உதயநிதி ஸ்டாலின்: டெல்லியில் இருந்து வரட்டும் .. லோக்கலில் இருந்து வரட்டும்.. 2026 தேர்தல் திமுக கூட்டணிக்கே வெற்றி..!

யாராக இருந்தாலும், எதிர்த்து யார் வந்தாலும், எப்பேர்பட்ட கூட்டணி அமைச்சாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் சரி.. லோக்கலில் இருந்து வந்தாலும் சரி.. வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கே வெற்றி என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞர் சிலையை திறந்து வைத்து பேசினார்.

அப்போது, கடந்த மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வெற்றியை கொடுத்தீர்கள். எல்லாருக்கும் நன்றி.. இன்றிலிருந்து நாம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவோம். நம் திட்டங்கள் எல்லாத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளிகள் இருக்காங்க. அவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பிரச்சாரத்தை தொடங்குவோம். கலைஞரின் சிந்தனைகளை, எழுத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவே கலைஞர் சிலைகள் திறக்கப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெற்று தலைவரை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைப்போம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் யாராக இருந்தாலும், எதிர்த்து யார் வந்தாலும், எப்பேர்பட்ட கூட்டணி அமைச்சாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் சரி.. லோக்கலில் இருந்து வந்தாலும் சரி.. திமுகவுக்கே வெற்றி என்பதை இந்நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்: சிலர் குறைசொல்கிறார்கள்..! அவர்களுக்கு பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..!

திமுக அரசின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பயனளித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சிலர் மட்டும் குறைசொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் வார்த்தைகளால் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.

அதன் பின்னர், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளுக்கு கலைஞர்ஸ்போர்ட்ஸ் கிட் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 825 தொகுப்புகளை வழங்கினார். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 295 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.34.34 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்புகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு உபகரணங்களையும் – வங்கி கடன் இணைப்புகளையும் பெற்ற பயனாளிகளை வாழ்த்தி உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திராவிட மாடல் அரசு விளையாட்டுதுறைக்கு தருகின்ற முக்கியத்துவத்தின் காரணத்தால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் விளையாட்டு துறையை நோக்கி வருகிறார்கள்.

நம் அரசின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பயனளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் சிலர் மட்டும் குறைசொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் வார்த்தைகளால் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ANS.பிரசாத்: முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்லது கேட்டது கற்றுத் தர வேண்டும்..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ANS.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ANS. பிரசாத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி , தரங்கெட்ட முறையில் கண்ணிய குறைவாக விமர்சித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும்.

கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து உதயநிதி ஸ்டாலின் கண்ணியமற்ற முறையில் பேசியதற்கு நடவடிக்கை எடுக்காததன் விளைவு இன்று தமிழகத்தில் மோசமான தனிநபர் தாக்குதலுக்கும், வெறுப்பு அரசியலுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கள் கண்ணியற்றதாக உள்ளன. எனவே உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி கூறிய கருத்துக்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பொது மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் அருவருக்கத் தக்க தனிநபர் தாக்குதல் மறைந்து, கண்ணியமான அரசியல் சூழ்நிலைக்கு வித்திட வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு மாநிலத்தின் முதல் மகனாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வழிநடத்தக்கூடிய தலைமகனாக விளங்கக்கூடிய ஆளுநர் பொறுப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு? ஆளுநர் யார் மக்களின் பிரதிநிதியா? ஆளுநர் ஒரு போஸ்ட்மேன், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் சமீபத்திய பேச்சை குறிப்பிட்டு, ஆளுநர் தன்னுடைய சித்தாந்தங்களை சொன்னால் தமிழக மக்கள் ஆளுநர் ஆர்.என். ரவியை செருப்பால் அடிப்பார்கள்.

அவர் பெயர் ஆர்.என். ரவி அல்ல. ஆர்எஸ்.எஸ்.ரவி என்று தனிப்பட்ட முறையில் தமிழகத்தின் இளம் தலைவர், மரியாதைக்குரிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுபோன்று கடமை,கண்ணியம் கட்டுப்பாடு, என அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு பொறுப்பற்ற முறையில் பேசுவது நியாயமா?

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்திற்கு எதிராக கண்ணியமற்ற கருத்துக்கள், பிரதமர் மோடிக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளில் நாகரீகமற்ற விமர்சனங்கள், இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையில், தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலான பேச்சுக்கள் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களிடையே மதவாதத்தை தூண்டும் வகையிலான பேச்சுக்கள் என பேசி வருகிறார்.

ஆபத்தான, சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய அவரது பேச்சுக்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய முறையில் விசாரணை செய்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று, தானே நேரடியாக களத்தில் இறங்கி மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனிப்பட்ட முறையில் சென்று மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்து, தமிழக இளைஞர்களுக்கும் தமிழக அரசுத் துறையை அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அதேபோன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, உரிய முறையில் கட்சியிலும் ஆட்சியிலும் அரசியலிலும் சிறப்பாக செயல்பட நேர்மறை அரசியலை கற்றுக் கொடுத்து முன்மாதிரியான தலைவராக, தந்தையாக முதல்வராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!

சென்னை கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தீவிரமடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17-ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிகனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வில் சென்னை மேயர் பிரியா, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்..!

சென்னை, கவரப்பேட்டை அருகில் நடைபெற்ற ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து பீஹார் மாநிலம் தர்பாங்கா செல்லும் பாக்மதி அதிவிரைவு பயணிகள் ரயில் மோதியது.

இந்த ரயில் விபத்தில் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் ஒரு பெட்டியில் தீ பற்றிய நிலையில் விபத்தில் 19 பயணம் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி நின்று கொண்டிருந்த சரக்குரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தன. இந்த விபத்து நடந்த இடத்தில் 28 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 3 மருத்துவக் குழுவினர் மீ ட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் தங்கள் பயணத்தை தொடர முடியாத பயணிகள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கவரப்பேட்டையில் கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட்டன.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களில் மூன்று பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்த 4 பயணிகள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

முதலமைச்சர் உத்தரவின்பேரில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமுற்றுள்ள பயணிகளுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதன் விவரம் குறித்து, மருத்துவமனை டீனிடம் கேட்டறிந்தோம். சிகிச்சையில் உள்ளோருக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளையும் உடனுக்குடன் அளிக்க ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், விபத்து நடந்த இடத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விவரம், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான மாற்று ஏற்பாடு, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் போன்றவை குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டறிந்தார்.

மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் வரிசையில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு

மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் வரிசையில் தமிழகத்தின் 3-வது துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2006-11-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2009-ஆம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 29-ஆம் தேதி துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2011-ஆம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசை சௌந்திரராஜன்: யார் ஏமாற போகிறார்கள் என்பது அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், ஏமாற்றம் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், அமைச்சரவை மாற்றம் என்பது உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். GKM காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த இந்த பேட்டி மூலம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்போவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம் இதுபற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ” யார் ஏமாற போகிறார்கள் என்பது தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும் என்றார். முதலமைச்சர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என்று தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழிசை சௌந்திரராஜன்: முதலமைச்சரின் மாற்றம்..! துரைமுருகன் ஏமாற்றம்..! உதயநிதிக்கு ஏற்றம்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், ஏமாற்றம் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், அமைச்சரவை மாற்றம் என்பது உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். GKM காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த இந்த பேட்டி மூலம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்போவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம் இதுபற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ” யார் ஏமாற போகிறார்கள் என்பது தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும் என்றார். முதலமைச்சர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என்று தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒரே கேள்வி தான்..! சட்டென எழுந்து போன துரைமுருகன்..!

ராணிப்பேட்டை அருகே செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது குறித்து கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது என சட்டென எழுந்து சென்றதால் இன்று பேசு பொருளாகி உள்ளது.

கடந்த காலங்களில் சினிமாவில் நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் உதயநிதி ஸ்டாலின் வலம் வந்தார். ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் திடீரென தீவிர அரசியலில் இறங்கினார். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அந்த தேர்தலில் திமுக கூட்டணி , தமிழகம் புதுவையில் 40க்கு 39 தொகுதிகளில் வென்ற உறுதுணையாக இருந்தார். இதைடுத்து உதயநிதி ஸ்டாலினிக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

அதன்பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராக களமிறங்கினார். அந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். ஆனால் 2021-ல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என்று திமுகவினர் எதிர்பார்த்த நிலையில், அவர் அமைச்சராகவில்லை. எனினும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு பணிகளில் பங்கேற்று வந்தார். அவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தினார்கள்.

இதன்பின்னர் உதயநிதியை அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஆகியவை வழங்கப்பட்டன. இதில் சிறப்பு திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை என்பது தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், அனைத்து துறைகளும் உள்ளடக்கிய நிர்வாகி பணி ஆகும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வசம் இருந்த இந்த துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருப்பதால், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் உதயநிதி ஸ்டாலின் முடிவெடுக்க முடியும் என்கிற நிலை உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் , நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுபற்றி பலமுறை தகவல்கள் பரவி உள்ளன. ஆனால் அத்தனை முறையும் இது வதந்தி என்றே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஒருமுறை இதுபற்றி மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, ‘உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை’ என கூறினார்.

இதனிடையே மு.க. ஸ்டாலின் அமெரிக்க பயணத்துக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டு விடுவார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கேற்ப ஆகஸ்டு 19-ந் தேதி அன்று துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்று அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை. அண்மையில் கூட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர், வெளியிட்ட பதிவில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாக கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் திமுகவில் மூத்த அமைச்சரான துரைமுருகனை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் துரைமுருகனோ, உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராவதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.. மற்ற அமைச்சர்களை போல் உதயநிதியை துணை முதலமைச்சராக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று அண்மை காலத்தில் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.

அதேநேரம் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் எப்போது பதவி ஏற்பார் என்பது குறித்த கேள்விகளுக்கு கட்சியின் மூத்த நிர்வாகியான துரைமுருகன் மறுத்தே வருகிறார். ராணிப்பேட்டை அருகே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அணைகள் தொடர்பாக, நீர்பாசனம் தொடர்பாக, தர்மபுரி மக்களுக்கு காவேரி நீர் விடுவது தொடர்பாக என பல விஷயங்களுக்கு பதில் அளித்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் அந்த கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது என சட்டென எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற அமைச்சர்களை போல் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சர் ஆவார் என்பது குறித்த கேள்விக்கு , துரைமுருகன் பதில் அளிக்ககாதது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனினும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி அன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதனை துரைமுருகனும் முன்மொழிய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள். எனவே திமுகவினர் இன்னும் ஒருவாரம் வரை அதற்கு காத்திருக்க வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பு.

Pon Radhakrishnan: உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள்..!

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக்கப்பட்டால் பல்வேறு திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள் என பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் பாஜக முன்னாள் மாநில தலைவர் மறைந்த டாக்டர் கிருபாநிதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் நேற்று இரவு கலந்து கொண்ட பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது திருப்பதி லட்டில் கலப்படம் செய்து அதில் மிருகத்தின் கொழுப்பை வைக்கிறார்கள் என்றால் அவர்கள் மிருகத்தை விட கேவலமானவர்கள்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆக்கப்பட்டால் வாழ்த்துகள். கருத்து கூற எதுவும் இல்லை. முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் துணையாக நின்ற பல்வேறு அமைச்சர்கள் துணையற்று போவார்கள் என்பதை திமுகவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.