கஸ்தூரி கேள்வி: நான் சொன்னது என்ன, நீங்கள் திரித்து போட்ட தலைப்பு என்ன..!

சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நான் பேசிய கருத்து நான் சொன்னது என்ன, நீங்கள் திரித்து போட்ட தலைப்பு என்ன? என நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.

பிராமணர்களை வந்தேரிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான் நான் பேசினேன். என் மாமியார் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள்தான். என்னை தெலுங்கு பேசும் மக்கள் மருமகளாகவும் அவர்கள் வீட்டு மகளாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழும் தெலுங்கும் எனக்கு இரு கண்கள் போன்றது. பொய்யான குற்றச்சாட்டுக்கு ஓடி ஒளியும் ஆள் நான் இல்லை. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது. என்னை ஓசி குடி என்கிறார்கள், குடிகாரி என சித்தரிக்கிறார்கள். எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கோரி நேற்றைய தினம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசுகையில், நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது.. இங்க சினிமாவை விடுங்க.. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க..

அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.

300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க என கஸ்தூரி பேசினார்.

இந்நிலையில் இவருடைய பேச்சுக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்து தனது கருத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அது போல் பாஜக அமர் பிரசாத் ரெட்டியும், நடிகை கஸ்தூரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்படியாக கஸ்தூரியின் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வந்த நிலையில் அவரது தனது ட்விட்டர் பக்கத்தில் கூட இது பொய். நான் சொன்னது என்ன, நீங்கள் திரித்து போட்ட தலைப்பு என்ன? தமிழகத்தில் வந்தேறி தெலுங்கர் சிலர் தமிழினம் என்று சொல்லிக் கொண்டு பிராமணரை தமிழரில்லை என்கிறார்கள் என சில ஊடகங்களில் போட்ட செய்தியை சுட்டிக் காட்டி கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கஸ்தூரி வீட்டு முன்பு திரண்ட திமுக..! முட்டி நிக்குது முட்டி வரை சாக்கடை தண்ணி..!

சென்னையில் எப்போது மழை வந்தாலும், திமுக அரசை குற்றஞ்சாட்டி, நடிகை கஸ்தூரியின் காரசாரமான விமர்சனங்கள் எழுவது வாடிக்கையானஒன்றாகும். அந்தவகையில், தற்போது சென்னையில் மழை வெளுத்து கட்டிவரும் நிலையில், மறுபடியும் புத்தம் புதிய விமர்சனங்களுடன் கஸ்தூரி வந்திருக்கிறார்.

கடந்த வருடம் பெய்த மழை அளவுக்கு, சென்னை பாதிக்கப்பட்டு விடுமோ? என்ற கலக்கம் சென்னைவாசிகளை கவ்வி வந்தது. ஆனால், 20 செ.மீ. அளவுக்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பில்லை, சென்னை ஆபத்திலிருந்து தப்பிவிட்டது என்று வானிலை ஆய்வாளர்கள் கணிப்புகளை சொல்லி வருகிறார்கள்.

இது ஒருவகையில் சென்னை மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறது என்றாலும், சாலைகளில் தேங்கியிருக்கும் வெள்ளநீர் எப்போது வடியும் என்ற கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். 3 நாளைக்கு சென்னைக்கு ரெட் அலர்ட் என்றதுமே, அரசு இயந்திரம் மும்முரமாக களமிறங்கியது.. எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு 2 தினங்களுக்கு முன்பே முடுக்கிவிட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது சம்பந்தமாக தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரடியாகவே சென்று பார்வையிட்டார். மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் மீட்பு பணிகளிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்திகளை தெரிவித்து வருகின்றன. அதேசமயம், தமிழக அரசு முன்னெடுத்துள்ள நிவாரண நடவடிக்கைகளை திமுக கூட்டணி கட்சிகள் பாராட்டி வருகின்றன.

அந்தவகையில், திமுக ஆதரவாளரும், விசிகவின் முக்கிய பிரமுகருமான டாக்டர் ஷர்மிளா ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருக்கிறார். அதில், “மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது… முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க… ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க… நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஷர்மிளாவின் இந்த பதிவை பார்த்தமே நடிகை கஸ்தூரி டென்ஷன் ஆகிவிட்டார்.. இதையடுத்து, ஷர்மிளாவுக்கு பதிலடி தந்துள்ளார். கஸ்தூரி தன்னுடைய ட்வீட்டில், “ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது. எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல . உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்” என்று கிண்டலடித்துள்ளார்.

இதைக்கண்ட திமுக தொண்டர்களோ, பதிலுக்கு ஓடிப்போய் கஸ்தூரி வீட்டு வாசலில் நின்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளனர்.. அந்த வீடியோவில் சாலைகளில் எங்குமே தண்ணீர் தேங்கவில்லை.. மழை பெய்தற்கான அறிகுறியே அதில் தென்படவில்லை.. முட்டிவரைக்கும் சாக்கடை தண்ணீர் இருப்பதாக கஸ்தூரி சொன்ன நிலையில், திமுகவினர் இப்படியொரு வீடியோவை எடுத்து கஸ்தூரிக்கு பதிலடி தந்துள்ளனர்.