தனியார் மயமாக்கும் அரசாணைகளை திரும்ப பெற தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

சென்னை எழும்பூரில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களில் தூய்மைப் பணி உள்ளிட்ட இதர பணிகளில் தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கலந்து கொண்டு, தினக்கூலி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களையும், உள்ளாட்சி ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர் எழுப்பினர்.

மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர துப்புரவு பணி உட்பட இதர பணிகளை, தனியார்மயமாக்கும் அரசாணையை திரும்பப் பெறவேண்டும். அனைத்துப் பிரிவுதொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கும் அரசாணையை அமலாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

அதற்கேற்ப பஞ்சப்படி, விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியின் அனைத்து பிரிவு தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

குப்பைக்கு வரி வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..! மேயர் வீட்டில் குப்பை வீசிய தெலுங்கு தேசம் கட்சியினர்..!

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் குப்பைகளை சேகரிக்க மாதத்திற்கு வீடு வீடாக ரூ.60 வரி விதிக்கப்பட்டது. அதை ரத்து செய்வதாக தேசிய கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்தன. அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சந்திரபாபு நாயுடு அரசு கடந்த மூன்று மாதங்களாக குப்பைக்கு வரி வசூல் செய்யவில்லை.

ஆனால், கடப்பாவில் குப்பை வரி தொடர்பாக எம்எல்ஏ மாதவிரெட்டிக்கும், ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த மேயர் சுரேஷ்பாபுவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இதற்கிடையே வரி கட்டாவிட்டால் குப்பைகளை சேகரிக்க மாட்டோம் என மேயர் சுரேஷ்பாபு எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே நேற்று தெலுங்கு தேசம் கட்சியினர் மேயர் சுரேஷ்பாபு வீட்டின் முன்பு குப்பைகளுடன் சென்று வீட்டின் முன்பும், வீட்டின் உள்ளேயும் குப்பைகளை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடப்பா மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..!

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இந்த சத்திய ஞான சபையில் சுமார் 100 ஏக்க நிலப்பரப்பில் சர்வதேச மையம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து. 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சர்வதேச மையம் அமைப்பதற்கு பணிகள் கடந்த மாதம் துவங்கியது.

இந்த நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு ராட்சசன் பள்ளங்கள் பெருவளி பகுதியில் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி வள்ளலார் சத்திய ஞான சபைக்கு நிலம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் எதிரே போராட்டம் நடத்த முயற்சி செய்த அவர்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை நிலையில், வடலூர் பேருந்து நிலையத்தில் 300க்கும் மேற்பட்டோர் சன்மார்க்க அன்பர்கள் மற்றும் வள்ளலார் பக்தர்கள் ஒன்று திரண்டு வேண்டுகோள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் வடலூர் பேருந்து நிலையத்திலிருந்து வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை நோக்கி பேரணியாக புறப்பட முயற்சித்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் காவல் துறையை கண்டித்து சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பரை தவிர்த்து வாழை இலையை பயன்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நகரம் முழுவதும் உள்ள அனைத்து உணவகத்திலும் பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்துவதை தவிர்த்து வாழை இலையை பயன்படுத்த வேண்டும் என கூறி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு வாழை இலையை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி வாழை இலையை கைகளில் ஏந்தியபடி கோஷம் எழுபினர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கிட்டு அனைத்து வியாபாரிகளுக்கும் முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். வெண்டிங் கமிட்டி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி வட்டியில்லாத கடனாக ரூ.15 ஆயிரத்தை கூட்டுறவு வங்கி மூலம் வழங்க வேண்டும்.

அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளு வண்டிகளை கொடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் 2014 குறித்து அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது.

இதற்கு சங்க தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத், சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு அளித்தனர்.

மத்திய அரசு புதிய சட்ட வரைவுகளைக் கொண்டு வந்துள்ளதை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றி புதிய சட்ட வரைவுகளைக் கொண்டு வந்துள்ளதை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் 3-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்தனர்.