அதிமுக ஆட்சியில் பாடப்பட்ட “ஐ அம் சாரி ஐயப்பா..” பாடல் திமுக ஆட்சியில் பூதாகரமானது எப்படி..!?

அதிமுக ஆட்சியில் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு “ஐ அம் சாரி ஐயப்பா..” என்ற பாடல் இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடிய பாடல் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டிலேயே அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்கின்றனர்களா என்ற கேள்வி எழுகின்றது.

நாட்டில் மாட்டுக்கறி விஷயம் பெரிதான போது நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழுவில் ஏ அந்த கறி.. இந்த கறி.. எந்த கறிய துன்னா உனக்கென்னா… நீ யாரா வேணா இருடா எனக்கென்னா.? “பெரிய கறி” என்ற பாடலை பாடியதன் மூலம் வடசென்னையை பூர்வீகமாகக் கொண்ட கானா பாடகி இசைவாணி பெரிய அளவில் பிரபலமானார்.

ஜாதி ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்ட சமூகத்தில் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கலைந்து சமூக உரிமைகளை கூறும் பொருட்டு நீலம் பண்பாட்டு மையம் கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு உருவாகி ஒரு பாடல் வரியோடு the casteless collective பல பாடல்களை இயற்றியது.

“2018-ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்த சமயம், கேரளாவில் உள்ள சபரிமலைக்குப் பெண்கள் செல்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலினப் பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அப்போது, ஐ அம் சாரி ஐயப்பா என்று ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஐ அம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா…? நான் தாடிக்காரன் பேபி.. இப்ப காலம் மாறிப்போச்சு.. இனி தள்ளி வைத்தால் தீட்டா.. நான் முன்னேறுவேன் மாஷா.. என்ற வரிகள் அதில் இருக்கிறது.

பொதுவாக ஐயப்பன் கோவிலில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் 60 வயதை கடந்த பெண்கள் மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ள நிலையில் இவர் ஐயப்ப பக்தர்கள் உணர்வை சீண்டும் வகையில் பாடல் பாடி இருக்கிறார் என்று இவர் மீது பலர் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.

அதை ஆதாரமாகக் கொண்டு மிகப்பெரிய விவாதமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கங்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாக நின்றன. இதே காலகட்டத்தில் தான் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் இந்த கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு உருவானது.

சமூகப் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கலைந்து சமூக உரிமைகளை கூறும் ஒரு பாடல் வரியோடு the casteless collective பல பாடல்களை இயற்றியது. ஜாதி ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்டவைகள் இதில் அடங்கும்.

இந்நிலையில், கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு,  ஐ அம் சாரி ஐயப்பா என்கிற பாடல் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையை கூறுகிற வரிகளோடு துவங்கி பின் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் பொதுவான உரிமைகளை கூறும் பாடலாக பாடல் பாடப்பட்டுள்ளது.

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடிய பாடல் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறது. அதாவது, அதிமுக ஆட்சியில் பாடப்பட்ட பாடல் இன்று திமுக ஆட்சியில் பூதாகரமாக பரப்பப்பட்டு நாட்டிலேயே அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மற்ற முயற்சி செய்கின்றனர்களா என்ற கேள்வி எழுகின்றது.

ஆர்.பி.உதயகுமார்: டேக் இட் ஈஸி…! கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது..!

கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். எனவே, இதை “டேக் இட் ஈஸியாக” எடுத்துக் கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 -ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவில் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கள ஆய்வுக்கு என்று தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, எஸ்பி வேலுமணி உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த 11-ஆம் தேதி சென்னையில் தொடங்கிய அதிமுக கள ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் தற்போது திருநெல்வேலி, கும்பகோணம்,மதுரை என பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது இந்த கலாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தலைமை தாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலியில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி, மோதல் மற்றும் கும்பகோணத்தில் நிர்வாகிகள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மதுரையிலும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுரை திருமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் திங்கள்கிழமை இரவு கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திருமங்கலம் எம்எல்ஏ, ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலளித்தார். அப்போது, “234 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவின் பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் தலைமையில் கள ஆய்வு நடைபெறுகிறது. உறுப்பினர் சீட்டு முழுமையாக சென்றடைந்துள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். ஒன்பது பேர் கொண்ட குழுவாக வாக்குச்சாவடி கிளை கழகம் அமைக்க வேண்டும் பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எம்ஜிஆர் மற்றும் ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை போல ஜெயலலிதாவின் நூற்றாண்டு விழாவையும் முதல்வராக அவர் நடத்தக்கூடிய காலம் வரும். திமுகவில், வாய் பூட்டு சட்டம் போடப்பட்டுள்ளது. அந்த கட்சியில் அப்பா அல்லது மகன் மட்டும்தான் பேசுவார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. அதிமுக தனது கட்டமைப்பை வலிமைப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ளோம்.

கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். இதைவிட பெரிய கருத்து மோதல்கள் எல்லாம் நடந்துள்ளது. எனவே, இதை டேக் இட் ஈஸி-ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஆணவத்தின் உச்சிக்கு சென்று விட்டார். அனைவரையும் வேலை இல்லை என்று தான் பேசுகிறார். அவருக்கு தான் வேலை இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் தான் அவருக்கு எல்லாம் புரியும். அதனால் தான் எதிர்க்கட்சித் தலைவர் பரிசை அவருக்கு அளிப்போம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ: தமிழக காவல்துறை உருட்டல், மிரட்டல்… அதிமுககாரனிடம் பருப்பு வேகாது..!

நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வந்தவர்கள் காவல்துறை உருட்டல், மிரட்டல், அதிமுககாரனிடம் பருப்பு வேகாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை விளாங்குடி பகுதியில் எம்ஜிஆர் மன்றம் மற்றும் அதிமுக கொடியேற்றி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மதுரையில் அதிமுக கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் இடையூறு கொடுத்ததற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை உருட்டல், மிரட்டல், அதிமுககாரனிடம் பருப்பு வேகாது, நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வந்தவர்கள். நாங்கள் காவல்துறையை கண்ணியமிக்கவர்களாக நடத்தி உள்ளோம். நாட்டில் சட்டம் ஒழுங்கு கேவலமாக உள்ளது.

தபால் தந்தி நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணை ஒருவர் தடவி விட்டு செல்கிறார். ஆசிரியர் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்குள் சென்று வெட்டுகிறார்கள். உச்சநீதிமன்றம் இந்த திமுக அரசாங்கத்தை ஆட்சி நிர்வாகம் சரியில்லை என பலமுறை தலையில் கொட்டுகிறது. காவல்துறைக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இல்லை. மதுரையில் சித்திரை திருவிழாவில் மக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அரசு ஊழியர்களை அட கொலைகார பாவிகளா.. என விமர்சனம் செய்த திண்டுக்கல் சீனிவாசன்..!

அட கொலைகார பாவிகளா… எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.. என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். தமிழகத்தில் 2026 -ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவில் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கள ஆய்வுக்கு என்று தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, எஸ்பி வேலுமணி உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சாவூரில் அதிமுக களஆய்வு என்பது நடந்தது. அப்போது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது, நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு அதிகாரிகளும், ஆசிரிய பெருமக்களும். அது தெரியுமா? தெரியாதா? நமக்கு எதிராக தானே ஓட்டுப்போட்டார்கள். எனக்கு என்ன? நான் இப்போது திண்டுக்கல் தொகுதி MLA, 22 ஆயிரம் ஓட்டில் நான் வெற்றி பெற்றதாக கூறினார்கள். சரியென்று கையெழுத்துப்போட நான் உட்கார்ந்து இருந்தேன். ஆட்சியர் எல்லோரும் உட்கார்ந்து இருந்தோம்.

அப்போது துணை தாசில்தார் ஓடிவந்தாங்க. அய்யா.. அய்யா தபால் ஓட்டு எண்ணி கொண்டு இருக்கிறோம். கொஞ்சம் இருங்க.. கையெழுத்து போடாதீர்கள் என்று சொன்னார். சரி வரட்டும். ஒரு ஆயிரம், இரண்டாயிரம் ஓட்டு கிடைக்கும் என்று உட்கார்ந்து இருந்தேன். ஆனால் வெற்றி வித்தியாசத்தில் 5 ஆயிரம் ஓட்டு எனக்கு குறைந்து போய்விட்டதாக கூறினார்கள்.

என்னய்யா.. என்று கேட்டேன். அதற்கு எல்லா தபால் ஓட்டுகளும் திமுகவுக்கு போய்விட்டது. இதனால் 17,500 ஓட்டில் நீங்கள் ஜெயித்து உள்ளீர்கள் என்றார்கள். அதையாவது கொடுங்களேன்யப்பா.. நான் ஜெயிச்சிட்டேல்ல என்று கூறி தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சியடைவது மகிழ்ச்சியடைந்தேன்.

இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் என் தொகுதியில் மட்டும் 5 ஆயிரம் ஓட்டு.. தபால் ஓட்டில் எத்தனை ஓட்டு தான்யா எங்களுக்கு வந்துள்ளது என்று கேட்டேன். ஒரு ஓட்டு கூட எனக்கு வரவில்லை என்று கூறினார்கள். எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.. அட கொலைகார பாவிகளா என்று சொல்ல வேண்டிய சூழ்நிலை. தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் அவர்களின் குடும்பம் என்று மொத்தம் 80 லட்சம் ஓட்டுகள் தோழர்களே. இதனால் இது விளையாட்டு கிடையாது. அந்த ஓட்டுகளால் தான் நாம் தோற்றோம். இதனால் அவர்களின் ஓட்டுகளை பெற முயற்சிக்க வேண்டும்” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ: அதிமுக ஆட்சியில் தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது..!

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை விளாங்குடி பகுதியில் எம்ஜிஆர் மன்றம் மற்றும் அதிமுக கொடியேற்றி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மதுரையில் அதிமுக கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் இடையூறு கொடுத்ததற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை உருட்டல், மிரட்டல், அதிமுககாரனிடம் பருப்பு வேகாது, நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வந்தவர்கள். நாங்கள் காவல்துறையை கண்ணியமிக்கவர்களாக நடத்தி உள்ளோம். நாட்டில் சட்டம் ஒழுங்கு கேவலமாக உள்ளது.

தபால் தந்தி நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணை ஒருவர் தடவி விட்டு செல்கிறார். ஆசிரியர் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்குள் சென்று வெட்டுகிறார்கள். உச்சநீதிமன்றம் இந்த திமுக அரசாங்கத்தை ஆட்சி நிர்வாகம் சரியில்லை என பலமுறை தலையில் கொட்டுகிறது. காவல்துறைக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இல்லை. மதுரையில் சித்திரை திருவிழாவில் மக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.

காவல்துறை எங்களை அடக்க நினைப்பது என்ன நியாயம், சாதுமிரண்டால் காடு கொள்ளாது, நாங்கள் கண்ணியமிக்கவர்கள். எங்கள் ஆட்சிக் காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் தலை விரித்து ஆடுகிறது, மெத்தனால் பல மாநிலங்களில் இருந்து வருகிறது, கள்ளச்சாராய சாவு வழக்கை நீதிமன்றமே சிபிஐ வசம் ஒப்படைத்துவிட்டது. அந்த அளவிற்கு தமிழக காவல்துறை மோசமாக செயல்படுகின்றனர் என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ: மாணவர்கள் கூகுள் லில் வைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள்..! தலைவா அது கூல் லிப்..!

மாணவர்களுக்கு கஞ்சா, பீர், சப்ளை செய்கிறது எனவும், எங்கு பார்த்தாலும் மாணவர்கள் கூகுள் லிப் வைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை விளாங்குடி பகுதியில் எம்ஜிஆர் மன்றம் மற்றும் அதிமுக கொடியேற்றி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மதுரையில் அதிமுக கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் இடையூறு கொடுத்ததற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை உருட்டல், மிரட்டல், அதிமுககாரனிடம் பருப்பு வேகாது, நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வந்தவர்கள். நாங்கள் காவல்துறையை கண்ணியமிக்கவர்களாக நடத்தி உள்ளோம்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு கேவலமாக உள்ளது, தபால் தந்தி நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணை ஒருவர் தடவி விட்டு செல்கிறார். ஆசிரியர் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்குள் சென்று வெட்டுகிறார்கள். உச்சநீதிமன்றம் இந்த திமுக அரசாங்கத்தை ஆட்சி நிர்வாகம் சரியில்லை என பலமுறை தலையில் கொட்டுகிறது. காவல்துறைக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இல்லை. மதுரையில் சித்திரை திருவிழாவில் மக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.

காவல்துறை எங்களை அடக்க நினைப்பது என்ன நியாயம், சாதுமிரண்டால் காடு கொள்ளாது, நாங்கள் கண்ணியமிக்கவர்கள். எங்கள் ஆட்சிக் காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் தலை விரித்து ஆடுகிறது, மெத்தனால் பல மாநிலங்களில் இருந்து வருகிறது, கள்ளச்சாராய சாவு வழக்கை நீதிமன்றமே சிபிஐ வசம் ஒப்படைத்துவிட்டது. அந்த அளவிற்கு தமிழக காவல்துறை மோசமாக செயல்படுகின்றனர்.

தற்போது தமிழகத்தில் மிட்டாய் வடிவில் போதை மாத்திரைகள் தமிழகத்தில் விற்கப்படுகிறது, மாணவர்கள் கூகுள் லில் வைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள் என்றார். அப்போது அருகிலிருந்த நிர்வாகிகள் அதனை கவனித்து கூல் லிப் பயன்பாடு அதிகம் உள்ளது என்றனர். உடனடியாக சிரித்து சமாளித்த செல்லூர் ராஜு ‘பாருங்க அது கூட எனக்கு தெரியல சிரித்து சமாளித்தார்.

அன்புமணி ராமதாஸ்: திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை..!

கடந்த 17-ஆம் தேதி இரவு 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் செய்யப்பட்டு சிறுமிக்காக நீதிகேட்டு ஒவ்வொரு காவல் நிலையங்களின் வாசற்படி ஏறி கடைசியாக காவல் கண்காணிப்பாளருக்கு புகார் கொடுத்து நீதியை மீட்டெடுத்த பெற்றோர். இந்த சம்பவம் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், வேலூரில் 13 வயது சிறுமி மது போதையில் இருந்த மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை: ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த மது போதையில் இருந்த 3 மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

இரவு நேரத்தில் இயற்கையின் அழைப்புக்காக வீட்டிற்கு அருகில் உள்ள புதர் பகுதிக்கு சென்ற சிறுமியை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மூவர் தூக்கிச் சென்று அருகில் உள்ள கல்குவாரியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியைக் காணாமல் தேடிய அவரது தந்தை அருகில் உள்ள கல்குவாரியிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிச்சென்று காப்பாற்றியுள்ளார்.

இது குறித்து அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை அளிக்க புகாரை வாங்க மறுத்த காவலர்கள், இன்னொரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். அங்கும் புகார் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில், சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதற்கு பிறகு தான் முதல் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவை அனைத்தையும் கடந்து 13 வயது சிறுமிக்கு அவர் வாழும் வீட்டுக்கு அருகிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுகிறது? அதை விடக் கொடுமை என்னவென்றால், இத்தகைய குற்றச்சம்பங்கள் நடக்காமல் தடுத்திருக்க வேண்டிய காவல்துறை, சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்த புகாரைக் கூட வாங்காமல் அவரது குடும்பத்தினரை அலைக்கழித்திருக்கிறது.

அனைத்துக் குற்றங்களுக்கும் மூல காரணம் மது மற்றும் போதைப்பழக்கங்கள் தான்; அதனால் அவற்றுக்கு முடிவு கட்டுங்கள் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருபுறம் போதையின் பாதையை தவிருங்கள் என்று கூறிக் கொண்டு இன்னொரு புறம் மது வணிகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கான இலக்கணமா? என்பது தெரியவில்லை. சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், மதுக்கடைகளை உடனடியாக மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை பாதுகாப்பதற்குக் கூட திறனற்ற அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை. தமிழக அரசுக்கு எதிராக மக்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றனர். வெகு விரைவிலேயே அவர்கள் கொதித்தெழுவார்கள் அரியலூர் ரயில் விபத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்றைய ரயில்வேத் துறை அமைச்சர் அழகேசனுக்கு எதிராக திமுகவினர் முழக்கிய வாசகங்களை இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் முழங்குவார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்: சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது..!

உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து மக்கள் விரோத போக்கினை கடைபிடித்து வருகின்றது. கறுப்புப் பணம் ஆரம்பித்த பாஜக அரசின் சர்வாதிகார போக்கு இன்று ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பாஜக அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இந்நிலையில், பொது நிறுவனமான LIC-இலும் இந்தி திணிப்பை பாஜக முன்னெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது . அரசின் LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி, ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முகப்பு பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த செலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் LIC -யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்தி மயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக் கூட இந்தியில் உள்ள சுட்டியின் மூலம் தான் பெற முடியும் என்பது மத்திய அரசின் இந்தித் திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் LIC இணையதளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் உடனே மாற்றி அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது” என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்: கூட்டணிக்கு வருபவர்கள் ரூ. 50 அல்லது ரூ. 100 கோடி கொடுங்கனு கேட்கிறாங்க..!

திருச்சி மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “பல முனைகளிலிருந்து அதிமுகவை தாக்கி வருகிறார்கள். தனி ஒரு மனிதனாக எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறார்.” “அதிமுக கட்சியின் சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் உள்ளன. அதனை முதலில் சரி செய்ய வேண்டும். ஆபரேஷன் செய்தால் மட்டும் தான் மருத்துவம் பலிக்கும் என்ற நிலை உள்ளது. கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட் கொடுங்க, ரூ. 50 அல்லது ரூ. 100 கோடி கொடுங்க என்று கேட்கின்றனர்.”

“கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார். கூட்டணி குறித்து நீங்கள் பேட்டி கொடுத்து அதை கெடுத்துவிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு செல்பவர்கள் ஜெயிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தான் ஜெயிப்பார்” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

சீமான்: திமுகவினரிடம் ரெய்டும் ஏன் வரவில்லை..! வராது கப்பம் சரியாக கட்டரங்க..!

ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

த.வெ.க – அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது. நாங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான். அவர் அவரோட போறாரு. இவர் இவரோடு போறாரு என இந்த காரை அவர் வைத்திருந்தார். இப்ப யார் வைத்திருக்கிறார் என்ற நகைச்சுவை எல்லாம் நான் சொல்ல தயாராக இல்லை.

மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம் என சீமான் தெரிவித்தார்.