அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி

மாற்றுத்திறனாளி மாணவி ஆர் ஷிவானி போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சாசி சிவசங்கர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழகத்தில் 2024-2025 -ஆம் கல்வியாண்டில் + 2, SSLC தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 -ஆம் தேதி வரை நடைபெற்றன.+ 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர். விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி அந்த பணிகள் நிறைவடைந்தன.

அத்தனை தொடர்ந்து மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிளஸ்-2 தோ்வு முடிவுகள் மே-9-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், +2 தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்து இருந்தனர்.

இந்நிலையில், அரியலூர் CSI மேல்நிலைப் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி R. ஷிவானி சமீபத்தில் வெளியான + 2 பொது தேர்வில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார் .அதனையடுத்து மாணவி R. ஷிவானி அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் , போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சாசி சிவசங்கரை, தனது தாய் பிரசன்னா தேவியுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வின் போது சாய்பாபா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ் எம் சந்திரசேகர், பள்ளியின் தாளாளர் புனிதவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலின்: மாற்றுத்திறனாளிகளுக்கான “விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு..!

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பாக பல்வேறு மக்கள் நலத்திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அவ்வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்.

மாற்றுத்திறனாளியை ஆற்றில் சிக்க வைத்த கூகுள் மேப்..! பத்திரமாக மீட்ட தமிழ்நாடு காவல்துறை..!

கூகுள் மேப்பை பார்த்து வழி தவறி சென்று ஆற்று சகதியில் சிக்கிய கர்நாடகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை நள்ளிரவில் தமிழக காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். இன்று பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் செல்லவேண்டிய இடத்தை தேர்வு செய்தல் போதும் கூகுள் மேப் பாதையை துல்லியமாக கணித்து நம்மை அங்கு சென்று விட்டுவிடும் அளவிற்கு கடந்த 2008-ஆம் கூகுள் மேப் வசதியை உலகளவில் அனைத்து இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

நாம் இதுவரை செல்லாத பகுதிகளுக்குக் கூட யாரும் உதவி கேட்காமலேயே எங்கு வேண்டுமானாலும் சென்று வந்துவிடலாம். மேலும் அந்த வழியில் உள்ள பெட்ரோல் பங்குகள் உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளையும் கூகுள் மேப் தங்கள் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. அதே நேரத்தில் சில குறைபாடுகளும் கூகுள் மேப்பில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கூகுள் மேப் வசதியுடன் காரை இயக்கிய ஓட்டுனர் செல்ல முயன்றபோது அங்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது நாடறிந்ததே.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கண்ணூரில் கூகுள் மேப் பார்த்து இயக்கப்பட்ட நாடகக் குழுவினர் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 9 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியும் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கூகுள் மேப் பார்த்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் 5 மணி நேரமாக ஆற்றுக்குள் சகதியில் சிக்கிய நிலையில் அவரை தமிழ்நாடு போலீசார் மீட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பரசுராமா என்ற ஐயப்ப பக்தர் மாற்றுத்திறனாளிகள் ஓட்டிச் செல்லக்கூடிய தனது மூன்று சக்கர வாகனத்தில் கர்நாடக மாநிலத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவில் சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, தனி ஒருவனாக மீண்டும் கர்நாடகா கிளம்பி உள்ளார். கூகுள் மேப் பார்த்தபடி வத்தலகுண்டு வழியாக சென்றபோது, இரவில் வழி தவறி வத்தலகுண்டு அடுத்த, பட்டிவீரன்பட்டி அருகே ஆற்று சகதியில் சிக்கிக் கொண்டார். பரசுராமா இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரை வழி தெரியாமல் சகதியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.

செய்வதறியாது திகைத்த மாற்றுத்திறனாளியான ஐயப்ப பக்தர் பரசுராமா, கர்நாடக காவல்துறையினருக்கு இந்த தகவல் தெரிவித்துள்ளார். இத்தனை தொடர்ந்து கர்நாடகா காவல்துறை, தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் பட்டிவீரன்பட்டி இரவு ரோந்து காவலர்கள் நள்ளிரவில், ஆற்றுப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடி அலைந்து அவர் இருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.

பின்னர் மாற்றுத்திறனாளியான ஐயப்ப பக்தர் பரசுராமாவை பத்திரமாக மீட்டு பட்டிவீரன்பட்டி காவல் நிலையம் அழைத்துச்சென்று, அவருக்கு உணவு வழங்கி உபசரித்தனர். மாற்றுத்திறனாளியான ஐயப்ப பக்தர் பரசுராமா மீட்கப்பட்ட தகவல் தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறையில் மூலமாக கர்நாடக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆற்று சகதியில் சிக்கிய மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்ட தமிழ்நாடு காவலர்களை கர்நாடக காவல்துறை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

R. B. Udhayakumar: மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சுகள் மாணவர் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி விடும்..!

மகாவிஷ்ணுவின் சர்ச்சைப் பேச்சுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி விடும். அவரது பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை அசோக் நகரிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு மத்தியில் தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது, ‘மாற்றுத்திறனாளிகள் கண் இல்லாமல், கால் இல்லாமல் பிறக்கிறார்கள். அவ்வாறு பிறப்பதற்கு காரணம், அவர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியம்தான் காரணம் என்றும், கடவுள் அனைவருக்கும் சமமானவர் என்றால் அவ்வாறு ஏன் வேறுபாட்டுடன் படைக்கிறார் என்று மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியும், மாற்றுத்திறனாளிகள் மனம் புண்படும்படியும் மகாவிஷ்ணு பேசினார். இந்த பேச்சுக்கு அங்கிருந்த பார்வையற்ற ஆசிரியர் சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது விஷ்ணுவுக்கும், ஆசிரியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு கல்வியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்கள், இந்திய மாணவர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், பள்ளி மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையும், எதிர்காலத்தில் நல்வழிகாட்டும் முறைகள் குறித்தும், அவர்களுடைய ஆற்றலை வலுப்படுத்தும் விதமாகதான் பேச வேண்டும். இவ்வாறு பேசுவதை விட்டுவிட்டு சர்ச்சையான பேச்சினை மகாவிஷ்ணு பேசியுள்ளார். இதுபோன்ற சர்ச்சை பேச்சுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும். மகாவிஷ்ணு பேசிய பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. இதனை நாங்கள் ஆதரிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

சுதந்திர தினம்: தேசிய தலைவர்களின் படங்களை வரைந்து அசத்தும் மாற்றுத்திறனாளி 10-ஆம் வகுப்பு மாணவன்..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், வடலூர் தென்குத்து புதுநகர் அருகே உள்ள ஆர் கே சிட்டி பகுதியில் வசித்து வரும் தம்பதிகளான அருள் பிரகாஷ் -செலின் பெரியநாயகிமேரி இவர்களின் மூத்த மகன் பிரித்விராஜ் வயது 15 மாற்றுத்திறனாளியான இவர் வடலூர் புதுநகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்ட பிரித்விராஜ் தனது சிறு வயது முதலே பல ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் தேசிய தலைவர்கள் மற்றும் சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார் தேசிய தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ,சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், பாபாசாகிப் அம்பேத்கர், திருவள்ளுவர் உள்ளிட்ட தேசிய தலைவர்களின் உருவ படங்களை தத்ரூபமாக வரைந்து அசதியுள்ளார். இதுமட்டுமின்றி, இந்தியா வரைபடம் பாரத மாதா உள்ளிட்ட படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் தேசிய தலைவர்களின் படங்களை வரைந்த அசத்தி வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பாராட்டுள் குவிந்து வருகின்றது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு இதுபோன்ற திறமையுள்ள மாற்றுத்திறனாளி மாணவனின் செயலை வெளிப்படுத்த உதவ முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் மூலம் சிறந்த ஓவியருக்கான பரிசை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.