பாரா ஒலிம்பிக்: பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்று அசத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 11-வது நாளான இன்று நடைபெற்ற கலப்பு பிரிவு பாராஒலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் ஏற்கனவே, இந்தியாவின் ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் மீண்டும் ஒரு வெண்கலப் பதக்கம் வெல்ல மற்றும் வீரர் மணிஷ் நார்வால் தங்க பதக்கம் வென்று அசத்தினார்.

மேலும் இன்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் பேட்மிண்டனில் இறுதி போட்டியில் இறுதிபோட்டியில் ஒடிசாவை இந்தியாவை சேர்ந்த 33 வயதான பிரமோத் பகத் இங்கிலாந்து வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் 17 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 35 வது இடத்திலிருந்து பல படி முன்னோக்கி சென்று 26 வது இடத்தில் உள்ளது.

பொது மக்களை காவல்துறையினர் ‘வாடி… போடி’ ‘வா, போ’ என மரியாதை குறைவாக நடத்தக்கூடாது- உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்த அணில் குமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இரு நாட்களுக்கு முன், 16 வயது மகளுடன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தேன் அப்போது வழிமறித்த சேர்தலா காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில், என மகளின் முன் ‘எடா… வா, போ’ என, மரியாதைக் குறைவாகவும் இழிவாகவும் அவமரியாதையாக என்னை பேசினர் என மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் காவல்துறையினர் பொது மக்களை பல்வேறு இடங்களில் மிகவும் மோசமாக நடத்துவதாக புகார்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் பொதுமக்களை காவல்துறையினர் தரக்குறைவான வகையில் நடத்தக்கூடாது. காவல்துறையினரின் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் காவல்துறையினர் மரியாதையுடன் நடத்த வேண்டும்.

பொதுமக்களை அநாகரீகமாக நடத்துவதை நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, கேரள முழுவதும் காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை ‘வா, போ’ என ஒருமையில் அழைத்து பேச கூடாது. ‘எடா… எடீ…’ மற்றும் ‘வாடி… போடி’ என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி அழைக்கக்கூடாது. இது தொடர்பாக கேரள காவல்துறை டி.ஜி.பி., அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து உடனடியாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.

பாரா ஒலிம்பிக்: ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்று இந்தியா வீரர்கள் அசத்தல்!

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 11-வது நாளான இன்று நடைபெற்ற கலப்பு பிரிவு பாராஒலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் ஏற்கனவே, இந்தியாவின் ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் மற்றும் மணிஷ் நார்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற கலப்பு பிரிவு பாராஒலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் 218.2 புள்ளிகளுடன் மணிஷ் நார்வால் முதல் இடத்திலும், 216.7 புள்ளிகளுடன் சிங்ராஜ் இரண்டாம் இடத்திலும் நிறைவு செய்து தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் 15 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஒரு படி முன்னோக்கி சென்று 35 வது இடத்தில் உள்ளது.

பாரா ஒலிம்பிக்: வில்வித்தையில் வெண்கலம் வென்றார் ஹர்வீந்தர் சிங்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 10-வது நாளான இன்று நடைபெற்ற மகளிர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஏற்கனவே தங்கம் வென்ற அவனி லெகாரா வெண்கல பதக்கதை கைப்பற்றினார்.

இன்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் வில் வித்தை வெண்கலப்பதக்கதிற்கான போட்டியில் தென்கொரியாவின் கிம் மின் – சூவை 6-5 என்ற கணக்கில் ஹர்வீந்தர் சிங் வென்று வெண்கலப்பதக்கதை கைப்பற்றினார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் 13 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஒரு படி பின்னோக்கி சென்று 37 வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 43-ரன்கள் சேர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி 50 ரன்கள், ஷர்துல் தாகூர் 57 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெறியேற இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து 53 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் மலான் 26 ரன்கள் மற்றும், கிரேக் ஓவர்டன் ஒரு ரன்னுடன் டேவிட் மலான் களத்தில் இருந்தது.

இரண்டாம் நாள் ஆட்ட தொடக்கத்தில் கிரேக் ஓவர்டன் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து டேவிட் மலான் 31 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 62 ரங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒல்லி போப்ரில் தொடங்கி பின்வரிசை வீரர்கள் கைகொடுக்க 290 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் பொறுப்புடன் விளையாடினர். 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்கள் நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும், கே எல் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இன்னும் 56 ரன்கள் பின் தங்கியுள்ளது.

பாரா ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதல் இந்திய வீராங்கனை அவனி லெகாரா மீண்டும் பதக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

10-வது நாளான இன்று நடைபெற்ற மகளிர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஏற்கனவே தங்கம் வென்ற அவனி லெகாரா கலந்து பங்கேற்றார். ஜாங் கைப்பிங் சீனாவின் ஜாங் கைப்பிங் தங்க பதக்கத்தை கைப்பற்ற அவரை தொடர்ந்து அல்ஜீரியாவின் நாட்ஜெட் பெளவ்ச்செர்ஃப் வெள்ளி பதக்கத்தை வெல்ல அவனி லெகாரா வெண்கல பதக்கத்தை கைப்பற்றினர்.

ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்ற அவனி லெகாரா என்று வெண்கல பதக்கதை கைப்பற்றியுள்ளார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 12 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் எவ்வித மாற்றமுமின்றி 36 வது இடத்தில் உள்ளது.

பாராஒலிம்பிக்: உயரம் தாண்டுதலில் 18 வயதான இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

10-வது நாளான இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 18 வயதே ஆன பிரவீன்குமார் இந்திய வீரர் கலந்து பங்கேற்றார். இந்த போட்டியில் பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி நிலவியது. நூலிழையில் பிரவீன்குமார் தங்க பதக்கத்தை இழந்தார். இறுதியில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை பிரவீன்குமார் பதிவு செய்தார். நடப்பு பாராஒலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட ஈ.பி.காலனி, நாகாத்தம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருவருவது மட்டுமின்றி அங்குள்ள குடிநீர் குழாய்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டு இணைப்புகளுக்கு நல்ல தண்ணீர் முறையாக வழங்கக்கோரியும், பழுதடைந்த குழாய்களை சரி செய்யக்கோரியும் முன்னாள் கவுன்சிலர் நடராஜன் தலைமையில் 11-வது வார்டு பொதுமக்கள் நேற்றுகாலை அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

மாநகர காவல் ஆணையர் தகவல்: திருநெல்வேலியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க 3 தனிப்படைகள்

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், திருநெல்வேலி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் காணாமல் போன சுமார் ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 58 கைபேசிகள் சைபர் கிரைம் காவல்துறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கூரியர் மூலம் அனுப்பினால் அதை கொண்டு வருகிற கூரியர் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.

தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரசபை தூய்மை பணியாளர்கள் நகரசபை அலுவலக வளாகத்தில் அமர்ந்து நேற்று தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்க வேண்டும். 4 ஆண்டுகளாக பிடித்தம் செய்த பணத்திற்கு ரசீது வழங்க வேண்டும். .எஸ்.. மருத்துவ அட்டை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.