அண்ணாமலையின் … பாதயாத்திரையில் 2 நாட்கள் ஓய்வு.. !

2024 -ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெல்லும் முனைப்பில் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் ‛என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.

மதுரை மாவட்டத்தில் தற்போது யாத்திரை நடக்கும் நிலையில் நேற்று டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அடுத்த ஆண்டு வரை இந்த பாதயாத்திரை தொடரும் நிலையில், இடையிடையே மற்ற பணிகளிலும், கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் அண்ணாமலை பங்கேற்பார். இத்தகைய சூழலில், மதுரையில் பாதயாத்திரை நடத்தி வரும் நிலையில் அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் அழைப்பின் பேரில் பாதயாத்திரையை முடித்துக்கொண்டு டெல்லி கிளம்புவதாக கூறப்பட்டது.

மதுரையில் பாதயாத்திரை தொடங்கிய பிறகு அண்ணாமலை அளித்த பேட்டியில், “நாங்கள் ஓ பன்னீர் செல்வத்தை ஒதுக்கி வைக்கவில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறோம்” என்றார். ஓ பன்னீர் செல்வம் பற்றி அண்ணாமலை பேசியது அதிமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு அண்ணாமலை “யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது…. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது” என தெரிவித்தது மட்டுமின்றி பாஜக தலைவர்கள் செல்லூர் ராஜூவை விமர்சனம் செய்தனர்.

இதனால் அதிமுக பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த பின்னணியில் தான் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலை டெல்லி செல்லவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் பாதயாத்திரையை முடித்துக்கொண்டு சென்னைக்கு அண்ணாமலை செல்கிறார். அடுத்த 2 நாட்களுக்கு அண்ணாமலை சென்னையில் இருப்பார் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதயாத்திரையில்.. அண்ணாமலையிடம் அளித்த மனு.. கொஞ்ச நேரத்தில் பார்த்தால் ரோட்டில்..

தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைத்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில், தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை த ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல அண்ணாமலையின் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று பாஜக நம்பிக்கை கொண்டுள்ளார்.

அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணிக்கெல்லாம் பயணத்தை துவக்குவார்கள். திருச்செந்தூரை நோக்கி ஒரு காலத்தில் கலைஞர் நடந்த நடைப்பயணமும் சரி, வைகோ நடந்த நடைப்பயணமும் சரி, கடந்த ஆண்டு ராகுல் நடந்த நடைப்பயணம் சரி… காலை 6 மணிக்கெல்லாம் நடக்கத் துவங்கினர். இடையில் காலை உணவினை போகும் இடத்திலேயே முடித்துக் கொள்வர். பிறகு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும்.

ஆனால் அண்ணாமலை பெரும்பாலும் கேரவனிலேயே பயணம் செய்கிறார். தினமும் காலையில் 9:30-க்குத்தான் பயணத்துக்கே ரெடியாகி 2 கிலோமீட்டர் நடக்கிறார். பிறகு சட்டென்று கேரவனில் ஏறிக்கொள்கிறார். இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவரின் நடைப்பயணத்தின் போது கொடுக்கப்பட்ட மனு சிறிது நேரத்தில் சாலை ஓரத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ரமா என்ற பெண், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்ட வழி இல்லாததால், அவற்றை ரத்து செய்ய ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்து உள்ளார். அண்ணாமலை அங்கிருந்து நகர்ந்த சில நிமிடங்களில் அந்த மனு சாலையில் கிடந்துள்ளதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.