ஜோக்கர் சர்க்கார் நடத்தும் பொம்மை முதலமைச்சர்..! மகாவிஷ்ணு பஞ்சாயத்தில் குதித்த ஜெயக்குமார்..!

பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். “நான் வேற மாதிரி பேசிருவேன்! உங்களுக்கு எப்படி பேசணும்? தலைமை ஆசிரியையிடம் கேட்ட மகாவிஷ்ணு ” அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களின் அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அங்கிருந்து அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் ஒருவர் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.

இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவேசமாகக் கூறினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இதற்கிடையே மகாவிஷ்ணு தலைமறைவாகி விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் அவர் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் பக்கத்தில்,”ஊழல்-லஞ்சம் என கொள்ளை அடிப்பதையே நோக்கமாக கொண்டிருக்கும் கொள்ளைக்கார அரசிற்கு கொள்கை என்ற ஒன்றே இல்லை! பொழுதுப்போக்கான சினிமா முதல் தாகத்திற்கு அருந்தும் தண்ணீர் பாட்டில் வரை இந்த ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரத்தை பயன்படுத்தி அராஜக தொழில் செய்து வருகிறது.

இதை எல்லாம் பாதுகாக்க தமிழ்நாட்டை காவி நாடாக மாற்ற முயற்ச்சிக்கிறதா இந்த அரசு? பாஜக அரசிற்கு பச்சை கொடி காட்டுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பணியா? பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்-மாணவர்களிடையே ஆயிரம் வன்முறைகள்! கல்லூரியை காட்டிலும் கஞ்சா-செல்போன் என பள்ளி வகுப்பறையில் பயன்படுத்தி‌ மாணவச் சமுதாயமே சீரழிவின் உச்சியில் உள்ளது.

எதை பற்றியும் கவலைப்படாமல் உதயநிதிக்கென தனி உலகம் அமைக்க பாடுபடும் அன்பில் மகேஷ் அவர்களே..’மாணவர்கள் மனதில் மதவாதத்தை விதைக்க அனுமதி அளித்தது யார்? நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஜோக்கர் சர்க்கார் நடத்தும் பொம்மை முதலமைச்சர் சரியாக இருந்தால் இவ்வளவு நிர்வாக சீர்கேடுகள் நிகழுமா?” என அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

FERMULA 4: இரவு நேர கார் பந்தயம் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைப்பு

தெற்காசியாவிலேயே முதல் முறையாக 6 அணிகள் பங்கேற்கின்றன. 3.5 கிமீ தூரம் கொண்ட கார் பந்தயம் சென்னையில் இன்றிரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன. இந்தியாவில் பார்முலா-4 இரவு நேர தெரு கார் பந்தயம் நடப்பது இதுவே முதல் முறையாகும். உலகளவில் இந்த பந்தயத்தை நடத்தும் 15-வது நகரம் என்ற பெருமை சென்னைக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், தெற்கு ஆசியாவில் முதன்முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று தீவுத்திடல் பகுதியில் பயிற்சிசுற்றுகளுடன் தொடங்கியது. இந்த பந்தயத்துக்காக 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான சாலை சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் பந்தய பயிற்சியை பிற்பகல் 2.45 மணி அளவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட்டபடி பயிற்சி பந்தயங்களை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதுஒருபுறம் இருக்க சர்வதேச மோட்டார் கூட்டமைப்பு, சென்னை பந்தயத்துக்கான அனுமதி சான்றிதழை வழங்குவதில் சுணக்கம் காட்டியது. இதற்கு நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக கூறப்பட்டது. எஃப்ஐஏ வழங்கும் அனுமதி சான்றிதழை, போட்டி அமைப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகே பந்தயத்தை நடத்த முடியும்.

இதனால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிமன்றம் தரப்பில் இரு முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மாலையில் 5.30 மணி அளவில் போட்டியை நடத்துவதற்கான சான்றிதழை எஃப்ஐஏ வழங்கியது. இதைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஃபார்முலா 4 கார்பந்தயத்தின் பயிற்சியை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பயிற்சியில் சுமார் 10 கார்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்ற இந்த கார்களை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். முன்னதாக சாகசகார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இரு கார்கள் இரு பக்கவாட்டு சக்கரங்கள் மட்டுமே தரையில் இருந்தபடி அதிவேகத்தில் சென்றதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின்: முருகன் மாநாடு ஆன்மீக மாநாடு மட்டும் இல்லை. தமிழர் பண்பாட்டு மாநாடு..!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். அப்போது, “சேகர்பாபுவை நமது முதலமைச்சர் எப்போதும் செயல் பாபு என்றே அழைப்பார்.

அது எவ்வளவு உண்மை என்பது இந்த மாநாட்டின் ஏற்பாடுகளைப் பார்க்கும் போதே தெரிகிறது. எப்போது பார்த்தாலும் அமைச்சர் சேகர் பாபு எதாவது ஒரு திருக்கோயிலை ஆய்வு செய்து கொண்டு தான் இருப்பார். கோயிலில் தான் அவர் குடியிருப்பார் என்று சொல்லும் அளவுக்கு அவரது பணி இருக்கிறது. இன்று அறநிலையத்துறை தன்னுடைய பணிகளை அறத்தோடு முன்னெடுத்துச் செல்கிறது.

திராவிட மாடல் அரசு இந்த மாநாட்டை திடீரென நடத்துவதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், இது திடீரென நடத்தப்படும் மாநாடு இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் இந்த திராவிட மாடல் அரசு பல சாதனைகளைச் செய்துவிட்டுத் தான் இந்த மாநாட்டை நடத்துகிறது. திமுக அரசு யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு. எல்லாருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு. சொல்லப்போனால் அறநிலையத் துறையின் பொற்காலம் என்றே திமுக ஆட்சியை சொல்லலாம்.

திராவிட இயக்கத்தின் தொடக்க புள்ளியான நீதி கட்சி ஆட்சியில் தான் இந்து சமய அறநிலைய துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, மக்களின் வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குற்றக்குடி அடிகளார் விபூதியை கொடுத்த போது அதை மறுக்காமல் வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டவர் தந்தை பெரியார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கியவர் அண்ணா. பல ஆண்டுகளாக ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கருணாநிதி.

இந்த தலைவர்கள் வழியில் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் அறநிலையத் துறை சார்பில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திராவிட மாடல் அரசு அமைந்த 3 ஆண்டுகளில் 1400+ கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ரூ. 5,600 கோடி மதிப்பிலான 6,000 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ 3,800 கோடி மதிப்பில் 8500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிடம்.

நமது திராவிடம் யாரையும் ஒடுக்காது, அனைவரையும் இணைக்கவே செய்யும். அதற்கு மிக சிறந்த ஒரு உதாரணமாகவே அனைத்து சாதியினர் மற்றும் பெண்கள் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மற்ற துறைகளை எப்படி இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறதோ.. அதேபோல தான் அறநிலைய துறையும் இந்தியாவுக்கு வழிகாட்டி வருகிறது. இப்படி பல சாதனைகளை செய்த தமிழக அரசு இப்போது முருகன் மாநாட்டை நடத்துகிறது. முருகன் மாநாடு ஆன்மீக மாநாடு மட்டும் இல்லை. தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெறுகிறது. இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும்” என உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்த ரஜினிகாந்த்..!

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைந்த கொடியை அறிமுகம் செய்தார். இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. நடுவில் வாகை மலர் வைக்கப்பட்டு உள்ளது. அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.

நடிகர் விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சில நாட்களிலே, ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவதாக சொல்லி, பின்னர் பின்வாங்கிய நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைத்து அவர் வாயால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி திமுக சார்பாக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் பேசினார். அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து தனக்கென பாணியை உருவாக்கி உதயநிதி ஸ்டாலின் உள்ளார். தனக்கொரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கு என்று நிரூபிக்கும் வகையில் உதயநிதி செயல்படுகிறார். அதோடு நிற்காமல், எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது. உலகில் எந்தவொரு தலைவருக்கும் இந்த மாதிரி ஒரு நூற்றாண்டை யாரும் கொண்டாடி இருக்க மாட்டார்கள். கொண்டாடவும் முடியாது திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்; அவர்கள் எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி” ராஜ்நாத் சிங் ஏன் கருணாநிதியை 30 நிமிடம் புகழ்ந்தார்? ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை என்று கூறினார் . மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு: எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசினார்.

ரஜினிகாந்த் பேச்சு: திமுகவினர் ஆலமரம்..! எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள்..!..!

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைந்த கொடியை அறிமுகம் செய்தார். இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. நடுவில் வாகை மலர் வைக்கப்பட்டு உள்ளது. அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.

நடிகர் விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சில நாட்களிலே, ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவதாக சொல்லி, பின்னர் பின்வாங்கிய நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைத்து அவர் வாயால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி திமுக சார்பாக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் பேசினார். அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து தனக்கென பாணியை உருவாக்கி உதயநிதி ஸ்டாலின் உள்ளார். தனக்கொரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கு என்று நிரூபிக்கும் வகையில் உதயநிதி செயல்படுகிறார். அதோடு நிற்காமல், எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது. உலகில் எந்தவொரு தலைவருக்கும் இந்த மாதிரி ஒரு நூற்றாண்டை யாரும் கொண்டாடி இருக்க மாட்டார்கள். கொண்டாடவும் முடியாது திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்; அவர்கள் எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி” ராஜ்நாத் சிங் ஏன் கருணாநிதியை 30 நிமிடம் புகழ்ந்தார்? ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை என்று கூறினார். எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசினார்.

ஃபார்முலா-4 கார் பந்தயம்.. ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை மட்டும் மக்கள் இலவசமாக பார்க்கலாம்..!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் முதன்முறையாக 3 ஆண்டுகளுக்கு ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்த கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கார் பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தி நகர் அருகே நடைபெற இருந்தது.

ஆனால், அந்த சமயத்தில் மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதன் காரணமாக இந்த கார் பந்தயத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கார் பந்தயத்தை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னையில் மழை தீவிரம் அடையும் முன்பாகவே வருகின்ற ஆகஸ்ட் 31- ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த கார் பந்தயம் அண்ணா சாலையில் நடைபெறும் என்றும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா-4 கார் பந்தயம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆகஸ்ட் 31-ம் தேதி காலை மட்டும் ஃபார்முலா-4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம்.

ஆகஸ்ட் 31-ம் தேதி பிற்பகல் தகுதிச் சுற்று போட்டிகள் தொடங்கி இரவு வரை கார் பந்தயம் நடைபெறும். கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கார் பந்தயம் நடை பெறும்போது போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இருக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்: என் மாமியார் வீட்டிற்கு நான் வந்திருக்கிறேன்..!

சென்னை பரிமுனையிலுள்ள பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டு கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் பாரதி மகளிர் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தை திறந்து வைப்பதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். உங்களையெல்லாம் சந்தித்து, கலைஞர் அவர்களின் பெயரில் உள்ள கட்டடத்தைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சர்கள் பொன்முடி அவர்களுக்கும், பி.கே.சேகர்பாபு அவர்களுக்கும், வந்திருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால் என் மாமியார் வீட்டிற்கு நான் வந்திருக்கிறேன். என் மாமியாரும் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இந்தக் கல்லூரியில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக பேராசிரியராக சிறப்பாகப் பணியாற்றினார்கள். எனவே பெருமையாக சொல்கின்றேன். மாமியார் வீட்டிற்கு மறுபடியும் வந்திருக்கிறேன். இங்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் வரவேற்றீர்கள். உங்களையெல்லாம் பார்க்கும்போது ஒரு மனநிறைவு ஏற்படுகிறது.

ஏனென்றால், ஒரு 100 வருடத்திற்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே பெண்களுக்கு உரிமை கிடையாது. படிப்பதற்கும் உரிமை கிடையாது. பெண்களை அடிமைகளாகத்தான் இந்தச் சமுதாயம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த அடிமைத்தனத்தை அடித்து நொறுக்கியது யார் என்றால், நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், திராவிட இயக்கமும், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகமும்தான் என்பதை நீங்கள் உணர வேண்டும். வீட்டுப் படிக்கட்டைக்கூட தாண்ட முடியாது என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட பெண்கள் இன்று நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற அனைத்துப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள்.

உங்களின் முன்னேற்றத்திற் காக நம் திராவிட மாடல் அரசில், ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார், நம் முதலமைச்சர் அவர்கள். உங்களையெல்லாம் நாங்கள் வெறும் மாணவிகளாகப் பார்க்கவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் நம் திராவிட மாடல் அரசின் புதுமைப்பெண்கள். அதனால்தான், நம் முதலமைச்சர் அவர்கள் ‘புதுமைப் பெண்’ என்ற திட்டத்தையே அறிமுகப்படுதினார்கள். இந்தப் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் இன்றைக்கு ஒவ்வொரு வருடமும் 3 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். அதாவது, அரசு பள்ளியில் படித்து, எந்தக் கல்லூரியில் சென்று உயர் கல்வி படித்தாலும் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு கல்வி உரிமைத்தொகையாக, ஊக்கத்தொகையாக நம் முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கொடுக்கிறார்கள்.

‘புதுமைப்பெண்’ திட்டத்தின் வெற்றி இன்றைக்கு ‘தமிழ்ப்புதல்வன்’ என்ற திட்டத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. ‘புதுமைப்பெண்’ திட்டத்தை நம் அரசு செயல்படுத்திய பிறகு உயர்கல்வி சேர்கின்ற மாணவிகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. அதனால்தான் மாணவர்களும் படிக்க வேண்டும் என்று ‘தமிழ்ப்புதல்வன்’ என்ற திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி துவங்கி வைத்தார். இன்றைக்கு அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்துள்ள 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் மாதம் ஆயிரம் ரூபாய் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் 6 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்தத் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்வி ஊக்கத்தொகையை நம் முதலமைச்சர் அவர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு இன்று பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைக்கிறது என்றால், அதற்கு இப்படிப்பட்ட திட்டங்கள்தான் முழுகாரணம்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கல்விக்காக ஏராளமான திட்டங்களைத் தந்தார்கள். நம் முதலமைச்சர் அவர்கள், கட்டணமில்லாப் பேருந்து வசதி, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் நிலை, கல்விக்கடனுக்கான வட்டி தள்ளுபடி இப்படிப் பல்வேறு திட்டங்களையும் அறிவித்துச் செயல்படுத்திவருகிறார். உங்களைத்தான் சேரும் தமிழ்நாட்டில் திசைக்கு ஒன்று என இருந்த கல்லூரிகளை நூற்றுக் கணக்கில் திறந்தவர், நம் கலைஞர் அவர்கள். அதனால் இன்றைக்கு உயர்கல்வியில் தமிழ்நாடு இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது. இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கின்றவர்களின் சதவிகிதம், 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கின்ற மாநிலம் என்றால், அது நம் தமிழ்நாடுதான். அந்த பெருமை மாணவர்களாகிய உங்களைத்தான் சேரும்.

‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் மூலம் என்ன வேலைக்குப் போகலாம், என்ன மாதிரியான திறன் சார்ந்த கல்வியைப் படிக்கலாம் என உங்கள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. நான் முதல்வன் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த மூன்று வருடத்தில் பயன் அடைந்திருக்கிறார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. இந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஐ.ஐ.டி, எம்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இன்று நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக எண்ணிகையிலான ‘டாப்’ கல்வி நிறுவனங்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இன்று விளங்கிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில், ஒரு முக்கியமான அறிவிப்பை நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதாவது, இந்தியாவிலேயே முதன்முறையாக வெளிநாடு சென்று படிக்கின்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கான முதல் பயணச் செலவை நம் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்ற சிறப்பான அறிவிப்பை நம் முதலமைச்சர் அவர்கள் அறி- வித்திருந்தார். ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பார்கள். அதற்கு உதாரணமாகத்தான் இந்த நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக, எழுச்சியோடு நடந்துக் கொண்டிருக்- கிறது. எனவே, நீங்கள்அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும். படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்- டுக்கொள்கிறேன். நன்றாக விளையாடினால்தான், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நன்றாகவும் படிக்க முடியும். விளையாட்டில் நீங்கள் சாதனை படைக்கலாம். இதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

இந்த நேரத்தில் விளையாட்டுத் துறையின் அமைச்சர் என்ற முறையில் இங்குள்ள பேராசிரியர்கள், ஆசிரியர்களுக்கு என் கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். விளையாட்டு வகுப்பை கடன் வாங்காதீர்கள்! மாணவிகளுக்கான விளையாட்டு வகுப்பை, அறிவியல் மற்றும் கணிதப் பாட பேராசிரியர்கள் கடன் வாங்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். வேண்டுமென்றால் அறிவியல், கணக்கு வகுப்புகளை விளையாட்டு வகுப்பிற்கு கடன் கொடுங்கள். மாணவிகளான உங்களுக்கு ஒரு கோரிக்கை.விளையாட்டு வகுப்புதான் என்று வகுப்பைப் புறக்கணித்துவிட்டு, வெளியே செல்லாதீர்கள். தயவு செய்து விளையாட்டுக்கு இன்னும் அதிகம் முக்கியத்துவம் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு, இந்த கோரிக்கையை உங்கள் அனைவரின் முன்பும் வைத்து விடைபெறுகிறேன். கலைஞர் நூற்றாண்டு கட்டடம் இந்தக் கல்லூரியின் கல்விச் சேவைக்கு பல நூற்றாண்டுகள் துணை நிற்கட்டும் என்று கூறிக்கொண்டு இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்” என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Udhayanidhi Stalin: நானாவது கல்லை காமித்தேன் இங்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் போது ஒருவர் பல்லை காட்டிக் கொண்டிருக்கிறார்..!

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, உங்களுடைய எழுச்சியும் ஆர்வத்தையும் பார்க்கும் போது உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் மலையரசன் அவர்களை பெறுவாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு செலுத்தி மோடியின் தலையில் குட்டு வைப்பீர்களா என பொதுமக்களிடம் கேட்டார்.

2019 மக்களவைத் தேர்தலில் கௌதம சிகாமணி அவர்களை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மலையரசன் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் மூன்று வருடத்தில் செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டர். திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது உளுந்தூர்பேட்டையில் ரூபாய் 2000 கோடி மதிப்பீட்டில் அமைந்துள்ள காலனி உற்பத்தி தொழிற்சாலை மூலம் இந்த பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் மற்றும் நயினார் பாளையத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர் பகுதிக்கு உட்பட்ட ஆளுர் மற்றும் பூவனூரில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் 53 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய ரிங் ரோடு முடிக்கப்படும். ரிஷிவந்தியம் பகுதியில் புதிய அரசு பொறியியல் கல்லூரி திறக்கப்படும். பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள்ளக்குறிச்சி நகரத்தின் மத்தியில் ரயில் நிலையம் அமைக்கப்படும்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது நாம் நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டர். நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியை அனைத்தும் நிறைவேற்றியுள்ளோம். அதில் 4 திட்டங்களை சுருக்கமாக தெரிவித்த அவர் கட்டணம் இல்லா பேருந்தின் மூலம் 465 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 6 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்துள்ளீர்கள். இதனால் மாதம் ரூபாய் 800 முதல் 900 முறை பெண்கள் சேமித்து வருகின்றனர்.

காலை உணவு திட்டம் 18 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள், இந்த திட்டத்தை கர்நாடகா தெலுங்கானா மட்டுமல்ல கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் லுடோ அவர்கள் கனடாவில் அமல்படுத்தியுள்ளார். இந்திய நாட்டில் மட்டும் இல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் எடுத்துக்காட்டாக நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டம் இருந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 54,000 குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் சில சில குறைபாடுகள் இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார். புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக ஏராளமான பெண் பிள்ளைகள் கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் கொரோனா காலத்தில் கோவிட் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஒரே அரசு தமிழ்நாடு அரசு. கோவையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை நேரில் சந்தித்த ஒரே முதலமைச்சர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் தான் என்றார். நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் தான் வந்தது கூட இருந்தது திமுக கூட்டணி என்று. ஆமாம் 2010ல் நீட் தேர்வு இந்தியா முழுவதும் வந்தது ஆனால் தமிழ்நாட்டில் வரவில்லை ஏனென்றால் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். நீட் தேர்வு எங்களுக்கு தேவையில்லை பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் போதும் எனக் கூறினார். எனவே நுழைவு தேர்வை ரத்து செய்தார் கலைஞர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த அடிமை அதிமுக கூட்டத்தை வைத்து தமிழ்நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா இறந்தார். அனிதாவில் ஆரம்பித்து சென்னையில் ஜெகதீசன் என்ற மாணவர் வரை 22 மாணவர்கள் இறந்துள்ளனர். இறுதியாக ஜெகதீசனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். 22 குழந்தைகளின் இல்லத்திற்கும் நேரில் சென்றது நான் மட்டும் தான். அந்த உரிமையில் தான் நீட் தேர்வு வேண்டாம் என போராட்டம் செய்து வருகிறோம்.

ஒன்றிய அமைச்சர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் வேட்டி சட்டை அணிந்து ஆவாரம் பேசுவது திருக்குறளா இல்லையா என்பதை யாருக்கும் தெரியாது. அவர் தமிழ் வளர்ச்சிக்கு மற்றும் ஆராய்ச்சிக்கு 5 வருடத்தில் இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. ஆனால் ஹிந்தி மட்டும் சமஸ்கிருதம் வளர்ச்சிக்கு 1500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். இதுதான் அவர் தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம். இதையெல்லாம் அதிமுக தட்டி கேட்டதா என கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்கிரிப்ட் மாற்றி பேச வேண்டும் என தெரிவித்தார். நானாவது கல்லை காமித்தேன் இங்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் போது ஒருவர் பல்லை காட்டிக் கொண்டிருக்கிறார் பாருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி நரேந்திர மோடியுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்தார். தலைவர் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு பெயர் வைத்துள்ளார், பாதம் தாங்கி பழனிச்சாமி என்று சசிகலா காலில் விழுந்து வணங்கிய புகைப்படத்தை காண்பித்தார். உங்களைப்போல் நேரத்தை தகுந்தது போல் ஆளைத் தகுந்தார் போல் ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரை நான் கல்லை காட்டிக் கொண்டே தான் இருப்பேன். தமிழ்நாட்டிற்கு அடிக்கல் நாட்டிய போது தான் ஐந்து மாநிலங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. அங்கெல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு முடிந்தது. தமிழ்நாட்டில் கூட ஆட்சிக்கு வந்து இரண்டே வருடத்தில் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை கட்டி முடித்தோம்.

கடந்த 9 வருடத்தில் அனைத்து மாநில உரிமைகளையும் இழந்துள்ளோம். முக்கியமாக மொழியுரிமை. மோடி பத்து நாள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தாலும் கூட ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என தெரிவித்தார். கடந்த 10 வருடத்தில் இந்தியாவை ஆண்டதில் ஏதாவது செய்தாரா என கேள்வி எழுப்பிய அவர் 2016 ஆம் ஆண்டு நடுராத்திரி எழுந்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். லட்சக்கணக்கானோர் ஏடிஎம் வாசலில் நின்று இறந்தனர். ஏன் என்று கேட்டால் கருப்பு பணத்தை ஒழித்து புதிய இந்தியா பிறக்கும் என்றார். அனைவரின் வங்கி கணக்கிலும் கருப்பு பணமான 15 லட்சம் செலுத்தப்படும் என தெரிவித்தார். ஆனால் 15 பைசா கூட ஒருவர் வங்கியிலும் போடவில்லை என்றார்.

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் வந்தது அப்போதெல்லாம் மோடி எட்டிப் பார்க்கவில்லை. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி அளித்தார். ஒன்றிய அரசிடம் நிதி கேட்டதற்கு நிதி அமைச்சர் வந்து பார்வையிட்டு சென்றார் ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். 6.30 லட்சம் கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து வரியாக வழங்குகிறோம் ஆனால் நமக்கு ஒன்னே முக்கால் லட்சம் கோடி மட்டுமே திருப்பி வழங்குகிறார்கள். அதாவது ஒரு ரூபாய் தமிழ் நாட்டு மக்கள் வரியாக கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்கு திருப்பி தருகிறார்கள் என்றார். அதனால்தான் மிஸ்டர் 29 பைசா மோடி அவர்களை அழைக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று ஒன்றை அரசிடம் கேட்டால் பழனிச்சாமிக்கு கோபம் வருகிறது.

தாங்கள் ஒன்றிய பிரதமரை இவ்வளவு கேள்வி கேட்டு விமர்சனம் செய்கிறோம் இதுவரை பதில் வரவில்லை. ஆனால் அதிமுக இதுவரை பிஜேபியிடம் ஒரு கேள்வியாவது கேட்டுள்ளாரா என கேள்வி எழுப்பினார். நான் பேசியது தான் பேசுவேன் ஏனென்றால் எங்கள் கொள்கையை மட்டுமே பேசுவேன், எங்களுக்கு சி ஏ சட்டம் வேண்டாம் என்று தான் பேசுவேன், எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று தான் பேசுவேன், எங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தான் பேசுவேன் எங்களின் மாநில உரிமையை வேண்டும் என்று தான் பேசுவேன். உங்களைப்போல் பச்சோந்தியாக நிறம் மாறி இடத்திற்கு தகுந்த மாதிரி பேச மாட்டேன் என்றார்.

தமிழ்நாட்டிலும் ஒருவர் இருக்கிறார் ஆடுற்கு தாடி எதற்கு என்று பேரறிஞர் அண்ணா கூறியது நினைவுக்கு வருவதாக தெரிவித்தார். அவர் ஆர்.என்.ரவி அல்ல ஆர்.எஸ்.எஸ்.ரவி என்றார். சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுதிக் கொடுத்ததை படிக்க மாட்டார் பெரியார் அண்ணா பெயரை படிக்க மாட்டார். அதனால்தான் நம் முதலமைச்சர் நீங்கள் பேசியது அவை குறிப்பில் ஏறாது என தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடினால் போதும் தமிழ் தாய் வாழ்த்து பாட தேவையில்லை என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறுகிறார் ஆளுநர். தமிழ்நாடு பெயரையே மாற்ற வேண்டும் என வாய் வந்த படி உளறிக் கொண்டிருக்கிறார். இந்திய கண்ட வரலாற்றிலேயே உச்ச நீதிமன்ற நீதிபதி ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது இதுவே முதல்முறை என்று கூறினார்.

ஒன்றிய பாரத ஜனதா அரசின் ஊழல்களை பட்டியலிட்டு பேசிய அவர் சிஏஜி அமைப்பு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடுவார்கள். ஒன்றிய அரசு செலவு செய்த கணக்கில் ஏழரை லட்சம் கோடி கணக்கில் இல்லாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது. துவாரகா சாலை திட்டத்தில் ஒரு கிலோமீட்டர் சாலை இடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத்து உள்ளனர். இந்த 10 வருட ஆட்சியில் பாரதிய ஜனதா பல லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது.

இதற்கெல்லாம் பாடம் புகட்ட வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உங்களுடைய வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அடுத்த 9 நாட்கள் இந்த பிரச்சாரத்தை மக்களிடம் வீடு வீடாக சென்று நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவர்களுக்கு எல்லாம் பாடம் புகட்ட ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், ஜூன் நான்காம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள். அவரின் இந்த 100ம் ஆண்டு நூற்றாண்டு விழாவில் அவருக்கு தேர்தல் வெற்றியை பரிசாக நாம் எல்லோரும் கொடுப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Udhayanidhi Stalin: 29 பைசா மோடி என பெயர் வைத்தது ஏன் தெரியுமா..!?

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சித்தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தர்மபுரி தொகுதியில் ஆ.மணி வெற்றி பெறுவது உறுதி என்பதை, உங்கள் எழுச்சியை பார்த்து தெரிந்து கொண்டேன். மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு வேட்டு வைக்கிறார். வரும் 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில் நாம் மோடிக்கு வேட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை, சுயமரியாதை என்ன என்பதை தெரிந்து கொள்வார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பா.ஜ.க.,வும், பழனிசாமியும் செங்கல் நட்டார்கள். ஆனால் இன்று வரை வரவில்லை. அதனால் அந்த செங்கல்லை நான் பிடிங்கிட்டு வந்துட்டேன். நட்டது ஒரே செங்கல். அதை நான் எடுத்துட்டு வந்துட்டேன். இப்பொழுது செங்கல்லை காணோம் என்று தேடுகிறார்கள். நான் மருத்துவமனை கட்டினால் மட்டுமே செங்கல்லை கொடுப்பேன் என சொல்லிவிட்டேன்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கேட்டால், பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் பழனிசாமி பதில் தருகிறார். ஏனென்றால் இவர்கள் இருவரும் கள்ளக்கூட்டணி. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

நாம் 1 ரூபாய் வரி கட்டினால், நமக்கு 29 பைசா கொடுக்கிறார். ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் கொடுக்கிறார்கள். அதனால்தான் அவருக்கு 29 பைசா மோடி என பெயர் வைத்துள்ளேன். பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் நிதியுரிமை, மொழியுரிமை, மாநில உரிமைகள் அனைத்தையும் அடகு வைத்த அ.தி.மு.க., தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. இரு கட்சிகளுக்கும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Udhayanidhi Stalin: சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்த்தவர் பிரதமர் மோடி..!

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, “திமுகவுக்கு போடும் ஓட்டுதான் பிரதமர் மோடிக்கு வைக்கிற வேட்டு. ஏனென்றால், பிரதமர் மோடிதான் தமிழக மக்களுக்கு அடிக்கடி வேட்டு வைக்கிறார். தமிழக மக்களை கண்டுகொள்வதில்லை.

சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு 100 சதவீத வெற்றி கிடையாது. சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தால்தான் திமுக இளைஞரணி மாநாடு 100 சதவீத வெற்றியை பெறும். 2021-ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மு.க.ஸ்டாலின் முதல்வரானார். ஆனால், தவழ்ந்து முதல்வரானவர் ஒருவர் இருக்கிறார். தவழ்ந்து சென்ற புகைப்படத்தை காட்டியதால் எடப்பாடி பழனிசாமிக்கு என் மீது கோபம் வருகிறது. உதயநிதிக்கு வேறு வேலையே இல்லை என்கிறார். சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ். அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. அவரை போல திமுககாரர்கள் பச்சோந்தி கிடையாது.

பிரதமர் மோடி தமிழகம் வருவதில்லை. ஆனால், இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருகிறார். இன்றுகூட சென்னை வருகிறார். 2026 வரை தமிழகத்தில் வீடு எடுத்து தங்கினாலும் பிரதமர் மோடியால் வெற்றிபெற முடியாது. நான் சவால் விடுகிறேன், அவரால் வெற்றிபெற முடியாது. அந்த அளவுக்கு தமிழகத்தின் கல்வி, மொழி, நிதி உரிமைகளை பறித்துவிட்டார் மோடி. தமிழக வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிடவில்லை. ஆனால், இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருகிறார்.

பிரதமர் மோடியால் வாழுகிற ஒரே குடும்பம் அவரின் நண்பர் அதானி குடும்பம். அனைத்து பொதுத் துறையையும் அதானிக்கு கொடுத்துவிட்டார் மோடி. சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்த்தவர் பிரதமர் மோடி. திமுக ஆட்சியில் ஒரு குடும்பம்தான் வாழ்கிறது என்று மோடி சொல்கிறார். ஆமாம், ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவின் குடும்பம்தான். கருணாநிதியின் குடும்பம்தான். எங்களின் ஒரே லட்சியம் பாஜக அரசை ஓரங்கட்டுவதே.

சென்னையில் இருந்து நான் கிளம்பி 15 நாட்கள் ஆகிவிட்டது. எனது வீட்டுக்கு போனால் என்னை அடையாளம் தெரியாது. அந்த அளவுக்கு எனது குரல் மாறிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள்தான் உள்ளன. கடந்த முறை 39 தொகுதிகளை வென்றோம். இந்த முறை 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலத்தில் இருந்து ஒரே ஒரு எம்எல்ஏவை தான் திமுக சார்பில் தேர்ந்தெடுத்தீர்கள். எடப்பாடியில் நான் தெரு தெருவாக பிரச்சாரம் செய்தேன். எனினும் எங்களுக்கு பெரிய நாமத்தை போட்டீர்கள். இனியும் அந்த தவறை செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.