித்து விட்டு வீட்டில் இருப்பதாகவும் கூறி அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சிதம்பரத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர் ராஜாவிடம் தான் கோயம்புத்தூரில் மருத்துவராக பணிபுரிய உள்ளதாக கூறி அங்கு சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்தாண்டு சீர்காழி திட்டையை சேர்ந்த சிவசந்திரனிடம் பைக்கில் லிப்ட் கேட்டு சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தில் கடந்த 20-ஆம் தேதி சிவச்சந்திரனை திருமணம் செய்ததும், பணத்துக்காக அவர் பலரை ஏமாற்றி திருமண லீலையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கரூரை சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்ததாகவும், அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் லட்சுமி பற்றி அவருக்கு தெரியவில்லை என தெரிகிறது.

மேலும் கரூரை சேர்ந்த ஒருவர் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும், அவர் மாதமாதம் குடும்ப செலவுக்காக ரூ.50,000 அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பணத்தை, லட்சுமி தனது சம்பளம் என கூறி கணவர்களை ஏமாற்றி வந்துள்ளார். டாக்டர் என்பதால் லட்சுமிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். ஒரு கணவர், வீட்டில் மாடுகளை விற்று மாடல் டாய்லெட் கட்டி கொடுத்துள்ளார்.

லட்சுமி பார்ப்பதற்கு வசீகர தோற்றமும், உடல்வாகும் கொண்டவள். வழக்கமாக எப்போது வெளியில் சென்றாலும், சாலையில் செல்லும் ஆண்களிடம் டூவீலர், கார்களில் லிப்ட் கேட்டு செல்லும்போது, மெல்ல, மெல்ல பேச தொடங்கி தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்தி காதல் வலையை விரித்து திருமணம் செய்து தனது லீலைகளை அரங்கேற்றியுள்ளார். மேலும் லட்சுமி தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பர். அதனால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி ஏமாற்றியுள்ளார்.

68 வயது மணமகளுக்கும் , 64 வயது மணமகனுக்கும் காதல் திருமணம்..!

64 வயது மணமகனுக்கும், 68 வயது மணமகளுக்கும் முதியோர் காப்பகத்தில் காதல் திருமணம் நடைபெற்றது. ஆந்திராவின் ராஜமுந்திரியில் சுவர்ணாந்திரா சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ள முதியோர் இல்லம் செயல்படுகிறது. இந்த முதியோர் இல்லத்தில் நாராயணபுரி பகுதியை சேர்ந்த மூர்த்தி 64 வயதான என்பவர் 2 ஆண்டுகளாக தங்கி உள்ளார். இவருக்கு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துவிட்டது.

அதே முதியோர் இல்லத்தில் வசிக்கும் கடப்பா மாவட்டம், கம்முலகுண்டா பகுதியை சேர்ந்த 68 வயதான ராமலட்சுமி, மூர்த்திக்கு உதவிகளை செய்து வந்தார். மருத்துவர்கள் எழுதி கொடுத்த மருந்துகளை நேரம் தவறாமல் கொடுத்தார். இதில் மூர்த்தி ஓரளவுக்கு குணமானார்.

வயதான காலத்தில் துணை அவசியம் என்பதை இருவரும் உணர்ந்தனர். இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழ முடிவு எடுத்தனர். இதுகுறித்து முதியோர் காப்பக நிர்வாகியான ராம்பாபுவிடம் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இருவருக்கும் நெருங்கிய சொந்தபந்தம் இல்லை என்பதால், முதியோர் இல்லத்திலேயே திருமணம் செய்து வைக்க ராம்பாபு சம்மதம் தெரிவித்தார். அதன்பேரில் கடந்த வெள்ளிக்கிழமை மூர்த்தி, ராமலட்சுமி இருவருக்கும் முதியோர் இல்லதிலேயே திருமணம் செய்து வைத்தனர்.

காதலனை கரம் பிடிக்க காதலனுடன் சேர்ந்து ஒரே ஒரு பொய் சொல்லி கம்பி எண்ணும் பெண் ..!

“ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணனும்” என சொல்ராங்க..! நான் சொன்னது ஒரே ஒரு பொய் தான்..

நாகர்கோவிலில் வாலிபரை திருமணம் செய்ய காவல் துணை ஆய்வாளர் என கூறி அனைவரையும் ஏமாற்றிய பெண்ணை காவல்துறை கைது செய்தனர். தேனி மாவட்டம் வடுகப்பட்டி பகுதியை சேர்ந்த கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னைக்கு வேலைக்கு சென்றார். அப்போது, சென்னை ரயில் நிலையத்தில், நாகர்கோவிலை சேர்ந்த சிவா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த ஒரு நாள் பழக்கத்தில் 2 பேரும் நெருக்கமாகினர்.

அதன்பின்னர் அபி பிரபாவும், சிவாவும் சென்னையில் ஒன்றாக வசிக்க தொடங்கினர். இந்நிலையில் வேலைக்கு செல்லும் பெண் தான் வேண்டும் என சிவாவின் தாயார் கறாராக கூறி, சிவா வீட்டில் அவருக்கு பெண் தேடும் படலம் நடந்துள்ளது.இதையடுத்து அபி பிரபாவிடம், நீ ஏதாவது உயர்ந்த வேலையில் இருக்குமாறு கூறினால் தான், எனது தாயார் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிப்பார் என சிவா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 2 பேரும் இது தொடர்பாக ஆலோசித்து, அபி பிரபா காவல் துணை ஆய்வாளராக இருப்பதாக கூற முடிவு செய்தனர். அதன்படி சென்னையில் ஒரு கடையில் காவல் துணை ஆய்வாளர் உடையை வாங்கிக் கொண்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிவா, அபி பிரபாவை அழைத்துக் கொண்டு பேருந்தில் நாகர்கோவில் வந்தார். காவல்கிணறு பகுதியில் இறங்கி ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, அபி பிரபா காவல் துணை ஆய்வாளர் உடையை அணிந்து கொண்டு காரில் நாகர்கோவில் புறப்பட்டனர்.

சிவா முன் கூட்டியே வீட்டுக்கு சென்று காத்திருக்க அபி பிரபா, மட்டும் காரில் சிவா வீட்டுக்கு சென்றார். ஏற்கனவே சிவா, தனது தாயாரிடம் தான் காதலிக்கும் பெண் காவல் துணை ஆய்வாளர் என கூறி உள்ளார். எனவே சிவாவின் தாயாரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து, தனது மருமகள் காவல் துணை ஆய்வாளர் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார். பின்னர் காரில் காவல் துணை ஆய்வாளர் உடையுடன் வந்திறங்கிய அபி பிரபாவை சிவாவும், அவரது தாயாரும் வரவேற்றனர்.

அபி பிரபாவை காவல் துணை ஆய்வாளர் உடையில் பார்த்ததும், சிவாவின் தாயாருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. தனது உறவினர்களுக்கும் போன் செய்து தகவல்களை பரிமாறினார். பின்னர் அதே பகுதியில் ஒரு வாடகைக்கு வீடு எடுத்து சிவாவையும், அபி பிரபாவையும் தங்க வைத்தார். உறவினர்கள் வீட்டுக்கும் அழைத்து சென்றார். அபி பிரபாவும், காவல்துறை சீருடையுடன் மிடுக்கான தோற்றத்தில் வலம் வந்தார்.

இந்நிலையில் சிவாவின் உறவினர் வெங்கடேஷ் என்பவரின் மனைவி, நாகர்கோவிலில் பியூட்டி பார்லர் வைத்துள்ளார். அந்த பியூட்டி பார்லருக்கு, தனது மருமகள் என கூறி அபி பிரபாவை சிவாவின் தாயார் அழைத்து சென்றார். அங்குள்ளவர்கள் விசாரித்த போது, அவர்களிடம் அபி பிரபா, தான் 2023 பேட்ஜ் என்றும், சென்னையில் லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றி விட்டு, தற்போது சென்னை சென்ட்ரல் ரயில்வே இருப்பதாக கூறினார்.

முகத்தில் உள்ள மருக்களை நீக்கி, பேஷியல் செய்த அபி பிரபா, பணம் எதுவும் கொடுக்காமல் சென்று விட்டார். பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் அதே பியூட்டி பார்லருக்கு அபி பிரபா சென்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பியூட்டி பார்லர் உரிமையாளர், அபி பிரபாவை செல்போனில் போட்டோ எடுத்து தனக்கு தெரிந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு அனுப்பி இவர் 2023 பேட்ஜ் காவல் துணை ஆய்வாளர் தானா? என கேட்டு உள்ளார்.

அவர் தனக்கு தெரிந்த 2023 பேட்ஜ் காவல் துணை ஆய்வாளர்களிடம் அபி பிரபாவின் போட்டோவை அனுப்பி விசாரித்த போது, அபி பிரபாவின் குட்டு அம்பலமானது. அவர் காவல் துணை ஆய்வாளர் இல்லை என்பது தெரிந்ததும், நைசாக பேசி பியூட்டி பார்லரில் அவரை அமர வைத்து விட்டு வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உண்மையான காவலர்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அபி பிரபா, சிவாவை திருமணம் செய்ய காவல் துணை ஆய்வாளர் ஆக நடித்ததாக கூறினார். இதையடுத்து அபி பிரபா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

திருமணம் முடிந்த கையோடு பாஜகவில் இணைத்த புது மண தம்பதியினர்..!

திருமணம் முடிந்த கையோடு, புது மண தம்பதியினர் மிஸ்டு கால் மூலம் பாஜகவில் இணைந்தனர். ராமநாதபுரத்தில் இன்று பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் சீனியின் உறவினர் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணம் முடிந்த கையோடு, புது மண தம்பதியரான தர்மமுனீஸ்வரன் – ரம்யா ஆகியோர் மிஸ்டு கால் மூலம் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

திருமணம், கனடாவில் வேலை…! குடும்பத்தோடு வரவழைத்து 12 லட்சம் மோசடி..!!

திருமண மற்றும் வேலை வாய்ப்பு இவற்றில் ஆசை வார்த்தைக்காட்டி மோசடி செய்யும் சம்பவங்கள் நாடெங்கும் இன்று அதிக அளவில் அரக்கேறிக் கொண்டுள்ளது. இவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். அதன் வரிசையில் பஞ்சாப் மாநில லூதியானாவில் ஆடைகள் தயாரிக்கும் `பொட்டிக்’ நடத்தி வரும் 41 வயது பெண்ணுக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது. அவருக்கு 17 வயதில் மகனும், 13 வயதில் மகளும் இருக்கின்றனர். அப்பெண் மறுதிருமணம் செய்து கொள்ள முடிவு செய்து மேட்ரிமோனியல் தளத்தில் தனது பெயரை பதிவு செய்து வைத்திருந்தார்.

அவரை மொஹித் சத்தா என்பவர் தொடர்பு கொண்டு பேசினார். இருவரும் அடிக்கடி சாட்டிங் செய்து கொண்டனர். மொஹித் தான் கனடாவில் வசிப்பதாகவும், அங்கு தொழில் செய்வதாக கூறிய அவர் கனடாவில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் அதற்காக தான் இந்தியா வந்திருப்பதாகவும் மொஹித் சத்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் மும்பையில் இருப்பதாகவும், ஆகஸ்ட் 25-ஆம் தேதி கனடா செல்வதாகவும் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளர்.

அதனால் தன்னை மும்பை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து 41 வயது பெண் தனது மூத்த சகோதரியுடன் மும்பை வந்து மொஹித் சத்தாவை சந்தித்து பேசிவிட்டு சென்றார். அப்போது அப்பெண்ணின் உறவினர்களுக்கு கனடாவில் வேலை வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளார். இதை அப்பெண்ணும் அவரின் சகோதரியும் நம்பியுள்ளனர். இந்நிலையில், மொஹித் சத்தா பஞ்சாப் வரும்படி கேட்டதற்கு தனக்கு மும்பையில் வேலை இருப்பதாக கூறி செல்ல மறுத்துவிட்டார். ஆனால் மொஹித் சத்தாதிருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி குறித்து முடிவு செய்ய மும்பை வரும்படி கேட்டுக்கொண்டார். அதோடு கனடாவிற்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்களையும் அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார்.

இது குறித்து 41 வயது பெண் பேசுகையில்,” நாங்கள் மொத்தம் 9 பேர் கடந்த 7-ம் தேதி மும்பை சென்றோம். மும்பை விமான நிலையத்தில் எங்களை மொஹித் சத்தாவின் உறவினர் ஹர்ஜித் சிங்கும், பணியாளர் சதீஷ் ராவும் வரவேற்று இரு கார்களில் லோனவாலாவிற்கு அழைத்து சென்றனர். லோனவாலாவில் பண்ணை வீடு ஒன்றை எங்களுக்காக புக்கிங் செய்திருந்தார். எங்களிடம் மொஹித் சத்தா மிகவும் கவர்ச்சிகரமாக பேசினார். அதோடு எங்களை மிகவும் கவனம் எடுத்து கவனித்துக்கொண்டார். எங்களது உறவினர்களுக்கு கனடாவில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த 12-ம் தேதி நாங்கள் அனைவரும் ஒரு அறையில் கூடியிருந்தோம். எங்களுக்கு மொஹித் சத்தா ஜூஸ் கொடுத்தார். நாங்கள் அதை குடித்தோம். கனடாவில் இருந்து போன் வந்தால் இடையூறு இருக்கக்கூடாது என்று கூறி எங்களின் போன்களை வாங்கி வைத்துக்கொண்டார். எனது மகன் மற்றும் சகோதரர் போனை மட்டும் நாங்கள் வைத்திருந்தோம். மாலை 3.30 மணிக்கு ஜூஸ் குடித்தவுடன் அனைவருக்கும் தூக்கம் வருவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

அனைவரும் தூங்கிவிட்டனர். இரவு 9 மணிக்கு நான் எழுந்தேன். எனது உறவினர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். மொஹித் சத்தாவிற்கு போன் செய்தேன். ஆனால் அவர் சில நிமிடங்களில் வந்துவிடுவதாக தெரிவித்தார். ஆனால் வரவேயில்லை. எங்களது மொபைல் போன், 2 லட்சம் பணம் எடுக்கப்பட்டு இருந்தது. அதோடு மொபைல் போன் மூலம் எங்களது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.7.5 லட்சம் வேறு வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டு இருந்தது. மொத்தம் 12 லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். ஆனால் இன்னும் காவல்துறை வழக்கை பதிவு செய்யவில்லை” என்று குறிப்பிட்டார்.

இது குறித்து காவல் ஆய்வாளர் சுஹாஸ் ஜெக்தாப் பேசுகையில், ”விசாரித்துக் கொண்டிருக்கிறோம். எந்தெந்த பிரிவுகளில் புகாரை பதிவு செய்யலாம் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். இது போன்ற சம்பவங்களில் மக்கள் சம்பந்தப்பட்ட நபர் குறித்து முழுமையாக விசாரித்து எந்த வித பரிவர்த்தனைகளையும் வைத்துக் கொள்ளவேண்டும்”என ஆய்வாளர் சுஹாஸ் ஜெக்தாப் தெரிவித்தார்.

 

ரூ.50,000.. முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்..

மகளிர் முன்னேற்றத்திற்காகவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும் முன்னெடுத்து வருகிறது.. அதில் ஒன்றுதான், பெண்கள் பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது, அரசின் நேரடி முதலீட்டின் மூலம், பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலின பாகுபாட்டை தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை மற்றும் குறைந்தபட்சம் இடைநிலை வரையிலான கல்வியை உறுதி செய்தல், பெண் குழந்தைகளை 18 வயதுக்கு பிறகே திருமணம் செய்ய ஊக்குவித்தல், 2 பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு நெறிமுறையை பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவித்தல், பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருந்தால், அந்த பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

ஒருவேளை, ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருந்தால், அந்த பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்தவுடன், வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்படும். ஆனால், இந்த பலனை பெற வேண்டுமானால், பெண் குழந்தைகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுத வேண்டும். அப்போதுதான், முதிர்வு தொகையானது, பெண் குழந்தைகளின் உயர்கல்வியைத்தொடர உதவும். பெண் குழந்தைகளுக்கு கல்விச் செலவுகளை ஈடுகட்ட 6-வது ஆண்டு முதல் ஆண்டு ஊக்கத் தொகையாக ரூ.1800/- வழங்கப்படுகிறது.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆகஸ்ட் 2023 முதல் 2024 ஜூன் வரை சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதம் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் நடக்கவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதாவது, சம்பந்தப்பட்ட குழந்தைகள், 10-ம் வகுப்பு தேர்வு எழுதி, 18 வயது வரை திருமணம் புரியாமல் இருக்கும்போது, அவர்களுக்கு வட்டியுடன் கூடிய வைப்பு தொகை, “முதிர்வு தொகை”யாக வழங்கப்படுகிறது.

கடந்த 2001 முதல் 2005ம் ஆண்டு வரை பதிவு செய்த, 1.40 லட்சம் பேருக்கு 350.28 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், 18 வயது நிறைவடைந்தும், முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்காமல் இருக்கிறார்களாம். அவர்களுக்காக, கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, அனைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்களிலும், மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தகுதியான அனைவரும், ஒரு மாதத்துக்குள் முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு மீண்டும் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க தகுதிகள்:

1. பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்குள் இருக்க வேண்டும்.

2. இரண்டாவது பெண் குழந்தை பிறந்து

3. வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

3. தமிழ்நாட்டில் பத்து வருடங்களுக்கு மேல் வசிப்பவராக இருக்க வேண்டும். 4

. பெற்றோரில் ஒருவர் 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு செய்து இருக்க வேண்டும்.

* இணையதளத்தின் வாயிலாக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnsocialwelfare.tn.gov.in/en/specilisationschild-welfare/chief-ministers-girl-child-protection-scheme