R.B. உதயகுமார்: சேகர்பாபு அதிமுகவில் கற்றதை திமுகவில் செயல்படுத்துகிறார் ..!

புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தபோது 1008 சாமானிய மக்களுக்கு திருக்கோயில் கல்யாணம் நடத்தப்பட்டது .அதிமுகவில் கற்றுக்கொண்டு திமுகவிற்கு போய் அமைச்சர் சேகர்பாபு செய்கிறார் என R.B. உதயகுமார் தெரிவித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக் சார்பில் கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள கோபிநாயக்கன்பட்டியில் பெண்களை ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் ஆர்பி உதயகுமார் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய R.B. உதயகுமார்,” திருமங்கலம் நகராட்சியில் மட்டும் 300 கோடி அளவில் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

ஆனால் சிலர் என் மீது பழியை போட்டு எதுவும் செய்யவில்லை என்று வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்கள். இதே பதட்டம் அவர்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் உள்ளது. சட்டமன்றத்திலே ஆளும் கட்சி அதிமுக என்று ஒப்புதல் வழக்குமூலமே கொடுத்துவிட்டு பின்பு பதட்டமாக இருந்தது என்று பேசிட்டேன் என்று கூறினார். சட்டமன்றத்தில் கேள்வி இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் இதே திமுக எதிர் கட்சியாக இருந்தபோது வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் திமுக ஆட்சியில் தான் திருக்கோயிலில் கல்யாணம் நடைபெற்றது என்று பொய்யான தகவலை தந்தார். இவர் அதிமுகவில் இருக்கும் பொழுது புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தார். அப்போது 1008 சாமானிய மக்களுக்கு திருக்கோயில் கல்யாணம் நடத்தப்பட்டது .இதை இங்கே கற்றுக்கொண்டு அங்கே போய் இதை செய்துள்ளார்.

மேலும் திருக்கோயில் அன்னதானத் திட்டத்தை திமுக செய்ததாக பேசுகிறார். அம்மா தான் முதன் முதலில் ஆலயங்கள் தோறும் அன்னதானத் திட்டத்தை கொண்டு வந்தார். சேகர்பாபு பொய்யை தவிர வேறு ஏதும் தெரியாது. அது மட்டுமல்ல கருணாநிதி சமாதியின் மீது ஆண்டாள் கோபுரத்தை வைத்துள்ளார். இதன் மூலம் அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது இப்படி செய்த சேகர் பாபு பதவி விட்டு நீக்க வேண்டும். இன்றைக்கு திமுகவின் ஒரிஜினல் வித்துக்கள் எல்லாம் அமைதியாக உள்ளனர்.

ஆனால் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வயிற்றுப் பிழப்புக்காக வேஷ்டி மாற்றிக் கட்டிக் கொண்ட சிலர் திமுகவை தாங்கி பிடிப்பது போல பேசுகிறார்கள். அதேபோன்று சட்டமன்ற 72விதியின் படி அமைச்சர்கள் பொன்முடி, நேரு, செந்தில் பாலாஜி ஆகியோரை பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்த போது அதை ஏற்கக் கூடாது என்று முதலமைச்சர் சபாநாயகரிடம் கண் ஜாடை காட்டுகிறார்.

இன்றைக்கு பொன்முடியை நீதிமன்றமே கடுமையாக கண்டித்து உள்ளது. இவரின் மீது தாமாக வழக்கு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டாம் அவரை பதவியில் விட்டு நீக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். இன்றைக்கு பெண்களை ஆபாசமாக பேசிய திமுகவிற்கு 2026 தேர்தலில் நீங்கள் சரியான பாடத்தை பெண்கள் புகட்ட வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண்கள் ஓட்டு திமுகவுக்கு விழக் கூடாது. இதன் மூலம் திமுகவிற்கு பூஜ்ஜியத்தையும், அதிமுகவிற்கு ராஜ்ஜியத்தையும் கொடுக்க வேண்டும் என R.B. உதயகுமார் தெரிவித்தார்.

அதிமுக IT விங்: “சைதை துரைசாமி ஒரு கெஸ்ட் ரோல் அரசியல்வாதி ”

பூத் கமிட்டி வரை கழகப்பணிகளில் தொண்டர்கள் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்தி வருவதை சைதை துரைசாமி போன்ற Guest Role அரசியல்வாதிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என அதிமுக IT ஐடி விங் சார்பில் காட்டமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறி வரும் நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று சைதை துரைசாமி வலியுறுத்தினார். சைதை துரைசாமியின் பேச்சால் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக ஐடி விங் சார்பில் சைதை துரைசாமிக்கு பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக IT விங் தனது எக்ஸ் பக்கத்தில், சும்மா இருந்த சங்கொன்று, தன்னைத் தானே ஊதிக் கெடுத்துக்கொண்டு இருக்கிறது! அஇஅதிமுக-வில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தொண்டர்கள் தான். “நான் மட்டும் தான் எம்ஜிஆர் தொண்டன்” என்று சொல்லிக்கொண்டு பாடம் எடுக்கும் இவர், என்றைக்காவது இந்த இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா?

கழகப்பணி எனும் கடலில் எதிர்நீச்சல் அடித்து தேர்தல் என்னும் கரை சேர்பவன் தான் அண்ணா திமுக தொண்டன். கழகப்பணி பக்கமே தலை வைக்காமல், தேர்தல் மேகங்கள் சூழும் சமயத்தில் “நானும் அரசியலில் இருக்கிறேன்” என்று தன் இருப்பைக் காட்டிக்கொள்ள மட்டுமே உள்ள திரு. சைதை துரைசாமி போன்றோருக்கு, இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி என்ன தெரியும்?

இன்றும் பூத் கமிட்டி வரை கழகப்பணிகளில் தொண்டர்கள் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்தி வருவதை திரு. சைதை துரைசாமி போன்ற Guest Role அரசியல்வாதிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இயக்கத்தால் வந்தது தான் தன் வாழ்வு என்பதை உணர்ந்திருப்பார் எனில், இப்படி அவர் பேசமாட்டார். “அஇஅதிமுக-வில் இருந்திருக்காவிட்டால் தான் யார்?” என்ற கேள்வியை திரு. சைதை துரைசாமி கண்ணாடியைப் பார்த்து கேட்டுக்கொள்ளட்டும்.

இந்த இயக்கத்தை அழிக்க நினைத்த, நம் இதயதெய்வங்கள் இன்றும் குடியிருக்கும் கோயிலாக நாம் கருதும் நம் தலைமைக் கழகத்தை சூறையாடிய துரோகியின் பெயரை அஇஅதிமுக பெயர் கொண்ட, இரட்டை இலை சின்னம் கொண்ட Letter Head-ல் குறிப்பிடதற்கே திரு. சைதை துரைசாமி வெட்கப்பட வேண்டும். இப்போதும் சரி, எப்போதும் சரி- இந்த இயக்கத்தின் பாதை நேரானது! நம் இலக்கு முடிவானது! எடப்பாடி பழனிசாமி தலைமையில், அவர்கள் தலைமையில், மாண்புமிகு அம்மாவின் நூற்றாண்டு கனவு நோக்கி, தமிழ்நாட்டு நலனுக்கான தனிப்பெரும் இயக்கமாக அதிமுக என்றும் பயணிக்கும்!” என IT விங் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

எடப்பாடியின் சதுரங்க வேட்டை ஆரம்பம்

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முன்னாள் அமைச்சர்களான KP முனுசாமி, SP வேலுமணி, CV சண்முகம், M தம்பிதுரை MP ஆகியோரின் டெல்லி பயணம் பலரது புருவங்களை உயர்த்த வைத்தது. மேலும் எவ்வித முன்னறிவிப்புமின்றி எடப்பாடி பழனிசாமி அணியை சென்னை விமான நிலையத்தில் பார்த்த அடுத்த நொடியில் இருந்தே தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது.

இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி அணி இறங்கியதில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு நகர்வுகளையும் கேமராக்கள் வட்டமிட தொடங்கியது. ஆகையால், இந்த கேமராவின் மூன்றாவது கண்களுக்கு பயந்து சில கார்கள் மாறி மாறி செல்லவேண்டுய சூழ்நிலை ஏற்படாது. எப்படியோ ஒரு வழியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது மட்டுமின்றி  எடப்பாடி பழனிச்சாமி மட்டும் அமித் ஷாவை தனியே 50 நிமிடம் சந்தித்து பேசியது தமிழக அரசியல் பேசுபொருளாக மாறியது.

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அணி அமித் ஷாவை நடத்திய சந்திப்பை வைத்து அதிமுகவைவும், எடப்பாடி பழனிச்சாமியையும் சமூக வலைத்தளங்களில் பங்கமாய் கலாய்க்க தொடங்கினர். தமிழக சட்டசபையிலும் இது எதிரொலிக்க தொடங்கியது. இந்நிலையில்,  தமிழக சட்டசபை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சிறப்பு திட்டங்கள் மீதான விவாதத்தின் போது, கடந்த 2022 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை கூட்டம் முடிவடைந்து, அமைச்சர்கள், MLA -க்கள் உள்ளிட்டோரை அழைத்து செல்ல தலைமை செயலக வளாகத்தில் கார்கள் தயாராக இருந்தபோது ஆங்கில தொலைக்காட்சி நிரூபர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்விகள் கேட்க அவர்களுக்கு பதில் அளிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக சென்று அங்கு நின்ற சாம்பல் நிற காரில் ஏற கதவை திறக்க அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த காவலர் ஒருவர், சார் இது உங்கள் கார் இல்லை என சொன்னது சுதாரித்துக் கொண்டு பின்னர் அதற்கு முன்னால் நின்றிருந்த அதே நிற காரில் ஏறி எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.

அதன் பின்புதான் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்ற கார், உதயநிதி ஸ்டாலினின் கார் என தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து அன்று தமிழக சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி எனது காரில் தவறுதலாக ஏற சென்றார். எனது காரை தாராளமாக எடுத்துச் செல்லட்டும், ஆனால் ரூட் மாறி கமலாலயத்திற்கு செல்லாமல் இருந்தால் சரி உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ. பன்னீர்செல்வம், நாங்கள் ரூட் மாறி செல்ல மாட்டோம் என தெரிவித்தார். அந்த நிகழ்வை இன்று சுட்டிக்காட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின் , அன்று ரூட் மாறாதுனு சொன்னீங்களே இன்று 3 கார்களில் மாறி மாறி அமித் ஷாவை பார்க்க எடப்பாடி பழனிசாமி சென்றாரே என விமர்சனம் செய்த அடுத்த நொடியே தமிழக சட்டமன்றமே சிரிப்பொலியால் அதிர்ந்து போனது.

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.. என்ற எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ரிக்‌ஷாக்காரன் படத்தில் வரும் பாடல் வரிகளைப் போல டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,அதிமுக சார்பில், புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார். அந்த அலுவலகத்தைப் பார்வையிடவே சென்றதாக எடப்பாடி பழனிசாமி ஒற்றை வரியில் பதிலளித்தார்.

மேலும், அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதில் பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி அமைப்பார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஒழிப்பதே எனது இலக்கு என தெரிவித்தார்.

1954-ஆம் ஆண்டில் மே 12 -ந் தேதி சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகிலுள்ள சிலுவம்பாளையம் எனும் ஊரில்  ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் கருப்ப கவுண்டர், தவசியம்மாள் தம்பதியினரின் இரண்டாவது மகனாக பழனிசாமி பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்து, ஈரோடு வாசவி கல்லூரியில் விலங்கியல் இளமறிவியல் படிப்பை முடித்தார். கல்லூரியில் படிப்பு முடித்த பிறகு, வெல்ல கமிஷன் வியாபாரத்தில் பழனிசாமி ஈடுபட்டார். ஆனால், அரசியல் ஆர்வம் அவரை உந்தித் தள்ளிக்கொண்டே இருக்க எம்.ஜி.ஆரின் மீதுள்ள தீவிர பற்றின் காரணமாக  முன்னாள் செங்கோட்டையன் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவிருக்கு அழைத்து வந்தார்.

1974-ஆம் ஆண்டு கோணேரிப்பட்டி கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பழனிசாமி 1983-ஆம் ஆண்டு ஒன்றிய இணை செயலாளரானார். 1987 -ல் MGR  மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. இத்தனை தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான சேவல் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு பழனிசாமி கிடைத்தது. அதில் வெற்றிபெற்று சட்டசபைக்குள் நுழைந்த சாதாரண பழனிசாமி அன்று முதல் எடப்பாடி பழனிசாமி மாறினார்.

அதன்பின்னர் 1990-ஆம் ஆண்டில் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் ஆனார். மேலும், 1991-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக சட்டசபைக்கு இரண்டாவது முறையாக நுழைந்தார். அதனை தொடர்ந்து, 1991-ல் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் , 1993-ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் , 2001-ல் தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவர் , 2006-ல் கழகக் கொள்கைபரப்புச் செயலாளர் என பல்வேறு கட்சி பதவிகளுக்கு படிப்படியாக உயர்ந்தார்.

ஆனால் 1996 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறையும் தோல்வி அடைந்தார்.  மேலும் 1999-ஆம் ஆண்டு, 2004-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வி என வெற்றியையும், தோல்வியையும் சரிசமமாக சந்தித்தார். தோல்விகளால் துவழாத எடப்பாடி பழனிசாமி முன்னைவிட வேகமாக கட்சிப்பணியில் ஈடுபட்டார்.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதே எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மூன்றாவது முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் 2014-ஆம் ஆண்டு கழக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினராகவும், தலைமை நிலைய செயலாளரானார். மேலும் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், அதிமுகவின் சக்திவாய்ந்த குழுவாகக் கருதப்பட்ட நால்வர் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடம்பெற்றது மட்டுமின்றி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் மாறினார்.

ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு வி.கே. சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 3 பேர் மீதுள்ள சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இவர்களை ஏதோதோ செய்ய தூண்டியது. அதன் விளைவு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி வி.கே. சசிகலா அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வி.கே. சசிகலா அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் வி. கே. சசிகலா சிறை செல்ல கூடும் அதனை தொடர்ந்து மீண்டும் முதலமைச்சர் பதவி நமக்கு கிடைக்கும் என்ற அரசியல் கூட்டல் கழித்தல் கணக்குகளை தற்காலிக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டார். இதனைத் தொடர்ந்து வி. கே. சசிகலா சிறைக்கு செல்வத்திற்குள் முதலமைச்சராக பதவியில் அமர்த்தும் பணி தீவிரம் அடைந்தபோது 2017 பிப்ரவரி 5-ந் தேதி ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். அன்றே அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்க ஆளுநர் மாளிகை சென்றபோது சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்கும் நிலையில் வி. கே. சசிகலா அப்பதவியை ஏற்க முடியாத நிலை நேரிட்டது.

இத்தனை தொடர்ந்து வி. கே. சசிகலா சிறைக்கு செய்வதற்கு முன் ஓ. பன்னீர்செல்வம் தவிர்த்து புதிய முதலமைச்சர் தேர்வு செய்யும் பணியில் இறங்க வி. கே. சசிகலா பார்வை கொங்கு மண்டலம் பக்கம் திரும்பியது. இதனைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்த ஓ. பன்னீர்செல்வம் 2017 பிப்ரவரி 7-ந் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் தான் கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை அளித்ததாக தெரிவித்தார். இந்த செய்தியை கேட்டு கோபமடைந்த வி. கே. சசிகலா அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நீக்கப்பட்டதாக அறிவித்தார்.

மேலும் வி. கே. சசிகலா சிறைக்கு செய்வதற்கு முன் அதிமுகவை வழிநடத்தத் தன் அக்கா மகன் டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகவும் நியமனம் செய்த செய்தி ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு அமைச்சர் உள்ளிட்ட 07 சட்டமன்ற உறுப்பினர்கள், 08 மக்களவை உறுப்பினர்கள், 02 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 10 பேருடன் தர்மயுத்தம் நடத்தினார். அதனால், வி. கே. சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் என இரு அணிகளாக அதிமுக மீண்டும் பிளவுபட்டது.

இதுமட்டுமின்றி ஓ. பன்னீர்செல்வம் அணி மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த  தான் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் இறங்கினார். 234 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக 117 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே பெருபான்மையை நிரூபிக்க முடியும் என்ற நிலையில் கர்நாடக பாணியில் அதிமுகவின் அனைத்து சட்டமனற உறுப்பினர்களையும் கூவத்தூர் விடுதியில் தங்க வைத்தனர். அதாவது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏறுவதை தடுத்து நிறுத்த எவ்வளவோ சதித்திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையில் இவற்றை எல்லாவற்றையும் கடந்து 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி 30 அமைச்சர்களுடன்  தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார்.

எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நாள் முதல் அதிமுக அரசை கவிழ்க்க கட்சிக்குள்ளேயேயும் வெளியேயும் பல உள்ளடி வேலைகள் நடந்தாலும் அத்தனை சதித்திட்டங்களையும் தனது ராஜ தந்திரத்தினால் வீழ்த்தினார். புரட்சி தலைவி ஜெயலலிதா சொல்வதைப்போல அதிமுக என்னும் எஃகு கோட்டை இன்னும் பலநூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுகவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அனைத்து தடைக்கற்களை எடப்பாடி பழனிசாமி தகர்த்தெறிய தொடங்கினார்.

இதன் ஒரு முயற்சியாக 2017 செப்டம்பரில் கூடிய அதிமுக பொதுக்குழுவில், வி.கே. சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் டிடிவி தினகரன் தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட பிளவால் டிடிவி தினகரன் தரப்பு 19 பேரை தகுதி நீக்கம் செய்யப்போவதாக விளக்கம் கேட்டு சபாநாயகர் பி. தனபால் கடிதம் அனுப்பினார். அதில் எஸ்.டி.கே. ஜக்கையன் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரைத் தவிர்த்து 18 பேரையும் சபாநாயகர் பி. தனபால் தகுதி நீக்கம் செய்தார். டிடிவி தினகரனை சமாளிக்க ஒரு புறம் வெளியில் இருந்த ஓ. பன்னீர்செல்வம் அவர்களை உள்ளே கொண்டுவந்து ‘இரட்டைத் தலைமை’ முறை கொண்டு வந்தார்.

புரட்சி தலைவி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி இதோ இப்ப முடிவிற்கு வரப்போகிறது அப்ப வரப்போகிறது என்று காத்திருந்த விரோதிகள் கண்களில் மண்ணை தூவி மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கமாக இருந்து எடப்பாடி பழனிசாமியின் அரசியல் தந்திரத்தினால் கடைசி வரை அதிமுகவை அசைக்க முடியாமல் போனது. அதன்பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆட்சியை பறிகொடுத்து.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வந்ததால் இனிமேல் பாஜகவுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முடிவெடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்தது . மேலும் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பாஜகாவுடன் இணக்கமாக இருந்துகொண்டு இடையிடையே குடைச்சல்களை கொடுத்துக் கொண்டே இருந்தார். இந்த குடைச்சல்கலிருந்து அதிமுகவை மீட்டெடுக்க இரட்டைத் தலைமைக்கு முடிவு கட்டி எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால், எதைப்பற்றியும் கவலைபடாமல் அடுத்தடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் தனித்து போட்டியிட்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி சந்தித்தது. அதே போல பாஜக மற்றும் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணியக்கும் தோல்விமட்டுமே மிச்சமானது. மேலும் தனித்து போட்டியிட்டால் திமுக கூட்டணி வீழ்த்த முடியாது எனவே பிரிந்து கிடைக்கும் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்ற வார்த்தையை பாஜக மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் வாயிலிருந்து வரவைத்தார்.

மேலும், S.P. வேலுமணி, செங்கோட்டையனுடன் விரிசல் என்ற மாயையை உருவாக்கியது மட்டுமல்லாமல் பாஜகவின் மேலிடமும் அனைவரும் ஒன்றிணைந்தால் 2026- ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பில் அண்ணாமலையை தமிழக பாஜகவிலிருந்து நீக்கினால் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வர தயார் என சமயம் பார்த்து மிக கச்சிதமாக எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தினார்.

எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து திரும்பிய அடுத்த நாளே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி விரைந்தார். அதற்கு முன்பு வரை தாம் தூம் என்று எகிறி அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த அண்ணாமலையின் குரல் வலையை எடப்பாடியின் சதுரங்க வேட்டையில் சிக்கி சின்னாபின்னமாகியது. அதாவது MGR மற்றும் ஜெயலலிதா பாணியில் திமுக எதிர்ப்பு ஒன்றே பிரதான கொள்கையாக கொண்டு 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக விழ்த்துவதே குறிக்கோள் என்ற ஒற்றை மந்திரத்தில் நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும் போது அன்று சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது… என்ற எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ரிக்‌ஷாக்காரன் படத்தில் வரும் பாடல் வரிகளைப் போல எடப்பாடி பழனிசாமி தனது சதுரங்க வேட்டை ஆரம்பித்துள்ளார்.

திருமாவளவன் விமர்சனம்: வார்டு எலக்ஷனில் கூட நிற்காத தவெக.. அதிமுகவுக்கு சவால் விடுக்கிறது..!

வார்டு எலக்ஷனில் கூட நிற்காத தவெக 62 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு சவால் விடுகிறது என தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்றைய முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதலமைச்சரை, மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்துப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், கதறல் சத்தமெல்லாம் எப்படியிருக்கு? இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்ற சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதற்கு, தயாராக வேண்டிய அவசியத்தை, நீங்கள் அனைவருமே நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ்வது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னராட்சிப் போல நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?

மாநாடு தொடங்கி, நான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் நிகழ்ச்சி, தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, அன்றைய தினம் நகருக்குள் எந்த திருமண மண்டபமும், அரங்கமும் நமக்கு கொடுத்துவிடக் கூடாது என்று, மாமல்லபுரம் சென்று அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஏன் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் வரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள் வந்தன? அத்தனை தடைகளையும் தாண்டி தவெக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.அது தொடர்ந்து நடக்கும்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் அதைக்காட்ட வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என்று அடிக்கடி அறிக்கைகள் கொடுத்துவிட்டு, இங்கு நீங்கள் செய்யும் ஆட்சி மட்டும் என்னவாம்? அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதானே.

ஒரு கட்சித் தலைவனாக எனது கட்சித் தொண்டர்களையும், என் நாட்டு மக்களையும் சந்திப்பதற்கும், பேசுவதற்கும் தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்றால் சென்றே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்.நேற்று வந்தவன் எல்லாம் முதல்வராக கனவு காண்கிறேன் என்று கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன், மற்ற எந்த கட்சிகளுக்கும் இல்லாத தடைகளை விதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றைத் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது மன உளைச்சலையும், மன வேதனையையும் தருகிறது. சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு எல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரி கவர்மென்ட்தான் காரணம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும்.

மேலும், தொடர்ந்து பேசுகையில், இந்த பொதுக்குழு வழியாக, தமிழக மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கப் போகிறோம்.தவெக ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சி. தவெக தலைமையில் அருதிப்பெரும்பான்மை பெற்ற ஆட்சி.அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சி. அப்படியாக இந்த ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை முறையாக கண்டிப்பாக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவத்தில் கவனம் செலுத்துவோம். அதுவும், அனைவருக்கும் எளிதாக, சமமாக கிடைப்பதை உறுதி செய்வதுதான் தவெகவின் இலக்கு. 2026-ல் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என விஜய் பேசியிருந்தார்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் நடந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். அப்போது, தவெக தலைவர் விஜய்யின் பேச்சை கடுமைாக விமர்சனம் செய்தது மட்டுமின்றி தவெகவை கிண்டல் செய்து பேசினார். ஏதோ தனியார் நிறுவனம் சர்வே நடத்தினார்களாம். அதில் 2-ஆம் இடம் வந்து விட்டார்களாம். அடுத்து அவர் தான் ஆட்சியை பிடிக்க போகிறாராம். பாவம் அவரை உசுப்பிவிடுறாங்க. வேண்டும் என்றே. அவருக்கு ஆசையை தூண்டிவிட்டு உள்ளே வந்து களமிறங்கி விளையாடுங்க என்று சொல்கின்றனர்.

2026 சட்டசபை தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி. ஒரு பக்கம் திமுக. இன்னொரு பக்கம் தவெக. அதில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நீங்கள் போட்டியில்லை. உங்களை விட நாங்கள் தான் பெரிய சக்தி என்று கூறுகிறார். போட்டி என்பது திமுகவுடன் இப்போது கிடையாது. 2-வது இடத்தில் யார் என்பது தான் விஜய்க்கும், எடப்பாடிக்கும் போட்டி. 2-வது இடம் யாருக்கு என்பதில் தான் அண்ணாமலைக்கும், விஜய்க்கும் போட்டி. இந்த தமிழக அரசியல் களத்தில் 2-வது இடம் பிடிப்பது யார்? என்பதில் சண்டை நடக்கிறது. அந்த சண்டை எடப்பாடி பழனிச்சாமிக்கும், விஜய்க்கும் இடையே நடக்கிறது. திமுக கூட்டணியுடன் அவர்கள் மோத முடியாது. அதனை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். திமுக, தவெக இடையே தான் போட்டி என்று அவர் யாருக்கு பதில் சொல்கிறார்.

அது திமுகவுக்கு சொல்கிற பதிலா? கிடையாது. எங்கள் 2 பேருக்கும் தான் போட்டி என்று ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவுக்கு விடுக்கிற சவால்.சி வோட்டர் சர்வே அதிமுகவுக்கு ஒரு நெருக்கடியை தருகிறார். நீயா? நானா? 2-வது இடம். அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தான் முதன்மையாக இருக்கிறது. அதனை எதிர்க்கும் வலு அதிமுக, பாஜகவுக்கு இல்லை. அதனை எதிர்க்கும் வலு எங்களுக்கு தான் இருக்கிறது என்று வார்டு எலக்ஷனில் கூட நிற்காத கட்சி 62 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு சவால் விடுகிறது. நீங்கள் 2 பேரும் சண்டை போட்டு கொள்ளுங்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மை தான். ஆனால் ஒரு உண்மையை மறந்து விடக்கூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து உருவாக்கிய மதசார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்” என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் அப்படி உசுப்பேத்த பேசியிருப்பார்..!

வரும் சட்டசபை தேர்தலில் தவெகவிற்கும், திமுகவிற்கும் நேரடி போட்டி என்பது அவரது சொந்த கருத்து. கட்சி தலைவர் என்ற முறையில் கட்சியின் வளர்ச்சிக்காக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் ஏதேனும் பேசியிருப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் நீர்மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்திசிரிக்கிறது. இதுசம்பந்தமாக சட்டமன்றத்தில் பேச எதிர்கட்சிகளுக்கு அனுமதிக்காமல் வெளியேற்றுகின்றனர். ஊசிலம்பட்டியில் காவலர் அடித்து கொலை செய்த சம்பவம், சிவகங்கையில் பயிற்சி மருத்துவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வர சட்டமன்றத்தில் பேச முயன்றேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டு, வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை வெளியேற்றிவிட்டனர்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் தவெகவிற்கும், திமுகவிற்கும் நேரடி போட்டி என்பது அவரது சொந்த கருத்து. கட்சி தலைவர் என்ற முறையில் கட்சியின் வளர்ச்சிக்காக தொண்டர்களை உற்சாப்படுத்த அவ்வாறு பேசுவர். தமிழகத்தில் பிரதான எதிர்கட்சி அதிமுக என்பதை மக்களே ஏற்றுக் கொண்டுள்னர். செங்கோட்டையன் டில்லி பயணம் சென்றது குறித்து எனக்கு தெரியாது. தவெக தலைவர் அதிமுகவை விமர்சித்து பேசாததற்கு காரணம், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த போது, புதிய கட்சிகள் கூட பாராட்டும் விதமாக ஆட்சி செய்தனர். அதனால் தான் அதிமுகவை யாராலும் விமர்சிக்க முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவராகவே விலகினால் நல்லது..!

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவராகவே விலகினால், அவருக்கு நல்லது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு தரப்பிலும் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டுள்ளன.

இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் நட்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் சூழல் கனிந்து வருவதாக பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மறைந்த அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைவதற்கு சாத்தியமில்லை. அவரிடம் இருந்து பிரிந்தது பிரிந்தது தான். ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு ஏனென்றால் பிரிந்தது மட்டுமல்லாமல், இந்த கட்சியை எதிரிகளுக்கு அடமானம் வைத்ததை எங்களால் ஏற்க முடியாது.

அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தை ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்தினாரோ, அப்போதே அவர் அதிமுகவில் இருக்க தகுதியற்றவராக மாறிவிட்டார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

அப்போது, தவறான பொதுக்குழுவை கூட்டி இருந்தார்கள். அதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லலாம் என்று புறப்பட்டு வந்தோம். எங்களை வழிமறித்து 8 மாவட்டச் செயலாளர்களை வைத்து தாக்கினார்கள். அதுதான் உண்மை. அதிமுக அலுவலகத்தில் நடந்தது என்ன? எங்களை தாக்கிய பின், அடியாட்களை தலைமை கழகத்திற்கு அழைத்து வந்துவிட்டு எங்கள் மீது பழிபோகிறார்கள். இது அனைத்தும் காவல் துறையினரின் பதிவுகளில் உள்ளது. அதேபோல் பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

அப்போதுதான் வெற்றிபெற முடியும் என்ற சூழல் வரும். அதனை திரும்ப திரும்ப சொல்கிறேன். அதிமுக வெல்லவில்லை ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக வெற்றிபெற கூடிய வாய்ப்புகளே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வருகிறார். ஒற்றைத் தலைமை வந்தால், அனைத்து தேர்தல்களிலும் வெல்வோம் என்று தானே என்னிடம் ஆட்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் ஒற்றைத் தலைமை வந்தபின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றிபெறவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி அவராகவே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி கொள்வதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: சாத்தியமில்லை…!பிரிந்தது பிரிந்தது தான்..!

ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைவதற்கு சாத்தியமில்லை. அவரிடம் இருந்து பிரிந்தது பிரிந்தது தான். ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு ஏனென்றால் பிரிந்தது மட்டுமல்லாமல், இந்த கட்சியை எதிரிகளுக்கு அடமானம் வைத்ததை எங்களால் ஏற்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு தரப்பிலும் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டுள்ளன.

இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் நட்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் சூழல் கனிந்து வருவதாக பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மறைந்த அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைவதற்கு சாத்தியமில்லை. அவரிடம் இருந்து பிரிந்தது பிரிந்தது தான். ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு ஏனென்றால் பிரிந்தது மட்டுமல்லாமல், இந்த கட்சியை எதிரிகளுக்கு அடமானம் வைத்ததை எங்களால் ஏற்க முடியாது.

அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தை ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்தினாரோ, அப்போதே அவர் அதிமுகவில் இருக்க தகுதியற்றவராக மாறிவிட்டார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் பலரும் இணைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் என்ன ஆளுங்கட்சியா? எங்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்தில் அமித் ஷாவிடம் பல்வேறு பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பேசி இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். அதேபோல் உருட்டல், மிரட்டல் விடுப்பதற்கு நாங்கள் என்ன ஆளுங்கட்சியாகவா இருக்கிறோம். டாஸ்மாக் ஊழல் செய்தது யார்? எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்களை மிரட்டுவதற்கு என்ன இருக்கிறது.

அதேபோல் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில்தான் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பேசுகிறோம். நாங்களாக எந்த கருத்தையும் சொல்வதில்லை. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் செய்தது யார் என்பதை கண்டுபிடியுங்கள். அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் இருக்கிறது. 11 மாதத்திற்கு முன்பு என்ன சொன்னாலும் நிலைக்காது. அதனால் கூட்டணி அமைக்கும் போது கட்டாயம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். திமுகவை தவிர்த்து வேறு கட்சியும் எதிரி கிடையாது. அதனால் தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை எங்களுடன் இணைத்து கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: திமுகவை வீழ்த்த வேண்டும்..! அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும்..!

திமுகவை வீழ்த்த வேண்டும், அதுதான் எங்களின் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத ஆட்சியான திமுகவை, தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். டெல்​லியில் மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ ஷாவை நேற்​று சந்​தித்​தது மக்கள் பிரச்சினைகளுக்காக தான். மக்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். காலையிலே இது குறித்து விளக்கம் அளித்துவிட்டேன்.

எந்த கூட்டணியாவது நிலையாக இருந்ததுண்டா? , அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் ஏற்படும். அதை எப்படி இப்போது கூற முடியும். 2019 -ஆம் ஆண்டுக்கான கூட்டணியை பிப்ரவரி மாதத்தில் தான் அறிவித்தோம். தேர்தல் வரும்போது தான் ஒத்த கருத்தோடு இருக்கும் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். இப்போது கூட்டணி இருக்கிறதா, இல்லையா என கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்.

அமித் ஷா கூறியது அவரது கட்சியின் விருப்பம். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி குறித்து முடிவு செய்யும் போது, அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து தெரிவிக்கப்படும். அது குறித்து கவலையே பட வேண்டாம். எங்களுக்கு , திமுகவை வீழ்த்த வேண்டும். அதுதான் எங்களின் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத ஆட்சியான திமுகவை, தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக – பாஜக கூட்டணியின் நோக்கம் 2026-ல் திமுகவை வீழ்த்துவது ஒன்றே ..!

நமக்கு இடையே சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நோக்கம் 2026-ல் திமுகவை வீழ்த்துவது. என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள் என பேசப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்; அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற குரல்கள் அக்கட்சியில் வலுத்து வந்தன.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவே முடியாது என திட்டவட்டமாக கூறி வந்தார். அதேநேரத்தில் பாஜகவுடனான கூட்டணி குறித்து சில மாதங்களுக்கு முன்னர் கடுமையாக எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அண்மையில், திமுகதான் எதிரி; இதர கட்சிகள் அனைத்தும் எதிரி அல்ல; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம் என கூறி இருந்தார். இதனால் அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடும் என தகவல்கள் பரவின.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி மற்றும் தம்பிதுரை உள்ளிட்டோர் நேற்று டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் தனியாகவும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் கூட்டணி தாண்டி வேறு சில விஷயங்களும் ஆலோசனை செய்யப்பட்டது. அதிலும் முக்கியமாக ஒன்று நமக்கு இடையே சில பதவிகள், சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஆனால் நம்முடைய இலக்கு ஒன்றாகவே இருக்க வேண்டும். நமது கூட்டணியின் நோக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது 2026-ல் திமுகவை வீழ்த்துவது. அதுதான் நமது நோக்கம் மற்றும் கூட்டணியின் அடிப்படையாக இருக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள். அதற்கு ஏற்றபடி கூட்டணி அமைக்க வேண்டும் என்று இதில் பேசியதாக தெரிகிறது.

எஸ்.வி.சேகர்: அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது..! இந்த முறை அதுவும் கிடைக்காது..!

அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது, இந்த முறை அதுவும் கிடைக்காது, தமிழ்நாட்டில் பாஜக வளரவே இல்லை என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். நடிகரும், முன்னாள் MLA -வும், எஸ்.வி.சேகர் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, “தமிழகத்தில் பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும், அந்த கூட்டணி மண்ணைக் கவ்வும். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலிலும் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெறும், மீண்டும் ஆட்சி அமைக்கும். போன முறையாவது அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது. இந்த முறை அதுவும் கிடைக்காது.

தமிழ்நாட்டில் பாஜக வளரவே இல்லை. அது வீக்கம் மாதிரி. பலூர் ஊதினால் பெரிதாகும், அதில் சக்தி இருக்காது. 2026-ல் பாஜக புஸ்ஸுனு போய்விடும். தமிழ்நாட்டில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அது மண்ணை கவ்வும். திமுக தலைமை கேட்டுக் கொண்டால் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இனி நான் சேரப் போவதில்லை.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “ப்ரோ.. ப்ரோ” என்று சொல்வதெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். ரசிகர்கள் பிடித்த நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வார்கள். ஆனால், அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவர் தான் தொண்டர்களுக்கு செலவு செய்ய வேண்டும். களத்துக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாடு முழுக்க சுற்றி வரவேண்டும். அப்போதுதான் அவருக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது தெரியும். இல்லையென்றால் நானும் அரசியலில் இருக்கிறேன் என சீமான் போல நிற்க வேண்டியது தான்.

நாடாளுமன்ற மறுசீரமைப்பின் போது வட மாநிலங்களுக்கு எந்த விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அதே விகிதாச்சாரப்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும். அண்ணாமலை ஒரு உளறல் பேர்வழி. அவருக்கு வாய்தான் பேசுகிறது, பேசுவது எல்லாம் பொய். கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்தபோது, அவரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அண்ணாமலை முந்திக்கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். அவரது அரசியல் தமிழ்நாட்டில் நடக்காது. அண்ணாமலை அரசியலில் பூஜ்யம். ஒன்றுமே தெரியாது” எனத் தெரிவித்தார்.