CTR. நிர்மல் குமார்: கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணி இல்லை..! விஜய் சொன்னதை நாங்கள் சொல்றோம்..!

கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணி இல்லை, மற்ற கட்சிகளை போல் இல்லாமல் எங்கள் கட்சியில் நிர்வாகிகள் அனைவரும் தலைவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே பேசுகிறோம் என CTR. நிர்மல் குமார் தெரிவித்தார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த தேர்தலை சந்தித்ததோ அதே கூட்டணி தொடர்கிறது. மறுப்பக்கம் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த திமுக கூட்டணியை வீழ்த்த வியூகம் அமைத்து செயல்படுகின்றது.

இதையடுத்து, திமுக கூட்டணியை வீழ்த்த விஜய் அக்கூட்டணியில் இணைவார் என தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார் பதிலளித்தார். அப்போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பீர்களா எனக் கேள்வி செய்தியாளர்கள் எழுப்பினர்.

அதற்கு, கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார் எனவும் CTR. நிர்மல் குமார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, பாஜக உடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறவில்லை. யாரோ ஒருவர் சொல்வதை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக பார்க்க முடியாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருந்தார். மேலும் பாஜக கூட்டணி குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அவர் சொல்லட்டும் அதன் பின்பு பேசுகிறோம் என தமிழிசை தமிழிசை சவுந்தரராஜன் பேசி இருந்தார்.

இந்நிலையில், தவெக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “மற்ற கட்சிகளை போல் இல்லாமல் எங்கள் கட்சியில் நிர்வாகிகள் அனைவரும் தலைவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே பேசுகிறோம்.

முன்னர் சொன்னதுபோல் கொள்கை எதிரி பாஜக உடனும், மாநிலத்தில் அரசியல் எதிரி திமுகவுடனும் கூட்டணி இல்லை என்பது உறுதி. பாஜகவுடனும், திமுகவுடனும் தவெக கூட்டணி கிடையாது என்று தவெக முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் தலைவர் விஜய் ஏற்கனவே தெளிவாக அறிவித்துவிட்டார். கூட்டணி குறித்து விஜய் தெரிவித்த நிலைப்பாட்டையே நாங்களும் தெரிவிக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதனை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்: பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறினாரா..!?

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார் . வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த தேர்தலை சந்தித்ததோ அதே கூட்டணி தொடர்கிறது.

மறுப்பக்கம் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த திமுக கூட்டணியை வீழ்த்த வியூகம் அமைத்து செயல்படுகின்றது. இதையடுத்து, திமுக கூட்டணியை வீழ்த்த விஜய் அக்கூட்டணியில் இணைவார் என தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார் பதிலளித்தார். அப்போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பீர்களா எனக் கேள்வி செய்தியாளர்கள் எழுப்பினர்.

அதற்கு, கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார் எனவும் CTR. நிர்மல் குமார் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. தவெக தலைவர் விஜய்தான். பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை. பிறர் கூறுவதற்கு பதில் சொல்ல முடியாது. திமுகவுக்கு எதிராக எல்லோருமே ஒன்று சேர வேண்டிய சூழல் நமக்கு வந்திருக்கிறது. திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

R .B. உதயகுமார்: அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருக்கிறதா..!? நல்லதாகவே நடக்கும்..!

அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நல்லதாகவே நடக்கும் என R .B. உதயகுமார் ஒற்றை வரியில் பதிலளித்தார். சென்னை வியாசர்பாடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் R .B. உதயகுமார் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு R .B. உதயகுமார் பதிலளித்தார்.

அப்போது, அதிமுக சார்பில் வாரம்தோறும் திண்ணை பிரசாரத்தின் மூலமாக துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். 11-வது வாரமாக திண்ணை பிரசாரம் தொடர்ந்து வருகிறது. இன்று விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலைவாசி, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்ந்துள்ளது. போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள் என்பது போன்ற அவலங்களில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுப்பதற்காக உரிமைகளை காப்பாற்றுவதற்காக திண்ணை பிரசாரம் நடத்துகிறோம்.

இந்த திண்ணை பிரசாரத்தின் மூலமாக 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும். 234 தொகுதிகளிலும் வெல்வதுதான் அதிமுக வெல்வது நிச்சயம். சட்டசபையில் ஆளும் கட்சியினர் நேரலையில் பேசினால் தொழில்நுட்ப கோளாறு வருவதில்லை. எடப்பாடி பழனிசாமி பேசினால் உடனே தொழில்நுட்ப கோளாறு வருகிறது. இது பாரபட்சமான நடவடிக்கை. எடப்பாடி பழனிசாமி என்ன கேள்வி கேட்கிறார், என்ன மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார் என்று மக்களுக்கு தெரிந்தால்தான் அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார் என்பது மக்களுக்கு புரியும்.

ஊமை படம் போன்று அவர்கள் பேசுவதை மட்டும் காட்டுகிறார்கள். வடக்கு எது, கிழக்கு எது, தெற்கு என்று தெரியாத நிலைதான் சட்டசபையில் நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அப்போது சட்டசபை ஜனநாயகம் காப்பாற்றப்படும் என R .B. உதயகுமார் தெரிவித்தார். மேலும் R .B. உதயகுமாரிடம் அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘உங்கள் எண்ணம் நல்ல எண்ணம். நல்ல எண்ணத்தோடு கேட்கிறீர்கள். நல்லதாகவே நடக்கட்டும்’ என R .B. உதயகுமார் ஒற்றை வரியில் பதிலளித்தார்.

அதிமுக – பாஜக கூட்டணியின் நோக்கம் 2026-ல் திமுகவை வீழ்த்துவது ஒன்றே ..!

நமக்கு இடையே சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நோக்கம் 2026-ல் திமுகவை வீழ்த்துவது. என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள் என பேசப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்; அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற குரல்கள் அக்கட்சியில் வலுத்து வந்தன.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவே முடியாது என திட்டவட்டமாக கூறி வந்தார். அதேநேரத்தில் பாஜகவுடனான கூட்டணி குறித்து சில மாதங்களுக்கு முன்னர் கடுமையாக எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அண்மையில், திமுகதான் எதிரி; இதர கட்சிகள் அனைத்தும் எதிரி அல்ல; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம் என கூறி இருந்தார். இதனால் அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடும் என தகவல்கள் பரவின.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி மற்றும் தம்பிதுரை உள்ளிட்டோர் நேற்று டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் தனியாகவும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் கூட்டணி தாண்டி வேறு சில விஷயங்களும் ஆலோசனை செய்யப்பட்டது. அதிலும் முக்கியமாக ஒன்று நமக்கு இடையே சில பதவிகள், சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஆனால் நம்முடைய இலக்கு ஒன்றாகவே இருக்க வேண்டும். நமது கூட்டணியின் நோக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது 2026-ல் திமுகவை வீழ்த்துவது. அதுதான் நமது நோக்கம் மற்றும் கூட்டணியின் அடிப்படையாக இருக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள். அதற்கு ஏற்றபடி கூட்டணி அமைக்க வேண்டும் என்று இதில் பேசியதாக தெரிகிறது.

திண்டுக்கல் சீனிவாசன்: கூட்டணிக்கு வருபவர்கள் ரூ. 50 அல்லது ரூ. 100 கோடி கொடுங்கனு கேட்கிறாங்க..!

திருச்சி மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “பல முனைகளிலிருந்து அதிமுகவை தாக்கி வருகிறார்கள். தனி ஒரு மனிதனாக எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறார்.” “அதிமுக கட்சியின் சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் உள்ளன. அதனை முதலில் சரி செய்ய வேண்டும். ஆபரேஷன் செய்தால் மட்டும் தான் மருத்துவம் பலிக்கும் என்ற நிலை உள்ளது. கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட் கொடுங்க, ரூ. 50 அல்லது ரூ. 100 கோடி கொடுங்க என்று கேட்கின்றனர்.”

“கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார். கூட்டணி குறித்து நீங்கள் பேட்டி கொடுத்து அதை கெடுத்துவிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு செல்பவர்கள் ஜெயிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தான் ஜெயிப்பார்” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

சீமான்: த.வெ.க கூட்டணி..! நான் திருப்பூர் போகும்போது அவர் திருப்பதி போயிட்டா சிக்கலாகிடும்..!

நான் திருப்பூர் போகும்போது அவர் திருப்பதி போயிட்டா சிக்கலாகிடும்..! அதனால எங்க கால்களை நம்பியே எங்கள் லட்சிய பயணம் தொடரும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

த.வெ.க – அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது. நான் திருப்பூர் போகும்போது அவர் திருப்பதி போயிட்டா சிக்கலாகிடும்..! அதனால எங்க கால்களை நம்பியே எங்கள் லட்சிய பயணம் தொடரும். நாங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான். அவர் அவரோட போறாரு. இவர் இவரோடு போறாரு என இந்த காரை அவர் வைத்திருந்தார். இப்ப யார் வைத்திருக்கிறார் என்ற நகைச்சுவை எல்லாம் நான் சொல்ல தயாராக இல்லை என சீமான் தெரிவித்தார்.

தவெக அறிவிப்பு: அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை..!

தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது என எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்: திமுக தமிழக மக்களின் மூளைச்சலவை செய்து வருகிறது..! 

ஆட்சி, அதிகார, பணபலத்தை வைத்துக்கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறி திமுக மக்களை மூளைச்சலவை செய்து வருகிறார்கள்  என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பி.பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். அப்போது, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூகம் அமைத்து வருகிறோம்.

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்கவும், மிகப்பெரிய மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்கிவிட்டோம். எனது சுற்றுப்பயண திட்டம் குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக-தேமுதிக கூட்டணி இன்றுவரை தொடர்கிறது. அதேநேரம் திமுக கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. 2026 தேர்தல் வரை அந்த கூட்டணி தொடருமா என்பதே கேள்விக்குறி தான். விஜய் நடத்திய மாநாட்டை பார்த்து ஒவ்வொரு கட்சிகளும் உடனடி களப்பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுவது தவறான கருத்து.

அதேபோல் ஆட்சி, அதிகார, பணபலத்தை வைத்துக்கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து வருகிறார்கள். ஆனால் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணியே வெற்றிபெறும். விரைவில் நடைபெற உள்ள தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரன் உட்பட நிர்வாகிகள் பலருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்: சட்டப்பேரவைத் தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்காது..!

சட்டப்பேரவைத் தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்காது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பி.பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். அப்போது, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூகம் அமைத்து வருகிறோம்.

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்கவும், மிகப்பெரிய மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்கிவிட்டோம். எனது சுற்றுப்பயண திட்டம் குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக-தேமுதிக கூட்டணி இன்றுவரை தொடர்கிறது. அதேநேரம் திமுக கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. 2026 தேர்தல் வரை அந்த கூட்டணி தொடருமா என்பதே கேள்விக்குறி தான். விஜய் நடத்திய மாநாட்டை பார்த்து ஒவ்வொரு கட்சிகளும் உடனடி களப்பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுவது தவறான கருத்து.

அதேபோல் ஆட்சி, அதிகார, பணபலத்தை வைத்துக்கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து வருகிறார்கள். ஆனால் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணியே வெற்றிபெறும். விரைவில் நடைபெற உள்ள தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரன் உட்பட நிர்வாகிகள் பலருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கிருஷ்ணசாமி: திமுக கூட்டணியிலிருந்து திருமாவளவன் வெளியே வந்த பிறகு முதலமைச்சர் கனவு காணவேண்டும்..!

திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்து முதலமைச்சர் ஆகும் முயற்சியை திருமாவளவன் மேற்கொள்ள வேண்டும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். பின்னர் கிருஷ்ணசாமி கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, புதிய தமிழகம் கட்சி சார்பில் நவம்பர் 7-ஆம் தேதி 6 அம்ச கோரிக்கை குறித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும்.

தென் தமிழகத்தில் தொழிற்சாலைகள் வர வேண்டும். மதுவிலக்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது. முதலமைச்சர் பதவி ஆசை திருமாவளவனுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் தான் உள்ளது. முதலமைச்சராக ஆசைப்படுவது தவறில்லை.

ஆனால் திமுக கூட்டணியில் இருந்து முதலமைச்சர் கனவு காணக்கூடாது. அது பகல் கனவாகவே இருக்கும். திமுக கூட்டணியிலிருந்து முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவது தவறாக புரிந்து கொள்ளப்படும். திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்து முதலமைச்சர் ஆகும் முயற்சியை திருமாவளவன் மேற்கொள்ள வேண்டும்” என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.