திருமாவளவன்: அதிமுக கூட்டணிக்கு சென்றிருந்தார்… நடுத்தெருவில் நின்றிருப்போம்..!

அதிமுக நமக்கு பல தொகுதிகளை தருவதற்கு தயாராக இருக்கிறது. கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இருக்கிறது என ஆசைகாட்டினார்கள் அதிமுக கூட்டணிக்கு சென்றிருந்தார் இன்றைக்கு நாம் நடுத்தெருவில் நின்றிருப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். புதுச்சேரியில் விசிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், “ஒரே நேரத்தில் 2 அணிகளுடனும் பேசுகிற ராஜதந்திர சூழ்ச்சி நமக்கு இல்லை.

பாஜகவிலும் சேரமாட்டோம், பாமகவுடனும் சேரமாட்டோம். அந்தக் கட்சிகளுடன் இடம் பெறுகிற கூட்டணியிலும் சேரமாட்டோம். இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு பதவிதான் முக்கியம் என்றால் இப்படி எல்லாம் என்னால் பேச முடியுமா?

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நண்பர் விஜய் கூட, புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தபோது கூட நாம் இருக்கிற கூட்டணி தொடர வேண்டும், அப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதன் மூலம் நாம் இருக்கிற அணி பலவீனப்பட்டால் பாஜகவுக்கு சாதகமாக அரசியல் சூழல் மாறிவிடும் என்பதை எல்லாம் யூகித்து அந்த விழாவையே புறக்கணித்தவன் திருமாவளவன்.

விஜய் கூட சொன்னார், அண்ணன் திருமாவளவன் இன்று வரவில்லை, ஆனால் அவரது மனசு நம்முடன் இருக்கும் என்று பேசினார். நான் நினைத்திருந்தால் விஜய் உடன் கூட்டணி அமைக்க கதவு திறந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் நான் அந்தக் கதவையும் மூடினேன் அதுதான் திருமாவளவன்.

அதிமுக நமக்கு பல தொகுதிகளை தருவதற்கு தயாராக இருக்கிறது. கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இருக்கிறது, துணை முதல்வர் பதவியையும் கோரலாம், கூடுதலாக 4 அமைச்சர் பதவிகளையும் பெறலாம் என ஆசைகாட்டிய பலர் உண்டு. நீங்கள் நினைக்கும் சராசரி அரசியல்வாதி அல்ல திருமாவளவன் என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் உறுதிப்படுத்தி இருக்கிறேன்.

இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்தி விட முடியாது. நான் யூகம் செய்தது சரியாகி விட்டது. ஏன் அதிமுக பாஜகவில் போய் சிக்கியது. யோசித்துப் பாருங்கள். நம்மை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றிய பிறகு அதிமுக இதே முடிவை எடுக்க வாய்ப்பு இருந்தது. அப்படி நடந்து இருந்தால் இன்றைக்கு நடுத்தெருவில் நின்றிருப்போம். அரசியல் நிலைப்பாடுகளை நாம் எடுக்கும்போதும் அம்பேத்கரை நெஞ்சில் நிறுத்திக்கொண்டுதான் எடுக்கிறோம்” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாவளவன் பேச்சு: திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான்..!

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் கருத்து சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள் என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். இந்நிலையில், கூட்டணி தொடர்பாக எழும் விவாதங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆதங்கத்தோடு தொல் திருமாவளவன் பேசியுள்ளார்.

ஃபேஸ்புக் லைவ் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் தொல் திருமாவளவன் பேசுகையில், “கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் பங்கேற்க வைப்பது மன அழுத்தத்தை தருகிறது. ஒரு நாள் கூட ஓய்வு இல்லை. ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என்கிற நிலை நீடிக்கிறது. கட்சிப் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையிலும் கூட, மஞ்சள் நீராட்டு, திருமண நிகழ்ச்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்து அழைத்து செல்வதில் நமது கட்சியினர் குறியாக இருக்கிறீர்கள். 24 மணி நேரமும் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.

ஆனால் எந்தப் பணிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது முக்கியமானது. ஏதோ நாம் திமுகவை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் தோற்றத்தை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது எல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல்.

நாம் அதை பொருட்படுத்தவில்லை, ஈடுபாடு காட்டவில்லை. விசிக எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொன்னால் அதற்கும் ஒரு துணிச்சல், தெளிவு, தொலைநோக்குப் பார்வை வேண்டும். இதனை புரிந்து கொள்ள முடியாத அற்பர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் நமக்கு எதிரான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.

விசிக பிற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல், ஒரு முன் மாதிரியாக இயங்கக் கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது. தொடர்ந்து அதை உறுதி படுத்தும். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் கருத்து சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.

எங்களது தொலைநோக்குப் பார்வையை பொறுத்துக் கொள்ளாத அற்பர்கள் அவதுாறு பரப்புகின்றனர். தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஆளும் கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் கையாளும் உத்தி என்பது வேறு. ஆளும் கட்சியோடு நாம் வைக்கும் கோரிக்கை வேறு. திமுக உடன் நாம் வைத்திருக்கும் கூட்டணி உறவு என்பது வேறு. இதனை நாம் புரிந்து கொண்டு கவனமாக இயங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் முடிவை அறிந்து கருத்து சொல்ல வேண்டும். அல்லது சொல்லாமல் தவிர்க்கலாம்.” என தொல் திருமாவளவன்  அறிவுறுத்தி உள்ளார்.

எல்லா கதவுகளை திறந்து வைத்து கொண்டு ஒரே நேரத்தில் பலரோடு பேரமெல்லாம் திருமாவளவனுக்கு தெரியாது..!

எல்லா கதவுகளையும் திறந்து வைப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் உறவை வைத்துக் கொள்வது எல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல் என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். இந்நிலையில், கூட்டணி தொடர்பாக எழும் விவாதங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் தொல் திருமாவளவன் பேசியுள்ளார்.

ஃபேஸ்புக் லைவ் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் தொல் திருமாவளவன் பேசுகையில், “கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் பங்கேற்க வைப்பது மன அழுத்தத்தை தருகிறது. ஒரு நாள் கூட ஓய்வு இல்லை. ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என்கிற நிலை நீடிக்கிறது. கட்சிப் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையிலும் கூட, மஞ்சள் நீராட்டு, திருமண நிகழ்ச்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்து அழைத்து செல்வதில் நமது கட்சியினர் குறியாக இருக்கிறீர்கள்.  24 மணி நேரமும் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.

ஆனால் எந்தப் பணிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது முக்கியமானது. ஏதோ நாம் திமுகவை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் தோற்றத்தை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது எல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல்.

நாம் அதை பொருட்படுத்தவில்லை, ஈடுபாடு காட்டவில்லை. விசிக எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொன்னால் அதற்கும் ஒரு துணிச்சல், தெளிவு, தொலைநோக்குப் பார்வை வேண்டும். இதனை புரிந்து கொள்ள முடியாத அற்பர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் நமக்கு எதிரான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.

விசிக பிற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல், ஒரு முன் மாதிரியாக இயங்கக் கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது. தொடர்ந்து அதை உறுதி படுத்தும். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் கருத்து சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.

எங்களது தொலைநோக்குப் பார்வையை பொறுத்துக் கொள்ளாத அற்பர்கள் அவதுாறு பரப்புகின்றனர். தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஆளும் கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் கையாளும் உத்தி என்பது வேறு. ஆளும் கட்சியோடு நாம் வைக்கும் கோரிக்கை வேறு. திமுக உடன் நாம் வைத்திருக்கும் கூட்டணி உறவு என்பது வேறு. இதனை நாம் புரிந்து கொண்டு கவனமாக இயங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் முடிவை அறிந்து கருத்து சொல்ல வேண்டும். அல்லது சொல்லாமல் தவிர்க்கலாம்.” என அறிவுறுத்தி உள்ளார்.

திருமாவளவன் விமர்சனம்: வார்டு எலக்ஷனில் கூட நிற்காத தவெக.. அதிமுகவுக்கு சவால் விடுக்கிறது..!

வார்டு எலக்ஷனில் கூட நிற்காத தவெக 62 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு சவால் விடுகிறது என தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்றைய முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதலமைச்சரை, மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்துப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், கதறல் சத்தமெல்லாம் எப்படியிருக்கு? இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்ற சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதற்கு, தயாராக வேண்டிய அவசியத்தை, நீங்கள் அனைவருமே நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ்வது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னராட்சிப் போல நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?

மாநாடு தொடங்கி, நான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் நிகழ்ச்சி, தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, அன்றைய தினம் நகருக்குள் எந்த திருமண மண்டபமும், அரங்கமும் நமக்கு கொடுத்துவிடக் கூடாது என்று, மாமல்லபுரம் சென்று அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஏன் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் வரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள் வந்தன? அத்தனை தடைகளையும் தாண்டி தவெக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.அது தொடர்ந்து நடக்கும்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் அதைக்காட்ட வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என்று அடிக்கடி அறிக்கைகள் கொடுத்துவிட்டு, இங்கு நீங்கள் செய்யும் ஆட்சி மட்டும் என்னவாம்? அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதானே.

ஒரு கட்சித் தலைவனாக எனது கட்சித் தொண்டர்களையும், என் நாட்டு மக்களையும் சந்திப்பதற்கும், பேசுவதற்கும் தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்றால் சென்றே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்.நேற்று வந்தவன் எல்லாம் முதல்வராக கனவு காண்கிறேன் என்று கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன், மற்ற எந்த கட்சிகளுக்கும் இல்லாத தடைகளை விதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றைத் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது மன உளைச்சலையும், மன வேதனையையும் தருகிறது. சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு எல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரி கவர்மென்ட்தான் காரணம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும்.

மேலும், தொடர்ந்து பேசுகையில், இந்த பொதுக்குழு வழியாக, தமிழக மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கப் போகிறோம்.தவெக ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சி. தவெக தலைமையில் அருதிப்பெரும்பான்மை பெற்ற ஆட்சி.அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சி. அப்படியாக இந்த ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை முறையாக கண்டிப்பாக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவத்தில் கவனம் செலுத்துவோம். அதுவும், அனைவருக்கும் எளிதாக, சமமாக கிடைப்பதை உறுதி செய்வதுதான் தவெகவின் இலக்கு. 2026-ல் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என விஜய் பேசியிருந்தார்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் நடந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். அப்போது, தவெக தலைவர் விஜய்யின் பேச்சை கடுமைாக விமர்சனம் செய்தது மட்டுமின்றி தவெகவை கிண்டல் செய்து பேசினார். ஏதோ தனியார் நிறுவனம் சர்வே நடத்தினார்களாம். அதில் 2-ஆம் இடம் வந்து விட்டார்களாம். அடுத்து அவர் தான் ஆட்சியை பிடிக்க போகிறாராம். பாவம் அவரை உசுப்பிவிடுறாங்க. வேண்டும் என்றே. அவருக்கு ஆசையை தூண்டிவிட்டு உள்ளே வந்து களமிறங்கி விளையாடுங்க என்று சொல்கின்றனர்.

2026 சட்டசபை தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி. ஒரு பக்கம் திமுக. இன்னொரு பக்கம் தவெக. அதில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நீங்கள் போட்டியில்லை. உங்களை விட நாங்கள் தான் பெரிய சக்தி என்று கூறுகிறார். போட்டி என்பது திமுகவுடன் இப்போது கிடையாது. 2-வது இடத்தில் யார் என்பது தான் விஜய்க்கும், எடப்பாடிக்கும் போட்டி. 2-வது இடம் யாருக்கு என்பதில் தான் அண்ணாமலைக்கும், விஜய்க்கும் போட்டி. இந்த தமிழக அரசியல் களத்தில் 2-வது இடம் பிடிப்பது யார்? என்பதில் சண்டை நடக்கிறது. அந்த சண்டை எடப்பாடி பழனிச்சாமிக்கும், விஜய்க்கும் இடையே நடக்கிறது. திமுக கூட்டணியுடன் அவர்கள் மோத முடியாது. அதனை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். திமுக, தவெக இடையே தான் போட்டி என்று அவர் யாருக்கு பதில் சொல்கிறார்.

அது திமுகவுக்கு சொல்கிற பதிலா? கிடையாது. எங்கள் 2 பேருக்கும் தான் போட்டி என்று ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவுக்கு விடுக்கிற சவால்.சி வோட்டர் சர்வே அதிமுகவுக்கு ஒரு நெருக்கடியை தருகிறார். நீயா? நானா? 2-வது இடம். அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தான் முதன்மையாக இருக்கிறது. அதனை எதிர்க்கும் வலு அதிமுக, பாஜகவுக்கு இல்லை. அதனை எதிர்க்கும் வலு எங்களுக்கு தான் இருக்கிறது என்று வார்டு எலக்ஷனில் கூட நிற்காத கட்சி 62 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு சவால் விடுகிறது. நீங்கள் 2 பேரும் சண்டை போட்டு கொள்ளுங்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மை தான். ஆனால் ஒரு உண்மையை மறந்து விடக்கூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து உருவாக்கிய மதசார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்” என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

எச்.ராஜா பேச்சு தமிழ்நாட்டில் நடக்கும் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு திருமாவளவன், சுப.வீரபாண்டியனே காரணம்..!

தமிழ்நாட்டில் நடக்கும் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு திருமாவளவன் மற்றும் சுப.வீரபாண்டியன் ஆகியோரே காரணம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசி இருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகரில் நடைபெற்ற உலக பிராமணர்கள் நலச்சங்கத்தின் 11 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு எச்.ராஜா பேசுகையில், சாதி மறுப்பு திருமணம் நடந்தது என்பதற்கு புராணக் காலத்திற்கு செல்ல தேவையில்லை. கல்கி சதாசிவம், எம்எஸ் சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது யாராவது அரிவாள் எடுத்தார்களா? ஏன் எடுக்கவில்லை என்றால், அப்போது நீங்கள் பிறக்கவில்லை. இன்று ஆவணக் கொலைக்கு காரணமே சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தான். நீங்கள்தான் ஆணவக் கொலை செய்ய தூண்டி விடுகிறீர்கள். அன்று நீங்கள் பிறக்காததால் யாரும் அரிவாள் எடுக்கவில்லை. இன்று நீங்கள் இருப்பதால், அரிவாள் எடுக்கிறார்கள். இந்த தீயசக்திகளுக்கு எதிரான உண்மை நிலையை, நாம் நம் மக்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என எச்.ராஜா பேசினார்.

திருமாவளவன் கேள்வி: முன்னேறிய சமூகத்திற்கு ரூ.8 லட்சம் வருமான வரம்பு..! ஓபிசிக்கு ரூ.2 லட்சம்..! எஸ்சி, எஸ்டிக்கு ரூ.2.5 லட்சம் ஏன் இந்த பாகுபாடு அண்ணாமலை கேட்டிருக்காலாமே?

முன்னேறிய சமூக மாணவர்களின் பெற்றோருக்கு ரூ.8 லட்சம் வருமான வரம்பு. ரூ.8 லட்சத்திற்கு மேல் பெற்றோரின் வருமானம் இருந்தால் மட்டுமே போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் இல்லை. ஆனால் ஓபிசி மாணவர்களின் பெற்றோருக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சம்தான். ரூ.2 லட்சத்திற்கு மேல் பெற்றோர் சம்பளம் பெற்றால், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடையாது ஏன் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு முக்கியமானதாக இருக்கிறது. நாகரீக அணுகுமுறை என்பதை முற்றாக தவிர்த்துவிட்டு, யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்று நிலைப்பாட்டை எடுத்து அரசியல் செய்கிறார். அவரது அணுகுமுறை வியப்பாக இருக்கிறது. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை.

எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் அனுமதி கேட்டுள்ளார்கள். அவ்வளவுதான். அதற்கான அனுமதி பெறவில்லை, வகுப்புகள் தொடங்கப்படவில்லை, இன்னும் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை. ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அந்த இடம் எங்களுடையது என்பதால் என் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு மாணவர்களின் நலனில் அக்கறை இருந்திருந்தால், மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை பெற்று தந்திருக்கலாம். அதற்காக குரல் கொடுக்கவில்லை.

அதேபோல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகிற கல்வி நிறுவனம், விளிம்பு நிலை மக்களுக்கான கல்வி நிறுவனமாக இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு முறையாக நிதி வருவதில்லை. மத்திய அரசு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான உதவித் தொகை தரப்படுவதை நிறுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது.

ஏழை மாணவர்களின் கல்வி முக்கியம் என்று அண்ணாமலை கருதினால், அவர்கள் போஸ்ட் மெட்ரிக் ஸ்கார்லர்ஷிப் வாங்கி கொடுப்பதை பற்றி பேசி இருக்க வேண்டும். அதனை ஏன் அண்ணாமலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து குரல் கொடுத்திருக்கிறாரா? அந்த ஸ்காலர்ஷிப்பிற்கு கூட வருமான வரி விதிக்கிறார்கள்.

முன்னேறிய சமூக மாணவர்களின் பெற்றோருக்கு ரூ.8 லட்சம் வருமான வரம்பு. ரூ.8 லட்சத்திற்கு மேல் பெற்றோரின் வருமானம் இருந்தால் மட்டுமே போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் இல்லை. ஆனால் ஓபிசி மாணவர்களின் பெற்றோருக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சம்தான். ரூ.2 லட்சத்திற்கு மேல் பெற்றோர் சம்பளம் பெற்றால், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடையாது.

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் பெற்றோர் ரூ.2.5 லட்சம் ஊதியம் பெற்றால், அவர்களுக்கும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடையாது. இவ்வளவு மோசமான வருமான வரம்பை வைத்துள்ள மத்திய அரசிடம் சென்று அண்ணாமலை கேட்டிருக்காலாமே? அண்ணாமலை ” போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கொடுக்க கூடாது என்பதற்காக சூது, சூழ்ச்சி செய்யும் பாஜக இவ்வளவு பெரிய பாடுபாடு வைத்துள்ளது. இந்த பாகுபாட்டை களைவதற்கு பாஜகவும், அண்ணாமலையும் என்ன குரல் கொடுத்துள்ளார்கள்? இந்தி மீது வெறுப்பு கிடையாது.

ஆனால் இந்தியை இந்தியாவின் மூலைகளிலும் கற்றாக வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது. ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா? அரசுப் பள்ளியில்தான் மாணவர்கள் அதிகமாக படிக்கிறார்கள். இந்தியா முழுக்க ஒரே கொள்கையை திணிப்பது ஏன்? எல்லோரும் இந்தியை பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது? என்னை ஏன் இந்தி மாணவனாக மாற்ற முயற்சிக்கிறாய்? இதற்கு பின் ஒரு மறைமுக நோக்கம் இருக்கிறது. தேசத்தில் ஒரே மொழிக் கொள்கை என்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்தார்.

திருமாவளவன் கேள்வி: ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா..?

ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா? எல்லோரும் இந்தியை பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது? என்னை ஏன் இந்தி மாணவனாக மாற்ற முயற்சிக்கிறாய் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு முக்கியமானதாக இருக்கிறது.

நாகரீக அணுகுமுறை என்பதை முற்றாக தவிர்த்துவிட்டு, யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்று நிலைப்பாட்டை எடுத்து அரசியல் செய்கிறார். அவரது அணுகுமுறை வியப்பாக இருக்கிறது. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை. எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் அனுமதி கேட்டுள்ளார்கள். அவ்வளவுதான். அதற்கான அனுமதி பெறவில்லை, வகுப்புகள் தொடங்கப்படவில்லை, இன்னும் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை. ஒரு அறிவிப்பு வந்துள்ளது.

அந்த இடம் எங்களுடையது என்பதால் என் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு மாணவர்களின் நலனில் அக்கறை இருந்திருந்தால், மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை பெற்று தந்திருக்கலாம். அதற்காக குரல் கொடுக்கவில்லை. அதேபோல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகிற கல்வி நிறுவனம், விளிம்பு நிலை மக்களுக்கான கல்வி நிறுவனமாக இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு முறையாக நிதி வருவதில்லை. மத்திய அரசு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான உதவித் தொகை தரப்படுவதை நிறுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது.

ஏழை மாணவர்களின் கல்வி முக்கியம் என்று அண்ணாமலை கருதினால், அவர்கள் போஸ்ட் மெட்ரிக் ஸ்கார்லர்ஷிப் வாங்கி கொடுப்பதை பற்றி பேசி இருக்க வேண்டும். அதனை ஏன் அண்ணாமலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து குரல் கொடுத்திருக்கிறாரா? அந்த ஸ்காலர்ஷிப்பிற்கு கூட வருமான வரி விதிக்கிறார்கள். முன்னேறிய சமூக மாணவர்களின் பெற்றோருக்கு ரூ.8 லட்சம் வருமான வரம்பு. ரூ.8 லட்சத்திற்கு மேல் பெற்றோரின் வருமானம் இருந்தால் மட்டுமே போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் இல்லை. ஆனால் ஓபிசி மாணவர்களின் பெற்றோருக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சம்தான். ரூ.2 லட்சத்திற்கு மேல் பெற்றோர் சம்பளம் பெற்றால், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடையாது.

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் பெற்றோர் ரூ.2.5 லட்சம் ஊதியம் பெற்றால், அவர்களுக்கும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடையாது. இவ்வளவு மோசமான வருமான வரம்பை வைத்துள்ள மத்திய அரசிடம் சென்று அண்ணாமலை கேட்டிருக்காலாமே? அண்ணாமலை ” போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கொடுக்க கூடாது என்பதற்காக சூது, சூழ்ச்சி செய்யும் பாஜக இவ்வளவு பெரிய பாடுபாடு வைத்துள்ளது. இந்த பாகுபாட்டை களைவதற்கு பாஜகவும், அண்ணாமலையும் என்ன குரல் கொடுத்துள்ளார்கள்? இந்தி மீது வெறுப்பு கிடையாது.

ஆனால் இந்தியை இந்தியாவின் மூலைகளிலும் கற்றாக வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது. ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா? அரசுப் பள்ளியில்தான் மாணவர்கள் அதிகமாக படிக்கிறார்கள். இந்தியா முழுக்க ஒரே கொள்கையை திணிப்பது ஏன்? எல்லோரும் இந்தியை பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது? என்னை ஏன் இந்தி மாணவனாக மாற்ற முயற்சிக்கிறாய்? இதற்கு பின் ஒரு மறைமுக நோக்கம் இருக்கிறது. தேசத்தில் ஒரே மொழிக் கொள்கை என்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்தார்.

திருமாவளவன்: இசைவாணி பிரச்சினை அதானி விவகாரத்தை திசை திருப்ப..!

அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினை என விசிக தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். “அதிமுக ஆட்சியின்போது டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் அப்படி இல்லை எனவும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு முன்மொழிவும் வரவில்லை என மத்திய பாஜக அரசு மறுதலித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

குளிர்கால கூட்டத் தொடரில் அதானி பிரச்சினை, உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பிரச்சினை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. பாஜகவால் கொண்டு வரப்படும் மக்கள் விரோத சட்டங்களை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முறியடிக்க முயற்சிப்போம். இதற்கான செயல்திட்டங்களை இண்டியா கூட்டணி கட்சியினர் வரையறுப்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் இடையேயான விவகாரம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அரசு அதை பார்த்துக் கொள்ளும். மதத்தையோ, மத உணர்வையோ காயப்படுத்தும் நோக்கில் இசைவாணி பாடவில்லை. அதானி போன்ற பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றனர். இது ஏற்புடையதல்ல. இசைவாணியை கைது செய்ய வேண்டும் எனக் கூறுவது கண்டனத்துக்குரியது” என திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாவளவன் முதலமைச்சர் கனவு குறித்த கேள்விக்கு.. “ஆசையே அலை போலே… ” பாடல் பாடி ஜெயக்குமார் பதில்..!

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே என பாட்டு பாடி பதிலளித்த ஜெயக்குமார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வடக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக கள ஆய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் தனக்கும் முதலமைச்சர் கனவு இருப்பதாகவும் அதற்கான மையப் புள்ளிகள் அமையவில்லை என கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு ஜெயக்குமார் அவர்கள், ‘ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே என தொல் திருமாவளனை பாட்டு பாடி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”கனவு காணுங்கள் என அப்துல் கலாம் கூறியது போன்று எல்லோரும் கனவு காணலாம். அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், பழனியில் , தனியார் திருமண மண்டபத்தை திறந்துவைத்து தொல் திருமாவளவன் பேசினார். அப்போது, நானும் முதலமைச்சராக வேண்டும், எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று 20 வருடங்களுக்கு முன்பாக பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்த செய்தியை சுட்டிக் காட்டினார்.

அதற்காக இன்று முதல் புள்ளியை வைத்துள்ளோம் இன்னும் கோலங்கள் போட பல புள்ளிகள் தேவைப்படுகிறது , ஒரு புள்ளி வைத்துக் கொண்டு கோலம் போட முடியாது நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைக்க வேண்டும் அடி எடுத்து வைத்தவுடன் ஆட்சியில் வென்றுவிட முடியாது இப்போது பலர் கட்சி ஆரம்பித்து உடனே முதலமைச்சர் கனவோடு இருக்கிறார்கள் என தொல் திருமாவளவன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பதுரை பேச்சு: “திருமாவளவன் எங்களுடன் தான் இருக்கிறார்..!”

திருமாவளவன் எங்கு செல்வார் என இன்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் இங்குதான் இருக்கிறார், எங்களுடன் தான் இருக்கிறார்.” என அதிமுக முன்னாள் MLA இன்பதுரை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் சார்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர். இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசினார். அப்போது, “திருமாவளவன் எங்கு செல்வார் என இன்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் இங்குதான் இருக்கிறார், எங்களுடன் தான் இருக்கிறார்.” என்றார். தொடர்ந்து பேசிய இன்பதுரை, “நான் அரசியல் பேச வரவில்லை.. வழக்கறிஞர்கள் எங்கு இருந்தாலும் அவர் வருவார் எனத் தெரியும். அவரும் ஒரு வழக்கறிஞர். திருமா நம்மோடுதான் இருக்கிறார். எப்போதும் நம்மோடுதான் இருப்பார். நல்லவர்கள் பக்கம் இருப்பார்” என இன்பதுரை தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக விசிக-வை முன்வைத்து விவாதங்கள் நடந்து வரும் சூழலில், இன்பதுரையின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.