அரியலூர் மாவட்ட பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி ஆய்வு

அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் வருடம் தோரும் கோடை விடுமுறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி கலந்து கொண்டு வாகனங்களை ஆய்வு செய்தனர். தமிழ்நாடு பள்ளிப் பேருந்துகள் ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு சிறப்பு விதிகள், 2012 -இன் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் வருடாந்திர பாதுகாப்பு சோதனைகளை மாவட்ட அளவிலான குழுவால் கட்டாயமாக்குகிறது.

அந்த ஆய்வின் போது, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டிகள், அவசரகால வெளியேற்றங்கள், கதவு வழிமுறைகள், ஜன்னல்களில் பாதுகாப்பு கிரில்கள், இருக்கை ஏற்பாடுகள், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், ஃபுட்போர்டுகள் மற்றும் பிரதிபலிப்பு நாடாக்கள் போன்ற முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். சிசிடிவி கேமராக்கள், நேரடி காட்சி மானிட்டர்கள், ஓட்டுநர் உரிமங்கள், அனுமதி மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் உமிழ்வு சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!

சென்னை கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தீவிரமடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17-ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிகனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வில் சென்னை மேயர் பிரியா, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.