சீமான் வீட்டுல எங்கவீட்டு பொண்ணு இருக்கு முதல்ல எங்க வீட்டுக்கு அனுப்ப சொல்லுங்க..!

சீமானின் மனைவி கயல்விழியே தெலுங்கர் தான். தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் சீமான் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்புவாரா?. என தெலுங்கு முன்னேற்ற கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ், தமிழன் என்பதை முன்னிருத்தி தனது அரசியல் பயணத்தை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேற்கொண்டு வருகிறது. அவரது ஒரே கொள்கை தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்பதாகும். இப்படி தமிழை உயிர் மூச்சாக கொண்டு அரசியல் களத்தில் சீமான் நிற்கிறார். இதனால் சீமான் அனைத்து மேடைகளிலும் தமிழர்களை போற்றியும், பிற மொழி மக்களை தூற்றியும் பேசி வருகிறார்.

இதற்கு பிற மொழி பேசும் மக்கள் சீமானை அவ்வப்போது விமர்சித்து வருகின்றனா். மேலும் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனா். இந்நிலையில் தெலுங்கர்கள் குறித்து பேசிய சீமானை, தெலுங்கு பேசும் மக்கள் தற்போது எச்சரித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சீமானுக்கு எதிராக தெலுங்கு முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில்,” விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மை சீமான் இழிவுப்படுத்துவதை பொறுக்க முடியாது. சீமானின் மனைவி கயல்விழியே தெலுங்கர் தான். தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் சீமான் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்புவாரா?. நாங்கள் எந்த சாதியை பற்றியும் தவறாக பேசியது கிடையாது. நீங்களும் மனிதன், நானும் மனிதன். நாங்கள் சீமானை பற்றி பேசுகிறோமா.?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தது சீமானுக்கு ஏன் எரிகிறது. சீமான் வீட்டில் தெலுங்கு பெண் இருக்கிறார். அவரை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா.? சீமான் பாஞ்சாலன்குறிச்சி படத்திற்கு நாங்கள் உதவியாக இருந்தோம். ஆனால் சீமான் மேடைக்கு மேடை தெலுங்கு மக்களை இழிவாக பேசுகிறார். இதுபோன்று சீமான் இனி செய்தால், நாங்கள் என்ன செய்வோம் என்று தெரியாது” என சரமாரி கேள்வி எழுப்பினா். மேலும் சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

நான் சாரி கேட்கிறேன் ப்ளீஸ்..! சீமான் மனைவி.. என்னங்க சாரி..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அழைத்து செல்லும் போது, சீமான் மனைவி கயல்விழி காவல்துறையினரிடம் மன்னிப்பு கேட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட் ஒட்டும் சம்மனை கிழிக்க கூடாது என்ற விதி உள்ளது.

ஆனால், அதை மீறி நடிகை பாலியல் வழக்கில், சீமான் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியதால் அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது.

சீமான் காவலாளி மிரட்டல் விசாரணைக்கு வந்த காவல்துறையினரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து காவல்துறை அங்கே வந்து காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரையும் கைது செய்தனர். அதோடு அவரின் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீமான் ஓசூரிலுள்ள நிலையில் சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அழைத்து செல்லும் போது, சீமான் மனைவி கயல்விழி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு போலீஸ் அதிகாரி.. என்னங்க சாரி.. என்ன சாரி.. விசாரிக்க வந்த காவல்துறை அதிகாரியிடம் இப்படித்தான் செய்வீர்களா? என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து கயல்விழி அந்த காவல்துறை அதிகாரியிடம் சாரி கேட்டபடியே பின் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.