பிரசாந்த் கிஷோர்: ‘உங்களிடம் வாக்கு கேட்கமாட்டேன்; வறுமையில் இருந்து மீள வழி சொல்வேன்..!’

நான் உங்களிடம் வாக்குகள் கேட்கப்போவதில்லை. மாறாக, நான் உங்களுக்கு வறுமையில் இருந்து மீள்வதற்கு வழி சொல்லப் போகிறேன் என ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹாரின் சரண் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரஷாந்த் கிஷோர் பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளாக நான் பிஹார் முழுவதும் சுற்றி வருகிறேன். இதில் இரண்டு வருடம் நடைபயணமாக சென்றதும் அடங்கும். நான் 5,000 கிராமங்களை நடந்தே சென்று அடைந்திருக்கிறேன். நான் யாரிடமும் வாக்குகள் கேட்கவில்லை.ஏன்?

ஒவ்வொரு 1 – 2 ஆண்டுகளில் சிலர் உங்களிடம் வந்து வாக்குகள் கேட்கின்றனர். உங்களிடம் வாக்கு கேட்க வருபவர்கள், நீங்கள் அவர்களுக்கு வாக்களித்தால், உங்களின் அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்வார்கள் என்று சொல்கிறார்கள். நீங்களும் தொடர்ந்து அவர்களுக்கு வாக்களிக்கிறீர்கள்.

நாம் 40 -50 ஆண்டுகளாக காங்கிரஸை வெற்றி பெற வைத்தோம், பின்பு நாம் லாலு பிரசாத் யாதவை அரசனாக்கினோம். பின்பு கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் குமாரை அந்த நாற்காலியில் அமரவைத்து இருக்கிறோம். மத்தியில் பிரதமர் மோடியை நாம் வெற்றி பெற வைத்தோம். ஆனால் உங்களின், உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக மாறவில்லை.

இப்போது நான் இங்கே வந்திருக்கிறான். நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் எனக்கு வாக்களிக்கலாம். ஆனால், நானும் வெற்றி பெற்று உங்களை ஏமாற்ற மாட்டேன் என்பதற்கு என்ன உத்தரவாதம். முந்தைய தலைவர்கள் இனிமையாக பேசக்கூடியவர்கள். முன்பு இனிமையாகப் பேசியவர்கள், வெற்றி பெற்ற பின்பு உங்களைப் பற்றி யோசிக்கவே இல்லை. பிரசாந்த் கிஷோரும் மற்றவர்களைப் போல உங்களை ஏமாற்றலாம்.

அதனால் நான் உங்களிடம் வாக்குகள் கேட்கப்போவதில்லை. மாறாக, நான் உங்களுக்கு வறுமையில் இருந்து மீள்வதற்கு வழி சொல்லப் போகிறேன். அதை நீங்கள் கற்றுக்கொண்டால், நீங்கள் விரும்பும் யாருக்கும் வாக்களிக்கலாம். ஆனால் நாங்கள் சொல்லும் வழியில் நீங்கள் வாக்களித்தால், உங்கள் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிஹாரிலேயே சாத்தியமாகும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

அண்ணாமலை கிண்டல் கெட் அவுட் கையெழுத்து இயக்கத்தின் மரியாதை அங்கேயே தெரிந்துவிட்டது..!

கெட் அவுட் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார். கெட் அவுட் கையெழுத்து இயக்கம் தொடங்கிய சில 30 நொடிகளில் பிரசாந்த் கிஷோர் விலகி சென்று விட்டார். அதற்கான மரியாதை அங்கேயே தெரிந்துவிட்டது என அண்ணாமலை கிண்டல் அடித்தார். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த பள்ளியிலும் படிக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அதேபோல் எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் மொழிக் கொள்கையையும், கல்விக் கொள்கையையும் கேள்விக்குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால்.. அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால்.. எப்படி ப்ரோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் திமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் செட்டிங் செய்து வைத்து கொண்டு சோசியல் மீடியாவில் ஹேஷ்டாக் போட்டு விளையாடுவதாகவும் விமர்சித்துள்ளார். இந்நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விஜய் பேசும் போது, மத்திய அரசு மற்றும் மாநில அரசு என்று இரண்டையும் குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் குழந்தைக்கு மூன்று மொழி.. நீங்கள் நடத்தும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் மூன்று மொழி. ஆனால் தவெக தொண்டர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் இருமொழி.. விஜய் சொல்வதை தன் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும். கெட் அவுட் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார். கெட் அவுட் கையெழுத்து இயக்கம் தொடங்கிய சில 30 நொடிகளில் பிரசாந்த் கிஷோர் விலகி சென்று விட்டார். அதற்கான மரியாதை அங்கேயே தெரிந்துவிட்டது என அண்ணாமலை தெரிவித்தார்.

தவெக விழாவில் #GetOut பதாகையில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்..!

மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய #GetOut கையெழுத்து பதாகையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியிலுள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய், ஜன்சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேடைக்கு அருகே மும்மொழி கொள்கையையும், மத்திய, மாநில அரசுகளையும் விமர்சிக்கும் வாசகங்களுடன் #GetOut கையெழுத்து பதாகை வைக்கப்பட்டு இருந்தது. அதில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டு #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அடுத்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கையெழுத்திட்டார். பின்னர் பேனாவை பிரசாந்த் கிஷோரிடம் கொடுத்த போது அவர் தான் கையெழுத்திட மாட்டேன் என்று தலையாட்டி பேனாவை வாங்க மறுத்து விட்டார். அதன் பிறகு ஆதவ் அர்ஜுனா அந்த பேனரில் கையெழுத்திட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீமான் காட்டம்: பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டை பற்றி என்ன தெரியும்..!?

தேர்தல் வியூக வகுப்பாளரை நாடுவது சமீபமாக ஏற்பட்டிருக்கும் நோய், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டை பற்றி என்ன தெரியும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வரும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். ஏற்கனவே தவெகவுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு அணிகள் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பை விஜய் நேற்று வெளியிட்டார்.

அதேபோல் தவெக தலைவர் விஜய் உடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடத்தினார். 2 முறை நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கு பின் தமிழக வெற்றிக் கழகத்திற்கான சிறப்பு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட பிரசாந்த் கிஷோர் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி இருக்கிறார். இதனால் பிரசாந்த் கிஷோர் உடன் தவெக இணைவது அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பு அரசியல் கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், இந்த சந்திப்பு நடந்தது என்று செய்திகளை பார்த்தே தெரிந்து கொண்டேன். வியூக வகுப்புகளில் எல்லாம் பெரிதாக நாட்டமில்லை. இந்த நாட்டை ஆட்சி செய்த காமராசர், அண்ணா உள்ளிட்டோர் வியூக வகுப்பாளருடன் போட்டியிட்டனர்.

எங்கு என்ன செய்யலாம் என்ற அறிவு அவர்களுக்கு இருந்தது. இதற்கு தேர்தல் வியூக வகுப்பாளர் தேவையென்றால், எதற்காக அரசியலுக்கு வர வேண்டும். அரியலூர், பெரம்பலூரில் யாரை நிறுத்தினால் வெல்லலாம் என்பது நமக்கு தெரிய வேண்டும். என்னிடம் மூளை இருக்கிறது. பணம்தான் என்னிடம் இல்லை. கத்திரிக்காய் என்று பேப்பரில் எழுதி எந்த பயனும் இல்லை. களத்தில் இறங்கி விதையை போட்டு தண்ணீர் ஊற்றி விளைய வைக்க வேண்டும்.

கடந்த சில காலமாக இந்த நோய் எல்லோருக்கும் வந்துவிட்டது. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும்? யாருக்கு என்ன பிரச்சனை என்று அவருக்கு தெரியுமா? பணக்கொழுப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால், இப்படிதான் என சீமான் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர்: மோடியின் பேச்சைக் கேட்டு 2014-ல் வாக்களித்தோம் குஜராத் வளர்கிறது..! பீகார் மக்கள் நிலை..!?

பீகார் மாநிலத்தை சேர்ந்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நேற்று முறைப்படி புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். பீகார் அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், கடந்த ஓராண்டிருக்கும் மேலாக மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பாதயாத்திரையாக பயணம் மேற்கொண்டார். காந்தி பிறந்தநாளான நேற்று முறைப்படி அந்த கட்சிக்கு ஜன் சுராஜ் என்றபெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரசாத் யாதவ், பிரபல அரசியல் தலைவர் பவன் வர்மா, முன்னாள் எம்பி மோனாசிர் ஹாசன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பிரமுகர்கள் முன்னிலையில் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.

இத்தனை தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி மனோஜ் பார்தியை கட்சியின் செயல் தலைவராக நியமித்தார். புதிய கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் நடைபெறும் வரை, அதாவது மார்ச் மாதம் வரை மனோஜ் பார்தி அந்த பதவியில் இருப்பார் என்று கூறினார். இந்த விழாவில் பிரசாந்த் கிஷோர் பேசுகையில்,’ ஜன் சுராஜ் ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு ஒரு மணி நேரத்தில் ரத்து செய்யப்படும். ஆனால் மக்கள் டெபாசிட் செய்யும் சேமிப்பின் விகிதம் பீகாருக்கு கிடைக்கும்படி வங்கிகளை நிர்பந்திப்போம் ’ என தெரிவித்தார்.

மேலும் பிரசாந்த் கிஷோர் பேசுகையில்,’ என்னையும், உங்களையும் போன்றவர்களும் குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில் அவரது பேச்சைக் கேட்டு 2014-ல் அவருக்கு வாக்களித்தோம். உண்மையாகவே குஜராத் முன்னேறி வருகிறது. ஒட்டுமொத்த நாட்டின் செல்வமும் திசை திருப்பப்பட்டதாகத் தெரிகிறது. குஜராத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது. பீகாரில் இருந்து மக்கள் வேலை தேடி அந்த மாநிலத்திற்கு படையெடுக்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக வாக்களித்த பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்?’ என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பினார்.

பிரசாந்த் கிஷோர்: ஜன் சுராஜ் ஆட்சிக்கு வந்த ஒரு மணி போதும்..! பிகாரில் மதுவிலக்கு ரத்து..!

பீகார் மாநிலத்தை சேர்ந்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நேற்று முறைப்படி புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். பீகார் அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், கடந்த ஓராண்டிருக்கும் மேலாக மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பாதயாத்திரையாக பயணம் மேற்கொண்டார். காந்தி பிறந்தநாளான நேற்று முறைப்படி அந்த கட்சிக்கு ஜன் சுராஜ் என்றபெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரசாத் யாதவ், பிரபல அரசியல் தலைவர் பவன் வர்மா, முன்னாள் எம்பி மோனாசிர் ஹாசன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பிரமுகர்கள் முன்னிலையில் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.

இத்தனை தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி மனோஜ் பார்தியை கட்சியின் செயல் தலைவராக நியமித்தார். புதிய கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் நடைபெறும் வரை, அதாவது மார்ச் மாதம் வரை மனோஜ் பார்தி அந்த பதவியில் இருப்பார் என்று கூறினார். இந்த விழாவில் பிரசாந்த் கிஷோர் பேசுகையில்,’ ஜன் சுராஜ் ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு ஒரு மணி நேரத்தில் ரத்து செய்யப்படும். ஆனால் மக்கள் டெபாசிட் செய்யும் சேமிப்பின் விகிதம் பீகாருக்கு கிடைக்கும்படி வங்கிகளை நிர்பந்திப்போம் ’ என தெரிவித்தார்.

மேலும் பிரசாந்த் கிஷோர் பேசுகையில்,’ என்னையும், உங்களையும் போன்றவர்களும் குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில் அவரது பேச்சைக் கேட்டு 2014-ல் அவருக்கு வாக்களித்தோம். உண்மையாகவே குஜராத் முன்னேறி வருகிறது. ஒட்டுமொத்த நாட்டின் செல்வமும் திசை திருப்பப்பட்டதாகத் தெரிகிறது. குஜராத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது. பீகாரில் இருந்து மக்கள் வேலை தேடி அந்த மாநிலத்திற்கு படையெடுக்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக வாக்களித்த பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்?’ என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பினார்.