ஜெயக்குமார் கேள்வி: சீனியர்கள் பலர் இருந்தும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி ஏன் ..!?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது அரசு வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு அதுபற்றி கவலையில்லை.

திமுக சங்கரமடம் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். திமுகவில் கடுமையாக உழைத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி இல்லையா? மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதயநிதி துணை முதலமைச்சர் என கொஞ்சம் கொஞ்சமாக கருத்தை விதைத்தனர்.

திமுகவில் சீனியர்கள் பலர் இருக்கும்போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க முயற்சி நடப்பது ஏன்? துணை முதலமைச்சராக உதயநிதியை தவிர திமுகவில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

உதயநிதி, துர்கா ஸ்டாலினுக்கு ஏமாற்றம் இருக்காது..! மக்களுக்கு திமுக ஆட்சியே ஏமாற்றம்தான்…!

“உதயநிதி, துர்கா ஸ்டாலினுக்கு ஏமாற்றம் இருக்காது; ஆனால் மக்களுக்கு திமுக ஆட்சியே ஏமாற்றம்தான் என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

‘மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது’ என முதல்வர் பேட்டியளித்திருந்த நிலையில், “உதயநிதி, துர்கா ஸ்டாலினுக்கு ஏமாற்றம் இருக்காது; ஆனால் மக்களுக்கு திமுக ஆட்சியே ஏமாற்றம்தான். திமுக-வே மக்களை ஏமாத்தி ஆட்சிக்கு வந்தாங்க; இன்னைக்கும் கட்சித் தொண்டர்களை ஏமாத்திதானே கட்சியையும், ஆட்சியையும் நடத்திட்டு இருக்காங்க” என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா தெரிவித்தார்.

திமுகவை கம்பீரமாக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளதாக கலைஞர் உரை..!

தந்தை பெரி­யார் பிறந்த நாள் செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15, தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட 17. 9. 1949 தினத்தையும் இணைத்து “முப்­பெ­ரும் விழா’’ முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் 1985 – ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்டு அன்று முதல் திமுகவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முப்பெரும் விழாவுடன் சேர்த்து, தி.மு.க தோன்றி 75 ஆண்டு­ பவ­ள­விழாவும் சேர்த்து கொண்டாடப்படுகிறது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பவள விழா முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக பவள விழா – முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி AI தொழில்நுட்பத்தில் கலைஞர் உரையாற்றினார்.

அப்போது, திமுகவை கம்பீரமாக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளார். 55 ஆண்டுகளாக கட்சிக்கு அயராது உழைத்தவர் மு.க.ஸ்டாலின். திராவிடச் செம்மலாய் இந்தியாவின் முன்மாதிரி முதலமைச்சராக செயல்பட்டு நல்லுலகம் போற்றும் நாயகராய் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி வழியில் கழக ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார் என மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில், சென்னை ஒய்எம்சிஏ திடலில் தி.மு.க பவளவிழா மற்றும் முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து மேலும் இந்த பிரம்மாண்ட விழாவில், பாப்பம்மாள் சார்பாக அவரது பேத்தி ஜெயசுதா அவர்களிடம் பெரியார் விருதினையும், அறந்தாங்கி மிசா இராமநாதன் அவர்களுக்கு அண்ணா விருதினையும், வழங்கினார். முதலமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு கலைஞர் விருதினையும், கவிஞர் தமிழ்தாசன் அவர்களுக்கு பாவேந்தர் விருதினையும், வி.பி.ராஜன் அவர்களுக்கு பேராசிரியர் விருதினையும் தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருதினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

விஜய பிரபாகரன்: “திமுக கூட்டணியில் இரண்டு நாளில்கூட மாற்றம் ஏற்படலாம்..!”

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு, விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேமுதிக அதிமுக கூட்டணியில் தொடரும். திமுக கூட்டணியில் 2 நாட்களில் கூட மாற்றம் ஏற்படலாம்.

தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் உள்ளதால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எனது வாழ்த்துகள். மது ஒழிப்பு மாநாட்டுக்கு தேமுதிகவுக்கு அழைப்பு வந்தால் அதில் பங்கேற்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

Anbumani Ramadoss: பெரியார் சமூகநீதிக்கான அடையாள சின்னம்…! சமூகநீதிக்கான அநீதிகளை திமுக செய்கிறது…!

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி அவரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பாமக அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை பேசிக் கொண்டுள்ளனர்.

பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் திமுக செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. இதை தெரிந்து கொள்ள கூட முதலமைச்சருக்கு ஆர்வமில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது.

பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை. 1987-ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெற்றோம். 114 சமூகம் 6.7 விழுக்காடு, வன்னியர் சமூகம் 14.1 விழுக்காடு ஆகும். இது தொடர்பாக சமீபத்தில் அரசு வெளியிட்டது பொய்கணக்குதான்.

கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார். இன்று நாங்கள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர் கூட வன்னியர் கிடையாது. எதிலும் பிரதிநிதித்துவம் இல்லை. 23 வன்னியர்கள், 21 பட்டியல் இன எம்எல்ஏக்கள் இருந்தாலும் இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் உள்ளனர். மற்ற சமூக எம்எல்ஏக்களில் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை எண்ணி பார்க்கவேண்டும். அடையாள அரசியல் செய்ய வேண்டும். இன்று பெரியார் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிக்கவேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தொல். திருமாவளவன்: எங்களுக்குள் எந்த விரிசலும், நெருடலும் இல்லை…!”

“திமுக – விசிக இடையில் விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம். ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற எனது பேச்சு பற்றி முதலமைச்சர் எதுவும் கேட்கவில்லை” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதற்காக அவர் விசிக நிர்வாகிகளுடன் இன்று காலை 11.30 மணியளவில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கே அவர் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சரை சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தொல். திருமாவளவன் பதிலளித்தார். அப்போது, அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருக்கும் நிலையில் விசிக சார்பில் முதலமைச்சரை சந்தித்து எங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தோம். ரூ.9000 கோடி அளவிலான 19 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முதலமைச்சரின் இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்காகப் பாராட்டுகளைத் தெரிவித்தோம்.

அத்துடன், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி விசிக சார்பில் நடைபெறும் ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ நிமித்தமாக இரண்டு முக்கியமான கோரிக்கைகள் கொண்ட மனுவை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம். அதில் இடம்பெற்றுள்ள முதலாவது கோரிக்கை, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது கோரிக்கை தேசிய அளவிலானது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47-ன் படி படிப்படியாக மதுவிலக்கை இந்திய அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பதாகும்.

முதலமைச்சர் எங்களின் கோரிக்கை மனுவை படித்துப் பார்த்தார். பின்னர் அவர், “திமுகவின் கொள்கைதான் மதுவிலக்குக் கொள்கை. மதுவிலக்கு தமிழ்நாட்டில் அமலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு அதைப் படிப்படியாக எவ்வாறு நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு செய்வோம்.

தேசிய அளவில் மதுவிலக்கு என்ற உங்கள் கோரிக்கையை உங்களோடு சேர்ந்து நாங்களும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம். எனவே அக்டோபர் 2 மாநாட்டில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பர்” என்ற உறுதியை வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில் மதுவிலக்கு கருத்தில் உடன்படுவோர் எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும், தடையும், தயக்கமும் இல்லை என தொல். திருமாவளவன் கூறினார்.

தேசிய அளவில் மதுவிலக்கு என்ற உங்கள் கோரிக்கையை உங்களோடு சேர்ந்து நாங்களும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம். எனவே அக்டோபர் 2 மாநாட்டில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பர்” என்ற உறுதியை வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில் மதுவிலக்கு கருத்தில் உடன்படுவோர் எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும், தடையும், தயக்கமும் இல்லை என தொல். திருமாவளவன் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது: ‘ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்க’ என நான் பேசியது பற்றி முதல்வர் எதுவும் பேசவில்லை. ஏனெனில், அது 1999-ல் இருந்து நான் பேசி வரும் கருத்து. அது இப்போது சமூக ஊடகங்களில் பெரிதாகப் பேசப்படுகிறது. அந்தக் கருத்தை நாங்கள் இப்போதும், எப்போதும் பேசுவோம். எப்போது வலுவாகப் பேச வேண்டுமோ அப்போது அதை வலுவாகப் பேசுவோம்.

தேர்தலுக்கும் இப்போதைய மாநாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆயிரக்கணக்கான கைம்பெண்களின் கோரிக்கையை முன்னிறுத்தியே இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம். இதை திசைதிருப்பும் வகையில் தேர்தல் அரசியலோடு பிணைத்துப் பார்க்க வேண்டும்.

மாநாட்டில் பங்கேற்கும்படி முதல்வரிடம் நேரடியாக அழைப்பு கொடுக்கவில்லை. அந்த கோரிக்கை மனுவில் இடம்பெற்றிருந்த தகவலின்படி, ‘உங்கள் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றுதான். அதனால் இருவர் எங்கள் தரப்பில் இருந்து பங்கேற்பார்கள்’ என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்.

மற்றபடி திமுக – விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதை நாங்கள் முன்னிறுத்துகிறோம் தொல். திருமாவளவன் கூறினார்.

வானதி சீனிவாசன்: கொங்கு மண்டலம் திமுக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மன்னிக்காது..!

கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத தமிழகத்தின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் திமுக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மன்னிக்காது” என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தை முன்வைத்து வானதி சீனிவாசன் பதிலடி தந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜி.எஸ்.டி. குறித்த தொழில்முனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று” என்று கூறியிருக்கிறார்.

கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் தொழில்கள் நசிந்து வருவதை அறிந்து, அதை காப்பற்றவே நிர்மலா சீதாராமன் கோவை வந்தார். ஆனால், அவரது முயற்சிகளுக்கு திமுக அரசு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக பிரச்னையை திசை திருப்பி, மத்திய நிதியமைச்சர் செய்த நல்ல செயல்களை மக்களிடம் இருந்து மறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார்.

திமுக அரசின் அபரிமிதமான மின் கட்டண உயர்வாலும், சொத்து வரி, பதிவு கட்டண உயர்வாலும் 30 சதவீத குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு, கோவையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற முறையில், மத்திய நிதியமைச்சருடன், தொழில்முனைவோர்கள் நேரடியாக சந்திக்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தேன். தொழில்முனைவோர்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த கோரிக்கைகள், ஆலோசனைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுமையுடன் கேட்டு பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அப்போது நடந்த சாதாரண நிகழ்வை, பெரிதாக்கி, அரசியல் ஆதாயம் தேட திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முயன்று வருகின்றன. கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத தமிழகத்தின் முதல்வரான மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் திமுக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மன்னிக்காது” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் பெருமிதம்: தெற்குதான் வடக்குக்கு வழிகாட்டுகிறது என்ற அளவுக்கு திமுகவின் கொள்கை தாக்கம்..!

‘‘ தெற்குதான் வடக்குக்கு வழிகாட்டுகிறது என்ற அளவுக்கு திமுகவின் கொள்கை தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் இருந்து புறப்படும் முன், திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய பவள விழா அழைப்பு மடலில் கூறியது, அமெரிக்காவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தமிழகத்தின் தொழில் முதலீட்டைப் பெருக்கி, இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பை வழங்க வழிவகுக்கின்றன. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்பதை வெறும் சொற்களாக இல்லாமல், முழுமையான செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்தியஅளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியஇயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். செப்டம்பர் 15 – பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17 – பெரியார் பிறந்தநாள். அதே நாள்தான், திமுக என்ற பேரியக்கம் தொடக்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து,முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

திமுகவின் ரத்தநாளங்களாக இருந்து, தங்கள் வாழ்நாளை இயக்கப் பணிக்கு அர்ப்பணித்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தைத் தொடங்கி, தொடர்ந்து வழங்கினார். 40 ஆண்டுகளாகத் தொடரும் இந்த சிறப்பான நடைமுறையின் அடிப்படையில் இந்த ஆண்டும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர், மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதுதவிர திமுகவில் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிர்வாகிகள், பல்வேறு துறைகளில் மக்கள் பணியாற்றுபவர்களுக்கும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. செப்டம்பர் 17-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள பவளவிழா நிகழ்வுகள், மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்தும், அமெரிக்காவில் இருந்தபடியே திமுக ஒருங்கிணைப்பு குழுவினருடன் காணொலியில் ஆலோசனை நடத்தியதுடன், மாவட்டச் செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன்.

கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மாவட்டங்களில் பவளவிழாவுக்கான சுவர் விளம்பரங்கள் சிறப்பான முறையில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதை அறிந்துகொண்டேன். கூட்டங்களில் தொண்டர்களின் ஆழ்மனக்கருத்துகள் குரலாக வெளிப்பட்டன. அவர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்க தலைமை தவறுவதில்லை என உறுதியளிக்கிறேன்.

கடந்த 1949-ஆம் ஆண்டு வடசென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திமுகவின் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தினார் பேரறிஞர் அண்ணா. 75 ஆண்டுகள் கழித்து, தென்சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் திமுகவின் பவள விழா நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த 75 ஆண்டு காலத்தில், தெற்குதான் வடக்குக்கு வழிகாட்டுகிறது என்ற அளவுக்கு திமுகவின் கொள்கை தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியுள்ளது.

அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகத் தமிழகம், அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் என உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக, நண்பனாக திகழும் இயக்கம்தான் திமுக. இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை. இந்த வெற்றிப் பயணம் தொடர, செப்டம்பர் 17-ஆம் தேதி திமுகவின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி. உதயகுமார்: முதல்வர் அதிகாரத்தை உதயநிதி ஸ்டாலின் எடுத்துக் கொண்டார் ..!

திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து நலம் விசாரித்தார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன், டப்பாவில் அடைக்கப்பட்ட சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது. பிரியாணியை சாப்பிட்ட கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 65 பேருக்கு நேற்று இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் 20 சிறுவர்கள் உட்பட 36 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு கருதி அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1,000 நிதி உதவியளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுடன் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “திமுக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு விருதுநகர் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அவசர கதியில் மக்களுக்கு உணவை அள்ளிக் கொடுத்து இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்க முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தினார். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கவனமாக செயல்பட வேண்டும். யார் உணவு அளித்தாலும் எச்சரிக்கையோடும் கவனத்தோடும் கையாள வேண்டும். கரோனோ காலத்தில் லட்சக்கணக்கானோருக்கு உணவு வழங்கப்பட்டது. மதுரையில் 9 மையங்களில் 3,200 கரோனா தொற்றாளர்களுக்கு 5 மாதம் பாதுகாப்பாக உணவளிக்கப்பட்டதை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின் மதுரையில் மாநாடு போன்று நிகழ்ச்சி நடத்தினார். அவர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்ற வருவாய்த்துறை அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம், இடமாற்றம் செய்கிறார்கள். முதல்வர் தான் அனைத்துத் துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த முடியும். ஆனால், ஒரு துறையின் அமைச்சர் எவ்வாறு அனைத்துத் துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தலாம்?அறிவிக்கப்படாத முதல்வராக உதயநிதி செயல்படுகிறார். அவருக்கு எப்போது முதலமைச்சர் அதிகாரம் வழங்கப்பட்டது? முதல்வர் அதிகாரத்தை இவர் எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தை அவருக்காக செயல்படுத்துவது தவறான முன்னுதாரணம்” என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

ஆர்.பி.உதயகுமார்: சீமான் ஏன் தேவையில்லாமல் கருத்துக் கூறுகிறார் என தெரியவில்லை..!

மது ஒழிப்பு மாநாட்டுக்கு தொல்.திருமாவளனன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதில் கூற வேண்டியது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தான். இதுதொடர்பாக சீமான் ஏன் கருத்துக் கூறுகிறார் என்று தெரியவில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து நலம் விசாரித்தார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன், டப்பாவில் அடைக்கப்பட்ட சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது. பிரியாணியை சாப்பிட்ட கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 65 பேருக்கு நேற்று இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் 20 சிறுவர்கள் உட்பட 36 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு கருதி அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1,000 நிதி உதவியளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுடன் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், மது ஒழிப்பு மாநாட்டுக்கு தொல்.திருமாவளனன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதில் கூற வேண்டியது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தான்.

இதுதொடர்பாக சீமான் ஏன் கருத்துக் கூறுகிறார் என்று தெரியவில்லை. பூரண மது விலக்கு கோரி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகளும், பழனிசாமி முதல்வராக இருந்தபோது 500 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. தற்போது அதிமுகவுக்கு திருமாவளனன் விடுத்துள்ள அழைப்பு தமிழக அளவில் பெரும் அதிர்வலையை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக நாட்டில் ஒருவர் மாநாடு நடத்தினால் தேவையில்லாத கேள்விகள் கேட்கிறார்கள் என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.