மதுரை ஆட்சியர் சங்கீதா அவர்களை மாற்ற கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விசிக போராட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா அவர்கள் தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நடத்தினர். நடத்தும் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியை தடுப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம் பட்டியில் சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த சுங்கச்சாவடியை கடந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன், மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திடீரென சிட்டம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் ஈடுபட்டனர்.

இந்த சுங்கச்சாவடியை வாகனங்கள் கடந்து செல்ல முடியாதவாறு சுங்கச்சாவடி முன்பு அமர்ந்து கோஷமிட்டனர். இந்த கோஷத்தில் .மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும்,, கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியை தடுப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

ஆகையால்,மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா அவர்களை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்றுகை போராட்டத்தால் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி இருபுறமும் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேல் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது என மதுரையில் சாபம் விட்ட செல்லூர் ராஜு..!

திமுக ஆட்சி நடத்தவில்லை.. சும்மா மக்களை ஏமாற்றக் காட்சி நடத்தி வருகிறார்கள் எனவே திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மதுரையிலுள்ள ஓபுளா படித்துறை பகுதியில் நேற்று நடந்தது. இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜு, “இப்போதெல்லாம் சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு இப்போதுள்ள நடிகர்கள் வந்துவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இன்னொரு பக்கம் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு பெற்று வருகிறேன் எனச் சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று கலர் கலராக போட்டோ ஷூட் நடத்துகிறார் ஸ்டாலின். இப்போதுள்ள முதல்வரை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.. ஏதோ ஒரு நிகழ்ச்சியில், எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியைத் தருகிறோம் என்கிறார்.

ஆனால், உங்க ஆட்சியில் உள்ள குறைகளைச் சொல்லக் கூட முடியாமல் தவிக்கிறோம் என்பதே உண்மை.. அவ்வளவு குறைகள் நிறைந்துள்ளன. நிலைமை இப்படி இருக்க இப்போதே 2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாருங்கள் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கப் போகிறது. திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது. இவர்கள் ஆட்சி நடத்தவில்லை.. சும்மா மக்களை ஏமாற்றக் காட்சி நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் கிரிக்கெட் கோப்பை வென்றதாக அரசையே ஏமாற்றுகிறார். தகுதி இல்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்தால் இப்படித்தான் நடக்கும்” என செல்லூர் ராஜு பேசினார்.

செல்லூர் ராஜு: 2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கும்..!

2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாருங்கள் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கப் போகிறது. திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மதுரையிலுள்ள ஓபுளா படித்துறை பகுதியில் நேற்று நடந்தது. இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜு, “இப்போதெல்லாம் சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு இப்போதுள்ள நடிகர்கள் வந்துவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இன்னொரு பக்கம் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு பெற்று வருகிறேன் எனச் சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று கலர் கலராக போட்டோ ஷூட் நடத்துகிறார் ஸ்டாலின். இப்போதுள்ள முதல்வரை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.. ஏதோ ஒரு நிகழ்ச்சியில், எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியைத் தருகிறோம் என்கிறார்.

ஆனால், உங்க ஆட்சியில் உள்ள குறைகளைச் சொல்லக் கூட முடியாமல் தவிக்கிறோம் என்பதே உண்மை.. அவ்வளவு குறைகள் நிறைந்துள்ளன. நிலைமை இப்படி இருக்க இப்போதே 2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாருங்கள் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கப் போகிறது. திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது. இவர்கள் ஆட்சி நடத்தவில்லை.. சும்மா மக்களை ஏமாற்றக் காட்சி நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் கிரிக்கெட் கோப்பை வென்றதாக அரசையே ஏமாற்றுகிறார். தகுதி இல்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்தால் இப்படித்தான் நடக்கும்” என செல்லூர் ராஜு பேசினார்.

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு: போதைப் பொருள் வழக்கிலுள்ள திமுக நிர்வாகிகள் காப்பாற்ற நயன்தாரா- தனுஷ் பிரச்சனை..!

போதைப் பொருள் விவகாரம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் திமுக நிர்வாகிகள் பலர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளனர், அதை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே இப்போது நயன்தாரா- தனுஷ் பிரச்சனையைத் திட்டமிட்டு பெரிதாக்குகின்றனர் என மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மதுரையிலுள்ள ஓபுளா படித்துறை பகுதியில் நேற்று நடந்தது. இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய காயத்திரி ரகுராம், “போதைப் பொருள் விவகாரம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

ஏற்கனவே திமுக நிர்வாகிகள் பலர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளனர். அதை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே இப்போது நயன்தாரா- தனுஷ் பிரச்சனையைத் திட்டமிட்டு பெரிதாக்குகின்றனர். தன்னை தானே சமூக நீதி காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் திமுக, இதுவரை சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தார்கள்? தேர்தலுக்கு முன்பு வரை எல்லா பெண்களுக்கும் மாதாமாதம் 1000 ரூபாய் தருவோம் என்றார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் கட்சி நிர்வாகிகள், வேண்டியவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் தரும் வகையில் திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 18000 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆகையால், இங்குப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பே இல்லை.. சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது.. உதயநிதி ஒரு செங்கல்லை வைத்து நம்மை ஏமாற்றினார்.. அடுத்த முறை செங்கல்லுடன் தொகுதிக்கு வந்தால் நீங்களே தக்க பதிலைக் கொடுங்கள்” என காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

தமிழ்நாடு சீர்மரபினர் ஆர்ப்பாட்டம் ..! உண்ணாவிரதம் என்ற பெயரில் அதிமுகவினர் நாடகம் நடத்துகின்றனர்..!

மதுரை மாவட்டம், செக்கானூரணியில், கள்ளர் பள்ளிகள் விவகாரத்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு எதிராகவும், அதிமுகவினரை கண்டித்தும் தமிழ்நாடு சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் செக்கானூரணி தேவர் சிலை முன்பு ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் திடீர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பிரமலைக்கள்ளர் உள்ளிட்ட 64 சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிஎன்சி சான்றிதழை மாற்றி, டிஎன்டி என்ற ஒற்றை சான்றிதழ் வழங்கக் கோரியும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.

ஆனால், தற்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் நடத்துகிறது’’ என்றனர். பின்னர் அதிமுகவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி காவல்துறை, மறியலில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்தனர். அதிமுக போராட்டம் நடத்திய பகுதி அருகிலேயே சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அவர்களுக்கு எதிராக மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதி சற்றுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

ஆர்.பி.உதயகுமார்: கடல் என்றைக்கு வற்றுவது, ராகுல்காந்தி எப்போது பிரதமர் ஆவது?

மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு, புரட்சித்தமிழர் பட்டம் வழங்கியதை முன்னிட்டு, ஆட்டோ தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், சந்திரயான்-3 வெற்றி பெற்றதை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் நடந்தது.தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சந்திரயான்-3 வெற்றிக்கு கேக் வெட்டினார்.

பின்னர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், தமிழக மக்களுக்கு பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை தந்ததால் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் சூட்டப்பட்டது. இந்த பட்டத்தை வழங்கிய மதுரை மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கி சாதனை படைத்து இருக்கிறது. அதற்கு தமிழர் வீரமுத்துவேல் முக்கிய காரணமாக திகழ்கிறார்.

மேலும் கருவாடு மீன் ஆகாது. காகித பூ மணக்காது. அதேபோல் நீட் தேர்வினை தி.மு.க.வால் ரத்து செய்ய முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். இப்போது ராகுல்காந்தி பிரதமராக வந்தால்தான் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொல்கிறார். இவரது பேச்சை கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள்.

உதயநிதியின் பேச்சு எப்படி இருக்கிறது என்றால், கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று காத்திருந்த கொக்கு கடைசியில் குடல் வற்றி செத்து போனதாம். அதுபோல கடல் என்றைக்கு வற்றுவது, மீன் என்றைக்கு பிடிப்பது, அது என்றைக்கு கருவாடு ஆவது, அந்த கருவாடு கொக்குக்கு என்றைக்கு கிடைப்பது? அதுபோல தான் ராகுல்காந்தி எப்போது பிரதமராக வருவது, நீட் தேர்வினை எப்போது ரத்து செய்வது என்பது தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

ரூ50,000 லஞ்சம் வாங்கிய துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு 2 ஆண்டு சிறை..!

மதுரையை சேர்ந்த ஜெயக்குமார் கடந்த 2009 முதல் 2011 வரை தூத்துக்குடி ரூரல் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அப்போது புதுக்கோட்டை தேரிரோட்டைச் சேர்ந்த, வெளிநாட்டில் வசித்து வந்த கிருபாகரன் சாம் என்பவருக்கு, புதுக்கோட்டையில் உள்ள நிலத்தை பராமரிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கிருபாகரன் சாமிடம் ரூ 3. லட்சம் லஞ்சமாக கேட்டு, ரூ.50,000 16.12.2011 அன்று வாங்கியபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் விசாரித்து ஜெயக்குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக மாநாட்டை சாடிய டிடிவி தினகரன்

மதுரையில் நாளை அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. 10 தென் மாவட்டங்களில் இருந்து மட்டும் 4 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது. இந்நிலையில் மாநாடு குறித்து டிடிவி தினகரன் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “அன்றைய காலகட்டத்தில் பெரும் பணம் செலவழித்து கட்சி ஒன்று, சென்னை ஆவடியில் நடத்த இருந்த மாநாடு பற்றிய பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் இன்று நடக்கவுள்ள துரோகிகளின் மாநாட்டோடு பொருந்துவது போல் உள்ளது.

“தம்பி பெரும் பணம் செலவழித்து, தோரணங்களும் தோகைகளும் ஓவியங்களும் கொண்டு மாநாடு நடத்தி பயன் எதுவும் வராது. திறமை மிக்க ஓவியன் ஒருவன் காட்டில் உள்ள நல்ல கனி தரும் மரங்களை அப்படியே நம் கண்முன்னே கனிகள் காய்த்து தொங்குவதை போல் ஓவியமாக வரைந்தான் . அனைவரும் கண்டு மெய்சிலிர்த்து வியந்தனர்.

ஆனால் தம்பி, அந்த ஓவியத்தில் உள்ள கனிகளை கண்டு ரசிக்க தான் முடியுமே தவிர அதனை உண்டு நம் பசியை போக்க முடியாது. அதே போன்று தான் தம்பி பெரும் பணம் மட்டுமே செலவழித்து நடத்தப்படும் மாநாடுகள் மக்களிடம் துளியும் நம்பிக்கை பெறாது, அவை அனைத்தும் பயனற்றது”. “சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும் நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவு தான் தம்பி அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை”. என்று பதிவிட்டுள்ளார்.

தேவரினத்திற்கு துரோகம்.. வராதே வராதே தூங்கா நகருக்கு வராதே” என போஸ்டர்கள்

மதுரையில் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்குலத்தோர் தேசியக் கழகம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ”தேவரினத்திற்கு துரோகம்.. வராதே வராதே தூங்கா நகருக்கு வராதே” என எடப்பாடி பழனிசாமியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் மற்றொரு அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் எட்டு தோல்வி எடப்பாடி பழனிசாமி என விமர்சிக்கப்பட்டுள்ளன.அதிமுக மாநாடுக்கு இன்னும் முழுமையாக 3 நாட்கள் கூட இல்லாத நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் “அபேஸ்…”

மதுரை கிருஷ்ணாபுரம் நடராஜர் காலனியை சேர்ந்த கூலிவேலை செய்யும் சுரேஷ்குமார். இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நான் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த அய்யாதுரை என்பவரின் மகள் லட்சுமியை திருமணம் செய்துள்ளேன். இதனால் நாங்கள் சின்னாளப்பட்டி பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட முடிவு செய்தோம். இதற்காக எனது மாமனாரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருமான அய்யாத்துரையை தொடர்பு கொண்டேன்.

அவர் நிலம் வாங்கி தருவதாக கூறி என்னிடம் பல தவணைகளாக ரூ.20 லட்சம் வரை வாங்கினார். ஆனால் அவர் நிலம் வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் பணத்தை திருப்பி கேட்டபோது தராமல் இழுத்தடித்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.