எடப்பாடி பழனிசாமி: சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமைத்து வியத்தகு வெற்றியை பெறுவோம்..!

அதிமுக தலைமையில் வெற்றிக் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை இதயத்தில் கொண்டு வாழ்ந்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் என் அன்பு வணக்கம். நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், அவரது புகழ் ஓங்குக என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் எதிரொலிக்கிறது.

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம்போல் உயர்ந்து விளங்கிய ஜெயலலிதா ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும், நகர்விலும் தமிழ் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்கின்றார்கள். அவருடைய அரசு எவ்வளவு எளிமையாகவும், மக்களின் தேவை அறிந்தும் நடைபெற்றது என்பதையும்; இன்றைய இருள் மிகுந்த விடியா திமுக அரசு எப்படியெல்லாம் மக்களை அலைக்கழித்து, அஞ்சி, அஞ்சி வாழச் செய்கிறது என்பது பற்றியும், தமிழ் நாடு முழுவதும் மக்கள் பேசுகிறார்கள்.

எப்போது தேர்தல் வரும்,ஜெயலலிதாவின் அரசை எப்போது மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். மிகச் சிறந்த நிர்வாகியாகவும், மத்திய-மாநில உறவுகளை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையும், செயல் திட்டமும் கொண்டவராகவும், தமிழ் நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர்.

பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்திய நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த விடியா அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது.

தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், காங்கிரஸ்-திமுக கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கொடுத்தும்; மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஜெயலலிதாவின் அரசை நிதி நெருக்கடிக்குத் தள்ளி, நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற கெடுமதியுடன், திமுக அங்கம் வகித்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டது.

இருந்தபோதிலும், தனது நிர்வாகத் திறமையால் அனைத்து சவால்களையும் சமாளித்து ஏராளமான நலத் திட்டங்களை தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக அரசும் அந்த முயற்சியில் தொய்வின்றி செயலாற்றியது. இன்றைக்கு, விடியா திமுக அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்றக்கூட திறனற்றதாக உள்ளது. மிகப் பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது.

பொழுது விடிந்து, பொழுது போனால், தமிழ் நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலையும், பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நான்கு திசைகளிலும் தினந்தோறும் கள்ளச் சாராயம், போதைப் பொருள் புழக்கம், வெட்டு, குத்து, கொலை என்று சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உண்மைகளை எடுத்துச் சொல்வோருக்கு வாய்ப் பூட்டு போடப்படுகிறது.

இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும்; தமிழ் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும்; தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நல்லாட்சிகளைப் போல, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வேண்டும். நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெள்ளம்போல் திரண்டு வரும் கழக உடன்பிறப்புகளையும், தமிழ் நாட்டு நலன் நாடும் மக்களையும் பார்க்கையில், கழக ஆட்சியே அடுத்து மலரப்போகும் நல்லாட்சி என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.

இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது.

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம்; மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம்; இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று ஜெயலலிதா சூளுரைத்தார்.

அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் ஜெயலலிதா பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம்.

அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். “நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்! வாழ்க புரட்சித் தலைவி அம்மாவின் புகழ்! வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு ஓட விட்ட செங்கோட்டையன்..!

இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்” என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டு செங்கோட்டையன் காட்டினார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய பகுதியில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 108-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்ட மேடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவரின் புகைப்படங்களும் பெரிதாக ஒரே அளவில் இடம் பெற்றிருந்தன. இந்த விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில் யார் எந்த ஊரில் உள்ளார்கள் என எனக்கு தெரியும். எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது.

எதிர்கட்சித் தலைவரின் கட்டளையில் தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனை ஆண்டுகளில் அரசியல் உள்ளேன், எண்ணற்ற தலைவர்களை பார்த்துள்ளேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் நான் சென்று கொண்டுள்ளேன். செய்தியாளர்கள் என்னிடம் எதவாது கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர். காலையில் சொன்னதை இப்போதும் சொல்கிறேன், நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் சொல்ல மாட்டேன்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லை. அவர்கள் புகைப்படம் இல்லாததால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, நான் புறக்கணிக்கவில்லை. அதைப்பற்றி தற்போது நிறைய பேர் பேசி வருகின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன். என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள். நான் தெளிவாக இருக்கிறேன்.

காவல்துறை பாதுகாப்பு அவர்கள் போட்டு இருக்கின்றனர். பாதுகாப்பு கண்காணிப்பு என்பது காவல் துறை போட்டது. நான் போட சொல்லவில்லை. கோட்டைக்கு வர வேண்டும் என்றால் செங்கோட்டையனை சுற்றி வருகின்றார்கள். 43 ஆண்டு ஆட்சியில் நான் யாரையும் தவறாக பேசியதில்லை. கோபப்பட்டது இல்லை. ஜெயலலிதாவின் பணிகளை கண்கூடாகப் பார்த்தவன் நான். ஜெயலலிதா விரலை நீட்டும் போதே, அவர் கை அசைக்கும்போதே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். ஏன் கழற்றி விட்டார் எனக் கேட்பார்கள். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது, அதையெல்லாம் சொன்னால் தவறாகப் போய்விடும்.

ஏன் செங்கோட்டையனுக்கு கட்சியில் 2 பெரிய பொறுப்புகளை தந்தேன் என ஜெயலலிதா சொன்னது இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது. “எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர் செங்கோட்டையன்” என ஜெயலலிதா கூறினார். தொடர்ந்து, தன்னைப் பற்றி ஜெயலலிதா பேசும் ஆடியோ ஒன்றையும் மைக் முன்பு போட்டு செங்கோட்டையன் காட்டினார். “இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்.” என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டுக் காட்டினார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், “தன்னலம் கருதாமல் செயல்படக்கூடியவன் நான், இயக்கம் ஒன்றே பெரிதென நினைப்பவன். நான் என்றைக்கும் என்னை தலைவன் என்று சொன்னதில்லை. என்றைக்கும் தொண்டன் என்றுதான் சொல்லி இருக்கிறேன். அதில் இருந்து நீங்கள் என்னை புரிந்துகொள்ளலாம். மீண்டும் தமிழகத்தில் தொண்டர்களோடு தொண்டராக இருந்து பணியாற்றுவேன்” என செங்கோட்டையன் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இனி சேர்க்க வாய்ப்பு இல்லை..!”

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இனி மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி சரவெடி வெடித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் 53-ம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது. அந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, அதிமுக இரண்டாகிவிட்டது, அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை கூட இனி உபயோகிக்க வேண்டாம். பிரிந்து சென்றவர்கள் இன்று எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார்கள். ஒன்றாக இருப்பதால்தான் இத்தனை பேர் இங்கு நிற்கின்றோம். அதிமுக பிரிந்து கிடக்கிறது என சொல்லாதீர்கள்.

அதிமுக ஒன்று தான். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இனி மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை. எங்கள் தரப்பில் இருப்பதுதான் அதிமுக. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் அனைவரும் நீக்கப்பட்டு விட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி சரவெடி வெடித்தார்.

அண்ணாமலை விமர்சனம்: அரசியல் முதிர்வில்லா எடப்பாடி பழனிசாமி ஒரு கிணற்று தவளை…!

கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பாக நடந்த கருத்தரங்கில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இங்கு எதை செய்தாலும் அரசியலாக பார்க்கப்படுகிறது. 5 முறை முதல்வராக இருந்த தலைவருக்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாங்கள் சிந்தாந்த ரீதியாக எதிரும்புதிருமாக தான் இருக்கிறோம். கலைஞர் நாணய வெளியீடு நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.

நாணய வெளியீடு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அரசியலை கலப்பது வேதனை அளிக்கிறது. எம்.ஜி.ஆருக்கு உரிய மரியாதையை கூட்டணியில் இல்லாத போதும் பாஜக அரசு 2017-ல் செய்தது. அதே போல 2024-ல் கலைஞருக்கு மரியாதை கொடுத்துள்ளோம். கலைஞர் உடல் நலக்குறைவில் இருந்த போது மோடி அவரை டெல்லிக்கு அழைத்தார், அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. ராஜ்நாத் சிங் கலைஞருக்கு முழு மரியாதை செய்ய வேண்டும் என எண்ணி நினைவிடம் சென்றார்.

ஆட்சியில் இருக்கும் போது, மத்தியில் உறவு வைத்து தமிழகத்திற்கு நிதியயை பெற்று கொண்டு மாநில அரசு செய்ததாக எடப்பாடி காட்டி கொண்டார். ஜெயலலிதாவிற்கு விழா எடுக்க வேண்டும் என்றால் முதல் ஆளாக பாஜக இருக்கும். டீ பார்ட்டிக்கு சென்றால்தான், நாணய வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருவார் என கூறுவது அரசியல் புரிதலில் எடப்பாடி பழனிசாமி கிணற்று தவளையாக உள்ளதை காட்டுகிறது. இன்னும் நிறைய அரசியல் முதிர்வை எடப்பாடியிடம் எதிர்பார்க்கிறோம் என அண்ணாமலை பேசினார்.

எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தைக்கு 12 கிராம் தங்க நாணயம் வழங்கல்

முன்னாள் தமிழக முதலமைச்சர் அதிமுக கழக தொண்டர்கள் சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107 வது பிறந்த தினம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன பொது மருத்துவமனையில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக ஊழியர் சங்க மருத்துவமனை பகுதி செயலாளர் சோமையா அவர்கள் ஏற்பாட்டில் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் பிறந்த பந்தகானி மிதுன் குமார் -காக்கனுரி பார்வதி தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு 1/2கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு அதிமுக தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் தலைவர் வெற்றிவேல், செயலாளர் கோவிந்தராஜ், தலைமையில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அண்ணாவை ஸ்டிக்கராக மட்டும் பார்க்கும் அதிமுக..!

கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் பற்றி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ”அண்ணாவைத் தங்கள் கட்சிக்கு ஒட்டும் லேபிளாக, கொடியில் ஒரு ஸ்டிக்கராக வைத்துக் கொண்டு, அவரது கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டு வருபவர்கள் யார் என்பது உடன்பிறப்புகளான உங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.’

”அவர்கள் அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்பது மட்டுமல்ல, தங்கள் கட்சியை உருவாக்கிய தலைவரின் நூற்றாண்டைக் கூட மறந்துபோய், ஓராண்டு கழித்து திடீரென நினைவுக்கு வந்து, பெயரளவுக்குச் சில நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, கழக ஆட்சியில் கட்டப்பட்ட இடங்களுக்கு எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை வைத்து அவரது நூற்றாண்டை முடித்துவிட்டார்கள்.”

”அவர்கள் இயக்கத்தில் மூத்த தலைவராக வாழ்ந்து மறைந்த நாவலர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடியது தி.மு.கழகம்தான். நாவலருக்குச் சிலை அமைத்ததும் கழக அரசுதான்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, கலைஞர் நூற்றாண்டை, அவரைப் போலவே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.”

”’ஏ, தாழ்ந்த தமிழகமே!’ என வேதனையோடு பேரறிஞர் அண்ணா சொன்ன காலம் ஒன்று உண்டு. திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையால், அதன் அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் அளித்த வெற்றியால், கலைஞரின் ஆட்சித் திறனால், அன்று தாழ்ந்திருந்த தமிழகம் இன்று தலைநிமிர்ந்த தமிழ்நாடாக, இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதுபோல, மாமதுரையில் திறக்கப்படவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வாரி வழங்கி, தமிழர்களின் வாழ்வை உயர்த்தும்.”

இருவரால் மலர்ந்த அதிமுக….இருவரால் மறைகிறதா.!?

1936-ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமான எம்.ஜி.ஆர் அதிகம் புகழ் கிடைக்காத நிலையில் 1947 -ல்  கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான ராஜகுமாரி படம் எம்.ஜி.ஆரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்…

புத்தன் இயேசுகாந்தி பிறந்தது

பூமியில் எதற்காக

தோழா ஏழை நமக்காக…

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி….

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே…

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்

வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே…

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா…

சிரித்து வாழ வேண்டும்

பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே…

சின்னப்பயலே சின்னப்பயலே

சேதி கேளடா….

அங்கே

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்

அது ஆணவ சிரிப்பு….. போன்ற புரட்சி கார பாடல் வரிகளால் தொடர்ந்து  25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கியது மட்டுமின்றி எம்.ஜி.ஆர் திரைப்படங்களின் மூலம் ஏழைகள் தோழனாகவும், வீரனாகவும், அவரடைந்த புகழும், சமூகத் தொண்டனாகவும், கொடையாளியாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயர் மற்றும் அவருடைய வசீகரமான தோற்றம் மூலம் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் உள்ள கோடான கோடி மக்களை கட்டி போட்டார். மேலும் எம்.ஜி.ஆர் எத்தனையோ முன்னணி நடிகைகள் இருந்தாலும், ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்த படங்கள் இருவரையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் , 1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.  1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.

1982 ஜூன்  4-ந் தேதி ஜெயலலிதாவை  அ. தி. மு. க. வில் இணைந்த எம்.ஜி.ஆர்  அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்கினார். அதன் பிறகு 1984 மார்ச் 24 -ந் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 1984 -ம்ஆண்டு வி.கே. சசிகலா போயஸ் கார்டன் பகுதிக்கு அருகே வினோத் வீடியோ விசன் என்ற ஒளிநாடாவை வாடகைக்கு விடும் கடையை நடத்திய போது கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரலேகா ஜெ யலலிதாவின் கூட்டங்களுக்கு நிழற்படம் எடுக்க வி.கே. சசிகலாவை அறிமுகப்படுத்தினார்.

அதன்பின்னர் ஜெ யலலிதாவின் சுற்று பயணங்களை படமெடுத்து கொடுக்கும் வாய்ப்பினை  வினோத் வீடியோ விசனுக்கு கிடைக்க வி.கே. சசிகலா வேதா இல்லத்தில் அடியெடுத்து வைத்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினர் ஆனபோது அவரோடு டெல்லி செல்லும் அளவிற்கு வி.கே. சசிகலாவுடன் நெருக்கனமானார். 1984-ல் எம்.ஜி.ஆர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும் இருந்த போது ஜெயலலிதா பிரசாரம் செய்து   எம்.ஜி.ஆர் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆக்கினார்.

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24 -ம் நாள் இயற்கை எய்தபோது எம்.ஜி.ஆர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களை ஒரு கூட்டம் கீழே தள்ளிவிட போது புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு தன்னம்பிக்கையுடன் தைரியத்தையும் ஆறுதலையும் கொடுத்து நடமாட வைத்த ஒரே ஒரு நபர் வி.கே. சசிகலா நடராஜன்.

அதன்பின்னர் 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்று 13 ஆண்டு கால வனவாசத்தை முடித்து ஆட்சி பீடத்தை கைப்பற்றியது. அப்போது தேர்தல் ஜெ அணி 27 இடங்களையும் ஜி.கே.மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் கட்சி 26 இடங்களையும் அ.தி.மு.க (ஜா அணி) 2 இடங்களையும் கைப்பற்றியது நாடறிந்தது. 1989 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கருணாநிதி 3- வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக பிப்ரவரி 9 ஆம் தேதி, ஜெயலலிதா பதவி ஏற்றதோடு சரி, அதன்பிறகு சட்டமன்றத்திற்கு வருவதையே ஜெயலலிதா தவிர்த்தார். இதற்கிடையே, ஜா-ஜெ அணிகளிடையே வி.கே. சசிகலா நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தி பிரிந்து கிடந்த அதிமுகவை இணைத்தார். அதன்பிறகு மார்ச் மாதம் நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடை தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டது.

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்” -என்ற வள்ளுவனின் வரிகளுக்கு இணங்க, தேர்தல் தோல்வியில் துவண்டு கிடந்த ஜெயலலிதா இந்த இரண்டு தொகுதிகளுக்கும் பிரசாரங்களுக்கு போகமலேயே ‘இரட்டைஇலை’ சின்னம் கிடைக்க வி.கே. சசிகலா நடராஜன் வெற்றிக்கு வியூகம் அமைத்துக் கொடுக்க கே.கே.எஸ்.எஸ்.ஆர். மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரைத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து தேர்தல் ராஜா தந்திரங்களை கற்றுக் கொடுத்த தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

1989 -ம் ஆண்டு மார்ச் மாதம் 25 -ம் தேதி தி.மு.க அரசு பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். முதலமைச்சரும் நிதியமைச்சருமான கருணாநிதி, தமிழக பட்ஜெட்டை சட்ட மன்றத்தில் தாக்கல் செய்ய எழுந்த போது, ‘பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது’ என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கடுமையாகக் கிளம்பியது.

தன்னுடைய போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் ‘அதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என்று உரிமை மீறல் பிரச்னையை ஜெயலலிதா எழுப்பினார். அப்போது நடந்த யுத்தத்தில், பட்ஜெட் உரை கிழிக்கப்பட்டது; கருணாநிதி மூக்கு கண்ணாடி உடைந்தது; வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்திலிருந்து இரத்தம் கொட்ட ஆரமித்தது; ஜெயலலிதா சேலை கிழிந்தது என சட்டமன்றமே அமளி.

இந்த மன உளைச்சலால் அரசியலை விட்டு ஜெயலலிதா ஒதுங்கி விடலாம் என்ற நோக்கத்தில் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ஜெயலலிதா பரபரப்பான இருந்த நேரத்தில் எழுதிய கடிதம் ஒன்று வி.கே. சசிகலா நடராஜன் கையில் கிடைக்க அந்த கடிதம் உரியவர்கள் கைக்குச் செல்லாமல் தடுத்தார்.

இந்த தகவல், உளவுத்துறை மூலம் முதலமைச்சர் கருணாநிதி காதுக்கு எட்டியதால் வி.கே. சசிகலாவின் கணவன் நடராஜன் கைது செய்யப்பட்டார் என்ற தகவலும் உள்ளது. ‘நமக்காக இவ்வளவு சோதனைகளை வி.கே. சசிகலாவின் கணவன் நடராஜன் சந்திக்கிறாரே’என்ற காரணத்தால் ஜெயலலிதா வி.கே. சசிகலாவின் மீது அதிக அன்பாக மாறினார்.

அதன்பின்னர் 1989–ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க-வுடன் சேர்ந்து சந்திக்க காங்கிரஸ் கூட்டணிக்கு வி.கே. சசிகலா நடராஜன் அச்சாரமிட்டு நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் அதிமுக கூட்டணி கட்சி வெற்றி பெற்றதால் ஜெயலலிதா மிகுந்த உற்சாகம் அடைந்தார்.

அதன்பிறகு பத்தாம் நாடாளு மன்றத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடை பெற்றவிருந்த நிலையில் மே 21-ம் தேதி 1991 -ம் ஆண்டு தமிழகத்தில் நாடாளு மன்ற/சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி மக்களிடையே பெரும் அனுதாப அலை பெற முயற்சி செய்தது. மேலும் திமுக ஆட்சி கலைக்கப்பட காரணமாக இருந்த ராஜீவ் காந்தியின் மேல் உள்ள கடும் கோபத்தால் அவரை கொள்வதற்கு கருணாநிதி அவர்களும் விடுதலைப் புலிகளின் தற்கொலை படைக்கு உதவினார் என்று வி.கே. சசிகலா நடராஜன், ஜெயலலிதாவிற்கு பிரசார யுக்தியை கைகளில் கொடுத்தார். இதன்விளைவாக எம். ஜி. ஆர்க்கு பிறகு 224 தொகுதிகளில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிகார பூர்வமான தலைவராக ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராகப் பதவியேறியதில் வி.கே. நடராஜனின் பங்கு சொல்லில் அடங்காது.

இதனை சாதகமாக பயன்படுத்திய காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி மக்களிடையே பெரும் அனுதாப அலை பெற முயற்சி செய்தது. மேலும் திமுக ஆட்சி கலைக்கப்பட காரணமாக இருந்த ராஜீவ் காந்தியின் மேல் உள்ள கடும் கோபத்தால் அவரை கொள்வதற்கு கருணாநிதி அவர்களும் விடுதலைப் புலிகளின் தற்கொலை படைக்கு உதவினார் என்று வி.கே. சசிகலா நடராஜன், ஜெயலலிதாவிற்கு பிரசார யுக்தியை கைகளில் கொடுத்தார். இதன்விளைவாக எம். ஜி. ஆர்க்கு பிறகு 224 தொகுதிகளில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிகார பூர்வமான தலைவராக ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராகப் பதவியேறியதில் வி.கே. நடராஜனின் பங்கு சொல்லில் அடங்காது.

2001-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் வி.கே.சசிகலாவின் நம்பிக்கையை பெற்று பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முதன்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலத்தை, ஜெயலலிதா இயக்குநராக இருந்த நிறுவனம் வாங்கியது தொடர்பான வழக்கு, 1991 ஏப்ரலில் மிட்டல் என்பவர் கொடைக்கானலில் ப்ளெசண்ட் ஸ்டே என்ற பெயரில் ஒரு விடுதியை இரண்டு தளங்களாக கட்ட அனுமதி பெற்றார்.

1992 ஜனவரியில், ஏழு தளங்களாக விடுதியைக் கட்ட அனுமதி கோர ஜெயலலிதா மற்றும் டி. எம். செல்வகணபதி ஆகியோர் விதிமுறைகளை மீறி ஏழு தளங்களை கட்ட அனுமதிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு ஆகியவற்றால் முதல்வர் பதவியில் தொடர முடியாமல் போக  வி.கே.சசிகலாவின் பரிந்துரைப்படி   2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 01-ஆம் தேதி வரை தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக பதவியேற்றார்.

ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராக 1991 – 1996 -ம் ஆண்டு வரை பதவி காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, வி.கே. சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.   2014-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறைதண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட, தனது முதல்வர் பதவியை மீண்டும் இழக்க நேர்ந்தது.

அதைத் தொடர்ந்து 2014, செப்.29 முதல் 2015 மே 22 வரை வி.கே. சசிகலா ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக முதல்வராகும் பதவியேற்றார். 2016 மே 16- ந்  நடைபெற்ற பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது. அதாவது எம். ஜி. ஆர்.பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயலலிதா ஆட்சியமைக்க  அதே ஆண்டு செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் 75 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்க 2016, டிசம்பர் 6-ந் தேதி மூன்றாவது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டர். இந்நிலையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக  சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், மே 11 ,2015 அன்று ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்து 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.

ஆனால் ஜெயலலிதா வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக மேல்முறையீட்டு வழக்கு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் திகதி உச்சநீதிமன்றம் ஜெயலலிதா, வி.கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது

ஆனால்  முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு எதிராக ரூபாய் 100 கோடி அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு  வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர், அரசியலில் ஈடுபட்ட வி.கே. சசிகலா,  என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஜெயலலிதாவின் நிழலாக, முப்பதாண்டுகளாக இருந்த வி.கே. சசிகலா ஜெயலலிதாவின் இடத்தைப் பூர்த்திசெய்ய ஜெயலலிதா போலவே உடை அணியத் தொடங்கினார். 2016 டிசம்பர் 29-ந் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீர்மான நகல் த வி.கே. சசிகலாவிடம் வழங்கப்பட்டு, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஏற்கும்படி அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ந்  தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வி.கே. சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

அதனைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள். கூட்டம்,   2017-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் முன் மொழிய, அனைத்து எம்.எல்.ஏக்களும் வழி மொழிய அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அவர்கள் சட்டமன்றக் குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, 2017 பிப்ரவரி 9-ந் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர், அரசியலில் ஈடுபட்ட வி.கே. சசிகலா,  என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஜெயலலிதாவின் நிழலாக, முப்பதாண்டுகளாக இருந்த வி.கே. சசிகலா ஜெயலலிதாவின் இடத்தைப் பூர்த்திசெய்ய ஜெயலலிதா போலவே உடை அணியத் தொடங்கினார். 2016 டிசம்பர் 29-ந் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீர்மான நகல் த வி.கே. சசிகலாவிடம் வழங்கப்பட்டு, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஏற்கும்படி அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ந்  தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வி.கே. சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

அதனைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள். கூட்டம்,   2017-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிய பின்னர் ஓ. பன்னீர்செல்வம் முன் மொழிய, அனைத்து எம்.எல்.ஏக்களும் வழி மொழிய அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அவர்கள் சட்டமன்றக் குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மறுபுறம் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக வி.கே. சசிகலா சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தனக்கு சாதகமாக அமையாது என்பதை உணர்ந்த ஜெயலலிதா பணியில் சீக்கிரம் முதல்வர் பதவியை ஏற்று பின்னர் வி.கே. சசிகலா, ஜெயலலிதாவை போலவே அதிமுகவை சிறையில் இருந்தே வழிநடத்தலாம் என்று திட்டம் தீட்டினார். இதையடுத்து, 2017 பிப்ரவரி 9-ந் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 2017 பிப்ரவரி 7-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்த  ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில் வி.கே. சசிகலா கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவிக்க இதனைத்தொடர்ந்து வி.கே. சசிகலா  அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கியாக அறிவித்தார். இதன் பிறகு ஓ. பன்னீர்செல்வம், வி.கே. சசிகலா என இரு அணிகளாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. பிப்ரவரி  12 -ந்  தேதி  வரை ஓ. பன்னீர்செல்வம் பக்கம் , ஒரு அமைச்சர் உள்ளிட்ட மதுசூதனன்,மஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகிய  சட்டமன்ற உறுப்பினர்கள்,8 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 18 பேர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.

இதனால் வெகுண்ட ஓ. பன்னீர் செல்வம்  அணியில் உள்ள அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.கே.சசிகலா நீக்கினார். வி.கே. சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்கள் அனைவரையும் கர்நாடக அரசியல் பாணியில் கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைத்து விட்டு தன்னிடம் போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார் வி.கே.சசிகலா. ஆனால் வி.கே. சசிகலா மீது சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் தொடர்ந்து அமைதி காத்து வந்தார் ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்.

மேலும்  வி.கே. சசிகலா கொங்கு மண்டலத்தில்  ஆதரவை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் கொங்கு மண்டலத்தில் ஒருவரை முதல்வராக்கும் முயற்சியில் இறங்கினர். இதில்  எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும் டிடிவி தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளராகவும் நியமித்து வி.கே. சசிகலா முயற்சிகள் மேற்கொண்டார்.  அதன்விளைவாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி எடப்பாடி பழனிசாமியை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

மறுபுறம் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா  உள்ளிட்ட மூன்று பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் மீது 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்  தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற வி.கே. சசிகலா மாலை 2017 பிப்ரவரி 15-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது நீதிபதி அஷ்வத்நாராயணாவிடம், “சிறையில் சிறப்பு வகுப்பு வசதி, வீட்டு உணவு, இளவரசிக்கும் தனக்கும்  ஒரே அறை, தனி ஆடைகள் கொண்டு செல்ல அனுமதி, உடல் நிலை ஒத்துழைக்காததால் சரணடைவதில் இரண்டு வார கால அவகாசம்,” எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால் வி.கே. சசிகலா சிறை சென்றார்.

அதன்பின்னர் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொள்ள மத்தியில் ஆளும் பாஜக அரசு பல ரகசிய முடிவுகள் எடுத்தது மேலும் உளவு துறை மூலமாக தமிழக சட்டமன்றத்தை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெறும் அதன் பின்னர் பாஜகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என அறிந்தது. மேலும் துவக்கத்தில் நிதானம் காட்டிய எடப்பாடி பழனிசாமி மெல்ல மெல்ல தன்னை வலுப்படுத்திக் கொண்டார். டி.டி.வி. தினகரன் பக்கம் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவிநீக்கம் செய்ய வைத்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை  2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார். இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.

துவக்கத்தில் நிதானம் காட்டிய எடப்பாடி பழனிசாமி மெல்ல மெல்ல தன்னை வலுப்படுத்திக் கொண்டு, டிடிவி.தினகரனை ஓரம் கட்ட ஆரம்பித்தார்.  இதனால் டிடிவி தினகரன் அதிமுகவில் தனி அணியாக இயங்க ஆரம்பித்தபோது ஆளும்கட்சியைச் சேர்ந்த 33 சட்டமன்ற உறுப்பினர்கள் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு வந்து அவரைச் சந்தித்துச் சென்றனர். ஆனால் வெளிப்படையாக ஆதரவைத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்தபோது 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே முன் வந்தனர். இந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து முதல்வரை மாற்றும்படி மனு அளித்த பிறகு, அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

உடனடியாக, டிடிவி தினகரன் பக்கம் இருந்த எஸ்.டி.கே. ஜக்கைய்யன் சபாநாயகரைச் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே தான் இருப்பதாக உறுதியளித்தார். இதனால், 18 சட்டமன்ற உறுப்பினர்களே டிடிவி தினகரன் பக்கம் இருந்து வந்தனர். இதற்குப் பிறகு டி.டி.வி. தினகரன் வீட்டில் நடந்த கூட்டத்தில், தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட டிடிவி தினகரன் முடிவெடுத்தது குறித்து அமைச்சர்கள் சிலர் கேள்வியெழுப்பியதையடுத்து பிரச்சனை வெடித்தது. டிடிவி. தினகரனும்,  சசிகலாவும் ஒதுக்கிவைக்கப்படுவதாக அமைச்சர்கள் வெளிப்படையாக அறிவித்தனர்.

மேலும், அ.தி.மு.க. என்ற கட்சிப் பெயரும் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உரியவை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து தினகரன் பக்கம் வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லுமென நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தது. மேலும் 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் டி. டி. வி. தினகரன் இடமிருந்து பரிக்கப்பட்டது. அதன்பின்னர் 2017-ம் ஆண்டு டிசம்பர்  21-ந் தேதி நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் டி. டி. வி. தினகரன்.

இந்நிலையில் டிடிவி தினகரன் அணியில் இருந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, உடனடியாக தேர்தலை சந்திப்பதையே தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பி மேல் முறையீடு செய்தனர். ஆனால் மேல் முறையீட்டிலும் தீர்ப்பு ஒரு சில ஆண்டுகள் தொடர  தமிழக சட்டமன்றத்தை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெறும் அதன் பின்னர் பாஜகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என அறிந்தது. இதனைத்தொடர்ந்து. பின்னர் மேல் முறையீட்டிலும் தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பிற்கு சாதகமாக அமையவில்லை. இதனிடையே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போதெல்லாம் டெல்லி இவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தது.

காலம் மெல்ல, மெல்ல நகர வி.கே. சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறைவாசம் முடிவிற்கு வரும்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவை முழுமையாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது மட்டுமில்லாமல்  வி.கே. சசிகலாவுக்கும் அதிமுகவிற்கு எந்த ஒரு சம்மதமும் இல்லை தெரிவித்தனர். மேலும்  வி.கே. சசிகலா அதிமுக கொடியை கூடாது என தெரிவித்ததுடன் இல்லாமல் காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை கையாண்டனர்.

வி.கே. சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த ஒரு சில மாதங்களிலே தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற இருந்ததால் அதிமுகவில் உட்கட்சி பூசல் இருந்தால் வெற்றி திமுகவின் பக்கம் சென்றுவிடும் ஆகையால், வி.கே. சசிகலா அரசியலில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்து ஒதுங்கி இருந்தார்.  ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடைபெற்ற 4 1/2 ஆண்டு அதிமுக ஆட்சி மக்களின் மீது அக்கறை காட்டாமல் பினாமிகள் கொள்ளையடிப்பதில் அக்கறை காட்டியதால் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி முடிவிற்கு வந்தது.

அதன்பின்னர் ஒற்றை தலைமை அதிமுகவில் தலைதூக்க எடப்பாடி பழனிசாமி பணபலத்தையும், படைபலத்த்தையும் பயன்படுத்தி அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாடில் கொண்டு வந்தார். மேலும் ஒரு புறம் விகே சசிகலாவையும், ஓ. பன்னீர்செல்வத்தையும் ஓரம் கட்டும் வேலைகளை தீவிரம் காட்டினார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை பூதாகரமாக வெடிக்க, எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே உள்ள மோதல் வெளிப்படையாக வெடித்து. இதனால் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

மேலும் அதிமுக பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கடிதம் அனுப்ப, அதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்க மறுக்க திட்டமிட்டபடி பொதுக் குழு கூட்டத்தை நடத்தியே தீருவோம் என மும்முரம் கட்ட இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் ஆவடி ஆணையரகத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என கூறியே ஓ. பன்னீர்செல்வம் காவல் நிலையத்தில் மனு அளித்தார்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கினர். இந்த மோதலில் 2 காவல்துறையினர் உட்பட 47 பேர் காயம் அடைந்தனர். மேலும் காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறையை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மோதல் தொடர்பாக 14 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில் மோதல் வெடித்த நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத் துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தது.

புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு புரட்சி தலைவி ஜெயலலிதா மற்றும் வி.கே. சசிகலா நடராஜன் மலர்ந்த அதிமுக இன்று  புரட்சி தலைவி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பதவி வெறியில் அதிமுக மறைகிறதா.!?