அண்ணாமலை விமர்சனம்: மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை..!

நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான் என ஆதவ் அர்ஜுனாவை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்றைய முன்தினம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுக்குழுவில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது, “பல பொய் பிரச்சாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் திமுக அண்ணாமலையையே செட் செய்து விட்டது நன்றாக கவனித்தால் தெரியும், திமுகவின் பிரச்சினைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பாஜக வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை.” என ஆதவ் அர்ஜுனா விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது, “அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது அதிகாரத்திற்கு அல்ல. தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது தான். என்னால் யாருக்கும் பிரச்சினை வராது. மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். எனது தனிப்பட்ட வளர்ச்சியோ, மற்றவர் வளர்ச்சியோ முக்கியம் கிடையாது” என அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை பேசுகையில், “திமுகவுக்கு எதிராக அதிக போராட்டங்களை நடத்திய கட்சி பாஜக. திமுகவுக்கு எதிராக பேசியதாக அதிக அவதூறு வழக்குகள் என் மீது தான் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலேயே ஒரு கட்சித் தலைவர் மீது அதிக FIR போட்டு இருக்கிறார்கள் என்றால் அது என் மீது தான். திமுகவை தீர்க்கமாக எதிர்த்து தினமும் பேசுவது யார்? வாய் வியாபாரிகளுக்கு மாமனார் பணம் இருக்கிறது. கொழுத்துப் போய் இருக்கிறார்கள். மைக் ஓசியில் வந்துவிடுகிறது, என்ன வேண்டுமானாலும் பேச வாய்ப்பு கிடைக்கிறது.

நேர்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். படித்து முடித்த முதல் நாளில் இருந்து எந்த தனியார் நிறுவனத்திலும் சம்பளம் பெறாதவன். என் முதல் சம்பளமே மக்களின் வரிப்பணம் தான். 10 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவன் நான். எனது சொந்த நிறுவனத்தில் கூட ஒரு ரூபாயைக் கூட நான் சம்பளமாகப் பெற்றதில்லை. இத்தனைக்கும் நான் இப்போது எந்த அரசுப் பதவியிலும் இல்லை, பஞ்சாயத்து தலைவராகக் கூட இல்லை என்றாலும், ஒரு ரூபாய் பணத்தை தனியாரிடம் இருந்து பெற்றதில்லை.

2011 IPS ரேங்க்கில் எனது ரேங்க் 2. நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை. எதை இழந்தாலும் மீண்டும் வருவேன்” என ஆவேசமாக அண்ணாமலை பேசினார்.

சேகர்பாபு விமர்சனம்: த.வெ.க. தலைவர் விஜய் ஒரு தவழ்கின்ற குழந்தை..!

பெண்கள் தான் 2026-ஆம் ஆண்டு இந்த ஆட்சியை தூக்கி பிடிப்பார்கள். முதலமைச்சரை வரவேற்பதில் 80 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தவழ்கின்ற குழந்தை என இந்து அறநிலைய அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்தார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு 22 வகையான சைவ உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், தவெகவின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்துக்கு கட்சித் தலைவர் விஜய் தலைமை வகித்தார். உறுதிமொழியோடு தொடங்கிய கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதலமைச்சரை, மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்துப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், கதறல் சத்தமெல்லாம் எப்படியிருக்கு? இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்ற சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதற்கு, தயாராக வேண்டிய அவசியத்தை, நீங்கள் அனைவருமே நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ்வது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னராட்சிப் போல நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?

மாநாடு தொடங்கி, நான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் நிகழ்ச்சி, தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, அன்றைய தினம் நகருக்குள் எந்த திருமண மண்டபமும், அரங்கமும் நமக்கு கொடுத்துவிடக் கூடாது என்று, மாமல்லபுரம் சென்று அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஏன் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் வரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள் வந்தன? அத்தனை தடைகளையும் தாண்டி தவெக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.அது தொடர்ந்து நடக்கும்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் அதைக்காட்ட வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என்று அடிக்கடி அறிக்கைகள் கொடுத்துவிட்டு, இங்கு நீங்கள் செய்யும் ஆட்சி மட்டும் என்னவாம்? அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதானே.

ஒரு கட்சித் தலைவனாக எனது கட்சித் தொண்டர்களையும், என் நாட்டு மக்களையும் சந்திப்பதற்கும், பேசுவதற்கும் தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்றால் சென்றே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்.நேற்று வந்தவன் எல்லாம் முதல்வராக கனவு காண்கிறேன் என்று கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன், மற்ற எந்த கட்சிகளுக்கும் இல்லாத தடைகளை விதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றைத் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது மன உளைச்சலையும், மன வேதனையையும் தருகிறது. சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு எல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரி கவர்மென்ட்தான் காரணம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும்.

மேலும், தொடர்ந்து பேசுகையில், இந்த பொதுக்குழு வழியாக, தமிழக மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கப் போகிறோம்.தவெக ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சி. தவெக தலைமையில் அருதிப்பெரும்பான்மை பெற்ற ஆட்சி.அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சி. அப்படியாக இந்த ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை முறையாக கண்டிப்பாக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவத்தில் கவனம் செலுத்துவோம். அதுவும், அனைவருக்கும் எளிதாக, சமமாக கிடைப்பதை உறுதி செய்வதுதான் தவெகவின் இலக்கு. 2026-ல் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என விஜய் பேசியிருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். அப்போது, ஒரு சினிமா பாடல் தான் நினைவுக்கு வருகிறது. “மன்னராட்சி காத்து நின்ற தெங்கள் கைகளே மக்களாட்சி காணச்செய்த தெங்கள் நெஞ்சமே எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே கல்லில் வீடுகட்டித் தந்த எங்கள் கைகளே கருணைத் தீபம் ஏற்றிவைத்த தெங்கள் நெஞ்சமே” இதுதான் அவருக்கு பதிலாக சொல்லிக்கொள்கிறேன்.

பெண்கள் தான் இந்த ஆட்சியை மீண்டும் 2026-ம் ஆண்டு தூக்கி பிடிப்பார்கள். முதலமைச்சர் எங்கு போனாலும் வரவேற்கிற கூட்டத்தில் 80 சதவீத கூட்டம் பெண்கள் கூட்டம்தான். சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது. விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள்.

பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள். சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்கள், போராட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், ஆர்ப்பாட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள், புயல், மழை, வெள்ளம் போன்றவற்றை கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து அதை போட்டோ போட்டுக்கொண்டு, அதையும் பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் தயாராக இருந்தால் தமிழகத்தின் நிலை இப்படி தான் இருக்கும். இப்படி தான் பேசிக்கொண்டு இருப்பார்கள் என சேகர்பாபு தெரிவித்தார்.

கஸ்தூரி விமர்சனம்: எஸ்.வி.சேகர் ஒரு நல்ல காமெடி நடிகர்..!

எஸ்.வி.சேகர் ஒரு நல்ல காமெடி நடிகர் என நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்தார். கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று இரவு அந்தணர்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி, புரட்சித் தமிழகம் கட்சியை சார்ந்த ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகை கஸ்தூரி பதிலளித்தார். அப்போது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிராமணர்களுக்கென நலவாரியம் அமைத்தால் 5 லட்சம் பிராமணர் வாக்குகளை திமுகவிற்கு பெற்றுத் தருவேன் என நடிகரும், முன்னாள் MLA -வான எஸ்.வி.சேகர் கூறியது குறித்த கேள்விக்கு, “அவர் ஒரு நல்ல காமெடி நடிகர் என்று நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்தார்.

செல்லூர் ராஜு விமர்சனம்: சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர்னு சொல்லிட்டு வந்துடுங்க..!

“இப்போதெல்லாம் சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு இப்போதுள்ள நடிகர்கள் வந்துவிடுகிறார்கள் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மதுரையிலுள்ள ஓபுளா படித்துறை பகுதியில் நேற்று நடந்தது. இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜு, “இப்போதெல்லாம் சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு இப்போதுள்ள நடிகர்கள் வந்துவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இன்னொரு பக்கம் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு பெற்று வருகிறேன் எனச் சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று கலர் கலராக போட்டோ ஷூட் நடத்துகிறார் ஸ்டாலின். இப்போதுள்ள முதல்வரை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.. ஏதோ ஒரு நிகழ்ச்சியில், எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியைத் தருகிறோம் என்கிறார்.

ஆனால், உங்க ஆட்சியில் உள்ள குறைகளைச் சொல்லக் கூட முடியாமல் தவிக்கிறோம் என்பதே உண்மை.. அவ்வளவு குறைகள் நிறைந்துள்ளன. நிலைமை இப்படி இருக்க இப்போதே 2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாருங்கள் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கப் போகிறது. திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது. இவர்கள் ஆட்சி நடத்தவில்லை.. சும்மா மக்களை ஏமாற்றக் காட்சி நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் கிரிக்கெட் கோப்பை வென்றதாக அரசையே ஏமாற்றுகிறார். தகுதி இல்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்தால் இப்படித்தான் நடக்கும்” என செல்லூர் ராஜு பேசினார்.

மு.க.ஸ்டாலின் விமர்சனம்: எடப்பாடி பழனிசாமியின் ஆணவம் தான் அதிமுகவின் தொடர்ந்து தோல்விக்கு காரணம்..!

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வாய்த்துடுக்காவும், ஆணவமாவும் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆணவத்துக்காகவே, தமிழ்நாட்டு மக்கள் உங்களை இனிமேல் தோற்கடித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து 40 ஆயிரம் நபருக்கு பட்டா வழங்கக் கூடிய இந்த மாபெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கொண்டார்.

மேலும், பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் பரப்புரை செய்தேன். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற கூட்டங்கள் வாயிலாக, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினேன். கழக ஆட்சி அமைந்ததும், அந்த மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என்று வாக்குறுதி அளித்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே அதற்காக ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தனி துறையை நான் உருவாக்கினேன்.

பெரும்பாலான மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். அது உங்களுக்குத் தெரியும். அப்படி வந்த மனுக்களில் பெருபான்மையான மனுக்கள் எனக்கு வீடு இல்லை, வீடு கட்டுவதற்கு இடம் இல்லை, இடமோ, வீடோ அதை வாங்குவதற்கு பணம் இல்லை, இதுவரையில், புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருகிறேன் என்று பல பேர் மனு அளித்திருந்தார்கள்.

மக்களின் குறைகளை தீர்ப்பது ஒரு அரசாங்கத்தின் கடமை என்ற அடிப்படையில், வருவாய்த் துறைக்கு நான் ஒரு உத்தரவிட்டேன். “வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைகளை எந்தளவுக்கு வழங்க முடியுமோ அந்தளவுக்கு வழங்குங்கள்” என்று நான் சொன்னேன். நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் போதிய அளவு இல்லை. ஆனால் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்து, வீடற்ற ஏழைகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டேன்.

தீவிரமான நடவடிக்கைகளை நாம் எடுத்த காரணத்தால், 2021-ல் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து இன்று வரை, மொத்தமாக இந்த மூன்று ஆண்டுகளில், 10 இலட்சத்து 3 ஆயிரத்து 874 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், இ-பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. நில உரிமையை வழங்குவதிலும், திராவிட மாடல் ஆட்சி தலைசிறந்த ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம் மட்டுமல்ல, இதற்கு சமதர்மக் கொள்கைளும் உண்டு. அதைத்தான் “சுயமரியாதைச் சமதர்மம்” என்று தந்தை பெரியார் குறிப்பிட்டார்.

சமூகத்தில் சமூகநீதியும், பொருளாதாரத்தில் சமநீதியும் வழங்கப்பட வேண்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, குடியிருப்போருக்கே மனை சொந்தம் என்று சட்டம் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். “நாங்கள் பல்லாண்டு காலம் ரத்தம் சிந்தி போராடியும் கிடைக்காத உரிமையை ஒரு துளி பேனா மையில் நிறைவேற்றிக் காட்டியவர் கலைஞர்” என்று பொதுவுடைமை இயக்கத்தின் மாபெரும் தலைவர் மணலி கந்தசாமி அவர்கள் பாராட்டினார். அதிகப்படியான நிலங்களை இலவசமாக ஏழை எளிய பாட்டாளிகளுக்கு வழங்கிய ஆட்சி தி.மு.க. ஆட்சி. இன்றைக்கு உங்கள் முகங்களில் தெரிகின்ற மகிழ்ச்சிதான் எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டு.

ஆட்சிப் பொறுப்பேற்றபோது சொன்னேன்… “மு.க.ஸ்டாலின் எனும் நான், வீட்டுக்கு விளக்காக இருப்பேன் – நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன். மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன். மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்” என்று சொன்னேன். அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். சில நாட்களுக்கு முன்னால், இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையான இந்தியா டுடே, இந்தியாவின் சக்தி வாய்ந்த ‘டாப் 10’ தலைவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்கள். இது தனிப்பட்ட ஸ்டாலினுக்குக் கிடைத்த பெருமையோ, புகழோ இல்லை. இந்த பெருமையையும், புகழையும் வழங்கியது, தமிழ்நாட்டு மக்களான நீங்கள்தான்! உங்களுடைய அன்பும், ஆதரவும்தான் இந்த ஸ்டாலினின் பலம்! தமிழ்நாட்டை உயர்த்த நான் என்னுடைய சக்தியை மீறியும் உழைப்பேன்! போராடுவேன்.

இந்த உழைப்பின் பயன்தான், அனைத்து புள்ளி விவரங்களையும் வெற்றிகரமாக இன்றைக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பேப்பரிலும், ரெக்கார்ட்டுகளிலேயும் ‘ஃபர்ஸ்ட் வந்துவிட்டோம்’ என்று நான் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. ஏனென்னால், நமக்கு பின்னால், நம்மை முந்தி வெற்றி பெறவேண்டும் என்று இன்னும் பலர் வந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, இன்னும் வேகமாக ஓடவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். இதைத்தான் நான் மற்ற அமைச்சர்களிடமும், அரசு அலுவலர்களிடமும் எதிர்பார்க்கிறேன்.

அந்த எதிர்பார்ப்புடன் தான் மாவட்டம்தோறும் கள ஆய்வை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறேன். இது பற்றியெல்லாம் எதுவும் புரியாத ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, மக்கள் நலனைப் பற்றி கிஞ்சித்தும் கவலப்படாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் என்ன சொல்கிறார்.. “மக்கள் நலத்திட்டங்களுக்கு மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், கலைஞர் பெயரில், மக்களுக்குப் பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை நான் ஒதுக்கி வருவதாக” உளறியிருக்கிறார்.

அதை படித்ததுமே சிரிப்புதான் வந்தது. ஒருவர் பொய் சொல்லலாம்; ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று வேடிக்கையாக சொல்லுவார்கள். அதை இனிமேல், கொஞ்சம் மாற்றி பொய் சொல்லலாம்; ஆனால், பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக் கூடாது என்றுதான் இப்போது சொல்லவேண்டும். அந்த அளவுக்குப் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார்.

நம்முடைய ஆட்சியில், நவீனத் தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி தலைவர் கலைஞர் பெயரால், மக்கள் நலனுக்காக நாம் செய்து கொண்டு வருகின்ற மூலதனச் செலவுகள், என்னென்ன; எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் என்னென்ன; என இதே மேடையில் என்னால் மணிக்கணக்கில் சொல்ல முடியும். நான் கேட்கிறேன்…

எதை நீங்கள் மக்களுக்குப் பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்கள்? தமிழ்நாட்டின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்திருக்கிறோமே… அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா? இல்லை, தென் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் – இளைஞர்களுக்கும் – அறிவுச் சுரங்கமாக மதுரையில் இருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு நூலகம்… அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா?

இல்லை, ஆயிரக்கணக்கான மக்களுடைய உடல்நலனையும் – உயிரையும் காப்பாற்றுகின்ற கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை… அதை பயனில்லை என்று சொல்கிறீர்களா? இல்லை, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு கோடியே 20 இலட்சம் தாய்மார்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் வாங்குகின்ற, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா?

எதைச் சொல்கிறீர்கள்கள்? பழனிசாமி அவர்களே! எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே! இப்படி வாய்த்துடுக்காவும், ஆணவமாவும் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்துக்காகவே, தமிழ்நாட்டு மக்கள் உங்களை இனிமேல் தோற்கடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்! அது உறுதி! நான் கேட்கிறேன்… தமிழ்மொழி, தமிழ் இனம் தமிழ்நாட்டை காக்க 80 ஆண்டு காலம் ஓயாமல் உழைத்த, தலைவர் கலைஞர் பெயரை மக்கள்நலத் திட்டங்களுக்கு வைக்காமல், யார் பெயரை வைப்பது? பதவி சுகத்துக்காக, கரப்பான்பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து சென்றீர்களே, உங்கள் பெயரையா வைக்க முடியும்? என்ன பேசுகிறீர்கள்? ‘கலைஞர்’ என்பது தமிழர்களின் மனதில் பொறிக்கப்பட்ட பெயர்! தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம்!

கலைஞர் தான் – எந்நாளும் தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரண்! அவருடைய கொள்கைகள், சிந்தனைகளைதான் நான் செயல்படுத்திக் கொண்டு வருகிறேன். விடியல் பயணம், புதுமைப்பெண், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – நான் முதல்வன் – தமிழ்ப்புதல்வன் என்று இந்த திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் எல்லாமே கலைஞர் பெயரைத்தான் சொல்லுகிறது! கலைஞரின் பிள்ளையாக மட்டுமல்ல, கலைஞருடைய தொண்டனாகவும் இதை நான் பெருமையாக சொல்கிறேன். எங்கள் தலைவர் பெயரால், தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கும் திட்டங்களை நிறைவேற்றியதில் நான் பெருமிதப்படுகிறேன்.

கலைஞரின் புகழ் வெளிச்சம், இந்தியா முழுக்க பரவி இருக்கிறது! அந்த வெளிச்சம் பழனிசாமியின் கண்களை கூச வைக்கிறது. அவ்வளவுதான். திராவிட மாடல் ஆட்சியின் புகழ் வெளிச்சத்தில் புதுவெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும்! என்னை பொறுத்தவரையில், என்றும் – எப்போதும் – உங்களுக்கு உறுதுணையாக உங்கள் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக என்னுடைய பணிகள் தொடரும்… தொடரும்… தொடரும்… என்று கூறி விடைபெறுகிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மு.க.ஸ்டாலின் விமர்சனம்: ஏக்கர் கணக்கில் புளுகும் புளுகுமூட்டை பழனிசாமி..!

ஒருவர் பொய் சொல்லலாம்; ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று வேடிக்கையாக சொல்லுவார்கள். அதை இனிமேல், கொஞ்சம் மாற்றி பொய் சொல்லலாம்; ஆனால், பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக் கூடாது என்றுதான் இப்போது சொல்லவேண்டும். அந்த அளவுக்குப் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து 40 ஆயிரம் நபருக்கு பட்டா வழங்கக் கூடிய இந்த மாபெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கொண்டார்.

மேலும், பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் பரப்புரை செய்தேன். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற கூட்டங்கள் வாயிலாக, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினேன். கழக ஆட்சி அமைந்ததும், அந்த மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என்று வாக்குறுதி அளித்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே அதற்காக ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தனி துறையை நான் உருவாக்கினேன்.

பெரும்பாலான மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். அது உங்களுக்குத் தெரியும். அப்படி வந்த மனுக்களில் பெருபான்மையான மனுக்கள் எனக்கு வீடு இல்லை, வீடு கட்டுவதற்கு இடம் இல்லை, இடமோ, வீடோ அதை வாங்குவதற்கு பணம் இல்லை, இதுவரையில், புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருகிறேன் என்று பல பேர் மனு அளித்திருந்தார்கள்.

மக்களின் குறைகளை தீர்ப்பது ஒரு அரசாங்கத்தின் கடமை என்ற அடிப்படையில், வருவாய்த் துறைக்கு நான் ஒரு உத்தரவிட்டேன். “வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைகளை எந்தளவுக்கு வழங்க முடியுமோ அந்தளவுக்கு வழங்குங்கள்” என்று நான் சொன்னேன். நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் போதிய அளவு இல்லை. ஆனால் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்து, வீடற்ற ஏழைகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டேன்.

தீவிரமான நடவடிக்கைகளை நாம் எடுத்த காரணத்தால், 2021-ல் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து இன்று வரை, மொத்தமாக இந்த மூன்று ஆண்டுகளில், 10 இலட்சத்து 3 ஆயிரத்து 874 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், இ-பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. நில உரிமையை வழங்குவதிலும், திராவிட மாடல் ஆட்சி தலைசிறந்த ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம் மட்டுமல்ல, இதற்கு சமதர்மக் கொள்கைளும் உண்டு. அதைத்தான் “சுயமரியாதைச் சமதர்மம்” என்று தந்தை பெரியார் குறிப்பிட்டார்.

சமூகத்தில் சமூகநீதியும், பொருளாதாரத்தில் சமநீதியும் வழங்கப்பட வேண்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, குடியிருப்போருக்கே மனை சொந்தம் என்று சட்டம் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். “நாங்கள் பல்லாண்டு காலம் ரத்தம் சிந்தி போராடியும் கிடைக்காத உரிமையை ஒரு துளி பேனா மையில் நிறைவேற்றிக் காட்டியவர் கலைஞர்” என்று பொதுவுடைமை இயக்கத்தின் மாபெரும் தலைவர் மணலி கந்தசாமி அவர்கள் பாராட்டினார். அதிகப்படியான நிலங்களை இலவசமாக ஏழை எளிய பாட்டாளிகளுக்கு வழங்கிய ஆட்சி தி.மு.க. ஆட்சி. இன்றைக்கு உங்கள் முகங்களில் தெரிகின்ற மகிழ்ச்சிதான் எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டு.

ஆட்சிப் பொறுப்பேற்றபோது சொன்னேன்… “மு.க.ஸ்டாலின் எனும் நான், வீட்டுக்கு விளக்காக இருப்பேன் – நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன். மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன். மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்” என்று சொன்னேன். அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். சில நாட்களுக்கு முன்னால், இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையான இந்தியா டுடே, இந்தியாவின் சக்தி வாய்ந்த ‘டாப் 10’ தலைவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்கள். இது தனிப்பட்ட ஸ்டாலினுக்குக் கிடைத்த பெருமையோ, புகழோ இல்லை. இந்த பெருமையையும், புகழையும் வழங்கியது, தமிழ்நாட்டு மக்களான நீங்கள்தான்! உங்களுடைய அன்பும், ஆதரவும்தான் இந்த ஸ்டாலினின் பலம்! தமிழ்நாட்டை உயர்த்த நான் என்னுடைய சக்தியை மீறியும் உழைப்பேன்! போராடுவேன்.

இந்த உழைப்பின் பயன்தான், அனைத்து புள்ளி விவரங்களையும் வெற்றிகரமாக இன்றைக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பேப்பரிலும், ரெக்கார்ட்டுகளிலேயும் ‘ஃபர்ஸ்ட் வந்துவிட்டோம்’ என்று நான் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. ஏனென்னால், நமக்கு பின்னால், நம்மை முந்தி வெற்றி பெறவேண்டும் என்று இன்னும் பலர் வந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, இன்னும் வேகமாக ஓடவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். இதைத்தான் நான் மற்ற அமைச்சர்களிடமும், அரசு அலுவலர்களிடமும் எதிர்பார்க்கிறேன்.

அந்த எதிர்பார்ப்புடன் தான் மாவட்டம்தோறும் கள ஆய்வை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறேன். இது பற்றியெல்லாம் எதுவும் புரியாத ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, மக்கள் நலனைப் பற்றி கிஞ்சித்தும் கவலப்படாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் என்ன சொல்கிறார்.. “மக்கள் நலத்திட்டங்களுக்கு மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், கலைஞர் பெயரில், மக்களுக்குப் பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை நான் ஒதுக்கி வருவதாக” உளறியிருக்கிறார்.

அதை படித்ததுமே சிரிப்புதான் வந்தது. ஒருவர் பொய் சொல்லலாம்; ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று வேடிக்கையாக சொல்லுவார்கள். அதை இனிமேல், கொஞ்சம் மாற்றி பொய் சொல்லலாம்; ஆனால், பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக் கூடாது என்றுதான் இப்போது சொல்லவேண்டும். அந்த அளவுக்குப் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார்.

நம்முடைய ஆட்சியில், நவீனத் தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி தலைவர் கலைஞர் பெயரால், மக்கள் நலனுக்காக நாம் செய்து கொண்டு வருகின்ற மூலதனச் செலவுகள், என்னென்ன; எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் என்னென்ன; என இதே மேடையில் என்னால் மணிக்கணக்கில் சொல்ல முடியும். நான் கேட்கிறேன்…

எதை நீங்கள் மக்களுக்குப் பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்கள்? தமிழ்நாட்டின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்திருக்கிறோமே… அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா? இல்லை, தென் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் – இளைஞர்களுக்கும் – அறிவுச் சுரங்கமாக மதுரையில் இருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு நூலகம்… அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா?

இல்லை, ஆயிரக்கணக்கான மக்களுடைய உடல்நலனையும் – உயிரையும் காப்பாற்றுகின்ற கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை… அதை பயனில்லை என்று சொல்கிறீர்களா? இல்லை, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு கோடியே 20 இலட்சம் தாய்மார்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் வாங்குகின்ற, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா?

எதைச் சொல்கிறீர்கள்கள்? பழனிசாமி அவர்களே! எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே! இப்படி வாய்த்துடுக்காவும், ஆணவமாவும் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்துக்காகவே, தமிழ்நாட்டு மக்கள் உங்களை இனிமேல் தோற்கடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்! அது உறுதி! நான் கேட்கிறேன்… தமிழ்மொழி, தமிழ் இனம் தமிழ்நாட்டை காக்க 80 ஆண்டு காலம் ஓயாமல் உழைத்த, தலைவர் கலைஞர் பெயரை மக்கள்நலத் திட்டங்களுக்கு வைக்காமல், யார் பெயரை வைப்பது? பதவி சுகத்துக்காக, கரப்பான்பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து சென்றீர்களே, உங்கள் பெயரையா வைக்க முடியும்? என்ன பேசுகிறீர்கள்? ‘கலைஞர்’ என்பது தமிழர்களின் மனதில் பொறிக்கப்பட்ட பெயர்! தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம்!

கலைஞர் தான் – எந்நாளும் தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரண்! அவருடைய கொள்கைகள், சிந்தனைகளைதான் நான் செயல்படுத்திக் கொண்டு வருகிறேன். விடியல் பயணம், புதுமைப்பெண், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – நான் முதல்வன் – தமிழ்ப்புதல்வன் என்று இந்த திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் எல்லாமே கலைஞர் பெயரைத்தான் சொல்லுகிறது! கலைஞரின் பிள்ளையாக மட்டுமல்ல, கலைஞருடைய தொண்டனாகவும் இதை நான் பெருமையாக சொல்கிறேன். எங்கள் தலைவர் பெயரால், தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கும் திட்டங்களை நிறைவேற்றியதில் நான் பெருமிதப்படுகிறேன்.

கலைஞரின் புகழ் வெளிச்சம், இந்தியா முழுக்க பரவி இருக்கிறது! அந்த வெளிச்சம் பழனிசாமியின் கண்களை கூச வைக்கிறது. அவ்வளவுதான். திராவிட மாடல் ஆட்சியின் புகழ் வெளிச்சத்தில் புதுவெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும்! என்னை பொறுத்தவரையில், என்றும் – எப்போதும் – உங்களுக்கு உறுதுணையாக உங்கள் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக என்னுடைய பணிகள் தொடரும்… தொடரும்… தொடரும்… என்று கூறி விடைபெறுகிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

எல்.முருகன் விமர்சனம்: திமுக என்கிற நரகாசுரனை விரைவில் ஒழிக்கப் போகிறோம்..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு “ரோஜ்கர் மேளா” என்ற பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கும் தலைவர் சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன் பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதன்படி, தற்போது வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து மக்களின் உணர்வுகளோடு தமிழக அரசு விளையாடக்கூடாது. நரகாசுரனை அழித்ததையே தீபாவளி திருநாளாகக் கொண்டாடுகிறோம். அதுபோல திமுக என்கிற நரகாசுரனை விரைவில் ஒழிக்கப் போகிறோம். அனைத்து பண்டிகைகளுக்கும் முதல்வர் வாழ்த்து சொல்ல வேண்டியது அவரது கடமை. அதை தமிழக முதல்வர் செய்ய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

தொல் திருமாவளவன் விமர்சனம்: “பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை..!”

“பாஜக எதிர்ப்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதியாக இல்லை” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தொல்.திருமாவளவன் பதிலளித்தார்.

அப்போது,“தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அக்கட்சியின் தலைவர் விஜய் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவரிடம் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர், பல்வேறு ஊகங்களுக்கு விடை சொல்வதிலேயே குறியாக இருந்துள்ளார். தனக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் இனிமேல் எழக்கூடிய விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில், அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.

நண்பர்கள் யார் என்று அடையாளம் காட்டுவதைவிட, தன்னுடைய எதிரிகள் யார் என்று அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார். யார், நம்முடைய நட்பு சக்திகள், யாருடன் நம்மால் இணைந்து செயல்பட முடியும் எனவும் தொண்டர்களுக்கு அடையாளம் காட்டுவதற்கு பதிலாக, தம்முடைய எதிரிகள் யாரென்று வரிசைபடுத்துகிறபோது, பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும், ஊழல் சக்திகள் இரண்டாவது எதிரி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிளவுவாத சக்திகளை குறிப்பிடும்போது, வெளிப்படையாக சொல்லவில்லை. குறிப்பிட்ட கட்சி, அமைப்பு என அடையாளப்படுத்தவில்லை. பெரும்பான்மை, சிறுபான்மை என பிளவுவாதம் பேசுவதில் உடன்பாடில்லை. இத்தகையை பிளவுவாத சக்திகளை எதிர்ப்போம் என மேம்போக்காக சொல்கிறார். இதில் முரண்பாடு தெரிகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்று சொல்கிறபோது, ஒரு சமத்துவ அரசியலை முன்மொழிகிறார் என மகிழ்ச்சி அடையும் நிலையில், பெரும்பான்மை – சிறுபான்மை என்று பேசுகிற அரசியலில் உடன்பாடு இல்லை என்கிறபோது, பெரும்பான்மை வாதத்தை பேசுகிறவர்கள் யார் என்று அடையாளப்படுத்துகின்ற தேவை இருக்கிறது. அவர்கள்தான், நம்முடைய எதிரிகள் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை வாதத்திலும் உடன்பாடு இல்லை, சிறுபான்மை அரசியலிலும் உடன்பாடு இல்லை என்றால், பெரும்பான்மை வாதத்துக்கு துணை போகிற நிலைபாடாக அமைந்து விடுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பான்மை பேசுகிற ஓரே கட்சி பாஜக. இதற்கு சங்பரிவார் துணை நிற்கிறது. இதனால் சிறுபான்மை சமூகத்தினர், எந்த அளவு பாதிக்கப்படுகின்றனர் என்பது உலகம் அறிந்த உண்மை. இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும், இந்த மண்ணில் அச்சத்துடனும், பீதியுடனும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற அரசியலில் நம்பிக்கை இல்லை, இதனை எதிர்க்கிறோம் என மேம்போக்காக சொல்லிவிட்டு கடந்து போகிறார்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பவுத்த, சமண மத சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து என்ன நிலைபாட்டை கொண்டுள்ளார் என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. குழப்பமான நிலையாகவே இருக்கிறது. பாசிச எதிர்ப்பை பற்றி பேசும்போது, கிண்டலடித்துவிட்டு, பாசிச எதிர்ப்பு ஒன்றுமில்லை என கடந்து போகிறார்.

பாசிஸ்ட் என யாரை குறிப்பிடுகிறார் அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா என்று கேட்கிறார். இதில் இரண்டு பொருள் இருக்கிறது. ஒன்று, பாசிச எதிர்ப்பு பெரிய விஷயமில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். மற்றொன்று, நீங்களும் பாசிஸ்ட்டுகள்தான், நீங்கள் ஒன்றும் ஜனநாயக சக்திகள் இல்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். நீங்களும் பாசிஸ்ட்டுகள்தான் என்று திமுகவை மட்டும் சொல்கிறாரா அல்லது அகில இந்தியளவில் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளை சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளும் பாசிச அரசியலை எதிர்க்கிறோம். இதனால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளையும் பாசிஸ்ட் என்று கேலி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. பாசிச எதிர்ப்பு தேவையில்லை என்பதால், பாஜக எதிர்ப்பும் தேவையற்றது என்ற பொருளும் வெளிப்படுகிறது. ஆகவே, பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பது, அவரது உரை மூலம் உணரமுடிகிறது.

விஜய் உரையில், திமுக எதிர்ப்பு நெடி அதிகம் வீசுகிறது. திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கிறார், குடும்ப அரசியல் என்று மு.கருணாநிதியின் குடும்பத்தை எதிர்க்கிறார். திமுக கூட்டணியையும், விமர்சனத்துக்குள் உட்படுத்துகிறார். திமுக மற்றும் திமுக அரசு எதிர்ப்பாகவே, அவரது உரையின் சாரம்சமாக இருக்கிறது. திமுக, திமுக அரசு, கருணாநிதியின் குடும்ப எதிர்ப்பு என்பது புதிய நிலைபாடு அல்ல. முதன்முதல் ஒலிக்கும் குரலும் அல்ல.

தமிழகத்தில் நீண்ட காலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் அரசியல்தான். ஆனால், மக்களிடம் எடுபடவில்லை என்பதுதான், வரலாறு நமக்கும் உணர்த்தும் உண்மையாக இருக்கிறது. விஜய்யிடம் நாம் எதிர்பார்த்த ஆக்கபூர்வமான அறிவிப்பு இல்லை, கொள்கை பிரகடனம் இல்லை, செயல்திட்டம் இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. கூட்டணி ஆட்சி என்ற விஜய் அறிவித்துள்ளது, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சியாகதான் பார்க்கின்றேன்.

உண்மையில், அதிகார பகிர்வு அளிப்பதாக இருந்தால், அவர் மறைமுக செயல்திட்டமாகதான் கையாண்டிருக்க வேண்டும். தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், இந்த அறிவிப்பை ஏற்று, எந்தெந்த கட்சிகள் வருவார்கள் என்பது கேள்விகுறியாக இருக்கிறது. எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள், அமைச்சர் பதவியா, துணை முதலமைச்சர் பதவியா என தீர்மானிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்பட வேண்டிய அரசியல் உக்தி.

திரைமறைவில் பேசப்பட வேண்டியது. வெளிப்படையாக பேசுகிறார் என்றால், திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார் என்று பொருள். ஆகவே, அவர் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாது. சரியான நேரத்தில் கையாளப்பட்ட விஷயம் அல்ல. யுத்த களத்தில் வீசுவதற்காக பதிலாக, வெறும் இடத்தில் கத்தியை வீசியுள்ளார். அவரது பார்வையில், இது அணுகுண்டு. இந்த அணுகுண்டு, அவருக்கு எதிராக வெடிக்க கூடியது என, நான் கருதுகிறேன்.

மத்தியில் கடந்த 1977-ல், இந்திரா காந்தியை வீழ்த்த, அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் ஒன்றுகூடி, சிதறி கிடந்த கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா என்ற ஒரு அணி உருவானது. இதனால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் கட்டாயமானது. காலத்தின் கட்டாயத்தால் கூட்டணி ஆட்சி உருவானதே தவிர, ஜனநாயக அடிப்படையில் தேசிய கட்சி, தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்ததன் மூலம் உருவானது இல்லை. இதுபோல், காலத்தின் கட்டாயத்தில்தான் கூட்டணி ஆட்சியை உருவாக்க முடியும்.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்துக்கொண்டு, தங்களது கட்சியை மெல்ல மெல்ல நீர்த்துபோக செய்ய, விரும்பமாட்டார்கள். இதற்கு வாய்ப்பில்லை. ஆனால், கட்டாயத்தை உருவாக்க வேண்டும். போட்டியிடும் இடங்களை கூடுதலாக பகிர்ந்து கொள்கின்ற முயற்சி வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க விரும்பினால், அதிமுகவுக்கு குரல் கொடுக்க வேண்டும். 25 சதவீதம் வாக்குகளை கொண்ட கட்சி. இன்னும், கூடுதலாக கட்சிகள் சேர்ந்தால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட முடியும் என்ற நிர்பந்தத்தை தருகின்றபோது, இடங்களை பகிர்ந்து கொள்வதிலும், அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதிலும் ஒரு கட்டாயம் உருவாகும்.

முதல் அடியே எடுத்து வைக்காத தமிழக வெற்றிக் கழகம், அதிகாரத்தில் பகிர்வு என்பது நம்பிக்கைக்கு உரியதாக இல்லை, ஏற்புடையதாகவும் இல்லை. அதிமுக, பாஜகவை அவர் கண்டுகொள்ளவில்லை. நண்பர்களா, எதிரிகளா என்று தொண்டர்களுக்கு அடையாளப்படுத்தவில்லை. அவர், திமுகவை எதிரி என்று அடையாளப்படுத்தி உள்ளார். திமுக அரசை ஊழல் அரசு என்று விமர்சித்துள்ளார். திமுக எதிர்ப்பு நெடி, திமுக அரசுக்கு எதிரான அரசியல் என்பதுதான் மேலோங்கி இருக்கிறது. ஆனால், இது பழைய அரசியல்தான். ஏற்கெனவே பல அரசியல் கட்சிகள் பேசியதுதான். அவருக்கு எந்தளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது விசிகவின் முதன்மையான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்கான சூழல் அகத்திலும், புறத்திலும் தணியவில்லை. மக்களும் அதற்கு தயாராகவில்லை. மக்களை தயார்படுத்தாமல், எந்த கோரிக்கையும் வெல்லாது. கூட்டணி ஆட்சிக்கான தேவை குறித்த, ஒரு விழிப்புணர்வை மக்களிடத்தில் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்தை நான் வழிமொழிகிறேன்” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

எச்.ராஜா விமர்சனம்: திருமாவளவன் போடும் வேஷங்கள் மிக அதிகம் ..!

தேர்தல் நெருங்க நெருங்க திருமாவளவன் போடும் வேஷங்கள் அதிகமாக உள்ளதுஎன எச்.ராஜா விமர்சித்துள்ளார். தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, “பாஜக அமைப்புத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக தீவிர உறுப்பினர் தேர்வு தொடங்கி உள்ளது. மண்டல்களுக்கு தீவிர உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக 1963-க்கு முந்தைய காலத்துக்கு செல்வதாக உணர்கிறேன். திமுகவின் அயலக அணி போதைப் பொருள் கடத்த மட்டும் வைத்திருப்பதாக எண்ணினோம். பட்டவர்த்தனமாக தேச விரோதமாக செயல்படும் அமைப்பாக அது இருக்கிறது. அந்நிய நாடுகள் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் பகுதி அல்ல என்று காட்டுவது இல்லை.

ஆனால் திமுக அயலக அணி, இந்திய பகுதியாக இல்லாமல் வரைபடம் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். திமுக மூத்தத் தலைவர்களே சிறுபிள்ளைகள் தலையிடுவதால் சிக்கல்கள் வருவதாக பேசி உள்ளனர். உதயநிதி வந்த பிறகு தரங்கெட்ட கட்சி திமுக என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது தொடர்பாக ஆளுநர் பற்றி உதயநிதி ஸ்டாலின் மிக அநாகரீகமாக பேசி உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாகரீகமான அரசியலை விரும்புவதாக இருந்தால் உதயநிதியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை சிதைத்தது திமுக தான்.

தொடர்ந்து எச்.ராஜா பேசுகையில், இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. பிரிவினைவாத தேச விரோத தீய சக்திகளின் கைகளில் தமிழகம் சிக்கியிருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க திருமாவளவன் போடும் வேஷங்கள் அதிகமாக உள்ளது என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

எச்.ராஜா விமர்சனம் : காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் இலவச இணைப்புகள் ..!

இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என எச்.ராஜா விமர்சித்துள்ளார். தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, “பாஜக அமைப்புத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக தீவிர உறுப்பினர் தேர்வு தொடங்கி உள்ளது. மண்டல்களுக்கு தீவிர உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக 1963-க்கு முந்தைய காலத்துக்கு செல்வதாக உணர்கிறேன். திமுகவின் அயலக அணி போதைப் பொருள் கடத்த மட்டும் வைத்திருப்பதாக எண்ணினோம். பட்டவர்த்தனமாக தேச விரோதமாக செயல்படும் அமைப்பாக அது இருக்கிறது. அந்நிய நாடுகள் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் பகுதி அல்ல என்று காட்டுவது இல்லை.

ஆனால் திமுக அயலக அணி, இந்திய பகுதியாக இல்லாமல் வரைபடம் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். திமுக மூத்தத் தலைவர்களே சிறுபிள்ளைகள் தலையிடுவதால் சிக்கல்கள் வருவதாக பேசி உள்ளனர். உதயநிதி வந்த பிறகு தரங்கெட்ட கட்சி திமுக என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது தொடர்பாக ஆளுநர் பற்றி உதயநிதி ஸ்டாலின் மிக அநாகரீகமாக பேசி உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாகரீகமான அரசியலை விரும்புவதாக இருந்தால் உதயநிதியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை சிதைத்தது திமுக தான். இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என எச்.ராஜா தெரிவித்தார்.