விஜயலட்சுமிக்கு ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் குறித்து விரிவான அறிக்கை வேண்டும்..!

விஜயலட்சுமி என்ற நடிகையின் புகாரின் அடிப்படையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்தும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் ரூ.50 ஆயிரம் வழங்கியது குறித்தும் விரிவான அறிக்கையை பொதுமக்கள் முன்னிலையில் தெளிவுப்படுத்த வேண்டும்.

நாம் தமிழர் கட்சி மண்டல பொறுப்பாளர் பிரபு நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 2006-ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடந்த போரில் 2 லட்சம் தமிழ் உறவுகள் படுகொலை செய்யப்பட்ட நாள் முதல் இலங்கையில் போர் முடியும் வரை தொடர்ந்து பலகட்ட போராட்டங்கள், எதிர்ப்புகள், வழக்குகளை சந்தித்துள்ளோம்.

நாம் தமிழர் கட்சி உருவாவதற்கு தமிழ் தேசியம் பேசக்கூடிய அனைத்து ஆர்வலர்களும் உறுதுணையாக இருந்துள்ளோம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வரை தன்னிச்சையாக செயல்படுவதோடு அதிகார பகிர்வை கட்சியில் உள்ள யாருக்கும் கொடுக்காமல் அனைத்து பொறுப்புகளுமே தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு செயல்பட்டு வருகிறார்.

கட்சிக்காக குடும்பத்தை இழந்து, பொருளாதாரத்தை இழந்து பல்வேறு வழக்குகளை சந்தித்து வருவதோடு கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீதிகளிலும் இன்று நாம் தமிழர் கட்சி கொடி பறப்பதற்கு காரணமாக இருந்த யாரையும் தன் பக்கத்தில் வைத்து கொள்ள சீமான் தயாராக இல்லை.

கட்சிக்காக அவர் ஒவ்வொரு முறை நிதி கேட்கும்போதும் பல கோடிக்கு மேல் எங்களது பணத்தை அள்ளி வழங்கியுள்ளோம். இலங்கையில் பொருளாதார ரீதியாக தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கட்சி சார்பில் 1,000 டன் உணவு பொருட்கள், பல கோடி பணங்களும் தமிழகத்தில் இருக்கக்கூடிய சொந்தங்களால் வழங்கப்பட்டது. இறுதியில் அந்த உணவு பண்டங்களும், பணமும் இலங்கை தமிழர்களுக்கு சென்றடையவில்லை. கட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய தொண்டர்கள், நிர்வாகிகள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலோடு அவர்கள் எதற்காக நீக்கப்பட்டனர் என்ற பட்டியலையும் சேர்த்து ஒரு வெள்ளை அறிக்கையாக சீமான் வழங்க வேண்டும். விஜயலட்சுமி என்ற நடிகையின் புகாரின் அடிப்படையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்தும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் ரூ.50 ஆயிரம் வழங்கியது குறித்தும் விரிவான அறிக்கையை பொதுமக்கள் முன்னிலையில் தெளிவுப்படுத்த வேண்டும். கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் அதிகார பகிர்வை பிரித்து வழங்கி கட்சியை வளர்ப்பதற்கான முயற்சியில் சீமான் ஈடுபட வேண்டும்.

கட்சியில் இருந்து பலர் வெளியேறுவதற்கு தயாராகி வரும் நிலையில் சீமான் விரைந்து ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என பிரபு தெரிவித்தார்.

சீமான்: தமிழக மீனவர்களுக்கு அடித்த மொட்டை இல்லை…! மத்திய – மாநில அரசுகளுக்கு அடித்த மொட்டை..!

“மற்ற மாநிலத்தவரை மொட்டை அடித்திருந்தால் இந்த நாடும், அரசும் சும்மா இருக்குமா? இது தமிழக மீனவர்களுக்கு அடித்த மொட்டை இல்லை. மத்திய – மாநில அரசுகளுக்கு அடித்த மொட்டை” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்திப்பில் சீமான் பேசுகையில், “தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கூறுகிறது. கேரள மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது இல்லையா? இங்கு மீனவர்கள் என்பது பிரச்சினை அல்ல; தமிழன் என்பதுதான் பிரச்சினை.

மற்ற மாநிலத்தவரை மொட்டை அடித்திருந்தால் இந்த நாடும், அரசும் சும்மா இருக்குமா? இது தமிழக மீனவர்களுக்கு அடித்த மொட்டை இல்லை. மத்திய – மாநில அரசுகளுக்கு அடித்த மொட்டை. தமிழகத்தில் 39 எம்பி-க்கள் இருந்தும் என்ன பிரயோஜனம்? கச்சத்தீவை மீட்க வழியில்லை என சீமான் தெரிவித்தார்.

ஆர்.பி.உதயகுமார்: சீமான் ஏன் தேவையில்லாமல் கருத்துக் கூறுகிறார் என தெரியவில்லை..!

மது ஒழிப்பு மாநாட்டுக்கு தொல்.திருமாவளனன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதில் கூற வேண்டியது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தான். இதுதொடர்பாக சீமான் ஏன் கருத்துக் கூறுகிறார் என்று தெரியவில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து நலம் விசாரித்தார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன், டப்பாவில் அடைக்கப்பட்ட சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது. பிரியாணியை சாப்பிட்ட கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 65 பேருக்கு நேற்று இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் 20 சிறுவர்கள் உட்பட 36 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு கருதி அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1,000 நிதி உதவியளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுடன் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், மது ஒழிப்பு மாநாட்டுக்கு தொல்.திருமாவளனன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதில் கூற வேண்டியது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தான்.

இதுதொடர்பாக சீமான் ஏன் கருத்துக் கூறுகிறார் என்று தெரியவில்லை. பூரண மது விலக்கு கோரி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகளும், பழனிசாமி முதல்வராக இருந்தபோது 500 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. தற்போது அதிமுகவுக்கு திருமாவளனன் விடுத்துள்ள அழைப்பு தமிழக அளவில் பெரும் அதிர்வலையை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக நாட்டில் ஒருவர் மாநாடு நடத்தினால் தேவையில்லாத கேள்விகள் கேட்கிறார்கள் என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

சீமான் கேள்வி: திமுகவுடன் திருமாவளவன் கூட்டணி வைத்துக்கொண்டே மதுவுக்கு எதிராக போராட்டமா..?

ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுவுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் சீமான் செய்தியாளர்கள் கேள்விக்கு, மது ஒழிப்புக்கு எதிராக இருந்தவர் ராமதாஸ். டாஸ்மாக்கை மூடுபவர்களுடன் கூட்டணி என்று சொல்லியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அப்புறம் என்ன ஆனது? திருமாவளவன் அதிமுகவுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவார், பின்னர் மீண்டும் டாஸ்மாக்கை திறக்கத் தானே செய்வார்கள்.

திமுகவுடன் இருந்து கொண்டு திருமாவளவன் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா? விற்பனை குறைவானதற்கு டாஸ்மாக் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்த அரசு தான் திமுக அரசு என சீமான் தெரிவித்தார்.

சீமான் கேள்வி: புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி இருக்கா, இல்லையா?

ராமநாதபுரத்தில் சீமான் செய்தியாளர்கள் கேள்விக்கு, இந்தியா ஒரு தேசமே இல்ல. மாநிலங்கள் மொழி வழியில் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் இருந்த கல்விக்கொள்கையை நீ வகுத்து கொடுத்தியா? உன் புதிய கல்விக்கொள்கையை நீ வகுத்து கொடுத்தியா? உன் புதிய கல்விக்கொள்கையில் ஒரு சிறப்பை சொல்லுங்க பார்ப்போம். புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் என்று கல்வியயல் அறிஞர்கள் சொல்கிறார்கள். கல்வி எல்லாருக்கும் சமமாக இருக்கிறதா?

தாய் மொழி கல்வி என்பார்கள். அப்பறம் எதுக்கு சமஸ்கிருதம் உள்ளே வருகிறது. திருச்சி ஏர்போர்ட்டில் எதுக்கு சமஸ்கிருதத்தில் கல்வெட்டு. இதுதான் மொழி திணிப்பு. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி இருக்கா, இல்லையா? என சீமான் கேள்வியெழுப்பினார்.

விஜயலட்சுமி கதறல்: அது எப்படிங்க மிஸ்டர் சீமான் நீங்க அப்படி நடிப்பீங்க?

மலையாள திரை உலகில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை. இந்த விவகாரம் தமிழ்நாட்டிலும் பேசுபொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, அனைத்துத் துறைகளிலும்தான் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள், குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் திரைத்துறையில் நடப்பதுதான் ஊடகங்களில் தெரிய வருகிறது என கூறியிருந்தார்.

சீமானின் இந்தப் பேட்டிக்கு பதில் தரும் வகையில் நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க பச்சை குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்லியிருக்கிறார். அது எப்படிங்க மிஸ்டர் சீமான் நீங்க அப்படி நடிப்பீங்க? அவங்க கேள்வி கேட்டது பாலியல் குற்றச்சாட்டு பற்றி.. அதாவது நீங்க விஜயலட்சுமி என்ற நடிகையுடன் குடும்பம் நடத்தி அந்த பெண்ணின் வாழ்க்கையை 14 வருஷமாக சீரழிச்சு தமிழ்நாட்டுக்குள்ளேயே வாழவிடாமல் கர்நாடகாவில் தூக்கி அநியாயமாகப் போட்டீங்களே அதான் உலகத்துக்கே தெரிஞ்ச விஷயமாச்சே.

2008-ம் ஆண்டு நாங்க உங்க ஆபீஸுக்கு எங்க அக்காவுடைய குழந்தையை தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு கதறிகிட்டு வந்து நின்னோமே. அப்ப என்ன மிஸ்டர் சீமான் நீங்க செய்தீங்க? என்னை காப்பாற்றினீங்களா? அதே ஆபீசில் வைத்து என்னை கதற கதற என் வாழ்க்கையை சீரழிச்சீங்களே ! மறந்துட்டீங்களா?

6 முறை நீங்க பிணையில் இருக்கும் போது கூட மதுரையில் நான் தேவைப்பட்டேன் அதை மறந்துவிட்டீங்களா? நீங்க எல்லா கேடு கெட்ட வேலையையும் செய்துவிட்டு போன வருஷம் ரூ50,000 கொடுத்துடறேன். திமுககாரங்க முன்னாடி பேசாதேன்னு சொன்னீங்களே? கயல்விழிக்கும் எதுவும் தெரிய வேண்டாம்னு சொன்னீங்களே? ஆனால் இந்த டீலை பேசிவிட்டு என்னையும் திமுகவையும் சேர்த்து வைத்து கொச்சை கொச்சையாக பேசுறீங்களே அதை மக்கள் மறந்துட்டாங்கன்னு நினைச்சீங்களா? என் கூட சப்போர்ட்டுக்குதான் வீரலட்சுமி வந்தாங்க. அவங்களை என்ன என்ன கொச்சையா நீங்க பேசினீங்க? காளியம்மாளை பிசிறு.. ம… என பேசியதை மக்கள் மறந்துவிடுவாங்களா? என விஜயலட்சுமி வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

சீமான் கேள்வி: கார் பந்தயம் நடத்த மட்டும் அரசிடம் பணம் இருக்கா..!?

“ரூ.250 கோடிகளை வாரியிறைத்து கார் பந்தயம் நடத்தப் பணம் இருக்கும் அரசிடம் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லை என்பது வெட்கக்கேடாக இல்லையா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் வகையில் திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

பள்ளிக்கல்வித் துறையின் சார்பாகக் கடந்த ஜூலை 1-ம் நாள் வெளியிட்ட புதிய அரசாணை 150-ன் படி, தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த நிலையை மாற்றி, இனி 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளியில் பயிலும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் உடற்திறன் மேம்பாட்டைச் சீர்குலைக்கும் திமுக அரசின் இந்நடவடிக்கை எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 1997-ம் ஆண்டு அரசாணை 525-ன் படி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 250-க்கு அதிகமாகும்போது ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், பின்னர் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 300 மாணவர்கள் எண்ணிக்கைக்கும் கூடுதலாக ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் என ஒரு பள்ளிக்கு 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மிகாமல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 -ம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாகும் போது, அந்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்குப் பதிலாக, ஓர் உடற்கல்வி இயக்குநர் பணியிடமாகத் தரம் உயர்த்திடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று இருந்த நிலையிலேயே, மாணவர்களுக்கு முழுமையான உடற்திறன் பயிற்சி அளிக்க முடியாத நிலையில், தற்போது 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று மாற்றுவது எவ்வகையில் நியாயமாகும்? அதிலும், தற்காலத்தில் அலைபேசி மற்றும் கணினி உள்ளிட்ட நவீன அறிவியல் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் மாணவ சமுதாயத்தின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் நலத்தைப் பேணவும் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, குறைப்பதென்பது தமிழக அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவாகும்.

இப்படி ஏழை மாணவர்களுக்கான கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துதான் அரசு தன்னுடைய நிதிநிலையைச் சீர் செய்ய வேண்டுமா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்க நிதி இருக்கும் திமுக அரசிடம், படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி அளிக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணமில்லையா? மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, கற்பிக்கும் ஆசிரியரைக் குறைத்து அவர்களின் கல்வியை நிறுத்துவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

ரூ.250 கோடிகளை வாரியிறைத்து கார் பந்தயம் நடத்தப் பணம் இருக்கும் அரசிடம் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லை என்பது வெட்கக்கேடு இல்லையா? இதுதான் தமிழகத்தில் விளையாட்டுத் துறையை உலகத் தரத்துக்கு வளர்த்திடும் முறையா? கார் பந்தயத்தில் எத்தனை தமிழர்கள் இடம்பெற்று இருந்தனர்? எத்தனை ஏழைக்குழந்தைகள் அதனால் பயன்பெற்றனர்? ஒரே ஒரு ஒலிம்பிக் பதக்கத்தையாவது இந்த ஆடம்பர கார் பந்தயத்தால் வாங்கித் தர இயலுமா? கார் பந்தயத்தால் அந்நிய முதலீடுகள் குவியுமென்றால், அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் என்ன?

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லாமல் ஆட்குறைப்பு செய்கின்ற அவலநிலையின் மூலம், மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியில் பல்லாயிரம் கோடிகள் அந்நிய முதலீடுகளைக் குவித்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டோம் என்று திராவிட மாடல் ஆட்சியாளர்கள் மார்தட்டுவது அனைத்தும் பச்சைப்பொய் என்பது உறுதியாகிறது. அரசுப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது என்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையாலும், தரமான கல்வியை வழங்கத் தவறியதாலும் நிகழும் கொடுமையாகும்.

அதனைச் சரி செய்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காமல், அதனையே காரணம் காட்டி ஆசிரியர் பணியிடங்களைக் குறைப்பதென்பது அரசின் அறிவார்ந்தச் செயல் ஆகாது.ஆகவே, அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று, பழைய நிலையே தொடர உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீமான் கேள்வி: எந்தத் தமிழ் சாதியில் பாண்டியன் எனும் பெயர் இல்லை..!

ராமநாதபுரத்தில் சீமான் செய்தியாளர்கள் கேள்விக்கு, பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை வெளியேற்றி, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை, அப்படியே கொடுக்க வேண்டும். அதுவே தமிழ் தேசியத்தின் விடுதலை. நீங்கள் செய்யவில்லை எனில், ஒருநாள் அதிகாரத்திற்கு வரும் போது, அதை நாங்கள் செய்வோம். வேளாளர் என்பதே எங்களின் குடிப்பெயர். எந்தத் தமிழ் சாதியில் பாண்டியன் எனும் பெயர் இல்லை என்பதை சொல்லுங்கள் என சீமான் கேள்வியெழுப்பினார்.

சீமான் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் சண்டாளன் என்ற சாதி பெயரை பயன்படுத்துவோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைத்து. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்லில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை ‘சண்டாளன்’ எனக் குறிப்பிட்டு அவதூறு பாடல் பாடியதாக சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது.

மேலும் அவர் மீது எஸ்சி,எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தாழ்த்தப்பட்ட ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உத்தரவின்பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலை ரிசைன் செய்துவிட்டு வாங்க நேருக்கு நேர மோதுவோம்..! வருண்குமாருக்கு சீமான் சவால்..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை விமர்சனம் செய்தனர்.

இது போன்ற விமர்சனங்கள் குறித்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரித்து இருந்தார். எனினும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் காவல் கண்காணிப்பாளர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மீதும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை வேலை ரிசைன் செய்துவிட்டு வாங்க நேருக்கு நேர மோதுவோம் என வீரலட்சுமியின் கணவர் கணேஷ் அவர்களுக்கு விடுத்தைப்போல சீமான் அறைகூவல் விடுத்துள்ளார்.