‘இந்திரா பவனை’ திறந்து வைத்த சோனியா காந்தி..!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவனை’ அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். புதுடெல்லி எண் 24, அக்பர் சாலையில் இயங்கி வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் 9A, கோட்லா சாலை இன்று திறக்கப்பட்டது. மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் நினைவாக ‘இந்திரா பவன்’ என இந்த தலைமையகத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் இணைந்து ரிப்பன் வெட்டி தலைமையகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். இவ்விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sonia Gandhi: “நாட்டின் ஜனநாயகத்தை மோடி படிப்படியாக அழித்து வருகிறார்..! ”

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், சுதந்திர போராட்ட காலத்தில் நமது முன்னோர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்தால் இந்தியா சுதந்திரமடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்தது. ஆனால் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியால் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது.

இந்த நாடு ஒரு சிலரின் சொத்து கிடையாது. அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டை விட, தன்னை உயர்ந்தவராக கருதுகிறார். நாட்டின் ஜனநாயகத்தை அவர் படிப்படியாக அழித்து வருகிறார். இந்திய அரசமைப்பு சாசனத்தை மாற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பாஜகவில் இணையச் செய்கின்றனர்.

மேலும் பேசுகையில், இது அநாகரிக அரசியல் ஆகும். நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் சர்வாதிகார பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன் என சோனியா காந்தி பேசினார்.

ஒன்றிய அரசை கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் டந்த மாதம் 20-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் – டீசல் – சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பொருளாதார சீரழிவு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தனியார் மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது குறித்தும், பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தி.மு.க. தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெற்று கொண்டுள்ளது. அதன்வரிசையில் இன்று ஒன்றிய அரசை கண்டித்து ஈரோடு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் டந்த மாதம் 20-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் – டீசல் – சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பொருளாதார சீரழிவு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தனியார் மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது குறித்தும், பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இந்தக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெற்று கொண்டுள்ளது.

அதன்வரிசையில் வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் சகோதரர் அரிமா SU.SEKAR அவர்கள் முன்னிலையில் 178-வது வட்டக் கழக #செயலாளர் சேவை மாமணி அண்ணன் K.N.DAMOTHARAN அவர்கள் தலைமையில் கழக உடன்பிறப்புகள் அனைவரும் வட்டக் கழக பகுதிகளில் ஆங்காங்கே வீடுகள்தோறும் கழக கொடியேற்றி ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கில் மத்திய அரசு செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்கவும் கோஷமிட்டனர்.