எஸ்.வி சேகர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்..!

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் அப்போது வீராணம் பைப் வழியாக தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஓட்டலில் கிளினிக்கல்ஸ் மருத்துவமனை சார்பில் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை விழிப்புணர்வு சிறப்பு கிளப்பை நடிகர் எஸ்.வி.சேகர் திறந்து வைத்தார். பின்னர் நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்த அதற்கான பிரத்யேக கால் சென்டர் என்னையும் நடிகர் எஸ்.வி.சேகர் அறிமுகம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு எஸ்.வி.சேகர் பதிலளித்தார். அப்போது, தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை என்பதே சரி. தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது திணிக்க வேண்டும் என்பதற்காகவும், சமீபத்தில் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா நாங்கள் இந்தியை திணிக்க மாட்டோம் என்று இந்தியில் தெரிவித்து விட்டு சென்றார்.

நாம் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் 3 மாதத்தில் அந்த மாநிலத்தின் மொழியை கற்றுக் கொள்ள முடியும். ஆனால் பாஜக அரசு உடனடியாக இந்தியை கற்றுக் கொள் என்று கூறுவதால் நாளை ஒருவருக்கு ஜப்பானில் வேலை கிடைத்தால் இந்தி மொழியை வைத்துக் கொண்டு ஜப்பானில் என்ன செய்ய முடியும்.

மூன்றாவது மொழி இந்தி இல்லை என்று பாஜாக சொன்னாலும், ஒரு ஒரு மொழி படிக்கும் மாணவர்களுக்கு ஒரு ஒரு ஆசிரியர் நியமிக்க முடியுமா? மத்திய அரசை யார் ஆண்டாளும் இந்தியை எப்படியாவது கொண்டு வர வேண்டும், ‘THINK GLOBAL ‘ ‘ ACT GLOBAL ‘ என்று சொல்லுவார்கள். இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டுமே இருக்கிறது.

இந்தி வேண்டும் என்று யார் கேட்டார்கள். இந்தியை இலவசமாக சொல்லி தருவதை யாரும் தடுக்க வில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் அப்போது வீராணம் பைப் வழியாக தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன். ஆனால் எல்லா கொள்கைகளையும் அரசியலாக மாற்றப்படும் போது தான் எதிர்ப்பு வருகிறது. அதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நான் சொல்வதை நீங்கள் செய்யவில்லை என்று சொன்னால் நிதி தர மாட்டேன் என்று சொல்வது நியாயமா? என எஸ்.வி சேகர் கேள்வி எழுப்பினார்.

சீமான் சவால் “நாதகவை தாண்டி தமிழகத்தில்இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்…!”

“தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்!” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம்,  ஆற்காடு அடுத்த திமிரி தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பு மறுசீராய்வு மற்றும் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, மத்திய அரசுக்கு மற்ற மாநிலங்களை விட அதிகளவில் நாம் வரி செலுத்துகிறோம். ஆனாலும் நமக்கு போதிய நிதியை அவர்கள் அளிக்கவில்லை என்று திமுக ஆட்சியாளர்கள் புலம்புகின்றனர். இதற்கு ஏன் அவர்களுக்கு ஆட்சி, அதிகாரம். பிஹார் மாநிலத்தால் பெற முடிகிறது. உங்களால் முடியவில்லையா? நாதக ஒரு ஜனநாயக கட்சி. இதில், பொறுப்பாளர்கள் கொள்கை, கோட்பாடுக்கு உடன்பட்டு வருகிறார்கள். பின்னர், முரண்பாடு காரணமாக வெளியேறுகிறார்கள். இது கட்சி பிரச்சினை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் இந்தி மொழியை வலுகட்டாயமாக திணிக்கும் போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும். மொழி பிரச்சினைக்காக பல்வேறு போராட்டகளை சந்தித்துள்ளது தமிழகம். மற்ற மாநிலங்கள் ஏற்கிறது என்றால், நாங்களும் ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்ற கட்சிகளை விடுங்கள். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்.

பாஜகவுடன் சேர்ந்து என் மொழியை அழித்தற்கு, திராவிட கட்சிகளுக்கும் பெறும் பங்கு உண்டு. பெரியார் குறித்து நான் அவதூறாக பேசவில்லை. அவர் பேசியதை எடுத்து பேசுகிறேன். அவரை பற்றி இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் என் வீட்டின் மீது குண்டு போடுகிறார்கள். பேச ஆரம்பித்தால் என்னவாகும்? நான் இருக்கும்போது போடுங்கள், பார்ப்போம்.

2026-ம் ஆண்டு தேர்தல் பணிகளை ஏற்கெனவே தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். அதுகுறித்த விவரங்களை தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம். தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அதை மக்கள் சொல்லவில்லை. இவர்கள் மக்கள் ஆட்சியை துளியும் செய்யவில்லை. கட்சி, தேர்தல் அரசியல் செய்கிறார்கள். செயல், சேவை ஆட்சியை இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை” என சீமான் தெரிவித்தார்

கமல்ஹாசன்: இந்த மொழியைப் படி என்று திணித்தால் தூக்கி வீசிவிடுவார்கள்..!

தமிழக மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்க முயற்சி செய்கிறார்கள். தங்களுக்கு என்ன மொழி வேண்டும், எந்த கல்வி வேண்டும் என்பது தமிழர்களுக்குத் தெரியும். ஏன் சிறு குழந்தைகூட அறியும். விருப்பமான மொழியை கற்பார்கள். ஆனால், இந்த மொழியைப் படி என்று திணித்தால் தூக்கி வீசிவிடுவார்கள் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கொடியேற்றினார். பின்னர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். அப்போது, உறவு என்பது நீடிக்கலாம், நீடிக்காமல் போகலாம்.

ஆனால், தமிழக மக்கள் என் மீது கொண்ட உறவு உணர்வாக, அன்பாக மாறி தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. நம் அனைவரையும் இணைப்பது தமிழ்மொழிதான். தமிழை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது. சிலர் என்னை தோற்றுப்போன அரசியல்வாதி என விமர்சனம் செய்கிறார்கள். தோல்வியில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், நான் 20 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்பதுதான்.

அவ்வாறு முன்கூட்டியே அரசியலுக்கு வந்திருந்தால் நான் நிற்கும் இடமும், நான் பேசும் வார்த்தையும் வேறாக இருந்திருக்கும். ரசிகர்கள் வேறு; வாக்காளர்கள் வேறு என்பதை எனது அரசியல் அனுபவத்தில் புரிந்துகொண்டேன். தமிழக மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்க முயற்சி செய்கிறார்கள். தங்களுக்கு என்ன மொழி வேண்டும், எந்த கல்வி வேண்டும் என்பது தமிழர்களுக்குத் தெரியும். ஏன் சிறு குழந்தைகூட அறியும். விருப்பமான மொழியை கற்பார்கள்.

ஆனால், இந்த மொழியைப் படி என்று திணித்தால் தூக்கி வீசிவிடுவார்கள். மொழியைக் காரணம் காட்டி கல்விக்கான நிதியைத் தர மறுப்பது, மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க கைச்செலவுக்கு பணம் தரமாட்டோம் என்று சொல்வதற்கு சமம். மொழியும், கல்வியும் அனைவருக்கும் பொதுவானது. இந்த ஆண்டு நாடாளுமனறத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும், அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் மநீமவின் குரல்கள் ஒலிக்கும். எனவே, அடுத்த ஆண்டு தேர்தலுக்கான உழைப்பை இப்போதே தொடங்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி: 3-வது மொழி மாணவர்களுக்கு பெரும் சுமை.. 56 மொழிகளை இந்தி அழித்துள்ளது .. !

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,151 கோடி கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில், பாஜக ஆளாத மாநிலங்களிலும் தேசியக் கல்வி கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது என்று தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழ்நாடு ஏற்கனவே தரமான கல்வியை கொடுக்கிறது. பிஎம்ஸ்ரீ மூலம் கல்வித் தரத்தை உயர்த்த போகிறீர்கள் என்றால், அப்படி அந்த திட்டத்தில் என்ன மாற்றம் செய்ய போகிறீர்கள்? புதிய கல்விக் கொள்கையை பிஎம்ஸ்ரீ மூலம் கொண்டு வருவதை ஏற்கனவே அறிந்து கொண்டுவிட்டோம். மும்மொழிக் கொள்கை, 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு போல் ஒன்றை கொண்டு வருவது என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இது அதிகளவில் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது மாணவர்கள் இடைநிற்றலை குறைத்திருக்கிறோம். மீண்டும் ஒரு மொழிப்போரை கொண்டு வரக்கூடாது என்ற வகையில் தமிழக அரசு கண்டனத்தை தெரிவித்து வருகிறோம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கி உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

இளைய சமுதாயத்தை மனதில் வைத்து திட்டத்தை உருவாக்கி இருந்தால், புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. சாதாரணமாக அமர்ந்து கையெழுத்திடுங்கள்.. பேசிக் கொள்ளலாம் என்ற ரீதியில் வலியுறுத்தி இருக்கிறார். இருமொழிக் கொள்கையில் படித்துள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறார்கள். மருத்துவர்கள், தொழில்நுட்பம், இஸ்ரோ, ஐடி என்று பல்வேறு துறைகளிலும் இருமொழிக் கொள்கையின் கீழ் படித்தவர்களே முதன்மையாக இருக்கிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து யாரிடமும் கருத்து கேட்கவில்லை. தூண்டிலை போட்டுவிட்டு மீன் சிக்காதா என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழின் பெருமையை நீங்கள் சொல்லி அறிய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றல் சுமையை உருவாக்கும். இந்தி இல்லாமல் 3-வது வேறு மொழியை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை.

பாடத்திட்டத்திற்கு வெளியே இந்தி மொழியை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கத்தான் செய்கிறோம். கட்டாயம் என்று சொல்லி ஒரு மொழியை கொண்டு வரும் போதுதான், தேவையில்லாத மன அழுத்தத்தை மாணவர்களுக்கு கொடுக்கும். மும்மொழி கொள்கை மாணவர்களின் கால்களில் சங்கிலியை போட்டு இழுப்பதை போன்றதாகும். இந்தியாவில் 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சொந்த மொழியாக ஒரியா மொழி உட்பட 56 மொழிகள் முழுமையாக இந்தி திணிப்பால் அழிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நிலை தமிழுக்கும் வந்துவிடக் கூடாது. தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்ற சொல்லைதான் எதிர்க்கிறோம் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கருணாஸ் ஆவேசம்: ஹேராம்னு பாட்டு பாடலாம் என்று நினைக்கிறீர்களா? அண்ணாமலைக்கு பண்பு இல்லை..!

இந்தி படித்தால் பெரியாளாகி விடலாம் என்றால், வடமாநில இளைஞர்கள் வேலை தேடி ஏன் தமிழ்நாடு வருகிறார்கள்? வட இந்தியாவில் இருப்பவர்களை மொத்தமாக அழைத்து வந்து இங்கு ஹேராம்னு பாட்டு பாடலாம் என்று நினைக்கிறீர்களா? அது சரியல்ல என முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் தெரிவித்தார். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையிலான வார்த்தை மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சோசியல் மீடியாவில் திமுகவினர் கெட் அவுட் மோடி என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் பாஜக தரப்பில் கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்தி திணிப்பு மற்றும் கல்வி நிதி விவகாரம் தொடர்பாக இரு கட்சியினர் மத்தியில் மோதல் போக்கு உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் அண்ணாமலை குறித்து கருணாஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் என்றும் இருமொழிக் கொள்கைதான். ஏற்கனவே தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது, தாய்மொழியான தமிழை விழுங்க வேண்டும் என்று இந்தி திணிப்பதற்கான முயற்சியை எடுக்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள தமிழக தலைவர்களே வரவேற்பது வேதனையாக உள்ளது.

இது எவ்வளவு பெரிய துரோகம். பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை தமிழ் மொழியை அழிக்கக் கூடிய திட்டம் என்று தெரிந்தும் ஆதரிக்கிறாரே.. கட்சியில் பொறுப்பில் இருக்கிறோம் என்று பேசுகிறார் என்றால்.. என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதே தமிழ் மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த மண் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் 3-வது மொழியை கற்றுக் கொள்ள வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. 3 என்ன.. 300 மொழிகளை கூட கற்றுக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது.

அதற்காக பல மொழி பேசும் தேசத்தில் ஒரே மொழியை கற்பிக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை மாற்றுங்கள். தமிழ் மொழி தானே இந்தியாவின் மூத்த மொழி. 3 மாதத்தில் இந்தியை கற்றுக் கொள்ளலாம் என்று அண்ணா கூறினார். 3 மாதத்தில் கற்றுக் கொள்வது கடந்து அந்த மொழியில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கைதான். மும்மொழிக் கொள்கை தேவையில்லை என்பதே கருத்து. அதேபோல் முன்பாக கோபேக் மோடி என்று கூறினோம். இப்போது கெட் அவுட் மோடி என்று கூறுகிறோம். படித்து அதிகாரியாக இருந்த அரசியல்வாதி ஒருமையில் பேசலாமா? அரசியல்வாதியாக இருந்திருந்தால் அண்ணாமலைக்கு பண்பு இருந்திருக்கும். அவர் திடீரென வந்தவர் என்பதால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறார்கள்.

இந்த மண், மொழி, மக்கள் தான் உங்களை உருவாக்கினார்கள். கும்மிடிபுடி தாண்டினால் யாரையும் தெரியாதா? எங்களுக்கு ஆங்கிலம் இருக்கிறது. ஆங்கிலம் தெரியாது என்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை. வடமாநிலத்தில் இருப்பவர்களை ஆங்கிலம் படிக்க சொல்லுங்கள். இந்தி படித்தால் பெரியாளாகி விடலாம் என்றால், வடமாநில இளைஞர்கள் வேலை தேடி ஏன் தமிழ்நாடு வருகிறார்கள்? வட இந்தியாவில் இருப்பவர்களை மொத்தமாக அழைத்து வந்து இங்கு ஹேராம்னு பாட்டு பாடலாம் என்று நினைக்கிறீர்களா? அது சரியல்ல என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் கேள்வி: ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா..?

ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா? எல்லோரும் இந்தியை பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது? என்னை ஏன் இந்தி மாணவனாக மாற்ற முயற்சிக்கிறாய் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு முக்கியமானதாக இருக்கிறது.

நாகரீக அணுகுமுறை என்பதை முற்றாக தவிர்த்துவிட்டு, யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்று நிலைப்பாட்டை எடுத்து அரசியல் செய்கிறார். அவரது அணுகுமுறை வியப்பாக இருக்கிறது. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை. எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் அனுமதி கேட்டுள்ளார்கள். அவ்வளவுதான். அதற்கான அனுமதி பெறவில்லை, வகுப்புகள் தொடங்கப்படவில்லை, இன்னும் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை. ஒரு அறிவிப்பு வந்துள்ளது.

அந்த இடம் எங்களுடையது என்பதால் என் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு மாணவர்களின் நலனில் அக்கறை இருந்திருந்தால், மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை பெற்று தந்திருக்கலாம். அதற்காக குரல் கொடுக்கவில்லை. அதேபோல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகிற கல்வி நிறுவனம், விளிம்பு நிலை மக்களுக்கான கல்வி நிறுவனமாக இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு முறையாக நிதி வருவதில்லை. மத்திய அரசு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான உதவித் தொகை தரப்படுவதை நிறுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது.

ஏழை மாணவர்களின் கல்வி முக்கியம் என்று அண்ணாமலை கருதினால், அவர்கள் போஸ்ட் மெட்ரிக் ஸ்கார்லர்ஷிப் வாங்கி கொடுப்பதை பற்றி பேசி இருக்க வேண்டும். அதனை ஏன் அண்ணாமலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து குரல் கொடுத்திருக்கிறாரா? அந்த ஸ்காலர்ஷிப்பிற்கு கூட வருமான வரி விதிக்கிறார்கள். முன்னேறிய சமூக மாணவர்களின் பெற்றோருக்கு ரூ.8 லட்சம் வருமான வரம்பு. ரூ.8 லட்சத்திற்கு மேல் பெற்றோரின் வருமானம் இருந்தால் மட்டுமே போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் இல்லை. ஆனால் ஓபிசி மாணவர்களின் பெற்றோருக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சம்தான். ரூ.2 லட்சத்திற்கு மேல் பெற்றோர் சம்பளம் பெற்றால், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடையாது.

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் பெற்றோர் ரூ.2.5 லட்சம் ஊதியம் பெற்றால், அவர்களுக்கும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடையாது. இவ்வளவு மோசமான வருமான வரம்பை வைத்துள்ள மத்திய அரசிடம் சென்று அண்ணாமலை கேட்டிருக்காலாமே? அண்ணாமலை ” போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கொடுக்க கூடாது என்பதற்காக சூது, சூழ்ச்சி செய்யும் பாஜக இவ்வளவு பெரிய பாடுபாடு வைத்துள்ளது. இந்த பாகுபாட்டை களைவதற்கு பாஜகவும், அண்ணாமலையும் என்ன குரல் கொடுத்துள்ளார்கள்? இந்தி மீது வெறுப்பு கிடையாது.

ஆனால் இந்தியை இந்தியாவின் மூலைகளிலும் கற்றாக வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது. ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா? அரசுப் பள்ளியில்தான் மாணவர்கள் அதிகமாக படிக்கிறார்கள். இந்தியா முழுக்க ஒரே கொள்கையை திணிப்பது ஏன்? எல்லோரும் இந்தியை பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது? என்னை ஏன் இந்தி மாணவனாக மாற்ற முயற்சிக்கிறாய்? இதற்கு பின் ஒரு மறைமுக நோக்கம் இருக்கிறது. தேசத்தில் ஒரே மொழிக் கொள்கை என்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்: சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது..!

உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து மக்கள் விரோத போக்கினை கடைபிடித்து வருகின்றது. கறுப்புப் பணம் ஆரம்பித்த பாஜக அரசின் சர்வாதிகார போக்கு இன்று ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பாஜக அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இந்நிலையில், பொது நிறுவனமான LIC-இலும் இந்தி திணிப்பை பாஜக முன்னெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது . அரசின் LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி, ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முகப்பு பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த செலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் LIC -யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்தி மயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக் கூட இந்தியில் உள்ள சுட்டியின் மூலம் தான் பெற முடியும் என்பது மத்திய அரசின் இந்தித் திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் LIC இணையதளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் உடனே மாற்றி அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது” என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்: இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்..!

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் ரவியும் அழைக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தது வருகின்றனர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் தேசிய மொழி என்று அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழியையும் வரையறுக்கவில்லை. பன்மொழிகள் நிறைந்த இந்திய நாட்டில், இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அதனை மட்டும் கொண்டாடுவது பிற மொழிகளைச் சிறுமைப்படுத்துவதாகும்.

இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, செம்மொழித் தகுதி பெற்ற அத்தனை மொழிகளையும் கொண்டாட வேண்டும்; நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான் கேள்வி: புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி இருக்கா, இல்லையா?

ராமநாதபுரத்தில் சீமான் செய்தியாளர்கள் கேள்விக்கு, இந்தியா ஒரு தேசமே இல்ல. மாநிலங்கள் மொழி வழியில் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் இருந்த கல்விக்கொள்கையை நீ வகுத்து கொடுத்தியா? உன் புதிய கல்விக்கொள்கையை நீ வகுத்து கொடுத்தியா? உன் புதிய கல்விக்கொள்கையில் ஒரு சிறப்பை சொல்லுங்க பார்ப்போம். புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் என்று கல்வியயல் அறிஞர்கள் சொல்கிறார்கள். கல்வி எல்லாருக்கும் சமமாக இருக்கிறதா?

தாய் மொழி கல்வி என்பார்கள். அப்பறம் எதுக்கு சமஸ்கிருதம் உள்ளே வருகிறது. திருச்சி ஏர்போர்ட்டில் எதுக்கு சமஸ்கிருதத்தில் கல்வெட்டு. இதுதான் மொழி திணிப்பு. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி இருக்கா, இல்லையா? என சீமான் கேள்வியெழுப்பினார்.

அண்ணாமலை கேள்வி: அமித்ஷா சொன்னதும் புரியாது…?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் இந்திய மக்களிடம் குறைவாக இருந்தாலும் கூட, ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் என்றாவது ஒருநாள் இந்தியை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என பேசினார். இதற்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், ‛‛எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!

தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் இந்திய மக்களிடம் குறைவாக இருந்தாலும் கூட, ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் என்றாவது ஒருநாள் இந்தியை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என பேசினார். இதற்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மதுரையில் நேற்று இரவு யாத்திரையின்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “மு.க. ஸ்டாலினுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது. எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொன்னார் என்றும் அவருக்கு புரியாது. கல்வியை தாய் மொழியில் வழங்க வேண்டும் என்றே அமித்ஷா தெரிவித்தார். திமுக இந்த விவகாரத்தில் அரசியல் செய்து வருகிறது.

மு.க. ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் மக்களிடம் பேச எந்த தகவலும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வெளிநாட்டு பயணங்களின்போது தமிழின் பெருமையை பேசி வருகிறார். பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவரின் சிலையை வைக்க உள்ளார். எதிர்வரும் தேர்தலில் திமுக தோல்வி அடையும்.” என தெரிவித்தார்.