வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றிய பெண்.. தொடர்ந்து 6 நாளில் ரூ.14 லட்சம் இழந்த முதியவர்

முதியவர் ஒருவரிடம் நூதன முறையில் ஆன்லைனில் தொடர்ந்து 6 நாளில் ரூ.14 லட்சம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த சமுதாயத்தையே உலுக்கி எடுத்து உள்ளது. இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் பிரபலமான மெசேஜிங் ஆப்பை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் பல்வேறு பயனர்களை கொண்டுள்ளது.

இந்நிலையில், சமீப கலங்களாகவே சமூக ஊடகங்கள் மூலம் விதவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. காவல்துறையினரும் இதுபோன்ற தடுக்க இவ்வளவே முயற்சிகள் மேற்கொண்டாலும் சைபர் குற்றவாளிகள் தினுசு தினுசாக யோசித்தது குற்ற செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் தொடர்ந்து ஏதாவது வகையில் சிக்கி கொள்வது தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.

மகாராஷ்டிராவில்  சத்திரபதி சாம்பாஜி நகரை சேர்ந்த அந்த முதியவர் கடந்த மார்ச் 23 -ஆம் தேதி காலை குளியலறையில் குளித்துக் கொண்டு இருந்தபோது அவரது மொபைலுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்தது. அவர் அழைப்பை எடுத்தவுடன், ஒரு இளம் பெண் நிர்வாண நிலையில் அவர் முன் தோன்றினார். அந்த நேரத்தில் அந்த முதியவரும் அரை நிர்வாண நிலையில் இருந்தார். அந்தப் பெண் அந்த வீடியோ அழைப்பைப் பதிவு செய்து வைத்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து அந்த முதியவருக்கு மற்றொரு அழைப்பு வந்தது, இந்த முறை அழைத்தவரின் பெயர் ஹேமந்த் மல்ஹோத்ரா அந்த முதியவரிடம் அவரது ஆபாச வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி விட்டதாகக் கூறினார். இதன் பிறகு அழைத்த பிரமோத் ரத்தோட் என்ற மற்றொரு நபர், தன்னை ஒரு காவல் அதிகாரி என்று கூறிக் கொண்டு, முதியவருக்கு அடிக்கடி போன் செய்து, சமரசத்திற்கு உடன்படவில்லை என்றால், சிறையில் அடைப்பேன் என்று மிரட்டினார்.

முதியவரை தொடர்ந்து மிரட்டி, கொஞ்சம் கொஞ்சமாக மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரை ரூ.14 லட்சத்து 66 ஆயிரம் பணத்தை இந்த கும்பல் கரைந்துள்ளது. பணத்தை கொடுத்த பிறகும் மிரட்டல் நின்றபாடில்லை. அவர்கள் மேலும் பணம் கேட்கத் தொடங்கினர். இதனால் விரக்தியடைந்த அந்த முதியவர் இறுதியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பாட்டீல், ஹேமந்த் மல்ஹோத்ரா, பிரமோத் ரத்தோட், அரவிந்த் சிங் மற்றும் அடையாள தெரியாத 2 நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.

மனிதநேயம் இன்னும் சத்தமாக பேசியது… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..!

காஷ்மீர் வன்முறையாளர்களால் வரையறுக்கப்படவில்லை… மனிதநேயம் இன்னும் சத்தமாக பேசியது காயமடைந்த சுற்றுலாப் பயணியை மீட்க தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார் ஒரு காஷ்மீரி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக ஜம்மு – காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் இருக்கிறார்கள். மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய ஊர்.

இந்த பஹல்காம் பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள்.

இங்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அதிவேகமாக களம் இறங்கினார்கள். அப்போது திடீரென அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் காவல்துறை விரைந்து சென்று பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிலர் சமூக வலைத்தளங்களில் காஷ்மீர் குறித்தும், முஸ்லிம் மக்கள் குறித்து வெறுப்புகளை பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தான் காஷ்மீரின் நடந்த மனித நேய சம்பவங்களை பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவரை தனது தோளில் சுமந்தபடி காஷ்மீரி ஒருவர் காப்பாற்றினார். இதை பகிர்ந்த நெட்டிசன், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, மனிதநேயம் இன்னும் சத்தமாக பேசியது. காயமடைந்த சுற்றுலாப் பயணியை மீட்க தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார் ஒரு காஷ்மீரி – இதுதான் உண்மையான காஷ்மீர்.

காஷ்மீர் வன்முறையாளர்களால் வரையறுக்கப்படவில்லை.. அதேநேரம் இரக்கம், தைரியம் மற்றும் அன்பு ஆகியவற்றால் காஷ்மீர் இருக்கிறது. நாம் உண்மையில் யார் என்பதை உலகம் பார்க்கட்டும். இதுதான் இந்தியாவின் சகோதரத்துவம் என நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விஜயலட்சுமி புதிய வீடியோ: அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க..! நான் ரெடியா இருக்கேன் சீமான்..!

அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க. நான் இங்க தான் இருக்கேன் சீமான். நேர்ல வாங்க.. உங்கள நேர்ல பாத்து, என்ன பாத்தா எப்படிடா இருக்கு னு கேக்க நான் ரெடியா இருக்கேன் என விஜயலட்சுமி புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார். சென்னை வளசரவாக்கம் காவல்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திடீரென வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து, விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376-வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது” என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 வார காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்து தன்னிடம் பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கைப் பொறுத்தவரை சீமான் மீதான புகாரை எளிமையாக விட்டு விட முடியாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் இன்று காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை, வளசரவாக்கம் காவல்துறை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், இன்று சீமான் நேரில் ஆஜராகாத நிலையில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இந்நிலையில் நாளை சீமான் ஆஜராக அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.

காவல்துறையினர் சம்மன் ஒட்டிய சில மணி நேரத்தில், அதனை சீமான் ஆதரவாளர் கிழித்து எறிந்தார். இதுதொடர்பாக காவல்துறை கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. இதையடுத்து காவல்துறையினரை தாக்க முயன்றதாக சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்டார். இதனால் சீமான் வீட்டின் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் என்னை ஏமாற்றாதீங்க.. எனது பாவத்தை வாங்கி கொள்ளாதீர்கள், சீமான் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் விஜயலட்சுமி. அந்த வீடியோவில், “முதலில் என்னை யார் என்றே தெரியாது என சீமான் கூறினார். 2023-ல் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது பேசியபடி மாதம் ரூ.50,000 அனுப்பி வைத்தார். முதலில் என்னை காங்கிரஸ் அழைத்து வந்ததாகவும், பிறகு பாஜக அழைத்து வந்ததாகவும், தற்போது திமுக அழைத்து வந்ததாகவும் சீமான் கூறுகிறார்.

உங்க பொன்னான வாயால தான் என்ன பொண்டாட்டி… பொண்டாட்டி என்று அழைச்சீங்க. அப்பறம் என்கிட்ட வீடியோவும் கேட்டீங்க.. இப்போ என்ன நான் திமுக தான் என்னை அழைச்சிட்டு வந்தீங்கனு சொல்றீங்க. திமுக ஒன்னும் போன வரும் என்னிடம் வந்து மாதம் ரூ.50 ஆயிரம் கொடுக்கல. இப்போ என்னனா, அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க. நான் இங்க தான் இருக்கேன் சீமான்.

நேர்ல வாங்க.. உங்கள நேர்ல பாத்து, என்ன பாத்தா எப்படிடா இருக்கு னு கேக்க நான் ரெடியா இருக்கேன். 2 நாளைக்கு முன்னாடி கூட பேச்சுவார்த்தைக்கு ஆள் அனுப்பிட்டு, அப்போ பிரஸ் மீட்ல என்னைய பத்தி பேசிருக்கீங்க. நான் அப்படி, இப்படினு பேசிருக்கீங்க. என்னோட பாவம் சும்மா விடாது. இன்னும் என்னலாம் பண்ணப்போகுது பாருங்க. சீமான் இந்த வீடியோவை நிச்சயம் பார்க்கணும்” என விஜயலட்சுமி பேசியுள்ளார்.

சோசியல் மீடியாவில் டிரெண்டாகும் அஜித்குமார் மகன் ஆத்விக் புயலாய் பாய்ந்த வீடியோ..!

நடிகர் அஜித்குமார் மகன் ஆத்விக்கின் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நடிகர்களுக்கு பெயரும் புகழும் மிகவும் முக்கியம் கொடுப்பார். எனவே, புகழை குறைக்கும் வகையில் எந்த செயலையும் செய்வதற்கு தயங்குவார்கள். நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி, பைக் பந்தயங்களில் அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக நாடு முழுவதும் பைக்குகளில் ரெய்டு செய்து அதன் அனுபவங்களை சேகரித்து இருந்தார்.

ஆனால் சினிமாவில் இவரை நம்பி பலர் இருப்பதால், பைக் பந்தயத்தை முழுமையாக தொடர முடியாமல் போனது. மேலும் பைக்கு பந்தயங்களில் நடக்கும் விபத்துகளால் இவரை நம்பியிருந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். அஜித்குமாரால் சொன்ன நேரத்திற்கு படத்தை முடித்துக்கொடுக்க முடியவில்லை என்ற புள்ளி அஜித்தை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

https://x.com/sureshthalaras1/status/1884406686624227698

மேலும் அஜித்குமாருக்கு ஆரம்ப காலத்திலிருந்தே கார் பந்தயம் மீது ஆர்வம் இருந்தாலும், அதில் ஈடுபட பொருத்தமான நேரம் வரவில்லை. அஜித்குமாரின் கார் பந்தயம் மீது ஆர்வம் தொடர்ந்துகொண்டே செல்ல கார் பந்தயங்களில் திரும்ப தீவிரமான பயிற்சி, விடாமுயற்சி என தனது பங்கேற்பை தீவிரப்படுத்த தொடங்கினார். அதன் விளைவு சர்வதேச கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 3-வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அஜித்தின் வெற்றியை ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், அஜித்குமாரின் மகன் ஆத்விக், அவரது பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்திருக்கிறார். ஓட்டப்பந்தய போட்டியில் சக மாணவர்களை வீழ்த்தி ஆத்விக் முதலிடம் பிடித்திருக்கும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது.

கணவன் மனைவி அந்தரங்க வீடியோ கசிந்தது எப்படி..!?

கன்னியாகுமரி அருகே தம்பதியின் அந்தரங்க வீடியோவை வாட்ஸ் அப் மூலம் செல்போனில் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள வெள்ளரடா காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட நெட்டா பகுதியை சேர்ந்த தம்பதி சுற்றுலா வேன், ஆம்புலன்ஸ் வாகனங்களை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களுடைய வாகனங்களின் ஓட்டுநர்களாக மிதுன், சங்கீத் ஆகியோர் பணியாற்றி வந்தனர். டிரைவர்களாக மிதுன், சங்கீத் ஆகிய இருவரும் அந்த தம்பதியின் குடும்பத்தோடு நெருக்கமாக பழகி வந்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தம்பதிக்கும், மிதுன் மற்றும் சங்கீத் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தனை தொடர்ந்து, தம்பதியின் செல்போன் எண்ணுக்கு பெயர் தெரியாத நம்பரில் இருந்து ஒரு முறை பார்த்துவிட்டு அழியக்கூடிய வீடியோ வந்தது. அந்த வீடியோவில் தம்பதி தனிமையில் இருக்கும் அந்தரங்க காட்சிகள் இருந்தன. தம்பதியின் பக்கத்து வீட்டுக்காரரின் செல்போனுக்கும் இதே அந்தரங்க வீடியோ சென்றது.

பக்கத்து வீட்டினர் இந்த வீடியோ அனுப்பியது மிதுன், சங்கீத் தான் என்பதை அறிந்து தம்பதியிடம் கூறினார். இதுமட்டுமின்றி, அந்த தம்பதிக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள், அந்தரங்க வீடியோவை வைத்து தம்பதியை மிரட்டி ரூ.10 லட்சம் வரை கேட்டார்களாம். இதனால் அதிர்ந்து போன தம்பதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறை மிதுன், சங்கீத் ஆகிய இருவரையும் தேடினர். ஆனால், காவல்துறை தேடுவதை தொடர்ந்து இருவரும் தலைமறைவாகினார்.  டிரைவர்கள் மிதுன் மற்றும் சங்கீத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மனைவியுடன் தனிமையில் இருப்பதை கணவர் தனது செல்போனில் வைத்திருந்தாராம். ஆனால் அந்த அந்தரங்க வீடியோ அந்த செல்போனில் இருந்து மிதுன் மற்றும் சங்கீத் ஆகியோரின் செல்போனுக்கு யார் அனுப்பினார்கள்? என்றும் ஒருவேளை கணவர் செல்போனை தனியாக வைத்துவிட்டு சென்ற நேரத்தில் இருவரும் அதனை தங்களின் செல்போனுக்கு அனுப்பி கொண்டார்களா..!? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

குடிபோதையில் பெண்ணை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற ஆசாமி..!

ராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்த பிரேம் ராம் மெக்வால். குடிபோதைக்கு அடிமையான இவர், தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் போதையில் இருந்த பிரேம் ராம் மெக்வால் தனது மனைவியை தாக்கியுள்ளார். அதன் பின்னர் அவரது கால்களை பைக்கில் கட்டி கரடுமுரடான மண் சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோதற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், அப்பெண் வலியால் அலறுவது தெரிகிறது. எனினும் கிராமத்தைச் சேர்ந்த எவரும் தங்கள் வீட்டை விட்டுவெளியே வரவில்லை. சம்பவத்தின்போது மற்றொரு பெண், வீடியோ எடுத்த ஆண் உள்ளிட்ட 3 பேர் அங்கு இருந்ததாக நம்பப்படும் நிலையில் அவர்களும் இதனை தடுக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரேம் ராம் மெக்வாலை கைது செய்துள்ளனர்.

மனைவி தற்கொலை செய்து கொள்வதை வீடியோ எடுத்த கொடூர கணவன்

ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டம் அட்மகூர் நகரை சேர்ந்த பெஞ்சலைய்யா என்பவர் ஒரு ஏடிஎம் மையத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார். பெஞ்சலைய்யாவின் மனைவி கொண்டம்மா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அடிக்கடி தகராறு செய்வது வந்தார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு, இவர்களுக்கு இடையே மறுபடியும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றி கொண்டம்மா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் பெஞ்சலைய்யா அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், தான் தற்கொலை செய்து கொள்ள முயன்ற கொண்டம்மா கணவன் எதிரே தூக்கில் தொங்கி துடிதுடித்து இறந்ததை பெஞ்சலைய்யா வீடியோ எடுத்து அந்த வீடியோவை மனைவியின் சகோதரருக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்ததும், பெண்ணின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க, பெஞ்சலைய்யா கைது செய்யப்பட்டார்.