விமர்சனங்களை விரட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

கடந்த 40 மாதங்களாக அதிகாரம் படைத்த சிலருக்கு மட்டும் சூரியன் உதிக்கிறது. மற்றவா்களுக்கு சூரிய கிரகணம் மட்டுமே தெரிகிறது என அண்ணாமலை லண்டனில் இருந்து அறைகூவல், பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரின் ஓட்டுகளை கூட்டணி மூலம் வாங்கி கொண்டு “கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என்று அடுத்தடுத்து வாரிசுகள் வருவது தான் சனாதனம் மூச்சு முட்ட சீமான் கதற, தந்தை, மகன் என்பதைத்தவிர, வேறு எந்த தகுதியும் இல்லாமல் என முருகன் உளற, திமுகவில் எத்தனையோ மூத்த முன்னோடிகள் உள்ளனர் . அவர்களுக்கு ஏன் துணை முதல்வர் பதவி வழங்க முன்வரக்கூடாது என அவர் பங்குற்கு எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதன்முதலில் கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்ட போது எழுந்த விமர்சனங்களை விட பல மடங்கு விமர்சனங்கள். விமர்சனங்களே இல்லாமல் 2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஓ. பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் பதவி, ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கும்போது மட்டும் ஏன் விமர்சனங்கள் விண்ணை முட்டுகின்றது.

உதயநிதி ஸ்டாலின் கலைஞரின் பேரன் என்பதில் எழுந்த விமர்சனங்கள் அல்ல மு.க. ஸ்டாலின் மகன் என்பதில் எழுந்த விமர்சனங்கள் அல்ல அதையும் தாண்டி பெரியார் கருத்துக்களை சுமந்து அண்ணாவின் வழியில் கலைஞரின் பாணியில் பகுத்தறிவு பகல்வனாக திராவிட கொள்கைகளை தன் நாவில் உச்சரித்து, வீறுகொண்டு வீரநடை போடுவதால் எழுந்த விமர்சனங்கள்.

விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் F4 கார் பந்தயம் நடத்தியதில் என்ன தவறு அதற்கு எழாத விமர்சனங்களா..!? மக்கள் நடமாட்டம், வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் நடப்பதால் கண்டிப்பாக டிராபிக் ஜாம் ஆகும். அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி இந்த போட்டியை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்று நிறைய பேர் பிளான் செய்தனர். சின்ன விபத்து நடந்தால் கூட அதை ஊதி பெரிதாக்க நிறைய பேர் காத்திருந்தனர். ரேஸ் தடத்தில் ஒரு நாய்குட்டி ஓடி வந்ததை கூட விமர்சனம் செய்தனர். ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா 4 சாலை பந்தயம் சென்னையில் நடத்தி கட்டியவர் தான் உதயநிதி ஸ்டாலின். அப்புறம் என்ன இருக்காதா வயித்தெரிச்சல்.

தொடரும்….

மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் வரிசையில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு

மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் வரிசையில் தமிழகத்தின் 3-வது துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2006-11-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2009-ஆம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 29-ஆம் தேதி துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2011-ஆம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின்: அனைத்து விமர்சனங்களுக்கும் எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன்..!

தமிழக அமைச்சரவை செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு 6 அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று இரவு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, * துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு… மிகப்பெரிய பொறுப்பு அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி. * நான் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சித்தார்கள்.

துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு… மிகப்பெரிய பொறுப்பு அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி. நான் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சித்தார்கள். துணை முதலமைச்சராகும் எனக்கு வரும் வாழ்த்துகளை போல் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வேன்.

எல்லா விமர்சனங்களையும், வரவேற்கிறோம், எனது பணிகள் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.