செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லிவிட்டு, தற்போது ஷூ அணிந்து வலம் வருவது , தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்வது உள்ளிட்ட செயல்களால் உலகமே அவரை கண்டு எள்ளி நகையாடுகிறது என அமைச்சார் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அநாகரீகத்தின் உச்சம் என்று தெரிவித்துள்ள அவர், அண்ணாமலையின் கேலி கூத்து நடவடிக்கைகள் அளவில்லாமல் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2025 பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது, தற்குறிகள் திமுகவின் உதயநிதி, அன்பில் மகேஷ் போன்ற தற்குறிகளை போல் அதே பாணியில் நான் பேச போகிறேன். நீ சூரியனை 11.30 மணிக்கு பார்க்கிறவன், நாங்கள் அதிகாலை 3 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு 5 மணிக்கு கோப்புகளை எடுத்து பார்ப்பவர்கள். பிரதமர் மோடியை பார்த்து குற்றம்சாட்டுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்..
பிரதமர் மோடி முன்பு தமிழ்நாடு வந்தால், நாங்கள் கோ பேக் மோடி என்றோம். இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடினு சொல்லிப் பாரு.. எங்க அப்பா முதலமைச்சர்.. எங்க தாத்தா முதலமைச்சர்னு சொல்லி பாரு.. பார்க்கலாம் என தெரிவித்து இருந்தார்.
அண்ணாமலை பேசிய வீடியோ ட்ரெண்டான நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், என்னை ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அவர்களது தரம் அதுதான். என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக தெரிவித்திருந்தார். தைரியமிருந்தால் அண்ணாமலையை அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள். உதயநிதி, அண்ணாமலையின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. கல்வி நிதி தொடர்பானது. நிதியை பெற்றுத் தர துப்பில்லாதவர்கள் பேசுகிறார்கள்.
தமிழகத்தின் நிதி உரிமையை திசை திருப்பவே இப்படி செய்கிறார்கள். தனியார் பள்ளி தனியார் பள்ளிகளை யாராவது சட்டவிரோதமாக நடத்துகிறார்களா என்ன? மத்திய அரசிடம் போதிய அனுமதியை பெற்றுத்தானே நடத்துகிறார்கள். தனியார் பள்ளிகளில் யாராவது இலவச உணவையோ இலவச சீருடையையோ தருகிறார்களா என்ன? தனியார் பள்ளிகளில் இந்தி தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்த வேண்டாம். மும்மொழி கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது.
இதனைத் தொடர்ந்து திமுகவினர் தரப்பில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. சோசியல் மீடியா தொடங்கி அனைத்திலும் திமுகவினர் அண்ணாமலையை கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அநாகரீகத்தின் உச்சம். திராவிட மாடல், முதலமைச்சர், துணை முதலமைச்சர் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்தவித அருகதையும் இல்லை. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என்று அனைத்திலும் தமிழக மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலை தொடர்ந்து செய்யும் கேலிக்கூத்து நடவடிக்கைகளுக்கு அளவில்லாமல் போகிறது.
திடீரென செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லிவிட்டு, தற்போது ஷூ அணிந்து வலம் வருவது , தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்வது உள்ளிட்ட செயல்களால் உலகமே அவரை கண்டு எள்ளி நகையாடுகிறது. அமைச்சர்கள் பதவிகளில் இருப்பவர்களை தற்குறி என்று சொல்லும் அளவிற்கு தற்குறித்தனமாக செயல்படும் அண்ணாமலை கண்ணாடி முன் நின்றால், அவரின் தற்குறித்தனங்கள் வரிசைக் கட்டி நிற்கும்.
மேலும், விஜய்யை தொடர்ந்து திருமா மீது அண்ணாமலை அட்டாக்” அநாகரீகமானவர் என்பதை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நிரூபித்து கொண்டிருக்கும் அண்ணாமலை, ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு கொண்டே இருக்கிறார் என்பது நிதர்சனம். எதையும் சகித்து கொள்ள முடியாத ஒரு அரைவேக்காடு என மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.