தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை பறிப்பதுடன், இன்னொரு முறை எதிர்த்து பேசினாலும் அந்த குரலுக்கு பவர் கிடையாது என்ற அளவுக்கு மக்களவை தொகுதி மறுவரையறையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது என பத்ம பிரியா வீடியோ வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 என்பதைத் தேர்தல் சீர்திருத்தம் பரிசீலனை என்கிற பெயரால், 39 -ல் இருந்து 31 ஆக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இதனால் எட்டு நாடாளுமன்ற தொகுதிகளை தமிழ்நாடு இழக்க வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதுபற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுகவைச் சேர்ந்த பத்ம பிரியா வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவையே உலுக்கக்கூடிய மிகப்பெரிய ஸ்கேமுக்குரெடியாகுது ஒன்றிய அரசு.. தமிழ்நாடு மாதிரியான தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை பறிப்பதுடன், இன்னொரு முறை எதிர்த்து பேசினாலும் அந்த குரலுக்கு பவர் கிடையாது அப்படீன்ற அளவுக்கு மக்களவை தொகுதி மறுவரையறையை கையில் எடுத்துள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் எவ்வளவு MP சீட் கிடைக்கும் என்பதை மக்கள் தொகையை அடிப்படையாக முடிவெடுக்க போகிறது.
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு மக்கள் தொகையை குறையுங்கள் என மத்திய அரசு கூறியது. அதன்படி தென்னிந்திய மாநிலங்கள் மக்கள் தொகையை குறைப்பதை சரியாக செய்தார்கள். முக்கியமாக தமிழ்நாடு மாதிரியான மாநிலங்கள் செய்ததால், இன்றைக்கு நம்முடைய பிறப்பு விகிதம் 1.8 ஆக உள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் மாதிரியான மாநிலங்களில் 2.3 ஆக இருக்கிறது.. ஆனால் நீங்கள் சொன்னதை கேட்டு நடந்ததால் என்ன நடந்திருக்கு பாருங்க.
இன்றைக்கு மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து MP சீட் என்று சொல்கிறீர்கள்.. MP சீட் எண்ணிக்கை குறைந்துவிடும். பணம் ஒதுக்கீடு குறைந்துவிடும்.. அதிகாரங்களும் குறைந்துவிடும்.. ஏற்கனவே பணத்தை, பவரையும் கையில் வைத்துக் கொண்டு 4 கவர்மெண்ட்டை கையில் வைத்திருக்கும் நீங்கள்.. ஒட்டுமொத்த இந்தியாவையும் உங்கக்கிட்ட இருக்குற மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கிற நீங்க, அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உங்கள் சைடுநீங்கள் அதிகரித்துக் கொண்டால், தென்னிந்தியா எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியுமா? வெறும் பால் கரக்குற மாடு மாதிரி, வெறும் டேக்ஸ் கறக்குற மாடு மாதிரி தானே பயன்படுத்துவீங்க..
மண் சார்ந்து, மக்கள் சார்ந்து, மரபு சார்ந்து, மக்கள் சார்ந்து செயல்படுகிறோம்.. இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான பிரச்சனை மட்டும் கிடையாது. கட்சி, ஆட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை கிடையாது.. மக்களின் எதிர்காலத்தை முன்னெடுக்கும் பிரச்சனை.. ஏற்கனவே மாநில பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கிறது.முக்கியமான பார்த்தீங்கன்னா தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது.
உத்தரப்பிரதேசம், பீகார் பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்கிறது. காரணம் வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகம் என்கிறார்கள்.. இப்படி ஒரு நிலைமை வந்தால் என்னாகும்…மக்களாகிய நீங்களும் நானும் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.. ஆனால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே குரல் கொடுத்து விட்டார்.. இனிமே பற்றிக்கொள்ளும் காட்டுத்தீ போல்.. ஆனால் இப்படி ஒன்று நடக்கிறது என்பதை மக்களாகிய நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என பத்ம பிரியா தெரிவித்தார்.