பி. கே. சேகர்பாபு: அன்புமணி ராமதாஸ் வழக்கிற்கு பயந்து மண்டியிடுவதற்கு பெயர் என்ன..!?

அன்புமணி ராமதாஸ் வழக்கிற்கு பயந்து மத்திய அரசிடம் மண்டியிடுவது கோழையா? உறவுக்கு கைகொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தோடு மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறித்து நம் மாநில வளர்ச்சியை குறைக்கும் போது, நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால்விடும் முதலமைச்சர் கோழை என அமைச்சர் பி. கே. சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

கும்பகோணம் அருகே வன்னியர் சங்கம் சார்பாக சோழ மண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், நாங்கள் கேட்பது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி நூறு சதவிகித மக்களுக்கும் இடஒதுக்கீட்டை வழங்குங்கள் என்பதுதான். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை. இதனை நடத்த அதிகாரமிருந்தும் உரிமை இல்லை என்று சொல்வது கோழைத்தனம் இல்லையா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அன்புமணி ராமதாஸின் இந்த பேச்சிற்கு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பி. கே. சேகர்பாபு பேசுகையில், வழக்கிற்கு பயந்து மத்திய அரசிடம் மண்டியிடுவது கோழையா? உறவுக்கு கைகொடுப்போம்.

உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தோடு மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறித்து நம் மாநில வளர்ச்சியை குறைக்கும் போது, நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால்விடும் முதலமைச்சர் கோழை என்று கூறுபவர்கள் கோழை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்களாக மட்டுமே இருக்க முடியும். ஒரு காலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதராக சர்தார் வல்லபாய் படேலை போற்றப்பட்டதுண்டு. மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடிய இரும்பு மனிதராக இன்று முதன்மையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை அன்புமணி ராமதாஸுக்கு சொல்ல விரும்புகிறோம் என பி. கே. சேகர்பாபு தெரிவித்தார்.

பி.கே. சேகர்பாபு கருத்து: காளியம்மாள் வெளியே நாதக..! உள்ளே திமுகவா..!?

காளியம்மாள் திமுகவில் இணைந்தால் அவரை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் உறவுகள் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு இருந்தது.

இதனால் காளியம்மாள் நாதக-வில் இருந்து விலகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது. அதை விட அவர் திமுகவில் இணைகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த விழாவில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் எல்லாம் கலந்து கொள்கிறார்கள். இது குறித்து காளியம்மாள் கூறுகையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்து இருந்தார்.

இது குறித்து சீமானிடம் கேட்ட போது கட்சிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம். அது போல் போனால் போகட்டும் என வழியனுப்பி வைக்க வேண்டும். இலையுதிர்காலம் போல் எங்கள் கட்சிக்கு இது களையுதிர்காலம் என தெரிவித்திருந்தார். எனவே காளியம்மாள் எந்த கட்சியில் இணைய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காளியம்மாள் மீது சீமான் அண்மைக்காலமாக கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் திமுகவில் இணைய போகிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சியில் இருந்து செல்வோர் செல்லலாம் என சீமானே சிக்னல் கொடுத்துவிட்டாரே! அப்படி வந்தால் காளியம்மாளை ஏற்பது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

பி.கே. சேகர்பாபு: எல்.முருகனின் கனவு பகல் கனவாக மாறும், தமிழ் கடவுள் முருகர் எங்களோடு தான் உள்ளார்..!

இது ராமானுஜரின் மண். ஒற்றுமைக்கு விலை மதிப்பு தர முடியாத மண், எல்.முருகனின் கனவு பகல் கனவாக மாறும், தமிழ் கடவுள் முருகர் எங்களோடு தான் உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர்ரோடு உறுதியாக உள்ளார் என பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசிய கேள்விக்கு பதில் அளிததார். அப்போது, “எல்.முருகன் பாஜக தலைவராக இருந்த பொழுது வேல் யாத்திரை நடத்தி புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அவர் வேல் யாத்திரைக்கு பிறகு தான் தமிழ்நாட்டு மண்ணில் திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கி காண்பித்தார் நம்முடைய முதல்வர்.

அண்ணாமலை ஆன்மீகத்தை கையில் எடுத்து ஏதாவது ஒரு வகையில் தமிழ்நாட்டை கைப்பற்றி விடலாம் என்று காவடி கூட எடுத்துப் பார்த்தார். காலில் செருப்பு அணியாமல் நடந்து பார்த்தார். ஆனால் தமிழ்நாடு மக்கள் 40 தொகுதிகளையும் திமுகவிற்கு என்று விடை அளித்தார்கள். தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி இந்த ஆட்சி. இந்த ஆட்சியைப் போல் வேறு எந்த ஆட்சியிலும் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்தது கிடையாது.

அறுபடை வீடுகளை புனரமைக்கும் பணிக்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். திருப்பரங்குன்ற சம்பவத்தை கையில் எடுத்து அரசியலாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இனத்தால், மொழியால், மதத்தால் தமிழ்நாட்டு மக்களை பிளவு படுத்தி பார்க்க முடியாது. மதுரை மண்ணில் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர். மாமன் – மச்சானாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

சங்கிகள்தான் திருப்பரங்குன்ற சம்பவத்தை பெரிதாக்க நினைக்கிறார்கள். இது ராமானுஜரின் மண். ஒற்றுமைக்கு விலை மதிப்பு தர முடியாத மண், எல்.முருகனின் கனவு பகல் கனவாக மாறும், தமிழ் கடவுள் முருகர் எங்களோடு தான் உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர்ரோடு உறுதியாக உள்ளார்.” என பி.கே சேகர்பாபு தெரிவித்தார்.

பி.கே. சேகர்பாபு: இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர்..!

எடுத்த நடவடிக்கையில் இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர். அதேபோல் புதிய கல்விக் கொள்கையிலும் உறுதியாக இருப்பார் என பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “ஒன்றிய அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு துணை முதலமைச்சர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றவுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர்.” என பி.கே சேகர்பாபு தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியே தீருவோம் என்ற தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு பி.கே சேகர்பாபு பதில் அளிததார். அப்போது, “தமிழ்நாட்டை வேறு கோணத்தில் பார்த்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஒன்றிணைந்து தமிழக முதல்வர் தலைமையில் வெகுண்டு எழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். எடுத்த நடவடிக்கையில் இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர். அதேபோல் புதிய கல்விக் கொள்கையிலும் உறுதியாக இருப்பார்.” என பி.கே சேகர்பாபு தெரிவித்தார்.

பி. கே. சேகர்பாபு: தவறு இருப்பின் இசைவாணி மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்..!

‘ஐ எம் சாரி ஐயப்பா’ பாடல் விவகாரத்தில் பாடகர் இசைவாணி மீதான நடவடிக்கை குறித்து “சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசைக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த இசைக்குழு கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் இசைவாணி, ‘ஐ யம் சாரி ஐயப்பா’ என்ற பாடலை பாடினார்.

இந்தப் பாடல் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பாடல் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கூறி சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது தொடர்பாக கானா பாடகர் இசைவாணி மீது மதுரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பி. கே. சேகர்பாபு அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, இந்த ஆட்சியை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஒரு மதத்தினர் பிற மதத்தினரை இழிவுபடுத்துவதை முதல்வர் அனுமதிக்கமாட்டார்.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நான் பத்திரிகைகள் மூலமாக அறிந்து கொண்டேன். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதத்தால், இனத்தால் மக்களை பிளவு படுத்தும் சக்திகள் இந்த ஆட்சியில் தலை தூக்க முடியாது என பி. கே. சேகர்பாபு தெரிவித்தார்.