ஆதித்ய தாக்கரே: யார் துரோகி மற்றும் திருடன் என்பது முழு நாடும், முழு உலகமும் அறிந்ததே..!

யார் துரோகி மற்றும் திருடன் என்பது முழு நாடும், முழு உலகமும் அறிந்ததே என ஆதித்ய தாக்கரே தெரிவித்தார். ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவ சேனாவை உடைத்து, MLA -க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி ஆதாயம் அடைந்தார் என விமர்சித்து இருந்தார்.

மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்று அந்த விடூயோவில் இருந்தது. இந்த வீடியோவை, சிவ சேனா இளைஞரணியினர், குணால் கம்ரா தனது வீடியோவை பதிவு செய்த ஸ்டூடியோவை நேற்று சேதப்படுத்தினர். இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் சூடுபித்தது. இந்நிலையில்; மும்பையில் செய்தியாளர்களின் கேள்விக்கு ஆதித்ய தாக்கரே பதிலளித்தார். அப்போது, ” குணால் கம்ராவின் வீடியோ கிளிப்பை பார்த்தேன். ஏக்நாத் ஷிண்டேவின் தொண்டர்கள் எப்போது அவரை ஒரு துரோகி மற்றும் திருடன் என்று முடிவு செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது? அவர் யாருடைய பெயரையும் சொல்லவில்லை. ஆனால், ஏக்நாத் ஷிண்டே ஏன் கோபப்படுகிறார்?

யார் துரோகி மற்றும் திருடன் என்பது முழு நாடும், முழு உலகமும் அறிந்ததே. குணால் கம்ரா நம்மைப் பற்றி, பலரைப் பற்றி, மோடி பற்றியும் பலமுறை பேசியுள்ளார். ஆனால் யாரும் இப்படி எதிர்வினைவ ஆற்றவில்லை. நாக்பூரில் நாசவேலை செய்தவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு பெறப்படும் என்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். அதேபோல், நேற்று குணால் கம்ராவுக்கு எதிராக நாசவேலை செய்தவர்களிடம் இருந்து இழப்பை வசூலிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் தனது கண்களைத் திறந்து யார் அவரை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அது எதிர்க்கட்சியா அல்லது அவரது நண்பர்களா?

குணால் கம்ரா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? ஏக்நாத் ஷிண்டே ஒரு துரோகி மற்றும் திருடன் என கூறி இருந்தால், குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பெயரைக் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது, ஏக்நாத் ஷிண்டே முதலில் தான் ஒரு துரோகி மற்றும் திருடனா என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்” என ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்ய தாக்கரே தேர்வு..!

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்யா தாக்கரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வோர்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் மும்பையில் உள்ள கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்பாதாஸ் தன்வே, “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் உத்தவ் தாக்கரேவின் இல்லமான ‘மாதோஸ்ரீ’யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாஸ்கர் ஜாதவ் சட்டப் பேரவைத் தலைவராகவும், சுனில் பிரபு தலைமை கொரடாவாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இரு அவைகளின் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்ய தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என அம்பாதாஸ் தன்வே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அரசு ததோபா-அந்தரி தேசிய பூங்காவை நீட்டிக்க முடிவு

மகாராஷ்டிராவில் நேற்று மாநில வனவிலங்கு வாரியத்தின் 17 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் பாலசாகேப் தாக்கரே வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான எங்கள் இலக்கை அதிகரிக்க, ததோபா-அந்தரி தேசிய பூங்காவின் மையப் பகுதியை 78.89 சதுர கிமீ நீட்டிக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஆதித்யா தாக்கரே மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உலக சுற்றுலா தினம்: பம்பாய் உயர் நீதிமன்றத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 27 ஆம் தேதி, உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுகிறார்கள். மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உலக சுற்றுலா தினத்தையொட்டி, இன்று பாரம்பரிய சுற்றுப்பயணங்களுக்கான பம்பாய் உயர் நீதிமன்றத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சுற்றுலாத்துறைக்கான புதிய இணைய தளத்தை தொடங்கி வைத்தார். மேலும் ஆங்கிலம், பிரெஞ்ச் , இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, தெலுங்கு, உள்ளிட்ட 9 மொழிகளில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. விருந்தினர்கள் தான் கடவுள் என்பது நமது கலாசாரம், எனவே அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தால் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நமது விளம்பர தூதர்களாக மாற்ற முடியும். அவர்கள் மற்றவர்களிடம் மராட்டியம் செல்ல பரிந்துரைப்பார்கள்.

அதனால் நாம் சுற்றுலாத்துறைக்காக தனியாக ஒரு விளம்பர தூதரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. பல மாநிலங்கள் மற்றும் நாடுகளில் சுற்றுலா முக்கிய வருவாய் தரும் துறையான மகாராஷ்டிராவில் முன்பு சுற்றுலா துறை புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இன்று சுற்றுலாவின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொண்டதால் இப்போது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். சுற்றுலா துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு டெக்கன் ஒடிசி, சொகுசு சுற்றுலா ரெயிலில் மாநில மந்திரிசபை கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் முடிக்கப்படாத சாக்ரடா பேமிலியாக நினைவு சின்னத்தை உதாரணமாக கொண்டு, ஒற்றை பாறையில் செதுக்கப்பட்ட எல்லோரா குகைகளைப்போல ஒரு நவீன குறையை செதுக்க வேண்டிய அவசியம் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சுற்றுலா துறை பெரும் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் புதிய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கியதற்காக மாநில சுற்றலா துறையை நான் பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.