“யார் அந்த தம்பி?” ‘டாஸ்மாக் காசு… எந்த தம்பிக்கு போச்சு?’

“யார் அந்த தம்பி?” ”டாஸ்மாக் காசு… எந்த தம்பிக்கு போச்சு?’ என்று ஒரு கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க இன்று இந்த போஸ்டரால் பரபரப்பு எழுந்துள்ளது. டாஸ்மாக் இயக்குனர் விசாகன் IAS ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகும் நிலையில், ‘யார் அந்த தம்பி?’ என்று போஸ்டர் ஒட்டியும் ஹேஸ்டேக் போட்டும் அதிமுகவினர் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

அமலாக்கத்துறையினர் அண்மையில் டாஸ்மாக் எம்.டி. விசாகன், உதயநிதியின் நண்பர்களான ரத்தீஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது விசாகன் இல்லம் அருகே வாட்ஸ் ஆப் உரையாடல்களின் நகல்கள் கிழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அதில், ‘டியர் தம்பி’ என்று வாட்ஸ் ஆப் உரையாடல்கள் தொடங்குகின்றன.

இதனை வைத்தும், டாஸ்மாக்கில் ரத்தீஷ் உத்தரவுப்படியே செயல்பட்டதாக விசாகன் கூறியதாக வெளியாகும் வாக்குமூலத்தையும் கேள்வி கேட்கும் வகையில் ‘யார் அந்த தம்பி?’ என்ற போஸ்டர் அதிமுகவினரால் தமிழகம் முழுக்க ஒட்டப்பட்டுள்ளன. தமிழகம் முழுக்க, ‘யார் அந்த தம்பி?’ என்று பெரிதாக கேள்விக்குறி போட்டுள்ளனர். அதன்கீழே ‘டாஸ்மாக் காசு… எந்த தம்பிக்கு போச்சு?’ என்று ஒரு கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க இன்று இந்த போஸ்டரால் பரபரப்பு எழுந்துள்ளது.

சென்னையில் திடீரென முளைத்த போஸ்டர்களால் பரபரப்பு…!

“அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற போஸ்டர்கள் தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே சினிமா, அரசியல் மற்றும் மக்களின் பொது நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் போஸ்டர் கலாசாரம் மக்களோடு மக்களாக இரண்டற கலந்த ஒன்றாகும்.

அதிலும் குறிப்பாக அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க போஸ்டர்கள் ஒட்டுகின்றனர். அப்படி, ஒரு போஸ்டர் தான் இன்று தமிழகத்தில் தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டு தமிழக அரசியல் களத்தையே பரபரப்பாக்கி உள்ளது.

“அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை, மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற வாசகங்களுடன், வேறு எந்தக் குறிப்பும் இன்றி சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், இதனை யார் வடிவமைத்தது, எந்தக் கட்சிப் பொறுப்பாளர் என எந்த விவரங்களும் இல்லை. இந்த போஸ்டரை பலரும் பார்த்து, இந்த போஸ்டரில் குறிப்பிடப்படுவது யாராக இருக்கும் என கேள்வி எழுப்பி விவாதித்து வருகின்றனர். அரசியல் ரீதியான போஸ்டர் தானா? அல்லது வேறு எதும் விளம்பரமா? என்றும் தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதற்கிடையே பெரியார் பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய வரும் நிலையில், சீமானுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரம் அடைந்துள்ளன.

இப்படியான சூழலில், பெயர் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளன. கட்சிக்கார்களா? அல்லது எதிர்க்கட்சியினரா? இந்த போஸ்டர்களை யார் ஒட்டியது என தெரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர்.

மாவட்டத் தலைவரை நீக்கக்கோரி பாஜக தொண்டர்கள் போஸ்டர் ..!

மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சசிக்குமார். இவர், கட்சிக்கும், பெண்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவதாக மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி நகரின் முக்கிய பகுதிகளிலும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும், அந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதில்,‘கண்டிக்கின்றோம்… கண்டிக்கின்றோம். பெண்களை தெய்வமாக மதிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், பெண்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திய மதுரை மாவட்ட தலைவர் ஆர்.சசிக்குமாரை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாநில தலைமையே… உடனடியாக பதவி நீக்க நடவடிக்கை எடு… தூண்டாதே, தூண்டாதே போராட தூண்டாதே – இவண் உசிலை பாரதிய ஜனதா கட்சியை நேசிக்கும் உண்மையான பெண் தொண்டர்கள்’’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டுபட்டு இருந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக சசிக்குமார் மனைவி செல்வி, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், ‘‘எனக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. இரு மகன்கள் உள்ளனர். கணவருக்கும், மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பிருப்பதை 6 மாதம் முன்பு தெரிந்து கொண்டேன்.

அந்த பெண்ணும் கட்சி நிர்வாகி. போனில் இருவரும் பேசிய ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அழைத்து பேசி பிரச்னையை முடித்து வையுங்கள்’’ எனத் தெரிவித்திருந்தார். இதன்பேரில் காவல்துறை, சசிகுமாரை அழைத்து விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.