பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி: அறிவாலயம் ‘ரெட்லைட் ஏரியா’வா..!?

“அறிவாலயம் என்ன ரெட்லைட் ஏரியா”வா? என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டிருக்கிறார். அண்ணாமலை இருக்கட்டும்.. நானே வருகிறேன்.. எங்கே வரனும் என சொல்லுங்க? என்னைக்கு வரனும் என சொல்லுங்க? டைமை குறிங்க.. தமிழக முதல்வர் அவர்களே! இது தமிழ்நாடு. எட்டு கோடி மக்களுக்கும் சொந்தமானது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளும்.

இதில் அண்ணா அறிவாலயத்துக்கு முன்னால் வரக் கூடாது என சொன்னால், அது ரெட்லைட் ஏரியாவா அது ரெட்லைட் ஏரியாவா? அங்க வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு என்ன தைரியம் இருக்க முடியும்? கேவலமான ஒன்று. உதயநிதி ஸ்டாலின் தம்முடைய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும்; ஒரு பக்கத்தில் குழந்தைகளை அப்பா என கூப்பிட சொல்றாங்க..சரி சந்தோஷப்படுவோம். அது தப்பு கிடையாது.. ஆனால் எங்க பகுதிக்கு வரக்கூடாது என சொன்னால்…. ஜெயலலிதா அம்மாவை இவர்கள் நினைவு கொள்ள வேண்டும்.

மதிமுகவின் துவக்க காலத்தில் அண்ணா அறிவாலயப் பக்கத்தில் ஒரு பெரிய ஊர்வலமாக வந்து இதே அறிவாலயம் மீது தாக்குதல் வரும் என்ற நிலை இருந்தது. அன்றைக்கு ஜெயலலிதாதான் பாதுகாப்பு கொடுத்தார். இன்றைக்கு வேற ஏதாவது மாற்றி எங்க பகுதிக்கு வந்துடாதீங்க என சொல்கிறார்கள் எனில் ஒன்று அவர்கள் அறிவாலயத்தை தவறாக நடத்துகிறார்கள் என்கிற பொருளில் முடியும். அது வேறு ஒரு விஷயம்.. சவால் விடுகிறீர்கள் எனில் நாங்கள் வருகிறோம்.

நாங்கள் ரெட்லைட் ஏரியா என சொன்னதால் அதற்குதான் வருகிறீர்களா? என அடுத்த கேள்வி கேட்பார்கள்.. இந்த குசும்பு வேலை எல்லாம் செய்வாங்க.. நீங்க சவால்விடுங்க.. நாங்க வருகிறோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்.. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.