வா.. எப்ப வேண்டாலும் வா.. ! அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக வேலூர், திருவண்ண்ணாமலை என சுற்றுப்பயணம் செய்து வந்த அவர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் மத்திய அரசையும், அமலாக்கத் துறையையும் கடுமையாக சாடினார்.

தனது வீட்டுக்கு அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் தாம் தொடர்ச்சியாக வெளியூர் டூரில் இருப்பதால் சொல்லிவிட்டு வாருங்கள் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகளை கலாய்த்தார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் கிளைச் செயலாளரை கூட அமலாக்கத்துறையால் எதுவும் செய்ய முடியாது என சவால் விடுத்தார். ”வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்” எனக் கூறி அமலாக்கத்துறைக்கு ஒபன் சவால் விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மடியில் கணமில்லாததால் தனக்கு வழியில் பயமில்லை என்றும் மோடிக்கும் பயப்படமாட்டேன், EDக்கும் பயப்பட மாட்டேன் என்றும் தாம் கலைஞரின் பேரன் எனவும் குரல் உயர்த்தினார். அதிமுகவை வேண்டுமென்றால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என விசாரணை அமைப்புகளை காட்டி பயமுறுத்தலாம் என்றும் திமுகவிடம் உங்கள் பம்மாத்து வேலை நடக்காது எனவும் எதிர்த்து பேசியிருக்கிறார்.

பொதுவாக மேடைகளில் பேசும் போதும் சிரித்தவாறு மிகவும் கூலாக பேசக்கூடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் இன்று அனல் கக்கியிருக்கிறார். வா.. எப்ப வேண்டாலும் வா.. ஓபன் சேலஞ்ச் விடுத்திருக்கிறார். இதன் மூலம் சமரசமின்றி பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பதை உதயநிதி ஸ்டாலின் உணர்த்தியுள்ளார்.

எடப்பாடி பூ சுற்றுகிறார்.. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவே இல்லை..

ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். காதில் பூ வைத்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி கூறியது, இத்தனை நாளாக பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் பழனிசாமி பூ சுற்றிக் கொண்டு இருந்தார். நானும் ரொம்ப நாளா வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தேன். உங்களை யார் பொதுச்செயலாளர் என்று சொன்னது.

நீங்களாகவே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். பொதுக்குழுவில் காசு கொடுத்து உங்கள் ஆட்களை வைத்து நீங்களாகவே சொல்லிட்டு இருக்கீங்க… இன்னும் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறவில்லை. தேர்தல் ஆணையமும் சொல்லவில்லை. எப்போ பார்த்தாலும் நான் தான் பொதுச்செயலாளர் என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நீண்ட காலமாக அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி சொத்து என சொல்லிக்கொண்டு அவரது வீட்டு சொத்து போல இதை கொண்டு போய்ட்டு இருக்காங்க.

வேறு வழியில்ல்லை. எடப்பாடி ஏமாற்றுவதால் ஊடகமும் சேர்ந்து அதிமுக என்றால் பழனிசாமிதான் என்று போய்க் கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலை தொடர்ந்து நடக்கிறதை பார்த்தோம். தேர்தல் ஆணைய வெப்சைட்டில் தெளிவாக உள்ளது. 2018 ல் அனுப்பப்பட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்பது ஏற்றப்பட்டுள்ளது. அதை அனுப்பியது ஓபிஎஸ்- இபிஎஸ் தான். இது தேர்தல் கமிஷனுக்கு முதலில் போய்விட்டது.

போன பிறகு இவர் ஒரு ரூலை போட்டு அதற்கு பிறகு நாங்கள் திருத்தம் கொண்டு வந்து இருக்கிறோம். அந்த திருத்தத்தில் என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்து இருக்கிறார்கள் என எடப்பாடி ஒரு கடிதத்தை அனுப்புகிறார். தேர்தல் ஆணைய வெப்சைட் எதை சொல்லுதோ அவர்கள்தான் அத்தாரிட்டி… மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம் 14 கட்சியை வைத்துள்ளது. 14 கட்சி வெப்சைட்டிலும் போனாலும் சமீபத்திய திருத்தம் தான் இருக்கும்.

ஆனால், 2018 திருத்தம் உள்ளது. ஏன் இப்படி பழனிசாமி, ஜெயக்குமார் போன்றவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால், பழனிசாமி பதிவு செய்ததை நாங்கள் எடுத்துக் கொண்டோம். சப்ஜெட் டூ நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்று சொல்லியிருக்கிறது. முதலில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதிவில் இருப்பதில் எந்த நிபந்தனையும் இல்லை.

அது ஏற்றியது அப்படியே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆவணங்களை ஏற்கும் போது மட்டும் நீதிமன்ற தீர்ப்பு என்ன வருதோ அதை பொறுத்துதான் நாங்கள் கணக்கில் எடுக்க முடியும். நீங்கள் கொடுத்ததாக ரெக்கார்டில் வைத்துக் கொள்கிறோம் என்றுதான் தேர்தல் ஆணைய செயலாளர் சொல்லியிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி கிரிமினலாக என்ன செய்து கொண்டார் என்றால் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

நாங்கள்தான் எல்லாம். நாங்கள்தான் பொதுச்செயலாளர் என்று என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஓபிஎஸ் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி பெரும் ரகளை நடந்ததை பார்த்து இருப்பீர்கள். இனிமேல் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொன்னால் பொடிப்பொடியாக்கி விடுவோம்” என தெரிவித்தார்.

வி.கே. சசிகலா: அண்ணாமலை அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை…!

அதிமுக விழும்போதெல்லாம்  ‘வீழ்வதைவிட விரைந்து எழுவதே மேல்’ என்று ஜெயலலிதா வேத வாக்கிற்கு ஏற்ப அதிமுகவை அதிக தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற வைத்து, அதிமுகவை அதிக தொண்டர்களைக் கொண்ட கட்சியாக மாற்றி,  தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்த ஜெயலலிதா.  எம்.ஜி. ஆருக்குப் பின் அதிமுக துண்டு துண்டாக உடைந்துவிடும் என்ற கணக்கை உடைத்து, தனது தலைமையின் கீழ் சுமார் 28 ஆண்டுகள் கட்சியைக் கட்டுக்கோப்பாக ஜெயலலிதா வழிநடத்தி, புரட்சித்தலைவி, இரும்புப் பெண்மணி, அம்மா என்றெல்லாம் அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பட்ட, ‘மக்களுக்காக நான்… மக்களால் நான்’ எனும்  ஜெயலலிதா வாழ்ந்தவர்.

மத்தியில் ஆள்வோர் மக்களுக்கு சேவை செய்யாமல் உள்நாட்டு, வெளிநாட்டு கர்ப்பிரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து அவர்களின் கஜானாவை நிரப்புகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக மத்தியில் ஆள்வோருக்கு மாநில கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால், மாநிலத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியுடன் தேர்தலில் கூட்டணி வைக்க மத்தியில் ஆள்வோர் ஆசைப்படுகின்றனர்.

ஆனால், மாநில கட்சிகள் கூட்டணிக்கு சம்மதிக்காமல் போனால் மத்தியில் ஆளும் கட்சிகள் ஆட்சியை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்ற ஆசையில், மாநில கட்சிக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து அவர்களுக்குள்ளே வார்தைப்போர் முற்றுகிறது. இன்று மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற பேராசையில், மாநில கட்சிகளின் கூட்டணி அமைக்க மும்முரம் காட்டி வருகிறது. அதனால் பாஜக கட்சியின் தலைவர்கள் கூட்டணி கட்சிகள், எதிர் கட்சிகள்  என்று பாராமல் யாருடன் கூட்டணி அமைத்தால் வெற்றி கிடைக்குமோ அவர்களுடன்  கூட்டணி பேரம் நடத்துகின்றனர்.  அவர்களின் கூட்டணி பேரத்திற்கு மசியாத கட்சிகளுடன் வார்த்தை போர் நடத்துகின்றனர்.

அதே நிலையில் இன்று ஜெயலலிதா பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவதூறாக பேசியது குறித்து, அண்ணாமலை அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை என விமர்சனம் செய்துள்ளார். “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய ஜெயலலிதா பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவதூறாக பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

அண்ணாமலைக்கு ஜெயலலிதாவின் அரசியல் பயணம், அவர் மக்களுக்கு ஆற்றிய அரும்பணிகள் எதுவும் தெரியவில்லை. இன்றைக்கும் தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் ஜெயலலிதாவை தங்களது முன் மாதிரியாக வைத்துக்கொண்டு தங்கள் வாழ்வில் ஒவ்வொரு படிகளையும் கடந்து பல்வேறு வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள்.

ஜெயலலிதா தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். ஜெயலலிதாவை ஆறு முறை முதல்வராக்கி அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் அளித்த இந்த நற்சான்றிதழே போதும். வேறு யாருடைய சான்றிதழும் தேவை இல்லை. ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு என்னென்ன செய்வார்களோ அதேபோன்று இந்த தமிழக மக்களுக்கு ஜெயலலிதா தாய்க்கு தாயாக இருந்து பார்த்து, பார்த்து செய்து விட்டார்கள்.

தமிழக மக்களிடமிருந்து நம் ஜெயலலிதாவை யாராலும் பிரிக்க முடியாது. நம் ஜெயலலிதாவுக்கு என்றைக்கும் அழிவே இல்லை. அவர் உடலால் நம்மை விட்டு மறைந்து இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தாயாக, சகோதரியாக, மகளாக என்று ஏதாவது ஒரு ரூபத்தில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

இனி யார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெயலலிதா செய்த சாதனைகளை முறியடிக்க முடியாது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்பற்றியெல்லாம் எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன்.

ஆனால் அதே சமயம் அம்மா உணவகம் தந்து ஏழை எளிய சாமானிய மக்களின் பசியை போக்கி அன்னலட்சுமியாக விளங்கிய ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களால், அவர் சார்ந்த இயக்கத்திற்கே தமிழகத்தில் கெடுதலை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது. தமிழக மக்கள் யாரும் அண்ணாமலையின் பேச்சை ரசிக்கவில்லை.

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளமுடியாதவர்கள் தனிப்பட்ட முறையில் பொய்யாக புனைந்த வழக்குகளையெல்லாம் முறியடித்து மக்களின் நன்மதிப்பை ஜெயலலிதா பெற்றார் எனபதுதான் வரலாறு. எனவே, பொறுப்பற்றவர்கள் பேசும் இது போன்ற பயனற்ற பேச்சுக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, “மக்கள் அளித்த தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு” எனபதை மனதில் வைத்து, மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவோம். ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கி தமிழக மக்களை காத்திடுவோம் என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.