தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு:  பாஜக அரசின் விரோதப் போக்கைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம்

புதிய வேளாண் சட்டம், தொடர் விலையேற்றம், இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் – ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து 20-9-2021 அன்று திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

நாட்டை விற்க விடமாட்டோம்: முசாபர் நகரில் ஒன்றுதிரண்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் அமைப்பினர் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறத் தயாராக இல்லை, இதுவரை விவசாயிகளுக்கும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் இடையே 12 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் முசாபர் நகரில் கிசான் மகா பஞ்சாயத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகம், பஞ்சாப், உ.பி., ஹரியாணா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் , “இதுபோன்ற கிசான் மகா பஞ்சாயத்துக் கூட்டம் நாடு முழுவதும் நடத்தப்படும். நாட்டை விற்பனை செய்வதிலிருந்து தடுப்போம். விவசாயிகள் காக்கப்பட வேண்டும், நாடு காக்கப்பட வேண்டும். வர்த்தகம், இளைஞர்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்பது தான் இந்தப் பேரணியின் நோக்கமாகும் என தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி  மலர் தூவி அஞ்சலி

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலாக வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்டார் அதனால் வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி சீமான் மலர் தூவி அஞ்சலி

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலாக வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்டார் அதனால் வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி இன்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் சென்னை போரூரில் அமைந்துள்ள நாம் தமிழர் தலைமை அலுவலகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய பதக்கப்பட்டியலில் 24 இடத்திற்கு முன்னேறியது // பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் அசத்தல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஜப்பான் பாரா ஒலிம்பிக் கடைசி நாளான இன்று கர்நாடகவை சேர்ந்த சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும் இன்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் பேட்மிண்டனில் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டியில் 1999ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்த இந்திய வீரர் கிருஷ்ணா நாகர், ஹாங்காங்கின் மன் காய் சூ-வுடன் மோதினர். இதில் 21- 17, 16- 21, 21-17 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் 19 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 24 இடத்தில் உள்ளது.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஐஏஎஸ் அதிகாரி வெள்ளிப்பதக்கத்தை வென்றார் என்ற சாதனையை சுகாஷ் யத்திராஜ் படைத்தார்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஜப்பான் பாரா ஒலிம்பிக் கடைசி நாளான இன்று கர்நாடகவை சேர்ந்த சுஹேஷ் யேத்திராஜ் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரான்சு நாட்டின் லூகாஸை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய சுகாஷ் யத்திராஜ், பின்னர் சுதாரித்து கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார்.

20 நிமிடங்கள் நடைபெற்ற முதல் சுற்றை 21-15 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பிரான்சு வீரர் லூகாஸ் 17-21 என்ற கணக்கில் வென்று 1-1 என சமம் செய்தார். இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது சுற்று நடத்தப்பட்டது. அதில் பிரான்சு வீரர் லூகாஸ் 15-21 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்படி இந்திய வீரர் சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் 17 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 26 வது இடத்தில் உள்ளது.

சட்ட நூலகத்தை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ரிப்பன் வெட்டி திறப்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டத்திற்கு வந்தார். இதைத்தொடர்ந்து சங்ககிரி நீதிமன்ற வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சட்ட நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோடநாடு எஸ்டேட்டில் காவல் பொது ஆய்வாளர் சுதாகர் நேரில் ஆய்வு

நாளுக்குநாள் திடீர், திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதோடு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடித்தது தொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டதாக கருதப்படுபவர்களிடம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெறப்படுகிறது. இந்நிலையில் ஊட்டியில் நேற்று முன்தினம் காலையில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், மேற்கு மண்டல காவல் பொது ஆய்வாளர் சுதாகர் தலைமையில் சுமார் 2½ மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.மேலும் தற்கொலை செய்து கொண்ட சி.சி.டி.வி. கேமரா ஆபரேட்டர் தினேஷ் குறித்து, அவருடன் பணியாற்றி வந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதன் காரணமாக கோடநாடு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக கழுகுகள் பாதுகாப்பு தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடியில் உள்ள வாழைத்தோட்டம் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் கழுகுகளால் நன்மைகள், அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியான சம்பவம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 10 ஆண்டுகளாக எடின்பரோ கோமான் என்பவர் இயற்பியல் ஆசிரியராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் வேலைப் பார்த்து வருகிறார். எடின்பரோ கோமான் கடந்த வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு பள்ளி மாணவிகளுக்கு தமிழருவி இணையதளத்தில் இருந்து புரஜெக்டர் உதவியுடன் எடின்பரோ கோமான் பாடம் நடத்தினார். இதில் கணித அறிவியல், கணித உயிரியல் பாடப்பிரிவை சேர்ந்த பிளஸ்-1 மாணவிகள் பங்கேற்றனர். அப்போது திடீரென அரைகுறை ஆடையுடன் ஆபாச படம் வெளியானதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பப்பட்டது. மேலும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார் சென்றது. பின்னர் ஆபாச படம் வெளியானது குறித்து அவர்கள் உதவி தலைமை ஆசிரியர் எடின்பரோ மற்றும் மாணவிகளிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தான் ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியானது எப்படி? என்பது தெரியவரும் என்றும், விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.