புதுச்சேரி சபாநாயகர் அரசு மருத்துவமனை அனுமதி

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இன்று காலை சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவைக்கு வந்தார். ஆனால், சபாநாயகர் செல்வம் பேரவைக்குள் வராமல் கார் வெளியேறியது.

இது தொடர்பாக சபாநாயகர் செல்வத்தின் தரப்பில் விசாரித்தபோது, “சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

கன்னியாகுமரி முதல் டெல்லி வரை சைக்கிள் பேரணி

நாட்டின் 75-வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் கடந்த 22-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கடல் சங்கமம் பகுதியில் தொடங்கி  திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக  கர்நாடக மாநிலத்தை அடையும் இந்தப் பேரணியை ‘ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்’ என்ற தலைப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சைக்கிள் பேரணி நடத்தி வருகின்றனர்.

இந்தப் பேரணி ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாகப் பயணிக்கும் பேரணிக் குழுவினர் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் உள்ள ராஜ்கோட் பகுதியில் பேரணியை நிறைவு செய்கின்றனர். நேற்று மாலை தருமபுரி வந்து சேர்ந்த இந்தப் பேரணிக் குழுவினருக்கு தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கிராமியக் கலை நிகழ்ச்சிகள், மேள, தாளங்களுடன் வரவேற்பு அளித்தார்.

 

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு பதக்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 8 வது நாளான இன்று இந்திய ஷூட்டிங் குழுவினரின் அற்புதமான ஓட்டத்தை தொடங்கினர். இதில் துப்பாக்கி சுடும் வீரர்களான மணீஷ் நர்வால் மற்றும் சிங்கராஜ் அதானா ஆகியோர் அசாகா ஷூட்டிங் ரேஞ்சில் நடந்த ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இல் பதக்க சுற்றுக்கு தகுதி பெற்றனர். தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த மணீஷ் நர்வால், இறுதிப்போட்டியில் 135.8 புள்ளிகளுடன் ஏழாவது இடம் பிடித்தார்.

தகுதி சுற்றில் ஆறாவது இடத்தில் இருந்த சிங்கராஜ், இறுதிப் போட்டியின் முதல் கட்டத்தில் தரவரிசையில் முதலிடம் பெற அற்புதமாகத் தொடங்கினார்.  இறுதிப் போட்டியில் மொத்தம் 216.8 புள்ளிகளுடன் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (SH1) போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.

தமிழிசை: நீட் தேர்வு பணம் படைத்தோர் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை மாற்றியுள்ளது

ஏழை- எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருபுவனை எம்எல்ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச நீட் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். மேலும் பேசுகையில், “ஒரு நல்ல முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. கிருஷ்ண பகவான் அவதரித்த நாளில் மக்களைக் காப்பாற்றுவதற்காக அரக்கர்களை அழித்ததைப் போல, தடுப்பூசி மூலம் கரோனா என்ற அரக்கனை அழிக்க மருத்துவராகப் போகும் மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

நான் அடிப்படையில் ஒரு மருத்துவராக இருப்பதனால் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். ஏழை மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் நிச்சயம் மருத்துவர் ஆகலாம். நீட் என்பது நல்ல தேர்வு. பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை இப்போது மாறி இருக்கிறது என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு : மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்

சென்னை அண்ணா நினைவக வளாகத்தில் 39 கோடியில் தமிழக மக்களுக்காக ஓய்வின்றி உழைத்த உத்தம தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே  2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று  சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இந்தியா ஹாக்கி பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கி பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

டோக்யோ ஒலிம்பிக் பி.வி சிந்து வெண்கல பதக்கம் வென்றார். இந்தியா பதக்க பட்டியலில் 59 இடத்திற்கு முன்னேறியது

டோக்யோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹெ பிங் ஜியாவ் சிந்து எதிர்கொண்டார்.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் காலிறுதி ஆட்டம் வரை ஒரு செட்டை கூட இழக்காமல் வீறுநடை போட்ட இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து, அரையிறுதியில் தைவானைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையிடம் 18-21, 12-21 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார்.இந்நிலையில்  வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹெ பிங் ஜியாவ் சிந்து 21- 13, 21 -15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் பெற்று தந்தார். இதன்மூலம் ஒரு வெள்ளி ஒரு வெண்கல பதக்கம் பெற்று இந்தியா பதக்க பட்டியலில் 59 இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

பெரியாரின் கொள்கைகளை மனதிலே சுமந்து…அண்ணாவின் சிந்தனைகளை மனதிலே சித்தரித்து…கலைஞரின் பகுத்தறிவை மனதிலே பகுத்து… நல்லாட்சி செய்யும் மாண்புமிகு தமிழக முதல்வரே வாழ்த்தி வணங்குகிறோம்..! சைதை ஏ. சந்தோஷ்

பெரியாரின் கொள்கைகளை

                              மனதிலே சுமந்து…

அண்ணாவின் சிந்தனைகளை

                             மனதிலே சித்தரித்து…

கலைஞரின்  பகுத்தறிவை

                             மனதிலே பகுத்து…

நல்லாட்சி செய்யும் மாண்புமிகு தமிழக முதல்வரே வாழ்த்தி வணங்குகிறோம்..! சைதை . சந்தோஷ்ex .Mc

தெற்கே உதித்த சூரியனே தீயவைகளை சுட்டெரித்திட தீண்டாமையை ஒழித்திட தமிழகத்தை தலை நிமிர்ந்து செய்திட நல்லாட்சி நல்கிடு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் குருக்கபுரம் கிராமம் கிருஷ்ணவேணி செல்வராஜ்

தெற்கே உதித்த சூரியனே

தீயவைகளை சுட்டெரித்திட

தீண்டாமையை ஒழித்திட

தமிழகத்தை தலை நிமிர்ந்து செய்திட

நல்லாட்சி நல்கிடு

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் வட்டம், குருக்கபுரம் கிராமம் கிருஷ்ணவேணி செல்வராஜ் மற்றும் சித்ரா ஜெயராமன்

‘கடவுள் தேசத்தில்’ தன்னம்பிக்கை. விடாமுயற்சி இரண்டையும் தாரக மந்திரமாக கொண்ட புதுமை பெண்ணின் கதை