காதலை கைவிட மறுத்ததால் தங்கையை அடித்துக்கொலை செய்த அண்ணன் கைது

காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை தொழிலாளி தண்டபாணி. இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகன் சரவணன் மகள் வித்யா உள்ளனர். சரவணன் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார். சரவணனின் தங்கை வித்யா கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார். வித்யாவும், திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் வித்யா வீட்டிற்கு தெரியவந்தது. வித்யா வீட்டிற்கு வெண்மணி வந்து பெண் கேட்டுள்ளார்.

இந்நிலையில்,கடந்த 30-ஆம் தேதி வித்யாவின் வீட்டில் இருந்தவர்கள் தேவாலயத்துக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ விழுந்த நிலையில் காயத்துடன் வித்யா சடலமாக கிடந்தார். பீரோ விழுந்து வித்யா இறந்திருக்கலாம் என பெற்றோர் நினைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோரும், உறவினர்களும் உடலை அடக்கம் செய்தனர். வித்யா உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட அவரது காதலன் வெண்மணி அதிர்ச்சியடைந்தார். மேலும் காதலியின் சாவில் மர்மம் உள்ளது என காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல கிராம நிர்வாக அதிகாரிக்கும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பல்லடம் தாசில்தார் சபரிகிரி, கிராம நிர்வாக அதிகாரி பூங்கொடி மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் வித்யா உடல் நேற்று முன்தினம் தோண்டி எடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு செய்தனர். அதில் உடற்கூராய்வில் வித்யா தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வித்யா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறை விசாரணையை தொடங்கினர். வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.

பல மணி நேர விசாரணைக்குப் பிறகு, வித்யாவை கொலை செய்ததை சரவணன் ஒப்புக்கொண்டார். விசாரணையில், எனது தங்கை மீது அதிக பாசம் வைத்திருந்தேன். அவரது காதல் விவகாரம் தெரியவந்ததும் கண்டித்தேன். காதலை கைவிட வேண்டும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினேன். ஆனால், தங்கை அதனை கண்டுகொள்ளவில்லை. மாறாக என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று அறையில் வித்யா படுத்து இருந்தார். அப்போது, அரிவாளின் பின்பக்கத்தால் அவளது தலையில் பலமாக தாக்கினேன்.

இதில் அவள் சம்பவ இடத்திலேயே இறந்தாள். இதன்பின்னர் கொலையை மறைக்க பீரோ விழுந்து அவள் இறந்ததுபோல் சித்தரிக்க பீரோவை தலை மீது சாய்த்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன் என தெரிவித்தார். இதையடுத்து, சரவணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த பியூட்டி பார்லர் பெண்ணின் கணவன் தற்கொலைக்கு ஆன்லைன் சூதாட்டம் காரணமா ..?

திருச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த BSNL ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உலகெங்கிலும் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங்கின் வருவாயை உருவாக்குவதற்கும் வேலைகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் அதே வேளையில், பணமோசடி, மேட்ச் பிக்ஸிங் போன்ற பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான வழிகளையும் செய்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடெங்கும் ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. இந்நிலையில், காதல் திருமணம் செய்த BSNL ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வடக்கு தாராநல்லூர் அருகே அம்மன் ஸ்டோர் பகுதியை சேர்ந்த பட்டு முத்துவின் மகன் கனகராஜ் BSNL -னில் டவர் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து கடந்த 9 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு தனலட்சுமி அருகிலுள்ள பகுதியில் பியூட்டி பார்லர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று முன் தினமும் தனலட்சுமி வேலைக்கு சென்றுவிட்டார்.

அப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவர் கனகராஜ் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கனகராஜை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தனர். இதையடுத்து, கணவர் உடலை பார்த்து தனலட்சுமி கதறி அழுதார்.

பின்னர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறை கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது கனகராஜுக்கு நீண்ட நாட்களாகவே ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், அதில் அதிகளவில் பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கனகராஜ் மன உளைச்சலில் இருந்ததாகவும், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் காவல்துறை கனகராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தான் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

68 வயது மணமகளுக்கும் , 64 வயது மணமகனுக்கும் காதல் திருமணம்..!

64 வயது மணமகனுக்கும், 68 வயது மணமகளுக்கும் முதியோர் காப்பகத்தில் காதல் திருமணம் நடைபெற்றது. ஆந்திராவின் ராஜமுந்திரியில் சுவர்ணாந்திரா சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ள முதியோர் இல்லம் செயல்படுகிறது. இந்த முதியோர் இல்லத்தில் நாராயணபுரி பகுதியை சேர்ந்த மூர்த்தி 64 வயதான என்பவர் 2 ஆண்டுகளாக தங்கி உள்ளார். இவருக்கு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துவிட்டது.

அதே முதியோர் இல்லத்தில் வசிக்கும் கடப்பா மாவட்டம், கம்முலகுண்டா பகுதியை சேர்ந்த 68 வயதான ராமலட்சுமி, மூர்த்திக்கு உதவிகளை செய்து வந்தார். மருத்துவர்கள் எழுதி கொடுத்த மருந்துகளை நேரம் தவறாமல் கொடுத்தார். இதில் மூர்த்தி ஓரளவுக்கு குணமானார்.

வயதான காலத்தில் துணை அவசியம் என்பதை இருவரும் உணர்ந்தனர். இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழ முடிவு எடுத்தனர். இதுகுறித்து முதியோர் காப்பக நிர்வாகியான ராம்பாபுவிடம் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இருவருக்கும் நெருங்கிய சொந்தபந்தம் இல்லை என்பதால், முதியோர் இல்லத்திலேயே திருமணம் செய்து வைக்க ராம்பாபு சம்மதம் தெரிவித்தார். அதன்பேரில் கடந்த வெள்ளிக்கிழமை மூர்த்தி, ராமலட்சுமி இருவருக்கும் முதியோர் இல்லதிலேயே திருமணம் செய்து வைத்தனர்.