அதிஷி மர்லினா சிங்: டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் அமளி.. எதிர்க்கட்சி தலைவர் அதிஷி உள்ளிட்ட 11 MLA -க்கள் இடைநீக்கம்..

டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிஷி மர்லினா சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி MLA -க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MLA -க்களளுடன் மூன்று நாள் டெல்லி சட்டமன்றக் கூட்டம் நேற்று தொடங்கியது. பாஜக மற்றும் எதிர்க்கட்சி MLA -க்கள் சபாநாயகர் விஜேந்தர் குப்தா தலைமையில் சட்டமன்றத்தில் பதவியேற்றனர்.

2-வது நாளான இன்று, முந்தைய ஆம் ஆமி கட்சி அரசாங்கத்தின் செயல்திறன் குறித்த சிஏஜி அறிக்கைகளை பாஜக அரசு தாக்கல் செய்வதற்கு முன்பாக, டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக இன்றும் ஆம் ஆத்மி MLA -க்கள்சட்டசபையில் போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் அதிஷி மர்லினா சிங், முன்னாள் டெல்லி அமைச்சர் கோபால் ராய் உள்ளிட்ட 11 MLA -க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து சட்டசபை தலைவர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை மீது பாஜக உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர். முந்தைய ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி மர்லினா சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சட்டமேதை அம்பேத்கரை விட நரேந்திர மோடி பெரிய தலைவரா என்று கேள்வி எழுப்பினார். டெல்லியில் பாஜக பதவிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் அம்பேத்கர் படத்தை அகற்றிவிட்டு மோடி படத்தை வைத்துள்ளனர். அம்பேத்கரை புகழ்ந்து முழக்கமிட்ட ஆம் ஆத்மி MLA -க்களை பேரவையில் இருந்து வெளியேற்றிவிட்டனர். அம்பேத்கர் மீதான பாரதிய ஜனதா கட்சியின் வெறுப்பையே டெல்லி அரசின் செயல் காட்டுவதாக அதிஷி மர்லினா சிங் தெரிவித்தார்.

பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்..!

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்ததாத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியிலிருந்து நாகர்கோவில் வடசேரியை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அழகப்பபுரம் பகுதியில் சென்றபோது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் பேருந்தை நிறுத்தும்படி கை காட்டினர். ஆனால் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் காரில் சென்று பேருந்தை நிறுத்தினர். பின் பேருந்து ஓட்டுனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தற்போது ஓட்டுநனரிடம் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனடிப்படையில், அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்டிபன், நடத்துனர் மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.