நீங்க என்ன ரொம்ப உத்தமரா..!? நான் தான் உங்களுக்கு 24 மணி நேரமும் சாபம் விட்டுக்கொண்டு உள்ளேன் சீமான்..!

தவெக முதல் மாநில மாநாடு முடிந்த பின்னர் பல அரசியல் இயக்கங்கள் விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் காட்டமாகவே விமர்சித்தார். ஒரு கட்டத்தில், விஜய்யை கூமுட்டை எனவும் லாரி அடித்துச் செத்துப்போவாய் எனவும் சீமான் கூறியது அரசியல் நாகரீகத்தினை அவமதிக்கும் வகையில் இருப்பதாக தவெக தொண்டர்கள் தெரிவித்தனர்.

விஜய்யுடன் ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை விஜயலட்சுமி ஏற்கனவே சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டும் உள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார். இந்நிலையில், விஜய்யை மோசமாக விமர்சித்த சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ” என்ன மிஸ்டர் சீமான், சாபமெல்லாம் விடுகின்றீர்கள்? விஜய் அண்ணனுக்கு ரோட்டின் இந்தப் பக்கம் இரு, அல்லது அந்தப் பக்கம் இரு, நடுவில் இருந்தால் லாரி அடித்துச் செத்துப்போவீர்கள் என சாபம் எல்லாம் விடுகின்றீர்கள்.

நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான். நான் உங்க ரூட்டுக்கே வரேன். அண்ணன் விஜய், திமுக என இவர்கள் எல்லாம் உங்கள் பார்வையில் கொள்கை ரீதியாகத்தானே தவறாக உள்ளதாக கூறுகின்றீர்கள்.கொள்கை ரீதியாக தவறு செய்பவர்களே லாரி அடித்துச் செத்துப்போவர்கள் என்றால், எங்களைப் போன்ற பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த நீங்க, எது அடித்துச் சாகமாட்டீர்கள் மிஸ்டர் சீமான். முதலில் உங்க கட்சியில் உள்ள ஓட்டைகளை எல்லாம் சரி செய்யுங்கள். திருச்சி சூர்யா உங்களின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு, உங்களின் மானத்தினை வாங்கப்போகின்றாராம். முதலில் அதைப்போய் கவனியுங்கள்.

திமுகவுக்கு என்ன செய்ய வேண்டும் என திமுகவுக்குத் தெரியும், விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும்னு விஜய் அண்ணனுக்குத் தெரியும். நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைஞ்சுட்டு இருக்கீங்க. எனவே உத்தமர் போலவும், கண்ணகி மாதிரியும் சாபம் எல்லாம் விடாதீங்க. நான் தான் உங்களுக்கு 24 மணி நேரமும் சாபம் விட்டுக்கொண்டு உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

கோவை சத்யன்: முதலில் காலியாகப் போவது நாம் தமிழர் என்கிற கூடாரம்தான்..!

விஜய் மேடையிலேயே யார் வந்தாலும் அரவணைப்போம் எனவும் அறிவித்துவிட்டார். ஆகையால் முதலில் காலியாகப் போவது நாம் தமிழர் என்கிற கூடாரம்தான் என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு கோவை சத்யன் அளித்த பேட்டியில், எதை எடுத்தாலும் இதை நான் சொன்னேன்.. நான் சொன்னேன் என்கிறவர் சீமான். தமிழக அரசியல் களத்தில் எந்த சாதனையும் செய்யாமல், மக்கள் நலத் திட்டங்களையும் செய்யாமல் மற்ற கட்சியினர் செய்த அனைத்து சாதனைகளையும் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி சுற்றக் கூடிய, வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கக் கூடிய யார் எனக் கேட்டீர்கள் எனில் சீமான் என சுற்றுகிறவர்தான். இன்னும் சொல்லப் போனால் சீமானின் தாத்தாதான், லார்டு மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கே அறிவுரை சொல்லி இந்தியாவுக்கே சுதந்திரம் கொடுத்ததாகவும் அடுத்ததாக சொல்வார்.

7 தலைமுறைகளுக்கு முன்னர் இருந்த சீமானின் எள்ளு தாத்தாதான் வேலுநாச்சியாரின் அப்பாவுக்கு பெண் குழந்தை பிறந்த போது, வேலுநாச்சியார் என பெயர் வைத்தது என்று கூட சொல்வார். இந்த அளவுக்குக் கட்டுக் கதைகளும் போலி கற்பனைகளையும் வெட்கமே இல்லாமல் இந்த அளவுக்கு அடுத்தவர் சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் அவரது அரசியல் கட்டமைப்பு. இதுவரைக்கும் மக்கள் நலனுக்காக பேச்சாகவோ செயலாகவோ போராட்டமாகவோ அவர் அறிவித்த வரலாறு எதுவுமே இல்லை. ஊடகங்களில் அடுத்தவரை கேலி பேசுவதும் தரக்குறைவாக பேசுவதும் ஒரு பெரிய வீரர் போல மேடை நாடகத்தில் நடிப்பது போலவும் செய்வதை மட்டுமே கொள்கையாக வைத்திருப்பவர் சீமான்.

குறிப்பாக இளைஞர்களை தூண்டிவிடக் கூடியவர் சீமான். வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்பது உரிய குழுக்கள் அமைத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்த முன்னெடுப்பு. என்னென்ன தொழில்கள் இந்த பகுதியில் தொடங்க கூடாது என்பது வரை வரையறை செய்து, அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேளாண் பாதுகாப்பு மண்டலம் கிடையாது. இது எடப்பாடி பழனிசாமியின் சிந்தனையில் உதித்த ஒன்று. இதற்கு கூட சீமான் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டுகிறார். ஆமைக்கறி போன்ற கட்டுக்கதைகளின் தொடர்ச்சிதான் இது. நடிகர் விஜய் கட்சியை தொடங்கி இருப்பதற்கு யார் பயப்படுகிறார்களோ இல்லையோ சீமான் அரண்டு நடுங்கி பயந்து போய் இருக்கிறார். ஏனெனில் அவரிடம் கட்டமைப்பே இல்லை. அவரிடம் இருப்பது எல்லாம் மாவட்ட செயலாளர்கள் என்பவர்கள்தான். 13 ஆண்டுகளாக சீமானை நம்பி வீணாகப் போய்விட்டோம் என்று சொல்லி வெளியே வருகிறவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

விஜய் மேடையிலேயே யார் வந்தாலும் அரவணைப்போம் எனவும் அறிவித்துவிட்டார். ஆகையால் முதலில் காலியாகப் போவது நாம் தமிழர் என்கிற கூடாரம்தான். நாம் தமிழரின் வாக்கு வங்கியில் பெரும்பான்மையான வாக்குகள் நடிகர் விஜய்க்குப் போகும். இதனால் பயந்து நடுங்கி தன்னை காப்பாற்ற வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க பயந்து கொண்டு மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார் சீமான் என கோவை சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சீமான்: வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ..!

தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா? அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல, கூமுட்டை. சாலையில் அந்த ஓரத்தில் நில் அல்லது இந்த ஓரத்தில் நில், நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்து விடுவாய். இது நடுநிலை இல்லை மிகவும் கொடு நிலை. வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ… என சீமான் பேசியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் விஜய் பேசும்போதும் பல தரப்பினரையும் தாக்கி பேசினார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் பேசிய சீமான், தம்பி இது பன்னாட்டு புரட்சி தம்பி, என் மூதாதையர், முப்பாட்டனின் தோளில் இருந்த பணப்பையை அறுத்துக் கொண்டு ஓடி விட்டாய், இந்த தலைமுறை பேரனும் பேத்தியும் விரட்டியடித்து அதை பறிக்கின்றோம். நான் குட்டிக்கதை சொல்பவன் இல்லை தம்பி, வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்கவேண்டும்.

நாங்கள் அதை படித்து பிஎச்டி பட்டம் வாங்கி விட்டோம். நீங்கள் இனிமேல்தான் சங்க இலக்கியத்தில் எங்கு இலக்கியம் உள்ளது என்று தேடவேண்டும். சங்க இலக்கியத்தில் வருகின்ற பாண்டியர் நெடுஞ்செழிய மன்னனின் பேரனும் பேத்தியும் நாங்கள். அது கதை அல்ல, எங்கள் இனத்தின் வரலாறு. எங்களைப் பொறுத்தவரை எதிர்ப்பு புரட்சி முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு, அன்பு என்றால் அன்பு, வம்பு என்றால் வம்பு.

நீங்கள் வெட்ட அருவாளை ஓங்கினால் விழுந்து கும்பிட மாட்டோம், வெட்ட நினைக்கும் போதே வெட்டி விடுவோம். தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா? அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல, கூமுட்டை. சாலையில் அந்த ஓரத்தில் நில் அல்லது இந்த ஓரத்தில் நில், நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்து விடுவாய். இது நடுநிலை இல்லை மிகவும் கொடு நிலை. வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ… நான் கருவிலேயே என் எதிரி யார் என தீர்மானித்துவிட்டு பிறந்தவன்.

நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் இல்லை. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். இது சினிமா பஞ்ச் டயலாக் இல்லை தம்பி…இது நெஞ்சு டயலாக். எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது.

வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலு நாச்சியார் யார்? என்று சொல்லு தம்பி. சத்தமாக பேசும் நான் வரவில்லை என்றால் வேலு நாச்சியார். அழகு முத்துக்கோன், அஞ்சலை, சேர, சோழ பாண்டியர் யார் என்று தெரியாது, நீங்க வைத்துள்ள கட் அவுட்டுகள் எல்லாம் நான் வரைய வைத்த படங்கள். தீரன் சின்னமலையை சங்க இலக்கியத்தில் படிக்கக்கூடாது தம்பி. வரலாற்றில் படிக்க வேண்டும். அவன் மன்னன் இல்லை, விவசாய குடும்பத்தில் பிறந்த எளிய மகன். திப்பு சுல்தானின் படையை விரட்டி அடித்தவன். வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள் தம்பி என சீமான் பேசினார்.

விஜய் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்று கூறியது குறித்து பல உதாரணங்களை பேசி கிண்டல் அடித்த சீமான் ஒவ்வொரு பேச்சு முடிந்த பின்பும் தம்பி, தம்பி எனக்கூறி விஜயை சகட்டு மேனிக்கு கலாய்த்தார். அப்போது தொண்டர்கள் கைதட்டி வரவேற்றனர். இந்த சீமானின் பேச்சுக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சீமான்: சாலை நடுவே நின்னா லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் தம்பி..!

சாலை நடுவே நின்னா லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் தம்பி என தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக தாக்கி சீமான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் விஜய் பேசும்போதும் பல தரப்பினரையும் தாக்கி பேசினார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் பேசிய சீமான், தம்பி இது பன்னாட்டு புரட்சி தம்பி, என் மூதாதையர், முப்பாட்டனின் தோளில் இருந்த பணப்பையை அறுத்துக் கொண்டு ஓடி விட்டாய், இந்த தலைமுறை பேரனும் பேத்தியும் விரட்டியடித்து அதை பறிக்கின்றோம். நான் குட்டிக்கதை சொல்பவன் இல்லை தம்பி, வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்கவேண்டும்.

நாங்கள் அதை படித்து பிஎச்டி பட்டம் வாங்கி விட்டோம். நீங்கள் இனிமேல்தான் சங்க இலக்கியத்தில் எங்கு இலக்கியம் உள்ளது என்று தேடவேண்டும். சங்க இலக்கியத்தில் வருகின்ற பாண்டியர் நெடுஞ்செழிய மன்னனின் பேரனும் பேத்தியும் நாங்கள். அது கதை அல்ல, எங்கள் இனத்தின் வரலாறு. எங்களைப் பொறுத்தவரை எதிர்ப்பு புரட்சி முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு, அன்பு என்றால் அன்பு, வம்பு என்றால் வம்பு.

நீங்கள் வெட்ட அருவாளை ஓங்கினால் விழுந்து கும்பிட மாட்டோம், வெட்ட நினைக்கும் போதே வெட்டி விடுவோம். தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா? அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல, கூமுட்டை. சாலையில் அந்த ஓரத்தில் நில் அல்லது இந்த ஓரத்தில் நில், நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்து விடுவாய். இது நடுநிலை இல்லை மிகவும் கொடு நிலை. வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ… நான் கருவிலேயே என் எதிரி யார் என தீர்மானித்துவிட்டு பிறந்தவன்.

நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் இல்லை. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். இது சினிமா பஞ்ச் டயலாக் இல்லை தம்பி…இது நெஞ்சு டயலாக். எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது.

வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலு நாச்சியார் யார்? என்று சொல்லு தம்பி. சத்தமாக பேசும் நான் வரவில்லை என்றால் வேலு நாச்சியார். அழகு முத்துக்கோன், அஞ்சலை, சேர, சோழ பாண்டியர் யார் என்று தெரியாது, நீங்க வைத்துள்ள கட் அவுட்டுகள் எல்லாம் நான் வரைய வைத்த படங்கள். தீரன் சின்னமலையை சங்க இலக்கியத்தில் படிக்கக்கூடாது தம்பி. வரலாற்றில் படிக்க வேண்டும். அவன் மன்னன் இல்லை, விவசாய குடும்பத்தில் பிறந்த எளிய மகன். திப்பு சுல்தானின் படையை விரட்டி அடித்தவன். வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள் தம்பி என சீமான் பேசினார்.

விஜய் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்று கூறியது குறித்து பல உதாரணங்களை பேசி கிண்டல் அடித்த சீமான் ஒவ்வொரு பேச்சு முடிந்த பின்பும் தம்பி, தம்பி எனக்கூறி விஜயை சகட்டு மேனிக்கு கலாய்த்தார். அப்போது தொண்டர்கள் கைதட்டி வரவேற்றனர். இந்த சீமானின் பேச்சுக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சீமான் ஆவேசம்: அண்ணன் என்ன, தம்பி என்ன..!? கொண்ட கொள்கை தான் முக்கியம்..!

கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சில் ஐந்து குண்டுகளைத் தாங்கி மரணித்துக் கிடந்தபோது, பதறித்துடிப்பது தமிழ்த்தேசியம். அதேநேரம், சிறிதும் பதற்றம் இல்லாமல், பதவியேற்கும் திராவிடம். இரண்டும் ஒன்றா? திராவிடம் பெண்ணிய உரிமையைப் பேசும். ஆனால் தமிழ்த் தேசியம், பெண்ணிய உரிமையைக் கொடுக்கும், நிறைவேற்றும் . எனவே, இது இரண்டும் ஒன்று இல்லை. அப்படியிருக்கும்போது, எப்படி விஜய் இரண்டையும் தன்னுடைய கண் என்று கூறுவார்.

அதெப்படி சமம் ஆகும்? அதேபோல், இருமொழிக் கொள்கை என்கிறார். அடுத்தவர்கள் மொழி எப்படி எனக்கு கொள்கை மொழியாக இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான பேரை அம்மா என்று அழைக்கலாம். ஆனால், பெற்றவள் ஒருத்திதான். அதனால் எனக்கு கொள்கை மொழி என்னுடைய தாய்மொழி. தெலுங்கு, கன்னடா, பிஹாரி என அவரவருக்கு அவர்களுடைய தாய்மொழிதான் கொள்கை மொழியாக இருக்க முடியும். விரும்பி நாங்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்போம். உலக மொழிகளுக்கு எல்லாம் நாங்கள் பற்றாளர்கள். ஆனால், எங்கள் மொழிக்கு நாங்கள் உயிரானவர்கள்.

தமிழ்ப் பயிற்றுமொழி. ஆங்கிலம் கட்டாயப் பாடமொழி. இந்தி உட்பட உலகின் அனைத்து மொழிகளும் எங்களுடைய விருப்ப மொழி. விரும்பினால் கற்போம். மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை. இருமொழிக் கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை. தமிழே எங்கள் மொழி என்பது தமிழ்த் தேசிய கொள்கை. திராவிடம் என்றால் என்ன? தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தவெகவைச் சேர்ந்த யார் இதற்கு விளக்கம் கூறுவார்கள்?

மதச்சார்பற்ற சமூக நீதி எப்படி? பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு, EWS-க்கு 10 விழுக்காடு இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு, இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? எனவே, சமூக நீதி என்பதெல்லாம் சும்மா பேச்சு. திமுக கூடத்தான் வெகு நாட்களாக சமூகநீதி பேசுகிறது. அது ஜமுக்காள நீதி கூட கிடையாது. எங்கே இருக்கிறது நீதி? பெண்ணியம் உரிமை பேசும் திமுக அதை கொடுத்திருக்கிறதா?

தமிழக அமைச்சரவையில் சரிபாதி விழுக்காடு கொடுக்கப்பட்டிருக்கிறதா? ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் தமிழ்த்தேசியக் கோட்பாடு. பெண் விடுதலை இல்லையே, மண் விடுதலை இல்லை. இதுதான் தமிழ்த்தேசியம். மதுகடைகளை மூடச் சொல்வது தமிழ்த்தேசியம். தெருவுக்கு இரண்டு மதுகடைகளைத் திறப்பது திராவிடம். இரண்டும் ஒன்று என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். நீ கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது. எனவே, அண்ணன், தம்பி என்பது வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகைதான்” என சீமான் தெரிவித்தார்.

சீமானால் கடந்த 15 ஆண்டுகளில் எண்ணற்ற இழப்புகள்..! ஒரு பயனுமில்லை..!

கடந்த 15 ஆண்டுகளில்எண்ணற்ற இழப்புகளை சந்தித்து சீமான் சரியான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை அமைதிகாத்து, பொறுமையுடன் பின்தொடர்ந்தோம் என கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டியது நாம் தமிழர் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன், நிர்வாகிகள் புகழேந்தி மாறன், சுப தனசேகரன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாம் தமிழர் கட்சியை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரியான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணித்தோம்.

பல நேரங்களில் உடன்படாடு இல்லாவிட்டாலும் அமைதிகாத்து, பொறுமையுடன் பின்தொடர்ந்தோம். இதனால் எண்ணற்ற இழப்புகளை கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்திருக்கிறோம். கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட இயக்கம் தற்போது தான் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியிருக்கிறது.

இதுவே நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு. நாம் தமிழர் கட்சியின் அரசியல் கோட்பாடு இந்த மண்ணில் நிலை பெற்றுவிட்டது. ஆனால் இதை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி கொண்டு செல்வதற்கு இனி சீமானால் முடியாது. அந்த திறனும் பார்வையும் அவருக்கு இல்லை.

எனவே ‘தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை தமிழர் நலன் சார்ந்து உருவாக்கி இருக்கிறோம். முதல்கட்டமாக திருச்சியில் வரும் 27-ஆம் தேதி இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

அதைத்தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி எங்களது அரசியல் பயணம் தொடங்கும். நாம் தமிழர் கட்சியின் கொள்கை, கோட்பாடு எங்களால் உருவாக்கப்பட்டது. அதே கோட்பாட்டை ஜனநாயக முறையில் சரியாக எடுத்து செல்வதே இந்த அமைப்பின் நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சீமானால் முடியாது..!

நாம் தமிழர் கட்சியை முன்னேற்றி அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் முடியாது என கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டியது நாம் தமிழர் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன், நிர்வாகிகள் புகழேந்தி மாறன், சுப தனசேகரன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாம் தமிழர் கட்சியை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரியான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணித்தோம்.

பல நேரங்களில் உடன்படாடு இல்லாவிட்டாலும் அமைதிகாத்து, பொறுமையுடன் பின்தொடர்ந்தோம். இதனால் எண்ணற்ற இழப்புகளை கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்திருக்கிறோம். கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட இயக்கம் தற்போது தான் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியிருக்கிறது.

இதுவே நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு. நாம் தமிழர் கட்சியின் அரசியல் கோட்பாடு இந்த மண்ணில் நிலை பெற்றுவிட்டது. ஆனால் இதை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி கொண்டு செல்வதற்கு இனி சீமானால் முடியாது. அந்த திறனும் பார்வையும் அவருக்கு இல்லை.

எனவே ‘தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை தமிழர் நலன் சார்ந்து உருவாக்கி இருக்கிறோம். முதல்கட்டமாக திருச்சியில் வரும் 27-ஆம் தேதி இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

அதைத்தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி எங்களது அரசியல் பயணம் தொடங்கும். நாம் தமிழர் கட்சியின் கொள்கை, கோட்பாடு எங்களால் உருவாக்கப்பட்டது. அதே கோட்பாட்டை ஜனநாயக முறையில் சரியாக எடுத்து செல்வதே இந்த அமைப்பின் நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர்.

இரா. முத்தரசன்: முதல்ல சீமான் ஆட்சிக்கு வரட்டும்..! மத்ததை அப்புறம் பாத்துக்கலாம்..!

ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என சீமான் கூறுகிறார். அதை சீமான் ஆட்சிக்கு வந்த பின் பார்த்து கொள்ளலாம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஆசிரியர் பயிலரங்க கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இரா. முத்தரசன் பதிலளித்தார். அப்போது, 1925 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டு நூறாண்டுகள் ஆன நிலையில் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் பயிலரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு குறித்து புத்தகம் வெளியிடப்படுகிறது. கட்சியின் வரலாறு குறித்து மூத்த தலைவர்கள் எடுத்துரைப்பார்கள்.

நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆண்டு முழுவதும் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற இருக்கிறது. கட்சியின் வரலாறுகள் முழுவதும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட உள்ளன என இரா. முத்தரசன் தெரிவித்தார்.

மேலும் இரா. முத்தரசன் பேசுகையில், ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என சீமான் கூறுகிறார். அதை சீமான் ஆட்சிக்கு வந்த பின் பார்த்து கொள்ளலாம். தற்போது தமிழ் தாயை மதிக்க வேண்டுமா ? வேண்டாமா ? தமிழ் தாய் வாழ்த்தை அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா ? வேண்டாமா ? இது தான் தற்போதைய பிரச்சனை, இதற்கு தான் சீமான் பதில் கூற வேண்டும் என இரா. முத்தரசன் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் கர்ஜனை: திராவிடத்தை நீக்குங்க பார்ப்போம்..!

“தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர், தி.மு.க-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது.” என சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கர்ஜித்து உள்ளார்.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடப்பட்டது. இதேபோல், நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட்ட தேசிய கீத பாடலில் திராவிடம் சொல் தவிர்க்கப்பட்டது. இதனால், பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த விவகாரத்திற்கும் தமிழக ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இதனிடையே, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக டிடி தமிழ் தொலைக்காட்சி கூறியது. இருப்பினும், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ஈரோட்டில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிடல் நல் திருநாடு’ என்கிற வார்த்தையை விட்டுவிட்டார்கள் அல்லது தூக்கி விட்டார்கள் என்பது தானே உங்களுக்கு பிரச்சினை. அதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஆரியங்கோல் வழக்கொழிந்து என்ற வார்த்தையை தூக்கியது யார்?. கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய அந்த வரியை தூக்கியது யார்?. திராவிடன் என்ற ஒரு சொல்லை எடுத்ததற்கே இப்படி குதிக்கிறீர்கள்.

50 ஆயிரம் ஆண்டுகளுன் முன் தோன்றிய என் தாய்மொழி தமிழை கொன்று சமாதி கட்டி வைத்திருக்கிறீர்கள். கொத்துக்கொத்தாக, லட்சக்கணக்கான என் இன மக்கள் சாவும் போது கொதித்து வராத கோவம், ஆந்திர காடுகளில் எங்களை சுட்டுக்கொல்லும் போது வராத கோபம், அன்னை தமிழ் மொழி செத்துவிழும் போது வராத கோபம், இப்போது ஏன் வருகிறது ?இதே ஆளுநர் 100 ரூபாய் வெளியிடும் போது கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டீர்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. அப்போது என்ன செய்வீர்கள். இது எங்கள் நாடு. எங்கே இருக்கிறது திராவிடம்?. எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்?. திராவிடம் என்றால் என்ன? கேரளாவில் பஞ்ச திராவிடர் மாநாடு நடந்ததா இல்லையா?. அதில் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்க வேண்டும். அவர் ஏன் ராகுல் டிராவிட் என அழைக்கப்படுகிறார். நான் எப்படி திராவிடர் ஆனேன். திராவிடம் என்பது சமஸ்கிருதம் சொல். மாடல் என்பது ஆங்கில சொல்.” என சீமான் பேசியிருந்தார்.

இந்நிலையில், சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர். தி.மு.க-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது.

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கிறார்கள். நேரடியாக இந்தியை திணிக்க இயலாத காரணத்தால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர். தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு பலர் துணை போகின்றனர்.” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியது வேதனை அளிக்கிறது..!

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 34 ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள் என 54 ஆசிரியர்கள் அக்டோபர் 23-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு ஃபிரான்ஸ் செல்கின்றனர். அக்டோபர்28-ஆம் தேதி வரை ஃபிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார்.

அப்போது, கனவு ஆசிரியர் திட்டத்தில் தேர்வான ஆசிரியர்களை பாரீஸ்க்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம். ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் முதன்முறையாக வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம்.

பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரி செய்யும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதேபோல பள்ளிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோரையும் கண்டறிந்து அவர்களுக்கும் முறையாக கல்வி வழங்கப்படுகிறது.

மேலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,  தமிழ்நாட்டு அரசியலே கல்வியில்தான் இருக்கிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனையாக இருக்கிறது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.