வருண்குமார்: சீமான் அவர் ஒரு மைக் புலிகேசி…! தரம் குறைந்த மனிதர்..!

நான் எனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தரம் தாழ்ந்த தகவல்களை சீமான் தரப்பு பரப்பி வருகிறது சீமான் ஒரு மைக் புலிகேசி எனவும் திருச்சி காவல்துறைத் துணைத்தலைவர் வருண்குமார் கிண்டல் செய்துள்ளார். திருச்சி காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார், நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், சீமான் புகார் கூறியிருந்தார். மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அதாவது வருண்குமாரின் மனைவியுமான ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார்.

ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், புகார் தொடர்பாக கடந்த 30-ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையே வருண்குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோரை காவல்துறைத் துணைத்தலைவராக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது வருண்குமார் திருச்சி காவல்துறைத் துணைத்தலைவராகவும், வந்திதா பாண்டே திண்டுக்கல் காவல்துறைத் துணைத்தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 8-ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதனை குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து இருந்தார். இந்நிலையில், காவல்துறைத் துணைத்தலைவர் வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.

ஆனால் சீமான் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் வருண்குமார் ஆஜராகி இருந்தார். தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” சீமான் மீது நான் தொடர்ந்த அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் காரணமாக இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் எனது மனைவி வந்திதா பாண்டே திண்டுக்கல்லில் காவல்துறைத் துணைத்தலைவராக இருக்கிறார். அவருக்கும் எனக்கும் விவாகரத்து நடந்து விட்டதாக சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் தனிப்பட்ட முறையில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே அவர்கள் தரக்குறைவாக விமர்சித்ததால் தான் வழக்கு தாக்கல் செய்திருக்கிறேன். நிச்சயம் அதனை வாபஸ் பெற போவதில்லை. வாபஸ் பெறுவது போல் இருந்தால் நான் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும், நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புகிறேன். சீமான் பற்றி எல்லாம் பேச விரும்பவில்லை. அவர் ஒரு மைக் புலிகேசி. தரம் குறைந்த மனிதர் ” என வருண்குமார் விமர்சித்தார்.

சீமான்: வெறிநாய்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்குகின்ற கொடுந்துயர நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஆடுகள் மற்றும் இளம் மாடு கன்றுகளைத் தாக்கி உயிரிழப்பினை ஏற்படுத்தி, ஏழை எளிய உழவர் பெருமக்களுக்குப் பெருத்த பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கொங்குப் பகுதி மக்கள் மீள முடியாத பொருளாதார இழப்பிற்கு ஆளாகி, செய்வதறியாது தவித்து வருகின்றனர். காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுவெளியில் சுற்றுத்திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளிடம் வேளாண் மக்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஆகவே, திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை மாவட்ட நிர்வாகம் விரைந்து அப்புறப்படுத்த வேண்டுமெனவும், வெறிநாய்களால் கால்நடைகளைப் பறிகொடுத்து பெரும் நட்டத்திற்கு ஆளான வேளாண் பெருங்குடி மக்களுக்கு உரிய இழப்பீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தவெக சம்பத்குமார்: எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி,. தோற்றால் பயிற்சி” என சீமான் உளருகிறார்..!

சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி,. தோற்றால் பயிற்சி” என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை? என தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் விமர்சித்துள்ளார். தவெக ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் ஏற்கனவே ஜான் ஆரோக்யசாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தேர்தல் வியூக நிபுணர்களை கட்சியில் இணைத்து இருக்கிறார். இந்நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரையும் அவர் சந்தித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பல்வேறு வியூகங்களை தவெகவிற்கு வகுத்துக் கொடுப்பார் என கூறப்படுகிறது. அவரது நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டாலும் தனிப்பட்ட முறையில் விஜய்யுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சீமான் இது தொடர்பாக பேசுகையில்,” தேர்தல் வியூக வகுப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை. சமூகத்தைப் பற்றி தெரியாதவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்கிறார்கள். பணக் கொழுப்பு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்” என விமர்சித்து இருந்தார். இதையடுத்து சீமானுக்கு தவெகழகத்தினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் நாம் தமிழர் – தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்துள்ளது.

இது தொடர்பாக தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,” ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி,. தோற்றால் பயிற்சி” என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை? திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ் தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள்.

பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள். ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே” என சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

எல்லா தேர்தலிலும் கட்டுத்தொகை இழப்பது தான் தேர்தல் வியூகமா..!?

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்டவர் சீமான் என தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் விமர்சித்துள்ளார் . தவெக ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் ஏற்கனவே ஜான் ஆரோக்யசாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தேர்தல் வியூக நிபுணர்களை கட்சியில் இணைத்து இருக்கிறார். இந்நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரையும் அவர் சந்தித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பல்வேறு வியூகங்களை தவெகவிற்கு வகுத்துக் கொடுப்பார் என கூறப்படுகிறது. அவரது நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டாலும் தனிப்பட்ட முறையில் விஜய்யுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சீமான் இது தொடர்பாக பேசுகையில்,” தேர்தல் வியூக வகுப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை. சமூகத்தைப் பற்றி தெரியாதவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்கிறார்கள். பணக் கொழுப்பு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்” என விமர்சித்து இருந்தார். இதையடுத்து சீமானுக்கு தவெகழகத்தினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் நாம் தமிழர் – தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்துள்ளது.

இது தொடர்பாக தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,” ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி,. தோற்றால் பயிற்சி” என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை? திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ் தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள்.

பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள். ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே” என சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

சீமான் காட்டம்: பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டை பற்றி என்ன தெரியும்..!?

தேர்தல் வியூக வகுப்பாளரை நாடுவது சமீபமாக ஏற்பட்டிருக்கும் நோய், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டை பற்றி என்ன தெரியும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வரும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். ஏற்கனவே தவெகவுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு அணிகள் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பை விஜய் நேற்று வெளியிட்டார்.

அதேபோல் தவெக தலைவர் விஜய் உடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடத்தினார். 2 முறை நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கு பின் தமிழக வெற்றிக் கழகத்திற்கான சிறப்பு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட பிரசாந்த் கிஷோர் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி இருக்கிறார். இதனால் பிரசாந்த் கிஷோர் உடன் தவெக இணைவது அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பு அரசியல் கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், இந்த சந்திப்பு நடந்தது என்று செய்திகளை பார்த்தே தெரிந்து கொண்டேன். வியூக வகுப்புகளில் எல்லாம் பெரிதாக நாட்டமில்லை. இந்த நாட்டை ஆட்சி செய்த காமராசர், அண்ணா உள்ளிட்டோர் வியூக வகுப்பாளருடன் போட்டியிட்டனர்.

எங்கு என்ன செய்யலாம் என்ற அறிவு அவர்களுக்கு இருந்தது. இதற்கு தேர்தல் வியூக வகுப்பாளர் தேவையென்றால், எதற்காக அரசியலுக்கு வர வேண்டும். அரியலூர், பெரம்பலூரில் யாரை நிறுத்தினால் வெல்லலாம் என்பது நமக்கு தெரிய வேண்டும். என்னிடம் மூளை இருக்கிறது. பணம்தான் என்னிடம் இல்லை. கத்திரிக்காய் என்று பேப்பரில் எழுதி எந்த பயனும் இல்லை. களத்தில் இறங்கி விதையை போட்டு தண்ணீர் ஊற்றி விளைய வைக்க வேண்டும்.

கடந்த சில காலமாக இந்த நோய் எல்லோருக்கும் வந்துவிட்டது. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும்? யாருக்கு என்ன பிரச்சனை என்று அவருக்கு தெரியுமா? பணக்கொழுப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால், இப்படிதான் என சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்: திருப்பரங்குன்றத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு துணைபோகிறது?

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மக்களின் நலனை விடுத்து, மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு ஏன் துணைபோகிறது? பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக சீமான் கூறியிருப்பதாவது: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் அமைந்துள்ள தமிழர் மலையாம் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வதில் இரு சமயங்களை பின்பற்றும் தமிழ் மக்களிடம் தற்போது உருவாகியுள்ள குழப்பங்களும், பூசல்களும் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பிரச்சனையும் இன்றி நடைபெற்று வந்த வழிபாட்டில் திடீரென முரண்பாடுகள் தோன்ற இடமளித்திருப்பது வருத்தத்திற்குரிய கெடுநிகழ்வாகும்.

சதிகளை முறியடிப்போம் மதநல்லிணக்கத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் அடையாளமாகத் திகழும் தமிழ்நாட்டில் மதப்பூசல்களை உருவாக்க முனையும் மதவாத அமைப்புகளின் சூழ்ச்சிகளுக்கு இனமானத் தமிழர்கள் ஒருபோதும் இடம்கொடுக்கக்கூடாது. ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகக் காலங்காலமாக இம்மண்ணில் நீடித்து நிலைத்து வாழும் தமிழர்கள் நாம்; ஒற்றுமையே நம்முடைய பலமென்பதை உணர்ந்து நிற்க வேண்டும். நம்மிடையே நிலவும் மாசற்ற பேரன்பையும், சகோதரத்துவத்தையும், சமய நல்லிணக்க உணர்வையும் ஒருபோதும் இழக்காது, மதவாதச் சக்திகளின் சதிகளை முறியடிக்க ஓர்மையோடு களத்தில் நிற்க வேண்டியது பேரவசியமாகும்.

சமூக அமைதிக்கு எதிரானவை குடமுழுக்கு நிகழ்வுகளுக்கு இசுலாமியச் சொந்தங்கள் வரவேற்றுப் பதாகைகள் வைப்பதும், கோயிலுக்கு வருவோருக்கு நீராகாரம் அளித்து உபசரிப்பதும், தர்கா, தேவாலயங்களின் நிகழ்வுகளுக்கு மற்ற சமயத்தவர் சென்று வழிபாடு செய்வதும் தமிழ்நாட்டில் நிலவும் நல்லிணக்கப்பாட்டுக்கான சான்றுகளாகும். அதனைக் குலைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்துவிட்டு வாக்குவேட்டையாட முற்படும் மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் சமூக அமைதிக்கு எதிரானவையாகும்.

பாஜகவை வளரவிட்டு வேடிக்கை பார்க்கிறதா திமுக அரசு? பல நூறு ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இரு சமயத்தவரும் சிறுமுரணுக்கும் இடங்கொடாது வழிபாடும், தொழுகையும் நடத்தி வரும் நிலையில், இப்போது தேவையற்ற பதற்றம் எப்படி உருவானது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? மக்களின் நலனை விடுத்து, மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு ஏன் துணைபோகிறது? பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு? மண்ணின் நலனுக்காக மக்களோடு இணைந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதோடு, நீதிமன்றத்தில் கடும் வாதங்களை வைத்து அனுமதியைப் பெறாவண்ணம் தடுக்கும் திமுக அரசு, பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகளின் ஒன்றுகூடலுக்கு மட்டும் வழியமைத்தது ஏன்? தொடக்க நிலையிலேயே, கூடுதல் கவனம் செலுத்தி, இரு தரப்பையும் கலந்தாலோசித்து ஒருமித்த முடிவுக்கு வந்திருந்தால், இப்படியான பதற்றச்சூழல் உருவாகியிருக்குமா? சிக்கலைப் பெரிதாக்கி, பாஜகவை முழுவதுமாக அரசியல் செய்யவிட்டு வேடிக்கைப் பார்ப்பதுதான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!

கனிமவள சூறையின் போது ஏன் வரவில்லை? ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என இன்றைக்குப் போராடுகிற பெருமக்களே! தமிழர் நிலமெங்கும் இருக்கும் குன்றுகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டித் தகர்த்து, கனிமவளங்களைச் சூறையாடும்போது எங்கே போனீர்கள்? அவற்றையெல்லாம. காக்க ஏன் வீதிக்கு வந்து போராடவில்லை? இம்மலை மீது வரும் பற்றும், பக்தியும் அந்த மலைகள் மீதும், குன்றுகள் மீதும் வராதது ஏன்? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் நம் மண்ணில் உள்ள மலைகளை குடைந்து கனிம வளங்களை கடத்துவதை எதிர்த்து நாங்கள் போராடும்போது நீங்கள் எதுவும் பேசாது கடந்து சென்றது ஏன்? மலைகளை காக்க வேண்டும் என்ற எங்களின் உரிமைக்குரல் அப்போதெல்லாம் உங்கள் செவிகளில் விழாமல் போனது ஏன்?

சித்திரை, கள்ளழகர் விழாக்கள் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவுக்கும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வுக்கும் இலட்சக்கணக்கான மக்கள் மதத்தைக் கடந்து ஒற்றுமையோடு கூடிக் குலவும்போது, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே நடந்தேறி வந்த வழிபாட்டை இவ்வளவு பெரிய முரணாக மாற்றி, சிக்கலாக உருவாக்கப்படுவதென்பது ஆளும் திமுக அரசின் துணையின்றி நடக்க வாய்ப்பில்லை. இருதரப்புக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒரு சார்பான பேச்சும், பிரச்சினை மேலும் சிக்கலாக வழிவகுத்தது. அதனையே தற்போது மதவாதச் சக்திகள் பயன்படுத்திக்கொள்ளவும் வாசல் திறந்து விட்டுள்ளது.
மொத்தத்தில், திமுக அரசு கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததுதான் மதுரை மக்களிடையே பதற்றம் ஏற்பட முழுமுதற் காரணமாகும். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்கிறது திருக்குரான்! ‘உன் மதம் பெரிது வழிபடு! என் மதமும் பெரிது வழிவிடு’ என்பதுதான் காலங்காலமாக தமிழர் மண் கடைபிடித்து வரும் மாந்தநேயமிக்க சமயப்பொறையாகும்.

குன்றுகளும் சமயங்களும் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் என்பது தமிழர் சொல் வழக்கு; அன்று தம் சீடர்க்கெல்லாம்,, அறிவுரை கூற எண்ணி,,, மன்றினை தொடங்கிய இயேசு பிரான் கல்வாரி குன்றின் மேல் ஏறி நின்றே கொடைக்கரம் விரித்து நீட்டியே அருள்நெறி பொழிந்தார்; நபி பெருமானருக்கு ஹிரா மலையின் மீதே புனித குரான் அருளப்பட்டது; கிருஷ்ண பரமாத்மாவிற்கு கோவர்த்தன மலை, சிவபெருமானுக்கு கயிலை மலை, பார்வதிக்கு பர்வதமலை என எல்லா சமயங்களும் இறைவனோடு இயற்கையை பொருத்தியே போற்றுகிறது. மதமோதல் நிகழாத தமிழகம் வழிபாடு என்பதே பேரன்பு வெளிச்சத்தின் வெளிப்பாடாகும்.
எனவே, வழிபாட்டை வைத்து வன்முறைகளை உருவாக்கி மதவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்ற முயல்பவர்களுக்கு தமிழர் மண்ணும், மக்களும் ஒருபோதும் இடமளித்திடக்கூடாது. இந்திய பெருநிலம் முழுவதும் மதக்கலவரங்கள் நிகழ்ந்து பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு, நாடே நரகமான கொடும் நாட்களிலும்கூட தமிழர் நிலம் மட்டும் தம் பல்லாயிரம் ஆண்டு பழமையான பண்பாட்டு முதிர்ச்சியாலும், மானுட நேயத்தாலும் மதமோதல் நிகழாமல் அமைதி காத்து உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்தது. பேசித் தீர்ப்போம்.
ஆகவே, என் உயிர் தமிழ்ச்சொந்தங்கள் ஒரு மொழி பேசி, ஒரு மண்ணில் பிறந்து, ஒரு தாய் வயிற்று மக்களாக வாழும் நாம், நமக்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ள வழிபாட்டுச் சிக்கலையும் நாமே பேசி நமக்குள் தீர்த்துகொள்ள முடியும். இருபுறமும் உள்ள சமயப்பெரியவர்கள் அதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்! திருப்பரங்குன்றம் மலையானது தமிழ் மக்கள் அனைவருக்கும் உரித்தானது என்ற உண்மையை ஒற்றுமையுடன் உரத்துச்சொல்வோம்! தமிழர் நிலம் எந்த காலத்திலும் மதப்பூசல் எழ இடமளிக்காது என்பதை உலகிற்கு உணர்த்துவோம்! என சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் பேச்சு: உலகத் தமிழினம் நெடுமாறனைத்தான் மன்னிக்காது…!

உலகத் தமிழினம் நெடுமாறனைத்தான் மன்னிக்காது. தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. இப்போதுதான் பேசினேன்.. மகள் துவாரகா வந்து கொண்டிருக்கிறார் என்று சொன்ன நெடுமாறனை உலகத் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, “திராவிடா உனக்கு ஒரு தலைவர் பெரியார் மட்டும்தான். ஆனால் தமிழர்கள் எங்களுக்கு எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் முதல் இந்தி எதிர்ப்பு போரை நடத்தியது பெரியார் என பேசுகிற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வரலாற்றை தலையில் அடித்துக் கொண்டு சிரித்து கொண்டுதான் போக வேண்டும். முதன்முதலில் தமிழ்நாட்டில் இந்தி பள்ளியைத் தொடங்கியதே உங்கள் பெரியார்தான்.

இந்தி எதிர்ப்பு போரில் தமிழர்கள் தீக்குளித்த போது கொலைகாரர்களாக பார்த்தவர் பெரியார்தான். கடன் தொல்லையால் கீழப்பழூர் சின்னசாமி தற்கொலை செய்ததாக இழிவுபடுத்தியது பெரியார்தான். இந்திக்கு எதிராக போராடுகிற கருங்காலிகளை பெட்ரோல், டீசல் கொண்டு கொழுத்துங்க, வெட்டுங்க என்று சொன்னவர்தான் பெரியார். எல்லாரையும் படிக்க வைத்த பெரியார், உங்களைப் படிக்க வைக்காமல் விட்டுவிட்டார் வெரி சாரி.

பிரபாகரன் ஒரு தீவிரவாதி.. பயங்கரவாதி.. தனித் தமிழீழம் தீர்வு அல்ல என்று சொல்கிற கட்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இலங்கையில் தமிழினத்தை அழித்தது காங்கிரஸ், துணை நின்றது திமுக. அப்போது ஆதரித்தது கம்யூனிஸ்ட் கட்சி. உலகத் தமிழினம் நெடுமாறனைத்தான் மன்னிக்காது. தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. இப்போதுதான் பேசினேன்.. மகள் துவாரகா வந்து கொண்டிருக்கிறார் என்று சொன்ன நெடுமாறனை உலகத் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனக்கு எந்த பதற்றமும் இல்லை.. எல்லோரும்தான் என்னை பார்த்து பதற்றம் அடைகிறார்கள்.

வீரமிக்க ஆண் மக்கள், ஆகச் சிறந்த தலைவர்கள் பெரியாரின் பிராமண எதிர்ப்பை ஏற்பதாக இருந்தால், ஏன் ஒரு பிராமண பெண்ணின் தலைமையை ஏற்றீர்கள். அம்மா, அம்மா என்று காலில் விழுந்து கும்பிட்டீர்கள்! உங்கள் பெரியார் சொன்னதை திராவிட கட்சிகள் செய்ததா?. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் ஒருவரை சபாநாயகர் ஆக்கியது, பெரியார் எதிர்த்த அந்தப் பார்ப்பணிய பெண் தான். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சபாநாயகராக நிறுத்தி அனைவரையும் எழுந்து நிற்க வைத்தது பிராமண பெண்தான். பெரியார் செய்த சமூக சீர்திருத்தத்தை, பெண்ணிய உரிமையை, சாதிய ஒழிப்பை, சமூக நீதியை, ஒரே ஒரு முறை மேடைபோட்டு, பட்டியலிட்டு பேசுங்கள்.

பெரியாரை ஆதரித்து பேசினேன்தான். நான் அதனை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், தற்போது தலை வலிக்கிறது மாத்திரை போடுகின்றேன். பெரியாரை நான் புள்ளி அளவிற்குதான் விமர்சித்து பேசியுள்ளேன். பெரியாரை எங்களை விட அதிகமாக எதிர்த்து பேசியது பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் தான்.

திமுக ஏழாவது முறையாக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. உண்மையையும் நேர்மையும் எடுத்துக்கொண்டு வலுவான கருத்து வைக்கும் போது சில சலசலப்புகள் ஏற்படத்தான் செய்யும். ஏற்கெனவே உள்ள ஒரு கோட்பாட்டையும் மரபையும் தகர்த்து, புதிய ஒரு கோட்பாட்டை கட்டமைப்பை கட்டமைக்க நினைக்கும் போது அதை ஏற்பார்கள், எதிர்ப்பார்கள் ஆதரிப்பார்கள், அருவருப்பார்கள், விமர்சிப்பார்கள் என்றெல்லாம் அச்சப்படக் கூடாது. அதை துணிந்து செய்கிறவனுக்குத்தான் ஒரு போர் வீரனுக்கு உள்ள துணிவும் வீரமும் தேவைப்படுகிறது. அப்படி நின்றவன்தான் உலகெங்கிலும் உள்ள மாறுதல்களை கொண்டு வந்திருக்கின்றான். இதான் வரலாறு.

தற்போது பெரியவர்களுக்குள் சண்டை நடக்கிறது. விஜயை இப்போது ஏன் இழுக்கிறீர்கள்? மெயின் ரவுடிகள் மோதும் போது விஜயை ஏன் இழுக்கிறீர்கள்?. திரும்பத் திரும்ப சொல்கிறேன்.. இதனை பெரியார் மண்.. பெரியார் மண் என்று சொன்னால் கொலை வெறியாகிவிடும். இது சேர சோழ பாண்டியர் மண்.. பூலித்தேவர் மண்.. வேலுநாச்சியார் மண்.. முத்துராமலிங்க தேவர் மண். காமராஜர் மண். இது என் மண்.. தமிழ் மண்.. பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்” என பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.

சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு: “பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்..!”

திரும்பத் திரும்ப சொல்கிறேன்.. இதனை பெரியார் மண்.. பெரியார் மண் என்று சொன்னால் கொலை வெறியாகிவிடும், பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, “திராவிடா உனக்கு ஒரு தலைவர் பெரியார் மட்டும்தான். ஆனால் தமிழர்கள் எங்களுக்கு எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் முதல் இந்தி எதிர்ப்பு போரை நடத்தியது பெரியார் என பேசுகிற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வரலாற்றை தலையில் அடித்துக் கொண்டு சிரித்து கொண்டுதான் போக வேண்டும். முதன்முதலில் தமிழ்நாட்டில் இந்தி பள்ளியைத் தொடங்கியதே உங்கள் பெரியார்தான்.

இந்தி எதிர்ப்பு போரில் தமிழர்கள் தீக்குளித்த போது கொலைகாரர்களாக பார்த்தவர் பெரியார்தான். கடன் தொல்லையால் கீழப்பழூர் சின்னசாமி தற்கொலை செய்ததாக இழிவுபடுத்தியது பெரியார்தான். இந்திக்கு எதிராக போராடுகிற கருங்காலிகளை பெட்ரோல், டீசல் கொண்டு கொழுத்துங்க, வெட்டுங்க என்று சொன்னவர்தான் பெரியார். எல்லாரையும் படிக்க வைத்த பெரியார், உங்களைப் படிக்க வைக்காமல் விட்டுவிட்டார் வெரி சாரி.

பிரபாகரன் ஒரு தீவிரவாதி.. பயங்கரவாதி.. தனித் தமிழீழம் தீர்வு அல்ல என்று சொல்கிற கட்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இலங்கையில் தமிழினத்தை அழித்தது காங்கிரஸ், துணை நின்றது திமுக. அப்போது ஆதரித்தது கம்யூனிஸ்ட் கட்சி. உலகத் தமிழினம் நெடுமாறனைத்தான் மன்னிக்காது. தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. இப்போதுதான் பேசினேன்.. மகள் துவாரகா வந்து கொண்டிருக்கிறார் என்று சொன்ன நெடுமாறனை உலகத் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனக்கு எந்த பதற்றமும் இல்லை.. எல்லோரும்தான் என்னை பார்த்து பதற்றம் அடைகிறார்கள்.

வீரமிக்க ஆண் மக்கள், ஆகச் சிறந்த தலைவர்கள் பெரியாரின் பிராமண எதிர்ப்பை ஏற்பதாக இருந்தால், ஏன் ஒரு பிராமண பெண்ணின் தலைமையை ஏற்றீர்கள். அம்மா, அம்மா என்று காலில் விழுந்து கும்பிட்டீர்கள்! உங்கள் பெரியார் சொன்னதை திராவிட கட்சிகள் செய்ததா?. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் ஒருவரை சபாநாயகர் ஆக்கியது, பெரியார் எதிர்த்த அந்தப் பார்ப்பணிய பெண் தான். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சபாநாயகராக நிறுத்தி அனைவரையும் எழுந்து நிற்க வைத்தது பிராமண பெண்தான். பெரியார் செய்த சமூக சீர்திருத்தத்தை, பெண்ணிய உரிமையை, சாதிய ஒழிப்பை, சமூக நீதியை, ஒரே ஒரு முறை மேடைபோட்டு, பட்டியலிட்டு பேசுங்கள்.

பெரியாரை ஆதரித்து பேசினேன்தான். நான் அதனை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், தற்போது தலை வலிக்கிறது மாத்திரை போடுகின்றேன். பெரியாரை நான் புள்ளி அளவிற்குதான் விமர்சித்து பேசியுள்ளேன். பெரியாரை எங்களை விட அதிகமாக எதிர்த்து பேசியது பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் தான்.

திமுக ஏழாவது முறையாக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. உண்மையையும் நேர்மையும் எடுத்துக்கொண்டு வலுவான கருத்து வைக்கும் போது சில சலசலப்புகள் ஏற்படத்தான் செய்யும். ஏற்கெனவே உள்ள ஒரு கோட்பாட்டையும் மரபையும் தகர்த்து, புதிய ஒரு கோட்பாட்டை கட்டமைப்பை கட்டமைக்க நினைக்கும் போது அதை ஏற்பார்கள், எதிர்ப்பார்கள் ஆதரிப்பார்கள், அருவருப்பார்கள், விமர்சிப்பார்கள் என்றெல்லாம் அச்சப்படக் கூடாது. அதை துணிந்து செய்கிறவனுக்குத்தான் ஒரு போர் வீரனுக்கு உள்ள துணிவும் வீரமும் தேவைப்படுகிறது. அப்படி நின்றவன்தான் உலகெங்கிலும் உள்ள மாறுதல்களை கொண்டு வந்திருக்கின்றான். இதான் வரலாறு.

தற்போது பெரியவர்களுக்குள் சண்டை நடக்கிறது. விஜயை இப்போது ஏன் இழுக்கிறீர்கள்? மெயின் ரவுடிகள் மோதும் போது விஜயை ஏன் இழுக்கிறீர்கள்?. திரும்பத் திரும்ப சொல்கிறேன்.. இதனை பெரியார் மண்.. பெரியார் மண் என்று சொன்னால் கொலை வெறியாகிவிடும். இது சேர சோழ பாண்டியர் மண்.. பூலித்தேவர் மண்.. வேலுநாச்சியார் மண்.. முத்துராமலிங்க தேவர் மண். காமராஜர் மண். இது என் மண்.. தமிழ் மண்.. பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்” என பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.

திருமுருகன் காந்தி: நீங்கதான் வீரன் ஆச்சே..! ஆதாரத்தை குடுங்க சீமான்..!

சீமான்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறாரே அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து சில கருத்துக்களை பேசியது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சீமானின் தொடர் சர்ச்சை பேச்சால் சீமானின் வீடு இன்று முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இதையடுத்து நீலாங்கரையிலுள்ள சீமான் வீடு முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சீமானின் வீட்டை முற்றுகையிட வந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரியார் குறித்து அவதூறாக பத்திரிகையாளர் முன்புதான் பேசினார். அப்போது, அவர்கள் முன்பே பெரியார் தொடர்பான ஆதாரத்தைக் காட்ட வேண்டியதுதானே. டயலாக் பேசுவதற்கு மட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு. ஆனால் மன்னிப்பு கேட்பது மட்டும் நீதிமன்றத்திலா… பொது வெளியில் கேட்டால் சீமான் பதில் சொல்லமாட்டாரா… பதில் சொன்னால் என்ன பிரச்னை ஆகிவிடும். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும். அது என்ன ரகசிய ஆவணமா… ரகசியமாக சீமானே தயாரித்து வைத்திருக்கிறாரா. நீங்கள்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறீர்கள். அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடுங்கள்.

பெரியார் குறித்த அவதூறுக்கான எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அந்தப் புத்தகத்தை படித்துள்ளோம். சீமான் கூறும் ஆதாரம் எல்லாம் பாஜகவினர் எழுதிய புத்தகம். சீமானுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை. அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் என்று கதை விடுகிறார். சீமான் எந்த புத்தகமும் படிக்காமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார். இவர்களுக்கு எல்லாம் இதைப் பற்றி எந்தவொரு அக்கறையும் கிடையாது. பிரபாகரன் குறித்து அவதூறு பேசுவது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இழிவுபடுத்துவது, தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்புவது இதுதான் அவர்களுடைய அரசியலாக இருக்கிறது.

இதற்குப் பின்னரும் தமிழக மக்கள் அமைதி காக்க மாட்டார்கள். தமிழினத்திற்காக உழைத்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதை, அதை வைத்து சம்பாதிப்பதை, பிஜேபி, RSS அமைப்புகளுக்கு கூலி வேலை பார்ப்பதை தமிழக மக்கள் என்றைக்கும் அனுமதித்து நாங்கள் பார்த்ததில்லை. இவர்கள் நிச்சயமாக விரட்டி அடிக்கப்படுவார்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர் கோவை ராமகிருஷ்ணன் சீமானிடம் பெரியார் குறித்த ஆதாரத்தை கொடுக்குமாறு கேட்டார். ஆனால், சீமான் அதற்கான எந்தவிதமான பதிலையும் கூறவில்லை. அதற்குப் பின்னரும் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பேசி வருகிறார். இப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் சீமானிடம் கேள்வி கேட்பதற்காக வந்திருக்கிறோம்.

இதற்கும் சீமான் பதில் சொல்ல வரவில்லை என்றால் அடுத்தகட்டமாக எங்கு அரசியல் செய்கிறாரோ அந்த தேர்தல் களத்தில் அதற்கான எதிர்ப்பை தொடர்ச்சியாக தெரிவிப்போம். எந்தவொரு பிரச்னைகளுக்கும் சீமான் எதுவும் இதுவரை பேசவில்லை. இதுவரை எந்தவொரு பிரச்னைக்காகவும், சிக்கல்களுக்காகவும் மக்களுக்காக சீமான் வந்து நின்றது கிடையாது. மீனவப் பிரச்னை முதல் ஜாதிப் பிரச்னை வரை எந்த மக்கள் பிரச்னைக்காகவும் அவர் வந்ததில்லை. ஆதரவு தெரிவிப்பது, அறிக்கை அளிப்பது, பத்திரிகையாளர் முன்பு தைரியம், வீரம், கொச்சை பேசுவதை தவிர சீமான் எதுவும் செய்யவில்லை. சீமானின் அச்ச உணர்வையும், கோழைத்தனத்தையும் அம்பலப்படுத்துவதே எங்கள் வேலை. சீமான் பாஜகவுடன் வெளிப்படையாக நிற்கிறார். சீமானுக்குப் பொய் செல்வது மட்டுமே வேலை என திருமுருகன் காந்தி விமர்சனம் செய்தார்.

சென்னையில் திடீரென முளைத்த போஸ்டர்களால் பரபரப்பு…!

“அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற போஸ்டர்கள் தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே சினிமா, அரசியல் மற்றும் மக்களின் பொது நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் போஸ்டர் கலாசாரம் மக்களோடு மக்களாக இரண்டற கலந்த ஒன்றாகும்.

அதிலும் குறிப்பாக அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க போஸ்டர்கள் ஒட்டுகின்றனர். அப்படி, ஒரு போஸ்டர் தான் இன்று தமிழகத்தில் தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டு தமிழக அரசியல் களத்தையே பரபரப்பாக்கி உள்ளது.

“அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை, மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற வாசகங்களுடன், வேறு எந்தக் குறிப்பும் இன்றி சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், இதனை யார் வடிவமைத்தது, எந்தக் கட்சிப் பொறுப்பாளர் என எந்த விவரங்களும் இல்லை. இந்த போஸ்டரை பலரும் பார்த்து, இந்த போஸ்டரில் குறிப்பிடப்படுவது யாராக இருக்கும் என கேள்வி எழுப்பி விவாதித்து வருகின்றனர். அரசியல் ரீதியான போஸ்டர் தானா? அல்லது வேறு எதும் விளம்பரமா? என்றும் தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதற்கிடையே பெரியார் பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய வரும் நிலையில், சீமானுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரம் அடைந்துள்ளன.

இப்படியான சூழலில், பெயர் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளன. கட்சிக்கார்களா? அல்லது எதிர்க்கட்சியினரா? இந்த போஸ்டர்களை யார் ஒட்டியது என தெரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர்.