சஞ்சய் ராவத்: மகாராஷ்டிரா மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல…! ஏதோ பெரிய சதி இருக்கிறது..!

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் இதில் ஏதோ பெரிய சதி இருக்கிறது.. மகாராஷ்டிரா மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல.. என உத்தவ் தாக்கரே சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அடங்கிய மகா விகாஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இக்கூட்டணி 57 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. அதிலும், 95 தொகுதிகளில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா 19 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து மும்பையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சஞ்சய் ராவத் பதிலளித்தார்.

அப்போது, “இது மகாராஷ்டிரா மக்களின் முடிவாக இருக்க முடியாது. மகாராஷ்டிரா மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நாம் பார்க்கும் பார்வையில் ஏதோ தவறு இருப்பதாகத் தெரிகிறது. இது பொதுமக்களின் முடிவு அல்ல. இங்கு என்ன தவறு என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். 120 இடங்களுக்கு மேல் பெறுவதற்கு மகாயுதி என்ன செய்தார்கள்? மகாராஷ்டிராவில் 75 இடங்களைக் கூட எம்விஏ பெறாதது எப்படி? தேர்தலில் பணம் பயன்படுத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

ஏதோ சதி நடந்துள்ளது. எங்கள் தொகுதிகளில் சிலவற்றை திருடிவிட்டார்கள். இது பொதுமக்களின் முடிவாக இருக்க முடியாது. பொதுமக்களும் கூட இந்த முடிவுகளை ஏற்கவில்லை. முடிவுகள் முழுமையாக வெளியானதும் மேலும் பேசுவோம். ஒவ்வொரு தொகுதியிலும் பணம் எண்ணும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஷிண்டேவுக்கு 60 இடங்களும், அஜித் பவாருக்கு 40 இடங்களும், பாஜகவுக்கு 125 இடங்களும் கிடைக்குமா? இந்த மாநில மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல. மகாராஷ்டிர மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

சஞ்சய் ராவத் தகவல்: இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு..!

மகாராஷ்டிரா சட்ட மன்ற தேர்தலுக்கான இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20 -ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நேற்று இரவே முடிந்து விட்டதாகவும், இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்கள் இன்று மாலை வெளியாகும் என்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

உத்தவ் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை..!

உத்தவ் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு மும்பை நீதிமன்றம் அவதூறு வழக்கில் 15 நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மும்பை அருகே மீரா பயாந்தர் மாநகராட்சியில் கழிப்பறை கட்டி, பராமரிக்கும் திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல் என்று சஞ்சய் ராவத் புகார் அளித்திருந்தார். இந்த ரூ.100 கோடி ஊழல் புகாரில் பாஜகவைச் சேர்ந்த கிரிட் சோமையா, அவரது மனைவிக்கும் பங்கு உள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார்.

இதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் அவதூறாக குற்றம்சாட்டி உள்ளதாக கூறி சோமையா மனைவி மேதா மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த மசகான் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறைத் தண்டனை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராம ஜென்மபூமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா..! இது பாஜகவின் நிகழ்ச்சி..! இது பாஜகவின் பேரணி…!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி… இந்தியாவின் புனித நகரில் ஒன்று. இங்கு இருந்த பாபர் மசூதிக்கு பதில் ராமர் கோவில் கட்ட 1990-ல் ரதயாத்திரையை தற்போதைய பாஜக மூத்த தலைவர் அத்வானி துவங்கினார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் 1991-ல் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனைகள் பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிய நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.

இந்தவழக்கில் “1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்ட முதல் 10 பேரில் பலர் சிவ சேனாவைச் சேர்ந்தவர்கள். பாபர் மசூதியை இடித்ததற்காக சிவ சேனாவைச் சேர்ந்த 109 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது” என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் இழுத்து வந்த இந்த வழக்கில் 2019-ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மொத்தம் 3 அடுக்குகளாக ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணிக்கு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட கற்கள் உதவியுடன் நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில், அயோத்தியில் ராம ஜென்மபூமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழில், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், “…இதெல்லாம் அரசியல், பாஜகவின் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள விரும்புகிறார்கள்? இது தேசிய நிகழ்வு அல்ல. . இது பாஜகவின் நிகழ்ச்சி, இது பாஜகவின் பேரணி. ‘உஸ்மே பவித்ரதா கஹான் ஹை?’… பாஜகவின் நிகழ்ச்சி முடிந்ததும் நாங்கள் (அயோத்தி) செல்வோம்.” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரேவுக்கு அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பு…!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி… இந்தியாவின் புனித நகரில் ஒன்று. இங்கு இருந்த பாபர் மசூதிக்கு பதில் ராமர் கோவில் கட்ட 1990-ல் ரதயாத்திரையை தற்போதைய பாஜக மூத்த தலைவர் அத்வானி துவங்கினார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் 1991-ல் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனைகள் பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிய நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.

நீண்டகாலம் இழுத்து வந்த இந்த வழக்கில் 2019-ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மொத்தம் 3 அடுக்குகளாக ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணிக்கு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட கற்கள் உதவியுடன் நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு காரணமாக இருந்த ஒரு சிலருக்கு அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்பது தெரிகிறது.இதுதொடர்பாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், செய்தியாளர்களிடம் பேசுகையில், “1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்ட முதல் 10 பேரில் பலர் சிவ சேனாவைச் சேர்ந்தவர்கள்.

பாபர் மசூதியை இடித்ததற்காக சிவ சேனாவைச் சேர்ந்த 109 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது” ஆனால் பால் தாக்கரே வாரிசுக்கே அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்பது வேதனையான விஷயமாகும் என தெரிவித்துள்ளார்.

சஞ்செய் ராவத் கேள்வி: உத்தர பிரதேசம் என்ன பாகிஸ்தானில் உள்ளதா…? இல்லை இதென்ன புதுமாதிரியான லாக்டவுனா?

உத்தர பிரதேசத்தில் ஒரு சில நாட்களாக நடைபெற்று வரும் சில சம்பவங்கள் குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்செய் ராவத் பேசுகையில், லகிம்பூர் கெரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் லக்னோவுக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். என்னவிதமான சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறீர்கள்?

உத்தரப் பிரதேசம் என்ன பாகிஸ்தானில் உள்ளதா? ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதென்ன புதுமாதிரியான லாக்டவுனா?

ஆளும் கட்சியின் கூண்டுக்கிளி போன்று மாவட்ட நிர்வாகம் இருக்கிறது. அரசாங்கம் என்ன விதிமுறைகள் கூறினாலும் அதை அப்படியே கடைப்பிடிக்கிறது. விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் ராகுல் காந்தி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு அனுமதியில்லை. இவர்கள் எல்லாம் என்ன குற்றம் செய்தார்கள். நாட்டில் புதிதாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.