சீமான்: திமுகவினரிடம் ரெய்டும் ஏன் வரவில்லை..! வராது கப்பம் சரியாக கட்டரங்க..!

ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

த.வெ.க – அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது. நாங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான். அவர் அவரோட போறாரு. இவர் இவரோடு போறாரு என இந்த காரை அவர் வைத்திருந்தார். இப்ப யார் வைத்திருக்கிறார் என்ற நகைச்சுவை எல்லாம் நான் சொல்ல தயாராக இல்லை.

மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம் என சீமான் தெரிவித்தார்.

திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது என மதுரையில் சாபம் விட்ட செல்லூர் ராஜு..!

திமுக ஆட்சி நடத்தவில்லை.. சும்மா மக்களை ஏமாற்றக் காட்சி நடத்தி வருகிறார்கள் எனவே திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மதுரையிலுள்ள ஓபுளா படித்துறை பகுதியில் நேற்று நடந்தது. இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜு, “இப்போதெல்லாம் சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு இப்போதுள்ள நடிகர்கள் வந்துவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இன்னொரு பக்கம் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு பெற்று வருகிறேன் எனச் சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று கலர் கலராக போட்டோ ஷூட் நடத்துகிறார் ஸ்டாலின். இப்போதுள்ள முதல்வரை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.. ஏதோ ஒரு நிகழ்ச்சியில், எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியைத் தருகிறோம் என்கிறார்.

ஆனால், உங்க ஆட்சியில் உள்ள குறைகளைச் சொல்லக் கூட முடியாமல் தவிக்கிறோம் என்பதே உண்மை.. அவ்வளவு குறைகள் நிறைந்துள்ளன. நிலைமை இப்படி இருக்க இப்போதே 2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாருங்கள் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கப் போகிறது. திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது. இவர்கள் ஆட்சி நடத்தவில்லை.. சும்மா மக்களை ஏமாற்றக் காட்சி நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் கிரிக்கெட் கோப்பை வென்றதாக அரசையே ஏமாற்றுகிறார். தகுதி இல்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்தால் இப்படித்தான் நடக்கும்” என செல்லூர் ராஜு பேசினார்.

சீமான்: திமுகவிற்கும் பாஜகவிற்கும் கள்ள உறவில் இல்லை..! நேரடி கூட்டணி இருக்கிறது..!

திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களையோ அமைச்சர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி, தமிழக முதலமைச்சரையும் விளையாட்டுத் துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்.

காலையில் அப்பாவை சந்தித்தால் மாலையில் மகனை சந்திக்கிறார். ஏதோ சம்மந்தி போல போய் சந்தித்து கொள்கிறார்களே அது நேரடியா, மறைமுக கூட்டணி என்றார். திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள் என சீமான் தெரிவித்தார்.

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு: திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பே இல்லை..!

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 18000 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன, ஆகையால், இங்குப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பே இல்லை.. சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது, யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது என மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மதுரையிலுள்ள ஓபுளா படித்துறை பகுதியில் நேற்று நடந்தது. இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய காயத்திரி ரகுராம், “போதைப் பொருள் விவகாரம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

ஏற்கனவே திமுக நிர்வாகிகள் பலர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளனர். அதை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே இப்போது நயன்தாரா- தனுஷ் பிரச்சனையைத் திட்டமிட்டு பெரிதாக்குகின்றனர். தன்னை தானே சமூக நீதி காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் திமுக, இதுவரை சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தார்கள்? தேர்தலுக்கு முன்பு வரை எல்லா பெண்களுக்கும் மாதாமாதம் 1000 ரூபாய் தருவோம் என்றார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் கட்சி நிர்வாகிகள், வேண்டியவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் தரும் வகையில் திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 18000 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆகையால், இங்குப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பே இல்லை.. சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது.. உதயநிதி ஒரு செங்கல்லை வைத்து நம்மை ஏமாற்றினார்.. அடுத்த முறை செங்கல்லுடன் தொகுதிக்கு வந்தால் நீங்களே தக்க பதிலைக் கொடுங்கள்” என காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

செல்லூர் ராஜு: 2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கும்..!

2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாருங்கள் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கப் போகிறது. திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மதுரையிலுள்ள ஓபுளா படித்துறை பகுதியில் நேற்று நடந்தது. இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜு, “இப்போதெல்லாம் சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு இப்போதுள்ள நடிகர்கள் வந்துவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இன்னொரு பக்கம் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு பெற்று வருகிறேன் எனச் சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று கலர் கலராக போட்டோ ஷூட் நடத்துகிறார் ஸ்டாலின். இப்போதுள்ள முதல்வரை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.. ஏதோ ஒரு நிகழ்ச்சியில், எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியைத் தருகிறோம் என்கிறார்.

ஆனால், உங்க ஆட்சியில் உள்ள குறைகளைச் சொல்லக் கூட முடியாமல் தவிக்கிறோம் என்பதே உண்மை.. அவ்வளவு குறைகள் நிறைந்துள்ளன. நிலைமை இப்படி இருக்க இப்போதே 2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாருங்கள் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கப் போகிறது. திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது. இவர்கள் ஆட்சி நடத்தவில்லை.. சும்மா மக்களை ஏமாற்றக் காட்சி நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் கிரிக்கெட் கோப்பை வென்றதாக அரசையே ஏமாற்றுகிறார். தகுதி இல்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்தால் இப்படித்தான் நடக்கும்” என செல்லூர் ராஜு பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்: இன்னும் ஒரு ரெய்டு போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் பழனிசாமி இணைத்து விடுவார்..!

எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் ஐ.டி ரெய்டு நடந்த மறுநாளே ‘தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார். என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் பகுதியில், எளியோர் எழுச்சி நாள் எனும் பெயரில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக அரசின் திட்டங்களை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு கோவம் வருகிறது. வரத்தான் செய்யும். மக்கள் நமது திட்டங்களை கொண்டாடுவதைப் பார்த்து அவருக்கு எரிச்சல் வருகிறது. முதலமைச்சரை மக்கள் வாழ்த்துவதால் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல். அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார். தனது 96-வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது?

கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? இல்லை மறைந்த தலைவர்கள் பெயர்களையோ வைக்கலாமா? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரை வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு இப்போது அமித்ஷா, மோடி பெயரை வைக்க வேண்டும்.

எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என 3 மாதங்களுக்கு முன்பு கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் அண்மையில் ஐ.டி ரெய்டு நடந்த மறுநாளே ‘தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார். அந்தளவுக்குத்தான் இன்றைக்கு அதிமுக நிலைமை இருக்கிறது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பி.தங்கமணி: அதிமுக இல்லைனா..! பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை இல்லை..!

அதிமுக இல்லாவிட்டால் பெண்களுக்கு தற்போது ரூ.1,000 உரிமைத்தொகை கூட வந்திருக்காது என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததை கண்டித்தும், மோசமான சாலைகள், வண்டில் மண் என்ற போர்வையில் கனிம கொள்ளையை கண்டித்தும் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துக்கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, அதிமுக சட்டமன்ற தொகுதி என்பதால் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய பழுதடைந்த சாலையை சீரமைக்கவில்லை.

பாதுகாப்பான குடிநீர் வழங்க அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மூன்றை ஆண்டு காலமாக முடக்கி வைத்துள்ளனர். பாதாளசாக்கடை அமைக்கவில்லை. 10 ஆண்டு சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயரவில்லை. ஆனால், திமுக அரசு குப்பை வரி, சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். அதிமுக ஆட்சியில் வரியை உயர்த்தாமலே மக்குளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்தது. மக்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் வரியை உயர்த்திவிட்டு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறது. அப்படியென்றால் மக்கள் வரிப்பணம் எங்கே செல்கிறது?

அதிமுக இல்லாவிட்டால் பெண்களுக்கு தற்போது ரூ.1,000 உரிமைத்தொகை கூட வந்திருக்காது. அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உரிமை தொகையை வழங்குவதாக வாக்குறுதி அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் திமுக அரசு அதனை நிறைவேற்றவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியதால் தகுதியுள்ளவர்களுக்கு என்று மட்டும் கூறி பாராபட்டசமாக 1 கோடியே 13 லட்சம் பேருக்கு மட்டும் வழங்குகிறார்கள். தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்திலே அவர்கள் அறிவித்து இருந்தால் பொதுமக்களும் தகுதியானவர்களுக்கே வாக்களித்து இருப்பார்கள்.

வாக்குறுதிகள் என்பது மக்கள் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை உயர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா சொல்வார். அந்த அடிப்டையில் அவர், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், இளைஞர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்ட வந்தார். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை நடக்கவில்லை. அதே காவல் துறைதான் தற்போதும் உள்ளது.

ஆனால், அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதால் போதைப்பொருள், கள்ளச்சாராயம் விற்பனை தாராளமாக நடக்கிறது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு குழந்தைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்க முடியவில்லை. அதிமுக ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள இயக்கும். அதனால், திருப்பரங்குன்றத்தில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம், அதிமுகவிற்கும் திருப்புமுனையை ஏற்படுத்தும்” என பி.தங்கமணி தெரிவித்தார்.

பி.தங்கமணி கேள்வி: மக்களின் வரிப்பணம் எங்கே செல்கிறது..!?

குப்பை வரி, சொத்து வரி, மின்கட்டணத்தை உயர்த்தியும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை, அப்படியென்றால் மக்கள் செலுத்தும் வரிப்பணம் எங்கே செல்கிறது,” என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததை கண்டித்தும், மோசமான சாலைகள், வண்டில் மண் என்ற போர்வையில் கனிம கொள்ளையை கண்டித்தும் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துக்கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, அதிமுக சட்டமன்ற தொகுதி என்பதால் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய பழுதடைந்த சாலையை சீரமைக்கவில்லை.

பாதுகாப்பான குடிநீர் வழங்க அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மூன்றை ஆண்டு காலமாக முடக்கி வைத்துள்ளனர். பாதாளசாக்கடை அமைக்கவில்லை. 10 ஆண்டு சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயரவில்லை. ஆனால், திமுக அரசு குப்பை வரி, சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். அதிமுக ஆட்சியில் வரியை உயர்த்தாமலே மக்குளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்தது. மக்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் வரியை உயர்த்திவிட்டு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறது. அப்படியென்றால் மக்கள் வரிப்பணம் எங்கே செல்கிறது?

அதிமுக இல்லாவிட்டால் பெண்களுக்கு தற்போது ரூ.1,000 உரிமைத்தொகை கூட வந்திருக்காது. அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உரிமை தொகையை வழங்குவதாக வாக்குறுதி அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் திமுக அரசு அதனை நிறைவேற்றவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியதால் தகுதியுள்ளவர்களுக்கு என்று மட்டும் கூறி பாராபட்டசமாக 1 கோடியே 13 லட்சம் பேருக்கு மட்டும் வழங்குகிறார்கள். தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்திலே அவர்கள் அறிவித்து இருந்தால் பொதுமக்களும் தகுதியானவர்களுக்கே வாக்களித்து இருப்பார்கள்.

வாக்குறுதிகள் என்பது மக்கள் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை உயர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா சொல்வார். அந்த அடிப்டையில் அவர், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், இளைஞர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்ட வந்தார். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை நடக்கவில்லை. அதே காவல் துறைதான் தற்போதும் உள்ளது.

ஆனால், அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதால் போதைப்பொருள், கள்ளச்சாராயம் விற்பனை தாராளமாக நடக்கிறது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு குழந்தைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்க முடியவில்லை. அதிமுக ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள இயக்கும். அதனால், திருப்பரங்குன்றத்தில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம், அதிமுகவிற்கும் திருப்புமுனையை ஏற்படுத்தும்” என பி.தங்கமணி தெரிவித்தார்.

கே.பி. முனுசாமி: டாஸ்மாக் கடைகளாக செயல்படும் திமுகவினர்..! அரசு வருமானம், திமுகவினர் பையில்..!

டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சிறப்புரையாற்றினார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கே.பி.முனுசாமி பதிலளித்தார். தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குழு அமைத்துள்ளார். அரசியல் களப் பணியை மாவட்ட வாரியாக செய்வதற்கு உந்து சக்தியாக, கள ஆய்வு அமையும்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்து, கிளை நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து, திமுக ஆட்சியில் உள்ள தவறுகள் மற்றும் இயலாமைகளை மக்களிடத்தில் எடுத்து சொல்லி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு கள ஆய்வு துணையாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக செயலிழந்து இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், ஒரு இடத்தில் வன்முறை உருவாகிறது என்றால், சமூக விரோத சக்திகள் ஆதாயம் தேடும் அளவில் எதாவது செய்யும். அதன்படி, சமூக விரோத சக்திகள் மூலமாக கஞ்சா, போதை பொருள், அபின் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். டாஸ்மாக் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருமானம், திமுகவினருக்கு சென்று கொண்டிருக்கிறது ன கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

சீமான்: அதிமுக, திமுக கட்சிகளுக்கும் இடையே தெருச்சண்டை நடக்கிறது..!

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையே தெருச்சண்டை தான் நடக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். “இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

அப்போது, “இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள், வலைகளை கிழித்து எறிந்தார்கள், இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது.

இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும். அதிமுக ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் உதயசூரியன் சின்னம் தான் உள்ளது. அதிகாரம் நிலையானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் தமிழன் கைக்கு வரும் போது அனைத்தும் மாறும். வசதியாக பதுங்க பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது தான் திராவிடம்.

தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றல்ல. வேளாண் கல்லூரி மாணவர்களை நில அளவைக்கு பயன்படுத்துவது தவறு. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்டமைப்பு நடைபெறுகிறது. அனைத்து கட்சியும் என் பின்னால் தான் ஓடி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். என் பயணம் என் கால்களை நம்பிதான் உள்ளது. அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடங்காதீர்கள். என் கொள்கை யாரோடும் ஒத்து போகவில்லை. வியாபாரத்துக்காக கல்வி, மருத்துவத்தை தரம் குறைக்கிறார்கள். அவர்களுடன் எப்படி நாங்கள் சேர முடியும்.

அரசியல் அதிகாரம் இல்லாத, எளிய மக்கள் உள்ள இடங்களில் தான் நச்சு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்யும் அமைச்சர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார். திமுகவும் இதையே கூறியது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையே தெருச்சண்டை தான் நடக்கிறது. இதை ஒழிக்க வேண்டும்” என சீமான் தெரிவித்தார்.