உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என பட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மகாபலிபுரம் அருகே திருவிடந்தையில் நாளை மறுநாள் பாமகவின் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,” உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அமைதியான முறையில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், கட்டுப்பாடோடு, பாதுகாப்புடன் இங்கே நீங்கள் வந்து செல்ல வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்க வீடியோவில் கோரிக்கை வைத்தார்.