விஜயலட்சுமி கண்ணீர் வீடியோ: நான் பாலியல் தொழிலாளியா சீமான்.. எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது..!

நான் பாலியல் தொழிலாளியா, எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது. சீமான் இனி நன்றாகவே இருக்க மாட்டார். இனி நிம்மதியாகவும் இருக்க முடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்ய போகிறது என பார் என விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த வழக்கு தற்போது சூடுபிடித்து உள்ளது. இதுதொடர்பாக சீமான் வீட்டில் நடைபெற்ற சண்டை, விஜயலட்சுமியின் அடுத்தடுத்த வீடியோக்கள் என விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சீமான் புறப்பட்டுச் சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், சீமான் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவரது கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என கனிமொழி கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “என்னை பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு நீங்கள் யார், நீங்கள் என்ன நீதிபதியா, என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

அவர்தான் பெண், அவருக்கு மட்டும்தான் மனமிருக்கிறதா, அவருக்கு மட்டும்தான் காயம்படுமா? என் வீட்டில் பெண்கள் இல்லையா, என் தாய், என் சகோதரிகள் எல்லாம் இல்லையா, என்னை நேசிக்கும் மனைவி இல்லையா? அவருக்கெல்லாம் காயம்படாதா? நான் கேட்டதில் உங்களுக்கு கண்ணியம் குறைந்துவிட்டது என்றால் நீங்கள் செய்யும் செயலுக்கு என்ன பெயர், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள். வழக்கு விசாரணையில் இருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ந்து அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள்.

Enjoyment without responsibility என்று உங்களது தலைவர் பெரியார்தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில்தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறு, இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட விஜயலட்சுமி தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,” நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான். என்னை பாலியல் தொழிலாளி என்று எப்படி சொல்லலாம். நான் பாலியல் தொழிலாளி என்றால், எதற்காக பெங்களூருவில் என்னுடைய சகோதரியுடன் கஷ்டப்பட போகிறேன்?. இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம். ஆனால் இனி நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது. என்ன செய்ய போகுது பார்” என விஜயலட்சுமி வேதனையில் கண்ணீர் விட்டபடி வீடியோவில் பேசி இருந்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.