பாஜக கூட்டணி அரசிலிருந்து தேசிய மக்கள் கட்சி விலகல்

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி தேசிய மக்கள் கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து விலகியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி, குகி சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து 237 பேர் உயிரிழந்தனர். 60,000-க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்த நிலையில் 11,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், மணிப்பூரில் படிப்படியாக அமைதி திரும்பி வந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி ஜிரிபாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் குகி சமுதாயத்தை சேர்ந்த 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிரிபாம் மாவட்டத்தில் குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மைதேயி சமூகத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது. மணிப்பூரில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி தேசிய மக்கள் கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து விலகியுள்ளது.

மணிப்பூர் சட்டப்பேரவையில் மொத்தம் 60 MLA -க்கள் உள்ள நிலையில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் 39 MLA -க்கள் பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி தேசிய மக்கள் கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து நேற்று விலகியுள்ளது.

மகாராஷ்டிர தேர்தல்: தொகுதி பங்கீட்டில் பாஜக கூட்டணிக்குள் மோதல்..!

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 288 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் – டிசம்பரில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மகா விகாஸ் அகாடி கூட்டணி மற்றும் மகாயுதி கூட்டணி இடையே மகாராஷ்டிர சட்டப்பேரவையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஆகிய 3 கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 160 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. அதேவேளையில் சிவசேனா 100 முதல் 105 இடங்களிலும் என்சிபி 60 முதல் 80 இடங்களிலும் போட்டியிட விரும்புகின்றன. இதனால் மகாயுதி கூட்டணியில் தொகுதிகளுக்கான மோதல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் மும்பை வந்தபோது அவரிடம் 100 தொகுதிகளுக்கு மேல் தாங்கள் போட்டியிட விரும்புவதாக சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்குகளையும் கடந்த காலத்தில் ஒருங்கிணைந்த சிவசேனா பெற்ற வாக்குகளையும் அமித் ஷா ஒப்பிட்டு காட்டியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக மகாயுதியில் ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு மத்தியில், மக்களவைத் தேர்தலின் போது நடந்தது போல்,வேட்பாளர்களை அறிவிப்பதில் இம்முறை தாமதம் கூடாது என பாஜகவிடம் சிவசேனா நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்குள் முதலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டால் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் தொகுதிகளை பிறகு பரிமாறிக் கொள்ளலாம் என்று யோசிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.