சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி ஆவேசம்..! நான் என்ன வெடிகுண்டு, துப்பாக்கியா வைத்திருக்கிறேன்..!

நான் என்ன வெடிகுண்டு, துப்பாக்கியா வைத்திருக்கிறேன்.. எங்கப்பாவோட அந்த சகாப்தம் முடிந்து போய்விட்டது என சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி ஆவேசமாக பேசினார். நடிகை பலாத்கார வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இரவு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது காவல் நிலையத்துக்குள் செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சியின் பிரமுகரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளுமான வித்யா தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆவேசம் அடைந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடிகை பலாத்கார வழக்கில் இன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானர். சீமானை இரவு 8 மணிக்கு ஆஜராக காவல்துறையினர் வரவழைத்தனர். இதனால் சென்னை வடபழனி சொகுசு விடுதியிலிருந்து சீமான் புறப்பட்டார். ஆனால் நடுவழியிலேயே நாங்கள் சொல்லும் நேரத்துக்கு வரலாம் என்று காவல்துறை உத்தரவிட சுமார் 1 மணிநேரம் சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ அருகேயே நடுசாலையில் சீமான் காத்திருந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு மேல், சீமானை காவல் நிலையத்துக்கு வரவழைத்தது.

ஆனால் சீமானின் வாகனம், காவல் நிலையத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக சீமானை காவல்நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர். அப்போது நாம் தமிழர் கட்சியின் பிரமுகரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளுமாகிய வித்யா ராணியும் காவல் நிலையத்துக்குள் செல்ல வேண்டும் என காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் பெண் காவலர்கள் அவரை காவல் நிலையத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, நாங்கள் ஒருவர் பின்னால் நின்றால் உயிர் போகிறவரை நிற்போம். என்னையே ஏன் பார்த்து இவ்வளவு பயப்படுறீங்க? என்னை அனுப்புவதாகத்தானே சொன்னீங்க.. அப்புறம் ஏன் தடுத்து பிரச்சனையை உருவாக்குறீங்க? நான் ஏதாவது பேசினேனா? ஆட்சியும் அப்படித்தான்… போலீசும் அப்படித்தான்.. அரசாங்கமும் அப்படித்தான்.. என்னமா நினைச்சுகிட்டு இருக்கீங்க.. உங்க கையில் எதுவும் இல்லை.. மேல சொல்றதை கேட்டுத்தான் ஆகனும்.. உங்க பரிதாபமான நிலைமை புரியது..

ஒரு தனிமனிதனை அரசியல் செய்யவிடாம இப்படி பண்றீங்க.. எங்கப்பனை ஒழிச்சீங்க.. அடுத்த தலைமுறை தமிழன் வந்தா அவரை ஒழிக்க ஆயிரம் வழி தேடுவீங்களா? நான் என்ன வெடிகுண்டு, துப்பாக்கியா வைத்திருக்கிறேன்.. எங்கப்பாவோட அந்த சகாப்தம் முடிந்து போய்விட்டது.. யார் மக்கள் பிரச்சனையை பேசுறாங்கன்னு கண்ணுக்கு தெரியலையா? இந்த உயிர் உடம்பில் இருக்கும் வரை மக்களுக்காக நின்றே தீருவேன் என வித்யா ராணி தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு சவால் விட்ட சீமான்: கருணாநிதி மகனா, பிரபாகரன் மகனா? களத்தில் பார்த்துடலாமா?

கருணாநிதியின் மகனா, இல்லை இந்த பிரபாகரனின் மகன என்பதை 2026 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களத்தில் பார்த்துவிடலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். நடிகை விஜயலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டதும் அது கிழிக்கப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சையாகிவிட்டது.

இது குறித்து தருமபுரியில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, நான் சென்னையில் இல்லை என்பது காவல்துறைக்கு தெரியும். அப்படி இருந்தும் சம்மன் கொடுக்க என் வீட்டுக்கு சென்றார்கள். அங்கு என் மனைவி இருந்தாரே, அவரிடம் கொடுத்திருக்கலாமே, அதை விட்டுவிட்டு கேட்டில் ஏன் சம்மனை ஒட்ட வேண்டும்? அந்த சம்மன் நான் பார்ப்பதற்கா இல்லை ஊரே பார்ப்பதற்கா?

பெங்களூரில் ஒரு நடிகையை தேடி சென்று காவல்துறையினர் சம்மன் கொடுக்க முடியும் போது என்னை தேடி ஓசூருக்கு வந்து சம்மன் கொடுத்திருக்கலாமே! என்ன செய்தாலும் என்னை அடக்க முடியவில்லை. அதனால் அந்த பெண்ணை அழைத்து வந்து திமுக அரசு இது போல் வீண் பழி போடுகிறார்கள். இப்போதும் சொல்கிறேன், ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இத்தனை ஓட்டு வாங்கியிருக்கும் நான்தான் பெரிய தலைவன். 2026 -ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் யார் என பார்த்துவிடலாம்.

கருணாநிதி மகனா, இல்லை பிரபாகரன் மகனா, தமிழா, திராவிடமா என்பதை 2026 -ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில் பார்த்துவிடலாம். இது போல் என்னை மிரட்டினால் நான் பயந்துவிடுவேனா, உங்கள் அப்பா என்னை ஒரு ஆண்டுக்கு ஜெயிலில் வைத்திருந்தார். நான் பயந்துட்டேனா என்னை பார்த்தால் பயப்படுற மாதிரியா தெரிகிறது? ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டாலே நான் குற்றவாளி ஆகிவிடுவேனா. அந்த காவல் துறை ஆய்வாளர் பிரவீனை எனக்கு நன்றாக தெரியும். அவருடைய தந்தை, ராஜீவ் காந்தி வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் இறந்துவிட்டால் அதற்காக என்னை பழிவாங்குவதா?

234 தொகுதிகளிலும் 2026 -ஆம் ஆண்டு திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா, 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், ஆட்சி மாறும் என்பதை காவல் துறையின் மனதில் வைக்க வேண்டும். எங்கள் வீட்டு காவலாளியை அடித்து இழுத்துச் செல்லும் அளவிற்கு என்ன நடந்தது. விசாரணைக்கு வரமாட்டேன் என நான் சொல்லவே இல்லை. எனக்கு மார்ச் 8-ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் இருப்பதால் அதன் பிறகு வருகிறேன் என்றுதான் சொன்னேன். சம்மன் கொடுத்தவுடன் வந்துவிட முடியுமா, எனக்கு நேரம் கிடைக்கும் போதுதானே வர முடியும். இன்று ஆஜராவேனா என கேட்கிறீர்களா என சீமான் தெரிவித்தார்.

விஜயலட்சுமி புதிய வீடியோ: அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க..! நான் ரெடியா இருக்கேன் சீமான்..!

அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க. நான் இங்க தான் இருக்கேன் சீமான். நேர்ல வாங்க.. உங்கள நேர்ல பாத்து, என்ன பாத்தா எப்படிடா இருக்கு னு கேக்க நான் ரெடியா இருக்கேன் என விஜயலட்சுமி புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார். சென்னை வளசரவாக்கம் காவல்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திடீரென வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து, விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376-வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது” என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 வார காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்து தன்னிடம் பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கைப் பொறுத்தவரை சீமான் மீதான புகாரை எளிமையாக விட்டு விட முடியாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் இன்று காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை, வளசரவாக்கம் காவல்துறை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், இன்று சீமான் நேரில் ஆஜராகாத நிலையில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இந்நிலையில் நாளை சீமான் ஆஜராக அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.

காவல்துறையினர் சம்மன் ஒட்டிய சில மணி நேரத்தில், அதனை சீமான் ஆதரவாளர் கிழித்து எறிந்தார். இதுதொடர்பாக காவல்துறை கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. இதையடுத்து காவல்துறையினரை தாக்க முயன்றதாக சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்டார். இதனால் சீமான் வீட்டின் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் என்னை ஏமாற்றாதீங்க.. எனது பாவத்தை வாங்கி கொள்ளாதீர்கள், சீமான் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் விஜயலட்சுமி. அந்த வீடியோவில், “முதலில் என்னை யார் என்றே தெரியாது என சீமான் கூறினார். 2023-ல் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது பேசியபடி மாதம் ரூ.50,000 அனுப்பி வைத்தார். முதலில் என்னை காங்கிரஸ் அழைத்து வந்ததாகவும், பிறகு பாஜக அழைத்து வந்ததாகவும், தற்போது திமுக அழைத்து வந்ததாகவும் சீமான் கூறுகிறார்.

உங்க பொன்னான வாயால தான் என்ன பொண்டாட்டி… பொண்டாட்டி என்று அழைச்சீங்க. அப்பறம் என்கிட்ட வீடியோவும் கேட்டீங்க.. இப்போ என்ன நான் திமுக தான் என்னை அழைச்சிட்டு வந்தீங்கனு சொல்றீங்க. திமுக ஒன்னும் போன வரும் என்னிடம் வந்து மாதம் ரூ.50 ஆயிரம் கொடுக்கல. இப்போ என்னனா, அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க. நான் இங்க தான் இருக்கேன் சீமான்.

நேர்ல வாங்க.. உங்கள நேர்ல பாத்து, என்ன பாத்தா எப்படிடா இருக்கு னு கேக்க நான் ரெடியா இருக்கேன். 2 நாளைக்கு முன்னாடி கூட பேச்சுவார்த்தைக்கு ஆள் அனுப்பிட்டு, அப்போ பிரஸ் மீட்ல என்னைய பத்தி பேசிருக்கீங்க. நான் அப்படி, இப்படினு பேசிருக்கீங்க. என்னோட பாவம் சும்மா விடாது. இன்னும் என்னலாம் பண்ணப்போகுது பாருங்க. சீமான் இந்த வீடியோவை நிச்சயம் பார்க்கணும்” என விஜயலட்சுமி பேசியுள்ளார்.

நான் சாரி கேட்கிறேன் ப்ளீஸ்..! சீமான் மனைவி.. என்னங்க சாரி..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அழைத்து செல்லும் போது, சீமான் மனைவி கயல்விழி காவல்துறையினரிடம் மன்னிப்பு கேட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட் ஒட்டும் சம்மனை கிழிக்க கூடாது என்ற விதி உள்ளது.

ஆனால், அதை மீறி நடிகை பாலியல் வழக்கில், சீமான் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியதால் அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது.

சீமான் காவலாளி மிரட்டல் விசாரணைக்கு வந்த காவல்துறையினரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து காவல்துறை அங்கே வந்து காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரையும் கைது செய்தனர். அதோடு அவரின் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீமான் ஓசூரிலுள்ள நிலையில் சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அழைத்து செல்லும் போது, சீமான் மனைவி கயல்விழி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு போலீஸ் அதிகாரி.. என்னங்க சாரி.. என்ன சாரி.. விசாரிக்க வந்த காவல்துறை அதிகாரியிடம் இப்படித்தான் செய்வீர்களா? என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து கயல்விழி அந்த காவல்துறை அதிகாரியிடம் சாரி கேட்டபடியே பின் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீமான் வீட்டின் காவலாளி கைது..! துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறை..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சீமானின் காவலாளி கைகளில் துப்பாக்கி இருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறை, அதற்கான உரிமம் சரியாக இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. அந்த சம்மனை கிழித்தது ஏன் என்று காவல்துறை விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்ற போது, திடீரென அவரின் காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சீமானின் காவலாளி காவல்துறையினரை தாக்கியதோடு கையில் இருந்த துப்பாக்கியையும் எடுத்து நீட்டியுள்ளார். இதன்பின் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை, கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனிடையே சீமானின் வீட்டில் இருந்த காவலாளியின் கைகளில் துப்பாக்கி வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் காவல் துறை தரப்பில் ஐபிசி 376-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இந்த புகாரை நடிகை திரும்ப பெற்றாலும், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், வழக்கை ரத்து செய்ய முடியாது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி காவல்துறையினர் 12 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதன்பின் வழக்கு விசாரணைக்காக சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டது. அந்த சம்மனை சீமான் வீட்டின் கதவில் காவல்துறை ஒட்டிய போது, மனைவி கயல்விழி அறிவுறுத்தலின் பேரில் சில நிமிடங்களிலேயே அதனை கிழித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை, சம்மனை கிழித்தது யார் என்று கேட்டு கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது காவல்துறையினரை உள்ளே அனுமதிக்க மறுத்த சீமானின் காவலாளி அமல்ராஜ், காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். துப்பாக்கியை நீட்டிய காவலாளி அப்போது காவல்துறையினரை தள்ளிவிட்ட காவலாளி அமல்ராஜ், தன்னிடம் இருந்த கை துப்பாக்கியை எடுத்து காவல்துறையினரை நோக்கி நீட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக காவலாளியை 2 பேர் சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். அதேபோல் காவலாளியின் கைகளில் இருந்த கை துப்பாக்கியையும் காவல்துறை பறிமுதல் செய்தனர்.

சீமான்: தமிழகத்துக்கு நிதி வழங்கவில்லை என புலம்புவதை விட வரி செலுத்துமாட்டோம் எனக் கூற வேண்டும்..!

“நிதி தர மறுக்கும் மத்திய அரசுக்கு வரி செலுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓசூரில் பேசினார். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை தமிழகத்துக்கு நிதி தராமல் வஞ்சிப்பது ஆகியனவற்றைக் கண்டித்து நாம்தமிழர் கட்சி சார்பில் தன்னிச்சையாக போராட்டம் செய்வோம். ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்விக் கொள்கை,தொகுதி சீரமைப்பு இதனால் நாடு வளர்ந்துவிடும் என்பது எல்லாம் வேடிக்கையாக உள்ளது. தேர்தலில் சீர்திருத்தம் செய்வது அதிகமான வேலையாக உள்ளது.

இந்தியா, நைஜீரியா இந்த இரு நாடுகள் தான் எலக்ட்ரானிக் வாக்கு பதிவுமுறை வைத்துள்ளது. இந்த இரு நாடுகளுமே ஊழலில் மோசமான நாடுகள். மைக்ரோ எலக்ட்ரானிக் சிப்பை சீனா தான் தயாரித்தது. ஆனால் அந்த நாடே பயன்படுத்தவில்லை. அமெரிக்காவும் எலக்ட்ரானிக் முறையை பயன்படுத்துவதில்லை. இதனால், எலக்ட்ரானிக் வாக்கு பதிவுமுறையை ஒழித்துவிட்டு வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்க வேண்டும். ஒரு நபர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு பதவியில் உள்ளவர் மற்றொரு பதவிக்கு போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். இடைத்தேர்தல் முறையை நீக்க வேண்டும். இரண்டாவதாக வந்தவரை வெற்றி பெற்றதாக அறிவித்து மீதமுள்ள காலங்களில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இது போன்ற மாற்றங்கள் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் எந்த தேசிய கட்சிகளாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள வளங்களை சுரண்டிவிட்டு நிதி தர மறுக்கின்றனர். உரிமை எனும் வரும் போது முற்றிலும் மறுத்து விடுகின்றனர்.

பேரிடர்களுக்கு நிதி வழங்கவில்லை. தமிழகம்- கர்நாடகா இரு மாநிலங்களுக்கும் இடையே நதிநீர் உரிமை பெற்றுக் கொடுப்பதிலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த பிரச்சினை இருந்தால் தான் அவர்களால் அரசியல் செய்ய முடிகிறது. பிஹார் மற்றும் ஆந்திராவில் பாஜகவுக்கு ஆதரவு தேவைப்படுவதால், அந்த மாநிலங்களுக்கு தாராளமாக நிதி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் நிதி தரமறுக்கிறது.

இதனை மனதில் வைத்துக்கொண்டு தேர்தலில் தமிழக மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது. ஆனால் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. தமிழகத்துக்கு நிதி வழங்கவில்லை என புலம்புவதை விட வரி செலுத்துமாட்டோம் என கூற வேண்டும் என சீமான் தெரிவித்தார்.

சீமான் சவால் “நாதகவை தாண்டி தமிழகத்தில்இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்…!”

“தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்!” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம்,  ஆற்காடு அடுத்த திமிரி தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பு மறுசீராய்வு மற்றும் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, மத்திய அரசுக்கு மற்ற மாநிலங்களை விட அதிகளவில் நாம் வரி செலுத்துகிறோம். ஆனாலும் நமக்கு போதிய நிதியை அவர்கள் அளிக்கவில்லை என்று திமுக ஆட்சியாளர்கள் புலம்புகின்றனர். இதற்கு ஏன் அவர்களுக்கு ஆட்சி, அதிகாரம். பிஹார் மாநிலத்தால் பெற முடிகிறது. உங்களால் முடியவில்லையா? நாதக ஒரு ஜனநாயக கட்சி. இதில், பொறுப்பாளர்கள் கொள்கை, கோட்பாடுக்கு உடன்பட்டு வருகிறார்கள். பின்னர், முரண்பாடு காரணமாக வெளியேறுகிறார்கள். இது கட்சி பிரச்சினை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் இந்தி மொழியை வலுகட்டாயமாக திணிக்கும் போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும். மொழி பிரச்சினைக்காக பல்வேறு போராட்டகளை சந்தித்துள்ளது தமிழகம். மற்ற மாநிலங்கள் ஏற்கிறது என்றால், நாங்களும் ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்ற கட்சிகளை விடுங்கள். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்.

பாஜகவுடன் சேர்ந்து என் மொழியை அழித்தற்கு, திராவிட கட்சிகளுக்கும் பெறும் பங்கு உண்டு. பெரியார் குறித்து நான் அவதூறாக பேசவில்லை. அவர் பேசியதை எடுத்து பேசுகிறேன். அவரை பற்றி இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் என் வீட்டின் மீது குண்டு போடுகிறார்கள். பேச ஆரம்பித்தால் என்னவாகும்? நான் இருக்கும்போது போடுங்கள், பார்ப்போம்.

2026-ம் ஆண்டு தேர்தல் பணிகளை ஏற்கெனவே தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். அதுகுறித்த விவரங்களை தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம். தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அதை மக்கள் சொல்லவில்லை. இவர்கள் மக்கள் ஆட்சியை துளியும் செய்யவில்லை. கட்சி, தேர்தல் அரசியல் செய்கிறார்கள். செயல், சேவை ஆட்சியை இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை” என சீமான் தெரிவித்தார்

நாஞ்சில் சம்பத்: சீமான் சாக்கடை ஜென்மம்.. பைத்தியத்தை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, சாக்கடை ஜென்மம் என்றும் பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும் திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

அப்போது, இச்சை வந்தால் தாய், மகளுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் பேசினார். அப்போதே சமூக வலைதளத்தில், தாம் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என பதிவிட்டிருந்தேன்.

தந்தை பெரியாரை இழிவாகப் பேசும் சீமானை ஏன் திராவிட மாடல் அரசு கைது செய்யாமல் இருக்கிறது என என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்று பதில் தந்தேன். அத்தகைய பைத்தியத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை உறவினர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சீமான் பேசுவதைப் போல தடித்தனமான, தாறுமாறான விமர்சனங்களை பெரியாரின் சீடர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்; எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

பெரியாரை கொச்சைப்படுத்துவதற்கு பாஜக ஒரு வேலைத் திட்டம் வைத்துள்ளது. அந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குறைந்த கூலிக்கான நபர்தான் சீமான். சீமானுக்கு மேடை போட்டுக் கொடுத்த பாவிகள் இருவர்; ஒருவர் கோவை ராமகிருட்டிணன் மற்றொருவர் கொளத்தூர் மணி. விடுதலைப் புலிகளிடமே மதுவை வாங்கி வர சொன்ன சீமான், தன்னையே விற்பனை செய்யக் கூடியவர்தான்; ஆனால் தமிழா! நீ உன்னை விற்காதே என மேடைகளில் பேசுவார் சீமான்.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை? ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் தரவில்லை? எங்கள் தருகிற நிதியில் எங்களுக்கான பங்கை ஏன் தரவில்லை? தேர்தல் வருகிறது என்பதற்காக பீகாருக்கு சலுகை காட்டும் மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கிறீர்கள்? திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது; திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என நாஞ்சில் சம்பத் பேசினார்.

சீமான் 356-வது பிரிவின் கீழ் ஆட்சியை கலைத்தால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது..!

தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மத்தியில் ஆளும் கட்சிகள், அரசுகள் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்போம் என பூச்சாண்டி காட்டுவார்கள். இந்த பூச்சாண்டிக்குதான் நாம் பயப்படக் கூடாது.

மக்களுக்காக நின்றால் திமுக வெல்லும் 356-வது பிரிவின் கீழ் திமுக ஆட்சியைக் கலைத்துவிடு.. மக்களுக்காக சண்டை போட்டு.. நிதியை தர முடியாதுன்னு மத்திய அரசு சொன்னதால் நாம் நம் வரி வருவாயை தர முடியாது என சொன்னோம்.. ஆட்சியை கலைத்தார்கள்.. சரி மீண்டும் சட்டசபை தேர்தல் வரும்தானே.. அப்போது யார் வெல்வார்கள்? மக்களுக்காக நிற்கிற கட்சி எதுவோ வெல்லும். இந்த இடத்தில்தான் நாம் சமரசம் செய்யக் கூடாது.

பறிபோன உரிமைகள் ஆட்சி கலைப்பு அஞ்சியதால்தான் காவிரி நதிநீர் உரிமை போனது; கச்சத்தீவு பறி போனது; மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி, பொதுப் பட்டியலுக்குப் போனது. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? மத்திய அரசு என்னதான் செய்ய முடியும்? ஆட்சியைக் கலைத்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? சொல்லுங்க ஆட்சிக்கு மீண்டும் வர முடியாதா? இப்படித்தான் 2009-ல் தமிழினத்தை கொலை செய்த போது பதவிக்கு பயந்து உட்கார்ந்திருந்தோம்.. சிங்களவன் லட்சக்கணக்கில் ஈழத் தமிழரை கொன்று குவித்தான்.

ஆட்சியை கலைத்தால் திமுகதான் வெல்லும் மத்திய அரசை போய்யா.. என்று சொல்லிவிட்டு ஆட்சியை இழந்து மீண்டும் தேர்தலை சந்தித்தால் மக்கள் மறுபடியும் உங்களைத்தான் தேர்வு செய்வான். அப்படி செய்யாமல் இருக்க மானம் கெட்ட, உணர்வு கெட்ட, அறிவு கெட்டவன் தமிழன் அல்ல. தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும்.

யார் பிரிவினைவாதி? தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதே பாஜகவும் காங்கிரஸும்தான். இது எங்கள் நிலம். தமிழர் நிலம். நாங்கள் யாருக்கு தேசத்துரோகிகள்? இது என்ன இந்தி பேசுகிறவன் நாடா? எவனை கேட்டு இந்தி திணிப்பை நடத்துகிறீர்கள்? பல மொழி பேசுகிற மக்களின் தேசம் இது.. ஒரு 4 மாநிலத்தில் பேசப்படுகிறதா இந்தி மொழி? என் வரியை வைத்துக் கொண்டு தரவே முடியாது என்பது பிரிவினையை தூண்டுகிறதா? தேசப்பற்றை உருவாக்குகிறதா? யார் பிரிவினையை தூண்டுவது? இந்தியாவின் அதிக வருவாய் தருவதில் 2-வது பெரிய மாநிலம் என் தமிழ்நாடு. என் நிதியை வைத்துக் கொண்டு தர மறுக்கும் நீதிதான் தேச ஒருமைப்பாட்டை சிதைப்பது? என சீமான் தெரிவித்தார்.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம்: ஆறு ஏழு முறை கருக்கலைப்பு.. விஜயலட்சுமி விவகாரம் சீமான்…!

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமான் தாக்கல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த அந்த உத்தரவில், வழக்கை ஆராய்ந்த போது நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை, குடும்ப பிரச்சினை திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளது தெரிய வருவதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சட்டப்படி அனைவரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியிருந்தார் என்றும் அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆறு ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், விஜயலட்சுமியிடம் பெருந்தொகையை பெற்றிருப்பதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளதாக உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பிதாகவும் விஜயலட்சுமி கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான், புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது எனத் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜய லட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள், அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது எனக் கூறிய நீதிபதி, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளார்.